டந்த இதழில் கடவுள் தன்மைகள், அதன் தொழில், அந்த தொழிலின் அடிப்படை விதிகள், அதன் மாற்றங்கள், பரிணாம வளர்ச்சி பற்றிப் பார்த்தோம். இந்த இதழில் இன்னும் அதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

கடவுளின் மூன்று செயல்களான படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய செயல்களின் அடிப் படைகளான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து தத்துவங்களின் தொடர் மாற்றங்களும், அதன்மூலமாக நடக்கும் முத்தொழில்களின் தொடர் மாற்றங்களும் பரிணாமம் என்ற வளர்ச்சியை வழங்கிக் கொண்டே இருக்கின்றன.

அந்த பரிணாம வளர்ச்சியில் அறிவு என்ற தன்மை வளர்ச்சியுற்று தேடுதல் பிறந்து மூலத்தைத் தேடத் துவங்கியது. அந்த தேடுதல் பயணம், படைத்தலில் உயிர், ஆன்மா என்ற இரு படித் தன்மையையும்; காத்தலில் வேதம், உபநிடதம் என்ற இரு படித் தன்மையையும்; அழித்தலில் முக்தி என்ற தன்மையையும் உணரத் துவங்கியதன் விளைவும், இந்த உணர்தலின் விரிவாக்கமும்தான் ஆன்மிகம் என்ற அடைமொழிக்குள் வந்து விழுந்தது.

gg

Advertisment

இந்த பூமியில் நடைபெற்றுக்கொண்டிருந்த மூன்று வினைகளில், இவற்றிற்கு மூலமாக இருந்த இருப்பு, இயக்கம். அவற்றின் செயல்பாடு தன்மைகளான ஐம்பூதங்களையும் கண்டு பயந்து வழிபட தொடங்கினான். பின்னர் அவற்றை நட்பாக்கி, அவை என்ன? அவற்றின் தன்மை என்ன என ஆராய முற்பட்டு, அவற்றுடன் எவ்வாறு கலக்க அல்லது ஒன்றிணைய வேண்டுமென்று அனுபவம் மூலமாகக் கற்றறிந்தான். அதன் வழிமுறைகளைப் பின்பற்றி கடந்துபோய், இயற்கை கடவுள் தன்மைகளான இருப்பையும் இயக்கத்தையும் அடைந்த மனிதன், அதை அடுத்த சந்ததினயிருக்குத் தெரியப்படுத்திக்கொண்டே இருந்ததுதான் வேதம், உபநிடதத் தத்துவங்கள். மேற்கூறிய விஷயங் கள் அனைத்தும் அடங்கிய ஒரு விஷயம் நான்குவித முறைகளில் இன்றும் உணரப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

பக்தி, கர்மம், யோகம், இராஜம் ஆகியவையே அவை.

பக்தி: பக்தியென்பது முன்னர் உரைத்தபடி ஆதிமனிதன் இயற்கை யைக் கண்டு பயந்து அடிபணிந்து, தன்னை இயற்கையுடன் ஒப்ப டைத்து இயற்கையைப் போற்றி வேண்டிக்கொள்வது. ஒப்படைத்தல் அல்லது சரணடைதல் என்ற தன்மை யின் விளைவால் ஏற்பட்ட அதீத கற்பனையில் பல உருவங்களைப் படைத்து, தன்னை அந்த உருவங் களிடம் ஒப்படைத்தது இதுதான்.

Advertisment

கர்மம்: இயற்கைக்கு மாறான விஷயங்களில் ஈடுபடாமல், தன் செயல்களை இயற்கையை ஒட்டியே செய்துவந்து, இயற்கைக்கு ஒத்திசை வானவை புண்ணியம்; மாறானவை பாவம் எனக்கொண்டு, நாம் வாழ்கின்ற இடத்தின் தன்மையுடன் இணைந்து கூட்டத்தோடு வாழ்ந்து செல்வது.

யோகம்: இயற்கையுடன் நட்பு பாராட்டி, அவற்றுடன் கலக்க எந்த விதத்தில் ஐந்துவிதத் தன்மைகளைப் பயன்படுத்தி இருப்பு இயக்கத்தை உணர்ந்து அதன்பால் இணைந்து அல்லது கலந்து, நமக்கும் இயற்கையான பிரபஞ்சத்திற்கும் உள்ள நேரடித் தொடர்பான சுவாசம், அது செயல்படும் முறை ஆகியவற்றைக் கொண்டு, அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும் என்ற சூட்சுமத்தைக் கண்டுபிடித்து, அனுபவம் பெற்று மூலத்துடன் கலந்தது.

இராஜம்: இந்த இருப்பு, இயக்கத்தை உணர்ந்ததோடு மட்டுமிலாமல், ஐந்துவித தன்மை களை ஒரு சக்தியாக்கி, பூதங்கள் என்ற தன்னிலை மிஞ்சிய சக்தியாகக் கொண்டு அவற்றின்மூலம் இருப்பு, இயக்கத்தை அடைந்து அத்துடன் நிலைத்தல் என்பதாம்.

மூன்று நிலைகளான படைத் தல், காத்தல், அழித்தல் ஆகியவை ஐந்துவிதத் தன்மைகளில் செயல்பட்ட விதம் உணரப் பட்டு, உரைக்கப்பட்ட விஷயத்தை வெளிபடுத்து வதுதான் வேதங்கள். வேதங்களும் கால மாற்றங்களில் உணர்தல் மாறுபட, மீண்டும் புனரமைக்கபட்டு இறுதியாக நான்கு வேதங்களாக இன்றுவரை தொடர்கிறது இயற்கையைக் கடவுள் என்று வணங்கியவுடன், இருப்பை சிவமாகவும், இயக்கத்தை சக்தியாகவும் கொண்டு, இரண்டுவிதத் தன்மைகளை ஆண்- பெண் என்ற நிலையில் கொண்டு, மூன்று தன்மைகளைக் கடந்துகொண்டே இருக்கிறோம்.

