ஒருவரது பிறந்த ஜாதகத்தைக் கொண்டு அவரது வாழ்வின் பலா பலன்களைக் கூறலாம். ஒரு வீட்டின் மேன்மைபற்றி அறிய வாஸ்து சாஸ்திரம் உதவும். இதுபோல் ஒரு கோவில்பற்றி அறிய உதவும் சாஸ்திரத்திற்கு தேவப் பிரசன்னம் என்று பெயர்.
தேவப் பிரசன்னம் பார்ப்ப தற்கு, சம்பந்தப்பட்ட கோவிலில் பிரசன்னம் போட்டுப் பார்க்க வேண்டும். இதன் அர்த்தம், அந்த நேரத்து கோட்சாரத்தை எழுதி வைத்துக் கொள்ளவேண்டும். சிலர் சோழிகளைக்கொண்டு பலன் கண்டுபிடிப்பார்.
மனிதர்களின் ஜாதக கட்டங்கள் 12-ஆம் அதற்குரிய பலன்களைக் கூறும். உதாரணமாக, லக்னம் ஜாதகர் என்றும், 2-ஆம் பாவம் தனம், குடும்பம் பற்றியும் விவரிக்கும். ஆனால் தேவப் பிரசன்னத்தின் 12 பாவங்களும் வேறு வகையான பலன்களைக் கூறும்.
பிரசன்னம் லக்னம்: தெய்வீக இருப்பு, தெய்வீக சாந்நித்யம், கர்ப்பக் கிரகம், சிலை என இவை பற்றிக்கூறும்.
2-ஆமிடம்: உண்டியல், செல்வம், கோவில் சொத்துகள், கோவில் குழுவில் உள்ளோர், கோவில் தர்மகர்த்தாக்கள் என இவைபற்றி அறியலாம்.
3-ஆமிடம்: கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள், கோவில் வாகனங்கள், பால், பழம், தேங்காய் போன்ற சிறு நைவேத் தியங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
4-ஆமிடம்: ப்ராகாரங்கள், கோவில் த்வஜம், உபதேவதை, கோவில் கிணறு, குளம் பற்றி அறிய இயலும்.
5-ஆமிடம்: சிலையின் புனிதம், மந்திரங்கள், மந்திர சாந்நித்யம், கோவிலின் அதிகாரி, கோவில் கணக்கு எழுதுகிறவர்கள் பற்றித் தெரியவரும்.
6-ஆமிடம்: கோவிலின் எதிரிகள், மாசுபடுதல், அசுத்தம் பற்றி அறியத் தெரியும்.
7-ஆமிடம்: கோவிலின் அலங்கார நகைகள், சாற்றப்படும் மாலைகள், வரும் பக்தர்கள், ஏற்றப்படும் தீபமென இவை பற்றி இந்த இடம் தெரிவிக்கும்.
8-ஆமிடம்: மகா நைவேத்தியங்கள், மேளக்காரர்கள், வாத்தியகாரகன், பாடகர்கள்,
ஒருவரது பிறந்த ஜாதகத்தைக் கொண்டு அவரது வாழ்வின் பலா பலன்களைக் கூறலாம். ஒரு வீட்டின் மேன்மைபற்றி அறிய வாஸ்து சாஸ்திரம் உதவும். இதுபோல் ஒரு கோவில்பற்றி அறிய உதவும் சாஸ்திரத்திற்கு தேவப் பிரசன்னம் என்று பெயர்.
தேவப் பிரசன்னம் பார்ப்ப தற்கு, சம்பந்தப்பட்ட கோவிலில் பிரசன்னம் போட்டுப் பார்க்க வேண்டும். இதன் அர்த்தம், அந்த நேரத்து கோட்சாரத்தை எழுதி வைத்துக் கொள்ளவேண்டும். சிலர் சோழிகளைக்கொண்டு பலன் கண்டுபிடிப்பார்.
மனிதர்களின் ஜாதக கட்டங்கள் 12-ஆம் அதற்குரிய பலன்களைக் கூறும். உதாரணமாக, லக்னம் ஜாதகர் என்றும், 2-ஆம் பாவம் தனம், குடும்பம் பற்றியும் விவரிக்கும். ஆனால் தேவப் பிரசன்னத்தின் 12 பாவங்களும் வேறு வகையான பலன்களைக் கூறும்.
