கடவுள் காமம் ஜோதிடம்! - அஸ்ட்ரோ பாபு (6)

/idhalgal/balajothidam/god-lust-astrology-astro-babu-6

ஜோதிடம் என்பது வெட்டவெளியில் நிகழும் கிரக நகர்வுகள், அதனால் ஏற்படும் சுழற்சி, சுழற்சியால் ஏற்படும் சக்தி ஓட்டங்கள், அவற்றால் ஏற்படும் ஈர்ப்பு விசை- விலக்கு விசை, இந்த விசை வினைகளால் ஏற்படும் காந்த மின்சக்திகள் ஆகியவற்றின் கணிதங்கள்தான்.

மேற்கூறிய அனைத்து தன்மைகளையும் சூரியக் குடும்பத்தில் இருக்கும் அனைத்து கிரகங்களிலும், அந்தந்த கிரகத் தன்மைகளுக்குத் தகுந்தாற்போல் தாக்கத்தை வழங்கிக்கொண்டேதான் இருக்கும்.

அவ்வாறு வழங்கப்படும் தன்மைகள் பூமியில் வாழும் அல்லது பூமியில் தோன்றுகின்ற உயிரினங்களின் மூல சக்தியாக இருக்கும்.

உயிரினங்கள் என்றால் பறவை, விலங்கு, புழு, பூச்சிகள் மற்றும் மனித இனங்களிலும் அவை மூலமாகவேதான் இருக்கும்.

gd

ஏதோ ஒரு பொருள் உற்பத்தியாக வேண்டுமென்றால் ஏதோ ஒரு மூலப் பருப்பொருள் வேண்டுமல்லவா? அந்த மூலப் பருப்பொருள் அண்டம், அண்டத்தில் நமது பூமி அமைந்திருக் கும் சூரிய குடும்பத்தில் விசை சக்தி செயல் பாடுகள் தானே! அந்த விசை சக்தி தன்மை களினால்தான் இந்த பூமியில் உயிரின் தோன்றல்கள் அமையும்.

அந்த உயிரின் தோன்

ஜோதிடம் என்பது வெட்டவெளியில் நிகழும் கிரக நகர்வுகள், அதனால் ஏற்படும் சுழற்சி, சுழற்சியால் ஏற்படும் சக்தி ஓட்டங்கள், அவற்றால் ஏற்படும் ஈர்ப்பு விசை- விலக்கு விசை, இந்த விசை வினைகளால் ஏற்படும் காந்த மின்சக்திகள் ஆகியவற்றின் கணிதங்கள்தான்.

மேற்கூறிய அனைத்து தன்மைகளையும் சூரியக் குடும்பத்தில் இருக்கும் அனைத்து கிரகங்களிலும், அந்தந்த கிரகத் தன்மைகளுக்குத் தகுந்தாற்போல் தாக்கத்தை வழங்கிக்கொண்டேதான் இருக்கும்.

அவ்வாறு வழங்கப்படும் தன்மைகள் பூமியில் வாழும் அல்லது பூமியில் தோன்றுகின்ற உயிரினங்களின் மூல சக்தியாக இருக்கும்.

உயிரினங்கள் என்றால் பறவை, விலங்கு, புழு, பூச்சிகள் மற்றும் மனித இனங்களிலும் அவை மூலமாகவேதான் இருக்கும்.

gd

ஏதோ ஒரு பொருள் உற்பத்தியாக வேண்டுமென்றால் ஏதோ ஒரு மூலப் பருப்பொருள் வேண்டுமல்லவா? அந்த மூலப் பருப்பொருள் அண்டம், அண்டத்தில் நமது பூமி அமைந்திருக் கும் சூரிய குடும்பத்தில் விசை சக்தி செயல் பாடுகள் தானே! அந்த விசை சக்தி தன்மை களினால்தான் இந்த பூமியில் உயிரின் தோன்றல்கள் அமையும்.

அந்த உயிரின் தோன்றல்களில் பரிணாம வளர்ச்சியில் மேம்பட்ட, உணர்வு நிலைகளை உணரக்கூடிய தன்மைபெற்ற மனித இனத்தில்தான் ஜோதிடம் என்ற இறைநிலையை உணரமுடியும்.

மற்ற உயிரினங்களில்- அதாவது பறவை, புழு, பூச்சி, விலங்கினங்களில் ஆறாம் அறிவு என்று சொல்லப்படுகிற உணர்தல் நிலை அல்லது பகுத்தறிவு நிலை இல்லாத உயிரினங்களில் ஜோதிடம் உணரப்படுவதில்லை அல்லது அவற்றிற் குத் தேவையே இல்லை என்பதுதானே நிஜம்.

ஆக இந்த பூமியில் நிகழும் உயிர் உற்பத்திகளுக்கு மூலமாக இருப்பது. சூரிய குடும்பத்தின் பிற அங்கத் தினர்களான கிரக சக்திகளே அன்றி வேறில்லை.

அந்த கிரகங்களின் தன்னிலை சக்திகள் நம் உடம்பின் உற்பத்தியில் இருப்பதால், அந்த தன்னிலை சக்திகள் தாம் நம் செயல்பாடுகளிலும் சூத்திரமாக அமைந்தி ருக்கும்.

ஆக ஒரு குழந்தை ஜனிக்கும்போது எந்த கிரக சக்திகள் வலுப்பெற்று இருக்கிறதோ, அந்த சக்தி அந்த ஜனனத்தில் அதீதமாக செயல்பாட்டில் இருக்கும். வலுவிழந்திருக்கிற கிரக சக்திகள் அந்த ஜனனத்தில் வலுக் குறைந்திருக்கும்.

