ராசிக் கட்டத்தில் கிரகங்கள் மாலை போன்று தொடராக இடைவிடாது ஏழு ராசிகளில் அமர்வதை கிரகமாலிகா யோகமென்று ஜோதிடநூல்கள் கூறுகின்றன. இவ்வாறு கோள்கள் கிரகமாலிகா யோகத்தில் அமரும்போது, அடுத்து இரண்டாம் வீடுமுதல், அடுத்து மூன்றாம் வீடுமுதல் என இப்படி வரிசையாக ஏழு வீடுகளில் அமர்வதை வகைப்படுத்தி, அவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாகப் பேரிட்டு அதற்கான சிறப்புப் பலன் களையும் கூறுகின்றது ஜாதக பாரி ஜாத நூல்.
அவற்றில் லக்னம் முதலாக ஏழு வீடுகளில் வரிசையாக கிரகம் அமைவது லக்ன மாலிகா யோகம் எனவும், லக்ன மாலிகா யோகத்தில் பிறந்தவர் அதன்பலனாக மன்னனைப்போன்று வாழ்பராகவும், யானை, குதிரை போன்ற வாகனங்களைக் கொண்டவராகவும் இருப்பாரென்று சாஸ்திரம் சொல்கிறது. தற்போது செல்வந்தராக, உயர்ந்த வாகனங் களைக் கொண்டவராக இருப்பார் எனச் சொல்வது மிகச்சரியாக இருக்கும்.
இரண்டாம் வீடுமுதல் ஏழு வீடுகளில் அமைவது தன மாலிகா யோகம் எனப்படும்.
அதன் பலன் அளப்பரிய செல்வங்களுக்கு சொந்தக்காரராகவும், நவநிதிகளுக்கு ஒப்பான செல்வங்களைக் கொண்டவரும், தந்தையிடம் பக்தியுடையவரும், தீரச் செயல்களைச் செய்பவரும், அழகிய தோற்றத்தைக் கொண்டவருமாகும்.
மூன்றாம் வீடுமுதல் வரிசையாக ஒன்பதாம் வீடுவரை கிரகங்கள் அமைந்தி ருப்பது விக்ரமமாலிகா யோகம் எனப்படும்.
அதன் பலன், மன்னனுக்கு ஒப்பான வாழ்வு, சூரத்தன்மை கொண்டவரும், செல்வந் தரும், சுகம் நிறைந்தவராகவும் இருப்பார்.
நான்காம் வீடுமுதல் வரிசையாக பத்தாம் வீடுவரை கிரகங்கள் அமர்ந்திருப் பது சுகமாலிகா யோகம். பல பகுதிகள் இவர் ஆளுமைக்குள் இருக்கும். மன்னனாக வும், சுகம் நிறைந்தவராகவும், தானம் செய்பவராகவும் விளங்குவார்.
ஐந்தாம் வீடுமுதல் இவ்விதம் அமர்ந்தி ருப்பது பஞ்சமமாலிகா யோகம். அதன் பலன், யாகம் செய்பவராகவும், புகழ்பெற்றவராகவும், மன்னனைப்போன்று வாழ்பவ ராகவும் விளங்குவார்.
ஆறாம் வீடுமுதல் இவ்விதம் கோள்கள் அமைந்தால் சஷ்டமாலிகா யோகம். அதன் பலனாகப் பிறந்தவர் ஒன்றில் செல்வந்தராகவோ அல்லது செல்வமற்றவராகவோ விளங்குவார் என்பதா கும்.
ஏழாம் வீடுமுதல் அமைந்திருப் பது ஸப்தம மாலிகா. அதன் பலன், அதிக மனைவியரைக் கொண்டவராகவும், மன்னனாக வும் விளங்குவார்.
எட்டாம் வீடுமுதல் வரிசையாக அமையும் கிரகமாலிகா யோகம் அஷ்டமமாலிகா யோகமாகும். அந்த யோகத் தில் பிறந்தவர் நிறைந்த ஆயுளைக் கொண்டவ ரும், மன்னனாகவும், தீய பெண்களுக்கு அடிமையாகவும் இருப்பார்.
ஒன்பதாம் வீடு முதல் வரிசையாக கிரகம் அமைவது நவ மாலிகா யோகம். அதன் பலனாக, நற்குணம் கொண்டவராகவும், யாகங்களைச் செய்பவராகவும், தவம் செய்பவராகவும் விளங்குவார்.
பத்தாம் வீடுமுதல் வரிசையாகக் கோள்கள் அமைந்தால் தசமமாலிகா யோகம். அதன் பலனாக, நற்கருமங்கள் செய்பவரும், வைராக்கியத்தோடு தர்மம் செய்பவரும், நல்லோர்களால் போற்றப்படுபவருமாகும்.
பதினொன்றாம் வீடுமுதல் வரிசையாகக் கோள்கள் அமைவது ஏகாதச மாலிகா யோகம்.
அதன் பலன், ராஜகுலப் பெண்ணின் கணவனாக- அதாவது மிக்க செல்வந்தர் வீட்டுப் பெண்ணின் கணவனாகவும், எல்லா செயல்களையும் செய்வதில் வல்லவராகவும் விளங்குவார்.
12-ஆம் வீடுமுதல் வரிசையாக இவ்விதம் கோள்கள் அமைந்தால் துவாதச மாலிகா யோகம். அதிகமாக செலவு செய்பவராகவும், எங்கும் போற்றப்படுபவரு மாகவும் விளங்குவார்.
இவ்விதம் பன்னிரண்டு வகையான கிரகமாலிகா யோகத்தை ஜாதக பாரிஜாத ஆசிரியர் வைத்தியநாத சூரி கூறுகின்றார்.
2022 ஜூலை மாதம் 1, 2-ஆம் தேதிகளில் இவ்வகையாக கும்ப ராசிமுதல் கடக ராசி வரை ஆறு ராசிகளில் கோள்கள் வரிசையாக அமர்ந்தன. கிரகங்கள் அவர்களின் சொந்த ராசிகளில் அமர்ந்து சிறப்பான கிரகமாலிகா யோகத்தைத் தந்துள்ளன என்பதுதான் ஒரு ஆச்சரியமான செய்தி. எனவே ஜூலை ஒன்று, இரண்டு தேதிகளில் பிறந்த குழந்தைகளுக்கு எவ்வகையான கிரகமாலிகா யோகம் அமைந் துள்ளது என்று நாம் அறிந்துகொள்ளலாம்.
செல்: 94438 08596