அர்த்தநாரி
ருத்ரன் எனும் ஒருமுனைப்புத் தன்மை குறித்து கடந்த இதழில் கண்டோம். இந்த ருத்ர ஒருங்கிணைப்பு நிலை தீவிரப்பட்டு, அதி தீவிரப்பட்டு, ஒன்றைநோக்கி ஒன்று கவரப் பட்டு இனைதலே அர்த்த நாரி.
இந்த இணைதலில் பிரபஞ்ச இருப்பு, இயக் கம் என்னும் இரு நிலை களான ஆணும் பெண் ணும் இணைந்து, ஒரு படிநிலைக்குள் தள்ளப்பட்டு லயித்திருக்கும் நிலை அர்த்தநாரி.
இதுவும் ஒரு உணர்வு நிலையே. இணைதலில் இருப்போர் உணர்கிறார்களோ இல்லையோ- இது தன்னிச்சையாக நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.
இந்தக் கட்டமைப்பே அப்படித்தான். இந்த இணைதலில், ஆண்- பெண் என்ற இரு படிநிலை மாறி ஒரு படிநிலையில் பயணிக்கும்.
இது ஒன்றையொன்று கவரும் நிலத் தன்மையாம்.
நடராஜர்
நிலத் தன்மையான இணைதல் நடந்தவுடன் நாட்டியம் துவங்கி விடும், இந்த நாட்டியத்தில் ஒரு படிநிலையானது பிரிந்து இரு படிநிலைகளான ஆணும் பெண்ணும் அதனதன் தன்னிலைக்குள் மீண்டும் வந்து, ருத்ர நிலையான ஒரு முனைப்பு முடிவுக்கு வரும். ருத்ரத்தின் நாட்டியம் ருத்ரதாண்டவம்.
அதன் அடுத்த நிலை ஆனந்த தாண்டவம். இதுவும் உணர்வு நிலையே இதன் வடிவாக்கம் ஆனந்த மூர்த்தி.
இந்த உணர்வு நிலையில், சக்தி என்கின்ற பெண் வடிவம் பார்வதி நிலையாம். இது பெண் நிலையின் ஆனந்த நிலை. ஆணின் ஆனந்த நிலை நடராஜர். இந்த இரு நடராஜர்- பார்வதி நிலைகளில்தான் இந்த உலக இயக்கமே கட்டுப்பட்டிருக்கிறது.
அனைத்து மாயைகளும், வடிவங்களும், வண்ணங்களும், காட்சிகளும் இதனுள்ளே தான் கட்டுப்பட்டிருக்கின்றன.
இந்த நடராஜர்- பார்வதியின் உணர்வு நிலை சற்று ஆழமானது. விழிப்புணர்வின் ஆழத்திற்குச் சென்றால் இந்த நிலையை ஆணும் பெண்ணும் உணரமுடியும்.
அவ்வாறு உணரும்பட்சத்தில் இந்த உலகியல் வாழ்க்கையின் நாட்டிய நர்த்தனங் கள் புரிபட்டுவிடும்.
அது புரிந்துவிட்டால் இந்த மாயை என்ற நிலை அகன்றுவிடும்.
இந்த நடராஜர்- பார்வதியின் இயக்கம் நிகழ்ந்துகொண்டிருக்கும் வரை இந்த உலகம் இயங்கிக்கொண்டேதான் இருக்கும்.
அல்லது பிரபஞ்சம் இருக்கிறவரை உயிரினங்களில் இந்த நாட்டிய இயக்கம் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும். இதுதான் பிரபஞ்சத் தொடர்ச்சியான உற்பத்தியின் மூலம்.
உணர்ந்தவன் ஞானி; உணராதவன் நான்- நீ! காட்சிகள், அதனால் வரும் எண்ணங்கள், எண்ணங்களால் வரும் செய்கைகள், செய்கை யினால் வரும் பயன் அனைத்தும் நடராஜரின் நாட்டியமே.
நடராஜ தத்துவம்தான் சாதாரண மனித வாழ்க்கை. இந்த நடராஜரின் நாட்டி யம் ஆண்- பெண் இனப் பெருக்க செயலான இணைதலில் மூன்றா வது நிலை.
ஆண்- பெண் இணைவு அர்த்த நாரிஸ் வரரிலிருந்து துவங்கும்.
இணைந்தவுடன் துவங்கும் இயக்கம் நடராஜர். இந்த நடராஜர் நாட்டிய மாயையில் தான் அனைத்து சூட்சமங்களும் மறக்கப் பட்டு அல்லது மறைக்கப்பட்டிருக்கிறது.
இந்த இயக்க உணர்வை விழிப்புணர்விலிருந்து அனுபவித்து உணரமுடியும். இந்த இயக்கத்தின் காரணம் விதைப்பு. இந்த நிலையில் ஆணாகிய விதையும், பூமியாகிய பெண்ணும் நடராஜரின் மாய நாட்டியத்தில் இயங்கி, உச்சத்தைத் தொடும்நிலையே காலபைரவர்.
காலபைரவர்
பைரவர் என்பது கட்டுக்கடங்கா- வலிமை மிகுந்த ஒரு சக்திப் பிரளயம். அதுவே பிரபஞ்ச நிலை. அந்த நிலையே இறை. இந்த இறையை, காலம் என்கிற உணர்வுநிலையை தாண்டுகிறபொழுது உணரமுடியும்.
நடராஜர் என்ற நிலையில் பயணிக்கும் மனிதனின் எல்லா உணர்வு நிலைகளுமே காலத்துக்குள்தான் நிகழும்.