பிரசன்னம் லக்னம்: தெய்வீக இருப்பு, தெய்வீக சாந்நித்யம், கர்ப்பக் கிரகம், சிலை என இவை பற்றிக்கூறும்.
2-ஆமிடம்: உண்டியல், செல்வம், கோவில் சொத்துகள், கோவில் குழுவில் உள்ளோர், கோவில் தர்மகர்த்தாக்கள் என இவைபற்றி அறியலாம்.
3-ஆமிடம்: கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள், கோவில் வாகனங்கள், பால், பழம், தேங்காய் போன்ற சிறு நைவேத் தியங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
4-ஆமிடம்: ப்ராகாரங்கள், கோவில் த்வஜம், உபதேவதை, கோவில் கிணறு, குளம் பற்றி அறிய இயலும்.
5-ஆமிடம்: சிலையின் புனிதம், மந்திரங்கள், மந்திர சாந்நித்யம், கோவிலின் அதிகாரி, கோவில் கணக்கு எழுதுகிறவர்கள் பற்றித் தெரியவரும்.
6-ஆமிடம்: கோவிலின் எதிரிகள், மாசுபடுதல், அசுத்தம் பற்றி அறியத் தெரியும்.
7-ஆமிடம்: கோவிலின் அலங்கார நகைகள், சாற்றப்படும் மாலைகள், வரும் பக்தர்கள், ஏற்றப்படும் தீபமென இவை பற்றி இந்த இடம் தெரிவிக்கும்.
8-ஆமிடம்: மகா நைவேத்தியங்கள், மேளக்காரர்கள், வாத்தியகாரகன், பாடகர்கள், சங்கு ஊதுகிறவர்கள் என இது பற்றி அறியக்கூடும்.
9-ஆமிடம்: கோவில் நிர்வாகிகள், தர்மகர்த்தாக்கள், பரம்பரை கோவில் உடமையாளர்கள், பூர்வீகமாக செய்துவந்த நல்ல காரியங்கள், பூஜை செய்பவர்கள் என அறியலாம்.
10-ஆமிடம்: ஆண்டுதோறும் நடக்கும் விழாக்கள், விசேஷங்கள், உற்சவங்கள், பண்டிகைகள், பூஜை செய்பவர்கள் என்பன போன்ற விஷயங்கள் புலப்படும்.
11-ஆமிடம்: பணவரவு, அதுவரும் வழிகள் பற்றிக் கூறுமிடம் இதுவாகும்.
12-ஆமிடம்: கோவிலின் செலவு வகையறாக்கள், கோவிலின் கும்பாபிஷேகம், விரயம், பணநாசம் செய்கிறவர்கள், கோவில் திருப்பணி செய்பவர்கள், கோவில் கட்டளைதாரர்கள், கோவில் பிரதிஷ்டை செய்கிறவர்கள் என இந்த பாவம் விளக்கிக் கூறும்.
தேவப் பிரசன்னம் பார்க்கப்படும் முகூர்த்தம, சுப முகூர்த்தமாக இருக்க வேண்டும். எந்த தெய்வத்திற்குப் பிரசன்னம் பார்க்கப்படுகிறதோ, அந்த தெய்வத்துக்குரிய நட்சத்திர தேவதையாக, அந்தநாளின் முகூர்த்தம் நட்சத்திரம் அமையக்கூடாது. மேலும் தேர்ச்சிபெற்ற தெய்வயஞர்களைக் கொண்டு தெய்வீகமான சூழ்நிலையில் பிரசன்னம் பார்க்கப்படவேண்டும்.
பிரசன்னம் லக்னம் கூறும் தெய்வம்
பிரசன்ன லக்னம் சிம்மமாக இருந்தாலும், லக்னத்தில் சூரியன் இருந்தாலும் அல்லது கேந்திரங்களில் சூரியன் இருந்தாலும் பிரதான தேவதை சிவபெருமான் ஆகும்.
பிரசன்ன லக்னம் கடகமாக இருந்தா லும், லக்னத்தில் சந்திரன் நின்றாலும் பார்த்தாலும், கேந்திரத்தில் நின்றாலும் பிரதான தேவதை துர்க்கையாக இருக்கும்.
மேஷம் லக்னமாகி, செவ்வாய் மேற்கண்டவாறு இருப்பின் பிரதான தேவதை முருகக்கடவுள் ஆகும்.
விருச்சிகம் லக்னமாகி, செவ்வாய் இவ்வாறு இருந்தாலும் அது பத்ர காளியாகும்.