இந்த சூத்திரத்தைக் கண்டுபிடித்த நம் முன்னோர்கள் எந்த கிரகசக்தி எந்த தன்மையில் மனிதனிடத்தில் செயல்படுகிறது என்பதை, அந்த மனிதன் பிறந்த நேரத்தில் அமைந்த கிரக சூழ்நிலைகளை வைத்து, அம்மனிதனின் செயல்களைக் கணித்ததுதான் ஜோதிடப் பலன்களாக உரைக்கப்படுகிறது.

இவ்வாறான கிரக சக்திகள் மனிதனின் அறிவு, சிந்தனை, செயல்பாடு என்று தன் வேலை மையத்தை செயலாக்கங்களாகக் கொண்டு மனிதனை இயக்கிக் கொண்டிருக்கிறது.

அப்படிப் பார்க்கின், மனிதனின் ஜனனத்தில் எவ்வாறு புரிதல் தன்மைகள் அமைந்திருக்கின் றதோ, அவ்வாறுதான் அம் மனிதனின் புரிதல், உணர்தல், வெளிப்படுத்துதல் போன்றவை அமைந்திருக்கும்.தேவையும் தேவைக்கேற்ற தேடல்களும்கூட மேற்கூறிய அமைப்புகளில் தான் இருக்கும்.

இப்புவியில் படைக்கப்பட்டிருக்கும் அனைத்து ஜீவராசிகளின் தலையாய கடமை இனப்பெருக்கம் செய்வது மட்டுமே. இது பிரபஞ்சம் விதித்திருக்கும் இயற்கையின் விதி.. அந்த இனப்பெருக்கத்திற்கு உண்டான தூண்டுதலே காமம் அன்றி வேறில்லை.

இந்த இனப்பெருக்க நிலையை இன்னும் இன்னும் நேர்த்தியாக, சுகமாக, தீர்க்கமாக அமைத்துக் கொள்வதற்குதான் பணம், சொத்து, வசதி, வண்டி, வாகனம், மதிப்பு, சமூகம் இவையெல்லாம். இவை நமக்குதான்; இயற்கை நிலைக்கல்ல.

இன்று இதுவாக இருந்தது நாளை வேறொன்றாக மாறும்; மறுநாள் மற்றொன்றாக மாறும். கீதாச்சாரமே இதற்கு சாட்சி. இன்று உன்னுடையது நாளை வேறொருவருடைய தாகும்.

ஆனால் இனப்பெருக்கம் என்பது இயற்கை; எப்பொழுதுமே மாறாதது. இனப் பெருக்கத்திற்கான தூண்டுதலே காமம். காமம் என்பது ஒருமுனைப்பு தத்துவம்.

இணைதலே காமத்தின் ஒருமுனைப்பு. காமத்தின் செயலே இணைதல். இணைதல் என்பது இன்ப்பெருக்கத்திற்கு. அதற்கு இயற்கை ஏற்படுத்தி இருக்கும் தன்மைகளை ஆராய்ந்து பார்த்தால் "அடிமுடி காணா' என்னும் அடைமொழிக்கு அர்த்தம் உணரப்படும்.

அண்டத்தில் இருக்கும் நிலைப்பாடுகள் இரண்டுதான். ஒன்று இருப்பு; மற்றொன்று இயக்கம். என்னவெல்லாம் அண்டத் தில் இருக்கிறதோ அது இருப்பு. அந்த இருக்கிற விஷயம் இயங்குதலே இயக்கம். இந்த இரண்டும் இருந்தால்தான் அண்டப் பிரபஞ்சமே!

ஒரு செயல் நடைபெற வேண்டுமென்றால்

ஒரு பொருள் இருக்கவேண்டும்;

அப்பொருள் இயங்கவும் வேண்டும். அது கிரகமானாலும் சரி; மிக்ஸி கிரைண்டர், ஃபேன் எதுவானாலும் சரி- பொருளும் இயக்கமும் இருந்தால்தான் அதன் தன்னிலை முழுமைபெறும்.

கிரகம் என்ற ஒன்று இருக்கவேண்டும்;

அந்த கிரகம் சுற்ற வேண்டும். சுற்றுதல் இயக்கம்; கிரகம் என்பது இருப்பு. இந்த இரண்டு நிலைகளே சாசுவதம்.

இருப்பு ஆண், இயக்கம் பெண். விதை ஆண், பூமி பெண். சிவன் ஆண், சக்தி பெண். சூரியன் ஆண், சந்திரன் பெண்.

வெறும் ஆண் நிலைப்பாடு மட்டும் இருந்தால் இந்த உலகம் இயங்குமா?

அதேபோல் பெண்ணிலை எங்கிருந்து வரும்? ஆண் இல்லாத பெண்மைக்கு என்ன வேலை? மனித வாழ்வின் அடிப்படை மற்றும் ஆழ்ந்த சூட்சுமம் இதுதான்.

ஆணும் பெண்ணும் இணைந்து இயக்கமும் நடைபெற்று இனப்பெருக்கம் நிகழ்ந்தால்தான் மனித வாழ்க்கை. இணைதல் முடிந்தவுடன் காமம் விலகிவிடும். காமத்தின் தூண்டுதலில் தான் இணைதல் நிகழும். அதாவது புறத் தோற்றங்களான உடலும் உடலும் இணைவதால் தான் அதற்கு உடல் உறவு என்ற பெயர் உருவாகி யது. இந்த உடலுறவின் ஐந்து நிலைகள் இருக்கிறது.

இந்த ஐந்து நிலைகளில்தான் நாம் முன்னரே கடவுள் பற்றிய சுருக்கத்தில் கூறிய பஞ்சபூத நிலைகள்.

அந்த இறைநிலையின் ஐந்து நிலைகள்தான் நமசிவய!

(இன்னும் வரும்)

செல்: 73394 44035

bala251024
இதையும் படியுங்கள்
Subscribe