நலம் பல தரும நவகிரக மந்திரம்

/idhalgal/balajothidam/goodness-nava-karava-mantra

ருவர் பிறந்தநாள் மற்றும் சரியான நேரத்தை அடிப்படையாகக் கொண்டு அவரது ஜாதகம் கணிக்கப்படுகிறது. அந்த ஜாதகத்தில் ராசி, அம்ச சக்கரங்களில் ஜென்ம லக்னம் மற்றும் ஒன்பது கிரகங் களின் நிலைப்பாடு ஆகியவை குறிக்கப் படுகின்றன. தவிரவும் பிறந்த நட்சத்திரத்தை ஒட்டி ஜென்ம ராசி மற்றும் கிரக தசா புக்தி விவரங்கள் தரப்படுகின்றன.

அதன்படி தான் இருக்கும் ராசி வீட்டைப் பொருத்து கிரகமானது பலமோ பலவீனமோ அடைகிறது. மேலும் சுப- அசுப கிரகச் சேர்க்கைமூலம் யோக நிலையையோ தோஷ நிலையையோ பெறுகிறது. கிரகங்கள் பலம்பெற்று யோக நிலையை அடைந்தால் ஜாதகருக்கு பலவித நன்மைகள் உண்டாகும்.

அதேசமயம் ஜாதக கிரகங்கள் பலவீனமாகி தோஷமும் பெறும்போது அந்த நபருக்கு தீயபலன்கள் வரும் வாய்ப்புகள் உண்டு. இதற்குப் பரிகாரமாக கிரக சாந்தி (நிவாரண) முறைகள் ஜோதிட சாஸ்திரத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. அன்பர்கள் அவற்றைப் பின்பற்றி பயன்பெறுகிறார்கள். கிரகப் பரிகாரத் துதிகள் பெரும்பாலும் சமஸ்கிரு தத்தில் (வடமொழியில்) அமைந்துள்ளன.

அந்த சுலோகங்களை அப்படியே உச்சரித்து வருகிறோம்; இதில் தவறேதுமில்லை.

அதேசமயம் அந்த சுலோகங்

ருவர் பிறந்தநாள் மற்றும் சரியான நேரத்தை அடிப்படையாகக் கொண்டு அவரது ஜாதகம் கணிக்கப்படுகிறது. அந்த ஜாதகத்தில் ராசி, அம்ச சக்கரங்களில் ஜென்ம லக்னம் மற்றும் ஒன்பது கிரகங் களின் நிலைப்பாடு ஆகியவை குறிக்கப் படுகின்றன. தவிரவும் பிறந்த நட்சத்திரத்தை ஒட்டி ஜென்ம ராசி மற்றும் கிரக தசா புக்தி விவரங்கள் தரப்படுகின்றன.

அதன்படி தான் இருக்கும் ராசி வீட்டைப் பொருத்து கிரகமானது பலமோ பலவீனமோ அடைகிறது. மேலும் சுப- அசுப கிரகச் சேர்க்கைமூலம் யோக நிலையையோ தோஷ நிலையையோ பெறுகிறது. கிரகங்கள் பலம்பெற்று யோக நிலையை அடைந்தால் ஜாதகருக்கு பலவித நன்மைகள் உண்டாகும்.

அதேசமயம் ஜாதக கிரகங்கள் பலவீனமாகி தோஷமும் பெறும்போது அந்த நபருக்கு தீயபலன்கள் வரும் வாய்ப்புகள் உண்டு. இதற்குப் பரிகாரமாக கிரக சாந்தி (நிவாரண) முறைகள் ஜோதிட சாஸ்திரத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. அன்பர்கள் அவற்றைப் பின்பற்றி பயன்பெறுகிறார்கள். கிரகப் பரிகாரத் துதிகள் பெரும்பாலும் சமஸ்கிரு தத்தில் (வடமொழியில்) அமைந்துள்ளன.

அந்த சுலோகங்களை அப்படியே உச்சரித்து வருகிறோம்; இதில் தவறேதுமில்லை.