புதன் மேற்கூறிய நிலையில் இருந்தால், பிரசன்ன தேவதை மகாவிஷ்ணு ஆகும்.
தனுசு, மீன லக்னமாகி, குரு மேற்கண்ட நிலையில் இருப்பின், அங்கு அனைத்து தேவதைகளும் சாந்நித்யம் பெற்று இருப்பர்.
ரிஷபம் அல்லது துலா லக்னமாகி, சுக்கிரன் மேற்கண்டவாறு இருந்தால், அங்குள்ள பிரதான தேவதை மகாலட்சுமி அல்லது அன்னபூரணி ஆவார்.
மகரம் அல்லது கும்பம் லக்னமாகி, சனி இவ்வாறு இருப்பின் அங்குள்ள தேவதை சாஸ்தா அல்லது அய்யனார் ஆகும்.
6, 8, 12-ஆம் பாவாதிபதிகள் எந்த பாவத்தை பார்த்தாலும் நின்றாலும், அந்த பாவத்தை பாதிக்கின்றன.
கோவிலின் பாதிப்பு பற்றி அறிய...
1 மற்றும் 5-ஆம் பாவகம் தெய்வம் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலையைக் குறிக்கும் பாவங்கள்.
இதில் செவ்வாய் இருந்தால், சிலை விரிசல் கண்டுள்ளது அல்லது வளைந்துள்ளது எனக் கூறலாம்.
1, 5-ஆம் பாவகங்களில் சனி இருந்தால், அது பழமையான விக்ரமாகும். அதில் ராகு குளிகள் இருப்பின் சிலை அசுத்தமான மிருகங்களால் களங்கப்பட்டுள்ளது என அறியலாம். இதில் கேது இருப்பின், எதிரிகள், அசுத்தமான விலக்கப்பட்ட பொருளால் சிலையை நீராட்டியுள்ளனர் எனத் தெரியவரும். அதில் சூரியன் இருந்தால் பலமிக்க மிளகுப் பொடியை சிலையில் தடவி, சிலையின் தெய்வீகத் தன்மை களங்கப்படுத்தப்பட்டதாக அறியலாம்.
உதய லக்னத்தை சுபர் பார்த்தாலும், சுபர், குரு இருந்தாலும், தெய்வம் தன் பக்தர்களுக்கு அருள் வழங்கும் நல்ல தன்மையில் இருப்பதாகக் கொள்ளலாம்.
3-ல் சனி இருந்தால், நைவேத்தியம் போதுமான அளவில் இராமல், குறைந்த அளவில் படைக்கப்படுகிறது என அறியலாம்.
3-ல் செவ்வாய் இருந்தால், நைவேத்தி யம் முறையாக- ஒழுங்காக தயாரிக்கப் படுவதில்லை என அறிவிக்கும்.
3-ல் ராகு, கேது, குளிகை இருப்பின், நைவேத்தியத்தில் இறந்துபோன மிருகத்தின் பகுதி கலந்துள்ளதாக அறியலாம்.
3-ஆம் பாவம், கோவில் பணியாளர்கள் பற்றியும் கூறும்.
4-ஆம் பாவத்தில் சனி இருந்தால், கோவில் வளாகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது என தெரியும்.
4-ல் செவ்வாய் அல்லது சூரியன் இருப்பின், கோவிலின் சில பகுதிகள் தீயினில் சேதமடைந்ததைக் கண்டுகொள்ளலாம்.
4-ல் குளிகன் இருந்தால், அசுத்தம் உடையோர் கோவிலில் நுழைந்தனர் எனக் கூறலாம்.
4-ஆம் பாவம் கொண்டு அஷ்டபந்தன பலம் நிர்ணயிக்கலாம்.
7-ஆம் பாவத்தில் பாவ கிரகங்கள் இருந்தால் கோவில் நகைகள் களவு போயிருக்கிறது மற்றும் பொக்கிஷத்தில் சிலவற்றைக் காணவில்லை என்றும் அறியலாம்.
9-ஆம் பாவத்திலுள்ள அசுபர்கள், கோவை நிர்வாகம் செய்யும் மனிதருக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தைச் சுட்டிகாட்டும். மேலும் அங்கு பணிபுரியும் மேளக் காரர்கள், மாலை கட்டுவோர் ஆகியோருக்கு ஏற்பட்டிருந்த துன்பங்களைத் துலக்கும்.
