9-ஆம் பாவமென்பது பாக்கியத்தைப் பற்றிக் கூறினாலும், நமக்கு வாழ்க்கையில் கிடைக்கும் தாய்- தந்தை, மனைவி, குழந்தைகள், தொழில், லாபம் என்ற அனைத்து பாக்கியங்களைப் பற்றியும் எடுத்துரைத்தா லும், ஒன்பதாம் பாவமென்பது தெய்வீகநிலை என்ற அற்புதக் காரகத்தையும் அதனுள் பொதிந்துதான் இருக்கிறது.
ஒன்பதாம் பாவம் உள்நுழைகிறபொழுதுதான் உற்பத்தி என்ற நிலையை முழுமையாகப் பெறமுடியும். அல்லது அந்த உற்பத்தி தடங்கல் இல்லாமல் சுகமானதாக, இறுதியில் கையகத்தில் கிடைப்பதாக அமையும்.
பூமியாகிய பெண்ணுக்குள் விதையாகிய ஆண் விதைக்கும்பொழுது, இறைநிலையில்தான் இயற்கை ஆண்- பெண் இருவரையும் வைத்திருக்கும்.
அவ்வாறு இறைநிலையில் இருக்கும்பொழுது அதை ஒரு உணர்தல் அல்லது
9-ஆம் பாவமென்பது பாக்கியத்தைப் பற்றிக் கூறினாலும், நமக்கு வாழ்க்கையில் கிடைக்கும் தாய்- தந்தை, மனைவி, குழந்தைகள், தொழில், லாபம் என்ற அனைத்து பாக்கியங்களைப் பற்றியும் எடுத்துரைத்தா லும், ஒன்பதாம் பாவமென்பது தெய்வீகநிலை என்ற அற்புதக் காரகத்தையும் அதனுள் பொதிந்துதான் இருக்கிறது.
ஒன்பதாம் பாவம் உள்நுழைகிறபொழுதுதான் உற்பத்தி என்ற நிலையை முழுமையாகப் பெறமுடியும். அல்லது அந்த உற்பத்தி தடங்கல் இல்லாமல் சுகமானதாக, இறுதியில் கையகத்தில் கிடைப்பதாக அமையும்.
பூமியாகிய பெண்ணுக்குள் விதையாகிய ஆண் விதைக்கும்பொழுது, இறைநிலையில்தான் இயற்கை ஆண்- பெண் இருவரையும் வைத்திருக்கும்.
அவ்வாறு இறைநிலையில் இருக்கும்பொழுது அதை ஒரு உணர்தல் அல்லது அனுபவ நிலைப்பாட்டை ஒன்பதாம் பாவத் தொடர்பு வழங்கும்.
ஒன்பதாம் பாவத்தோடு லக்னமும் லக்னாதிபதியினுடைய தொடர்பும் ஏற்படின், ஆண்- பெண் இருவருக்கும் இந்த இறைநிலை அனுபவம் அவர்களின் வாழ்க்கை நடைமுறைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆண்- பெண் இணைதல் என்பது அடுத்த சந்ததிகளை உருவாக்கத்தானே! அவ்வாறு இந்த நிகழ்வு ஒரு இறையனுபவமாக அமைந்து, அந்த இறைநிலையில் விதைக்கும் விதையும், விளைவிக்கும் பூமியும் வளமானதாக அமைகிறபொழுது, அதன் விளைச்சல் என்பதும், அறுவடையாகிய சந்ததி உற்பத்தியும் மிக தீர்க்கமாக அமையவேண்டும் என்ற நோக்கில், நம் சித்தர்களும் ஞானிகளும் யோகிகளும், எந்தக் கட்டமைப்பைக் கொண்ட, ஆணும் பெண்ணும் இணைந்தால் (திருமணம்) பொருத்தமானதாக இருக்கும், அவர்கள் உருவாக்கம்- அதாவது அடுத்த சந்ததியர் இன்னும் மேம்பட்ட நிலைப்பாட்டைப் பெறமுடியும் என அறிந்து கூறிய ஜாதகக் கணிதம்தான் திருமணப் பொருத்தம், முகூர்த்தம், திருமணநாள் என்ற நிகழ்வுகள்.
அதேபோல் திருமணப் பொருத்தத்திற்கு, பெண் நட்சத்திரத்திலிருந்துதான் ஆண் நட்சத்திரத்தைப் பொருத்திப் பார்ப்பார்கள். இதுவே ஒரு மேம்பட்ட கணிதம்தான்.
ஏனெனில் பூமியின் வளமையைப் பொருத்துதான் விதையின் வீரியம் வெளிப்படும். ஆக, பூமிக்கேற்ற விதையைத் தேர்ந்தெடுத்தலில்தான் விளைச்சல் நன்றாக இருக்கும். என்பதுதானே விதி.
கரும்பு விளைகிற பூமியில் நெல்லும், நெல் விளைகிற பூமியில் மஞ்சளும், விதைத்தால் பூமிக்கும் விதைக்குமே கேடுதானே? அதனால்தான் பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து பொருத்தம் பார்த்து, நிலத்திற்கேற்ற விதையைத் தேர்ந்தெடுத்தார்கள்.
இறையனுபவம் என்ற நிலையை ஆணும் பெண்ணும் இணைதலில் பெற விழிப்புணர்வென்பது இன்றியமையா ஒன்றாகும். ஆனால் நாம் இயற்கை நடத்துகிற நர்த்தனத்தில் நம்மையறியாமல் நாமும் நடனத்தை நிகழ்த்திவிட்டு சென்றுகொண்டிருக்கிறோம்.
அந்த நர்த்தன நாட்டியத்தில் நிகழும் அல்லது அதற்கு மூலமாக இருக்கும் இறையை விழிப்புணர்வால் உணர்ந்து, அந்த இறைநிலையில் இருக்கும்பொழுது உங்களின் வாழ்க்கையில் வேண்டப்படும் எந்தப் பிரார்த்தனையையும் வையுங்கள். அந்த பிரார்த்தனை இறைவனிடத்தில் நேராகக் கொடுப்பது போன்றது. இறைநிலையில் இருக்கும்பொழுது வைக்கப்படும் பிரார்த்தனைகள் நிச்சயம் கிடைத்தே தீரும்.
இந்த அனுபவத்தைப் பற்றி மேல் நாட்டு சிந்தனையாளர்கள் பலரும் ஏன் நம் நாட்டில் வாழ்ந்த பல ஞானிகளும் தங்கள் கருத்தை நூல்களாகப் பதிந்துவிட்டுதான் சென்றிருக்கிறார்கள்.
நான் இத்தனை ஆண்டுகள் தேடி யெடுத்த என் உணர்வுகளை, அனுபவங் களை இந்தத் தொடரின் மூலமாக வெளிப் படுத்தியதில் பிரபஞ்சத்திற்குதான் முக்கிய பங்கு.
போய்ச் சேர வேண்டுமென்பது பிரபஞ்சத் தீர்மானமே!
இந்த விஷயங் களை உங்களுடன் பகிர எனக்கு வாய்ப்பளித்த "பாலஜோதிடம்' இதழின் உரிமையாளர், ஆசிரியர் உள்பட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். என்னை எழுதத் தூண்டி ஊக்கம்கொடுத்த "பாலஜோதிடம்' குடும்பத்தின் ஒரு அங்கமான மலரோன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
(முற்றும்)
செல்: 73394 44035