அதேசமயம் அந்த சுலோகங்களின் பொருள் தெரிந்து துதிக்கும்போது ஒருவித மனத்திருப்தி அடைவதை உணரலாம். அவ்வாறு ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய சுலோகமும் அதன் பொருளும் கீழே தரப்பட்டுள்ளன.

9planets

1. சூரிய கிரக சுலோகம்

ஜபாகுசும சங்காஸம்

காஸ்யபேயம் மகாத்யுதிம்

தமோரிம் ஸர்வ பாபக்னம்

ப்ரண தோஸ்மி திவாகரம்.

பொருள்: செம்பருத்திப் பூவின் நிறமுடையவரும், கச்யப முனிவரின் புதல்வரும், மிகுந்த ஒளியைக் கொண்டவரும், இருளைநீக்கிப் போக்குபவரும், எல்லாப் பாவங்களையும் அழிப்பவருமான சூரிய பகவானைத் துதிக்கிறேன்.

2. சந்திர கிரக சுலோகம்

ததி ஸங்க துஷாராபம்

க்ஷீ ரோ தார்ணவ ஸம்பவம்

நமாமி ஸஸினம் ஸோமம்

ஸ்ம்போர் மகுட பூஷணம்.

பொருள்: தயிர், சங்கு, பனிபோன்று வெண்மை நிறம் உடையவரும், பாற்கடலில் தோன்றியவரும், முயல் சின்னம் உடையவரும், வேதத்தில் சோமன் என்று அழைக்கப்படுபவரும், சிவபெருமானின் ஜடாமுடியை அலங்கரிப்பவருமான சந்திர பகவானைத் துதிக்கிறேன்.

3. செவ்வாய் கிரக சுலோகம்

தரணீ கர்ப்ப ஸம்பூதம்

வித்யுத் காந்தி ஸமப்ரபம்

குமாரம் ஸக்தி ஹஸ்தம் ச

மங்களம் ப்ரணமாம்யஹம்.

பொருள்: பூமாதேவியின் கர்ப்பத்தில் உதித்தவரும், மின்னலைப் போன்று ஒளி உடையவரும், சக்தி ஆயுதத்தைக் கொண்டவரும், இளமை வடிவமும் கொண்ட அந்த மங்களன் என்னும் செவ்வாய் பகவானைத் துதிக்கிறேன்.

4. புதன் கிரக சுலோகம்

ப்ரியங்கு கலிகாஸ்யாமம்

ரூபேணா ப்ரதிமம் புதம்

ஸெம்யம் ஸெம்யகுணோ பேதம்

தம் புதம் ப்ரணமாம்யஹம்.

பொருள்: மலர்மொட்டுபோல ஒளிவீசி பிரகாசிப்பவரும், உருவ அழகில் ஒப்பில்லாதவரும் சந்திர பகவானின் குமாரரும், ஸௌம்ய குணங்களைக் கொண்டவருமான புதன் பகவானைத் துதிக்கிறேன்.

5. குரு கிரக சுலோகம்

தேவானாம்ச ரிஷீனாம்ச

குரும் காஞ்சன ஸந்நிபம்

புத்தி பூதம் த்ரிலோகேஸம்

தம் நமாமி ப்ரகஸ்பதிம்.

பொருள்: தேவர்கள், ரிஷிபெருமக்களுக்கு ஆசானானவரும், பொன்னிறம் கொண்டவரும், மூவுலகங்களின் புத்தி சக்தி ஆதாரமாக விளங்குபவருமான குரு பகவானை வணங்கு கிறேன்.

6. சுக்கிரன் கிரக சுலோகம்

ஹேமகுந்த ம்ருணாலாபம்

தைத்யானாம் பரமம் குரும்

ஸர்வ ஸாஸ்த்ர ப்ரவக்தாரம்

பார்க்கவம் ப்ரணமாம்யஹம்

பொருள்: பனி, முல்லை, வெண்தாமரை போன்று வெண்மை நிற ஒளி வீசுபவரும், அசுரர்களின் குருவும், எல்லா சாஸ்திரங் களையும் எடுத்துரைப்பவரும், பிருகு முனிவரின் புதல்வருமான அந்த சுக்கிர பகவானைத் துதிக்கிறேன்.