10-ஆமிடத்தில் அமர்ந்த பாவர் கோவில் திருவிழாக்கள், பூஜைகள் சரிவர நடத்தப்படவில்லை என எடுத்துரைக்கும்.
12-ஆமிடத்திலுள்ள பாவர், சிலர் அத்துமீறி கோவிலில் நுழைந்துள்ளனர் என்பதைத் தெரிவிக்கும்.
இவ்விதம் தேவ பிரசன்னத்தின் 12 பாவங்களில் அமர்ந்த பாவர்கள் கோவிலில் என்ன குற்றம் நிகழ்ந்துள்ளது என எடுத்தியம்புவர்.
தேவப் பிரசன்னம் எப்போது பார்க்கப் படவேண்டும்?
கோவிலின் உட்புறத்தில் பிறப்பு அல்லது இறப்பு நிகழ்வது, கோவிலினுள்ள மலஜலம் போன்று கழிவுகளை அகற்றும்போது, ஆந்தை, காக்கை, சாரைப்பாம்பு, குரங்கு, கழுகு, நாய், கழுதை, ஒட்டகம், பன்றி, மனிதக் குரங்குகள் என ஏதோ ஒன்று கோவிலினுள்ளே நுழையும்போது, துந்துபி, புரசரம் போன்ற வாத்யக் கருவிகள் கோவிலின் உள்ளே பயன்படுத்தப்படும்போது, பாம்புப்புற்று, தேனிகூடு, காளான், எறும்புப்புற்று போன்றவை கோவிலின் உள்ளே உண்டாகும்போது, பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரகத்தின்மேல் கண்ணீர், வியர்வை, சிரிப்பு, அழுகை தென்படும்போது, பூஜை, விழாக்கள் இவை காரணமின்றி நிறுத்தப்படும்போதும், விக்ரகம் சுடாவது அல்லது அசையும் போது, விலக்கப்பட்ட, தேவையற்ற மந்திரங்கள், பூக்களால் வழிபடும்போது, உரிய நேரத்தில் பூஜைகள் நடைபெறாமல் இருக்கும்போது, சிலையின்மீது மிளகு சம்பந்தப்பட்ட பொடி அல்லது நீரால் தேய்க்கப்படும்போது தேவ கோபமும், தெய்வ சாந்தித்யமும், தெய்வ அம்சமும் குறைபடுவதற்குக் காரணமாகும். தெய்வ சக்தி குறைந்ததாக கருதும்போது தேவப் பிரசன்னம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த தேவப் பிரசன்னத்தின்மூலம் கோவில் எதனால் தூய்மையிழந்தது கோவில் பூஜைகள் காரண காரியமின்றி ஏன் நின்றுபோனது எனவும், புனிதத் தன்மை குறைகளின் காரணத்தையும் தெரிந்துகொள்ளமுடியும்.
புனிதப்படுத்தும் முறை
கடவுளின் உடலே பிரசாதம் எனப்படும். சிலை வடிவம் சூட்சும நிலையிலுள்ள கடவுளின் சக்தியாகும். பிரசாதம் என்பது ஆதாரம் என்றும், சிலை வடிவம் ஆதேயம் என்றும் கூறப்படும். இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. ஒன்றில் ஏற்படும் பாதிப்பு, மற்றொன்றையும் பாதிக்கும். இதில் எதில் குறையிருந்தாலும் இரண்டையும் ஒரே சமயத்தில் சரி செய்யவேண்டும்.
மேலும், கோவிலின் உள்ளே புனிதம் கெட்டிருந்தால், பரிகார நிவர்த்தி பூஜை செய்யவேண்டும்.
குறைந்த அளவு பாதிப்பு இருப்பின், புனித கலச நீரால் எல்லா இடங்களையும் தெளித்துவிட்டால் போதும்.
பிம்பத்திலோ, பிரசாரத்திலோ தென்படும் குறைகளை உடனுக்குடன் சரிசெய்யவேண்டும். அவ்வாறு செய்யாவிடில் துர்சம்பவம் நிகழும்.
இவ்விதம் கோவிலின் குகைகளை, தேவப்பிரசன்னத்தின்மூலம் கண்டுபிடித்து, அவை சரிசெய்யப்பட்டால், தெய்வ ஆற்றல் அதிகரித்து, வணங்கும் மனிதரின் வாழ்வு வளமும், செழுமையும் அடையும்.
செல்: 94449 61845