காலம் என்பது இரவு- பகல், மணி- நொடிக் கணக்குகள் அல்ல. நான் சொல்லும் காலம் என்பது உணர்வுநிலை. இந்த உணர்வு நிலையைக் கடக்கின்றபொழுதுதான் பைரவர் என்ற பிரபஞ்ச நிலையை அடைய முடியும்.
நடராஜரின் நாட்டியம்- அதாவது ஆண்- பெண் இணைதலில் இயக்கம் முடிந்து உச்சநிலையில் இருக்கும்பொழுது, காலத்தைக் கடந்து தன்னிலை மறந்திருத்தலே பைரவர் நிலை. காலம் என்ற உணர்வுகளைக் கடந்து வருவதால் அது கால பைரவர் என்று உரைக்கப் படுகிறது.
இந்தக் காலம்கடந்த உச்சநிலைக்கு நடராஜரின் நாட்டியநிலை கொண்டு சென்று, இனப்பெருக்கத்திற்கான விதை ஆணிடமிருந்து பெண்ணுக்குள் விதைக்கும் அந்த கணமே இறைநிலை.
ஆணும் பெண்ணும் இறைநிலையில் இருக்கும்பொழுதுதான் விதை விதைக்கப் படும்.
இந்த இறைநிலையில் ஆணும் பெண்ணும் இருக்கும்பொழுதுதான் பூமியாகிய பெண்ணும் வளமைபெற்று, இளக்கம்பெற்று விதையைத் தன்னுள் பெற்றுக்கொள்ளும்.
இந்த நிலையில் அதாவது நிகழ்கால உணர்வில் இருந்து கொண்டே உணர்வற்ற காலத்தைக் கடந்து உணரமுடியும்.
அடுத்த தலைமுறையை உருவாக்குகிற சக்திப் பிரளயமாகிய இந்த நிலையே கால பைரவர்.
இதில் ஆண் நிலை பைரவர்; பெண் நிலை பைரவியாம்.
உணர்வு என்ற நிலைகடந்து- அதாவது காலத்தைக் கடந்து, தன்னிலை மறந்து ஆண்- பெண் இருவரும் இருந்து, ஆண் விதைத்து பெண் உள்வாங்கி, மறுபடி காலத்திற்குள் வருவதென்பதே இயல்பு நிலை.
இந்த இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு முன் இருக்கும் நிலைதான் சதாசிவம்.
சதாசிவம்
அதாவது காலம் கடந்து, ஏதுமற்ற பிரபஞ்ச நிலையை உணர்ந்து அதில் லயித்துக் கிடப்பது சதாசிவம்.
இயக்கம் என்ற நடராஜர் நிலையில் பயணித்து இயங்கி, காலம்கடந்த பைரவர் நிலையில், பிரபஞ்ச நிலையிலிருந்து படைத்து, படைப்பு முடிந்தவுடன் இறை நிலையோடு ஒன்றிணைக்கும் நிலை; முழு அமைதி சப்தமற்ற, ஏதும்புரியா நிலை,
அந்த உணர்வோடு வெளியேறி அமர்கிற நிலை, அதைக் கடந்த சிவானந்த நிலையே சதாசிவம். இயக்கம் நின்று, காலத்தையும் கடந்து, இறைவனை உணர்ந்து வெளியேறி அமர்கிற நிலை.
கர்ப்பக்கிரகத்தில் இருக்கும் இறைவனோடு இணைந்து, நெஞ்சுருகி, தன்னிலை மறந்து, கர்ப்பக்கிரகத்தைவிட்டு வெளியேறும்பொழுது ஒருநிலையை உணர்வோமே, அந்த நிலைதான் சதாசிவம்.
"சதாசிவா, எப்பொழுதும் நீயே! எக்காலமும் நீயே! எல்லாமும் நீயே' என்று, "நாம்' என்ற நிலையே இல்லாத நிலைதான் சதாசிவம்.
நான் கடந்த பாகங்களில் விளக்கிய அனைத்துமே உணர்வு நிலைகளே! இந்த ஐந்து இறைநிலைகளை- அதாவது ருத்ரன், அர்த்தநாரி, நடராஜர், காலபைரவர், சதாசிவம் என்கின்ற இந்த "நமசிவாய' தத்துவத்தை காமத்திலிருந்து உணரமுடியும்- விழிப்புணர்வோடு இருக்கையில்.
சரி, இந்த இறைநிலையை உணர வேண்டுமென்றால் எத்தகைய கர்மக் கட்டமைப்பு நமக்கு இருக்கவேண்டும் அல்லது யாரால் இந்த நிலைகளை உணரமுடியும் எல்லாராலும் உணரமுடியுமா என்றால் அதற்கு வாய்ப்பு குறைவு எனலாம்.
ஆனால் உடல்மனக் கட்டமைப்புகளில் சில கிரகத்தன்மைகள் மேலோங்கி இருக்கும் சிலரால், இந்த இறைநிலையை தெள்ளத் தெளிவாக உணரமுடியும்.
அதுவும் நடராஜர் நிலைவரை வேண்டு மானால் எல்லாராலும் உணரப்படலாம். ஆனால் காலபைரவர் தன்மையை உணரவேண்டும் என்றால், ஒருசில கிரக சக்திகள் மேம்பட்டிருப்பவர்களால் மட்டுமே உணர்ந்து அதனுள் பயணிக்கமுடியும். அதை அடுத்த பாகத்தில் விவரிக்கிறேன்.
(இன்னும் வரும்)
செல்: 73394 44035