இருப்பு, இயக்கம் ஆகியவை இரண்டுவிதமாகத் தன்னுடைய வடிவங்களை இந்த பூமியில் பதித்திருக் கிறது. ஒன்று ஆண் இருப்பு; இன்னொன்று பெண் இயக்கம். இந்த பூமியில் இருக்கிற அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் இந்த இரண்டு விஷயங்கள் இருப்பதை நாம் அறிவோம்.

இந்த இடத்தில் கடவுள் பற்றிய தேடலை நிறுத்தி, காமம் என்னும் விஷயத்துக்குள் பயணிப்போம்.

காமம் என்பது என்ன? காமம் என்றவுடன் எல்லாருடைய முகத்திலும் அல்லது சிந்தனையிலும் ஒரு சுருக்கம் நிகழ்கிறது.

ஏனென்றால் காமம் என்றவுடன் ஆணும் பெண்ணும் இணைகிற உடலுறவு என்னும் ஒரு தன்மைக்கு நம்மை தள்ளியிருக்கிறார்கள். அதனால் காமம் என்கின்ற விஷயம் ஆன்மிகத்திற்கு எதிரான தன்மை என்ற எதிர்மறையான சிந்தனையை நம்முள் விதைத்திருக்கிறார்கள்.

உண்மையை நோக்கின் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. காமம் என்ற விஷயம் சலனம்.

இருப்பு இயக்கத்தை நோக்கிய சலனம்;

இயக்கம் இருப்பை நோக்கிய சலனம்.

இந்த இரண்டு சலனங்களும் ஒரு புள்ளியில் சந்திக்கும்பொழுது படைத்தல் சாத்தியமாகிறது.

எப்பொழுதெல்லாம் சலனம் நம்முள் நிகழ்கிறதோ அப்பொழுதெல்லாம் காமம் தன வேலையைச் செய்கிறதென்று பொருள். காமம் என்பது சலனம் மட்டுமே; வேறோன்றுமில்லை.

காமம் என்ற சலன நிலையை நிறுத்துகிறபொழுது இருப்பு அல்லது இயக்கத்துடன் இருக்கமுடியும் என்பதால்தான் காமம் ஆன்மிகத்திற்கு ஆகாது என்றார்கள்.

சலனம் நிகழ்கிறபொழுது சற்று விழிப் புணர்வுடன் இருந்தால், சலனம் நிகழும் இடமான, மூலமான இருப்பையும் இயக்கத்தை யும் நம்மால உணரமுடியும். இந்த சலனம் இயற்கை யில் இருக்கிற அனைத்து விஷயங்களிலும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது.

இருப்பின் இயக்கத்தை நோக்கிய சலனம் காமம்.

இயக்கத்தின் இருப்பை நோக்கிய சலனம் காமம்.

இந்த இரண்டு சலனங்களும் ஈர்ப்பு என்ற புள்ளியில் நிச்சயமாக சந்திக்கும். அந்த புள்ளியினுடைய வினை படைத்தல்.

காமத்தைப் பலவேறுவிதமாக பல்வேறு ஞானிகளும் யோகிகளும் சித்தர்களும் தங்கள் புரிதல்களை இந்த உலகுக்கு உரைத்துச் சென்றிருந்தாலும்கூட, இன்னும் காமம் சரியான புரிதல் இல்லாமல் தவித்துக்கொண்டுதான் இருக்கிறது.

காமம் எங்கு நிகழ்கிறது? இருப்பு, இயக்கம் இரண்டினுள்தானே.

காமம் என்பதை சலனப்படுதல் என்னும் ஒரே நிலையிலிருந்து உணர முற்படுவோம். நீங்கள் எந்த ஒன்றை நோக்கிப் பயணப் படுகிறீர்களோ அது அனைத்தும் காமம்.

ஒரு சாதாரண மனிதன் பொருளீட்டுகிற தன்மையாகிய பணம் என்ற ஒன்றை நோக்கிய பயணம் காமம்.

புகழ் என்ற ஒரு தன்மையை நோக்கிய பயணம் காமம்.

இருப்பாகிய ஆண், இயக்கமாகிய பெண்ணை நோக்கிப் பயணப்படுவது காமம்.

இங்கே ஒரு முக்கியமான விஷயத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். உணர்வு களுக்குள் மட்டுமே காமம் தன்னுடைய வேலையைச் செய்கிறது. சலனம் என்பதே, உணர்வுகளுக்குள் இருப்பும் இயக்கமும் வரும்பொழுதுதான் நிகழத்துவங்கும். எப்பொழுதெல்லாம் நீங்கள் உணர்வு களைக் கடந்துபோகிறீர்களோ அப்பொழுது காமம் உங்களைவிட்டு விலகிநிற்கும். அதனால் தான் முன்னோர்கள் காமத்தை விலக்கச் சொன்னார்கள். சலனம் இல்லாதபொழுது இருப்பும் இயக்கமும் தன் தன்மைகளில் தானே இருக்கும்? இந்த உணர்வுகள் பற்றிய உணர்தல்கள் எப்பொழுது புரிய ஆரம்பிக்கிறதோ. அப்பொழுது நாம் இருப்பை நோக்கித் திரும்புகிறோம் என்று அர்த்தம்.

(இன்னும் வரும்)

செல்: 73394 44035