7. சனி கிரக சுலோகம்

நீலாஞ்சன ஸமாபாஸம்

ரவிபுத்ரம் யமாக்ரஜம்

சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்

தம் நமாமி ஸநைஸ்சரம்.

பொருள்: மைபோன்று கருமைநிறம் கொண்டவரும், சூரிய பகவானின் குமாரரும், எமதர்மராஜனின் தமையனும், சாயா தேவிக்குப் பிறந்தவரும், மிகவும் மெதுவாகச் சுழல்பவருமான அந்த சனி பகவானை வணங்குகிறேன்.

8. ராகு கிரக சுலோகம்

அர்த்த காயம் மஹாவீர்யம்

சந்திரராதித்ய விமர்தனம்

ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்

தம் ராகும் ப்ரணமாம்யஹம்

பொருள்: பாதி உடலமைப்பு கொண்ட வரும், பெரும் வீரனும், சூரிய சந்திரர்களைப் பிடிப்பவரும் (கிரகணம்), அசுரர் குலத்தில் உதித்தவருமான அந்த ராகு பகவானைத் துதிக்கிறேன்.

9. கேது கிரக சுலோகம்

பலாஸ புஷ்ப ஸங்காஸம்

தாராகாக்ரஹ மஸ்தகம்

ரௌத்ரம் ரௌத்ராமகம் கோரம்

தம் கேதும் ப்ரணமாம்யஹம்.

பொருள்: புரசுமரப்பூபோன்ற செந்நிறம் உடையவரும்,

நட்சத்திரங்கள், கிரகங்களுக்கு தலையானவரும், மிகுந்த கோபம் கொண்டவருமான அந்த கேது பகவானைத் துதிக்கிறேன்.

கிரகதோஷம் பெற்றவர்கள் தங்கள் இல்லத்தில் அந்தந்த கிரக சுலோகத்தை (துதியை) தினமும் ஒன்பது முறை பாராயணம் செய்து வழிபடலாம். மேலும் எண்கணித சாஸ்திரப்படி வெவ்வேறு தேதிகளில் பிறந்தவரும் கீழ்க்காணும் கிரகங்களைப் பூஜித்துவரலாம்.

பிறந்த தேதிகள் வழிபட வேண்டிய கிரகம்

1, 10, 19, 28 சூரிய பகவான்

2, 11, 20, 29 சந்திர பகவான்

3, 12, 21, 30 குரு பகவான்

4, 13, 22, 31 ராகு பகவான்

5, 14, 23 புதன் பகவான்

6, 15, 24 சுக்கிர பகவான்

7, 16, 25 கேது பகவான்

8, 17, 26 சனி பகவான்

9, 18, 27 செவ்வாய் பகவான்

அதிக கிரக தோஷம் பெற்றவர்கள் தங்கள் இல்லத்தில் பின்பற்றவேண்டிய பரிகார முறை ஒன்றும் உள்ளது. தூய செம்பினாலான நவகிரக எந்திரம் கடைகளில் கிடைக் கும். அல்லது செவ்வக- சதுர வடிவில் தூய செம்பால் செய்துகொள்ளலாம். அந்த நவகிரக எந்திரத்தை பிரேம் போட்டு பூஜையறையில் வைத்து தினமும் மலர் தூவி வழிபட்டு வரலாம். கிழக்கு நோக்கி வைத்து, காலையோ மாலையோ மனத்தூய்மையுடன் பூஜித்து வந்தால் கிரக தோஷம் நிச்சயம் விலகி நன்மைகள் உண்டாகும் என்பதே உண்மை. இத்துடன் வருடத்திற்கு ஒருமுறை நவகிரகத் தலங்களுக்குச் சென்று வழிபட்டபின் இல்லத் தில் அன்னதானமும் செய்தல் சிறப்பு. மேன்மைகளையும் முன்னேற்றங்களையும் நிச்சயம் பெறலாம்.

செல்: 74485 89113

bala071218
இதையும் படியுங்கள்
Subscribe