கடவுள் காமம் ஜோதிடம்! - அஸ்ட்ரோ பாபு (10)

/idhalgal/balajothidam/god-lust-astrology-astro-babu-10

பெண் என்பவளை பூமியாக நமது புராண, இதிகாசங்கள் அனைத்திலும் சொல்லப்பட்டிருகிறது.

அந்த பூமியினுடைய வளமை, வ-மையைப் பொருத்து தான் அதில் விதைக்கப்படும் விதையினுடைய, விளைச்ச- னுடைய தீர்க்கம் இருக்கும்.

அதேபோல் ஆண் விதைக்கும் விதைக்கு ரத்தம், ரத்த வலிமை, ரத்தத் தன்மை ஆகியவைதான் பிரதானம். ரத்தத்தின்மூலமாகத்தான் விதையானது தன் மூலமான பரம்பரை விஷயங்களையும் தான் கொண்டுவந்த அனைத்தையும் பூமியாகிய பெண்ணிற்குள் அனுப்பி உற்பத்தியைத் துவக்கும்.

nn

ஆக ஆண்- பெண் என்ற இரு நிலைப்பாட்டிற்கும் மிக முக்கியமான விஷயமாக இருப்பது செவ்வாய் என்ற ரத்தத் தன்மையே.

இறையை உணர்ந்து, இறைநிலையிலிருந்து நம் முன்னோர். அதற்கென ஒரு கடவுளை நிர்மாணித்து, அக்கடவுளின் தன்மைகளுக்குள் இந்த ரத்த வலிமையைப் பொதித்து வைத்திருக்கின்றனர்.

அந்தக் கடவுள்தான் முருகப் பெருமான்.

இந்த முருகக் கடவுள் நிலைப்பாடு தமிழ்நாட்டில் மட்டுமே. மற்ற எங்கிருந் தாலும் அது தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து சென்ற நம் தமிழர்களால் அமைக்கப்பட்டதுதான்.

ஆதலால்தான் முருகன் தமிழ்க் கடவுள் ஆனார். நம் சித்தர் பெருமக்கள், நம் உடம்பு நிலைகளில் செயல்படும் ஆறு சக்கரங்களே ஒரு மனிதனின் சாதாரண வாழ்க்கை முறைக்குப் பயன்படும் என்பதால், அந்த ஆறு நிலைகளுக்குள்ள முருகத் தன்மையை அறுபடை வீடுகளாக்கி தமிழ்நாட்டில் ஸ்தாபித்து வைத்திருக்கிறார்கள்.

அடுத்து மனிதனுக்கு மிக முக்கிய ஸ்திரத் தன்மையான தசை வலிமையைத் தன்னகத்தே வைத்திருப்பவர் ராகு. இரு காந்த

பெண் என்பவளை பூமியாக நமது புராண, இதிகாசங்கள் அனைத்திலும் சொல்லப்பட்டிருகிறது.

அந்த பூமியினுடைய வளமை, வ-மையைப் பொருத்து தான் அதில் விதைக்கப்படும் விதையினுடைய, விளைச்ச- னுடைய தீர்க்கம் இருக்கும்.

அதேபோல் ஆண் விதைக்கும் விதைக்கு ரத்தம், ரத்த வலிமை, ரத்தத் தன்மை ஆகியவைதான் பிரதானம். ரத்தத்தின்மூலமாகத்தான் விதையானது தன் மூலமான பரம்பரை விஷயங்களையும் தான் கொண்டுவந்த அனைத்தையும் பூமியாகிய பெண்ணிற்குள் அனுப்பி உற்பத்தியைத் துவக்கும்.

nn

ஆக ஆண்- பெண் என்ற இரு நிலைப்பாட்டிற்கும் மிக முக்கியமான விஷயமாக இருப்பது செவ்வாய் என்ற ரத்தத் தன்மையே.

இறையை உணர்ந்து, இறைநிலையிலிருந்து நம் முன்னோர். அதற்கென ஒரு கடவுளை நிர்மாணித்து, அக்கடவுளின் தன்மைகளுக்குள் இந்த ரத்த வலிமையைப் பொதித்து வைத்திருக்கின்றனர்.

அந்தக் கடவுள்தான் முருகப் பெருமான்.

இந்த முருகக் கடவுள் நிலைப்பாடு தமிழ்நாட்டில் மட்டுமே. மற்ற எங்கிருந் தாலும் அது தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து சென்ற நம் தமிழர்களால் அமைக்கப்பட்டதுதான்.

ஆதலால்தான் முருகன் தமிழ்க் கடவுள் ஆனார். நம் சித்தர் பெருமக்கள், நம் உடம்பு நிலைகளில் செயல்படும் ஆறு சக்கரங்களே ஒரு மனிதனின் சாதாரண வாழ்க்கை முறைக்குப் பயன்படும் என்பதால், அந்த ஆறு நிலைகளுக்குள்ள முருகத் தன்மையை அறுபடை வீடுகளாக்கி தமிழ்நாட்டில் ஸ்தாபித்து வைத்திருக்கிறார்கள்.

அடுத்து மனிதனுக்கு மிக முக்கிய ஸ்திரத் தன்மையான தசை வலிமையைத் தன்னகத்தே வைத்திருப்பவர் ராகு. இரு காந்த சக்திகளில் மிக முக்கியமான ராகு வீரியத் தன்மை, வித்தியாசமான சிந்தனைத் திறன், மீறுதல் போன்ற குணாதிசயங்களை உள்ளடக்கியது.

ஆக சந்திரன், சுக்கிரன், செவ்வாய், ராகு என்ற கிரக அமைப்புகள் ஆண்- பெண் இணைதளில் மிக முக்கியப் பங்கு வகிக்கும். மற்ற கிரக நிலைகள் இருந்தபொழுதும், இந்த நான்கு கிரகங்கள்தான் இணைந்து ஆண்- பெண் இணைவதில் செயல்படுமே தவிர, பிரதானமாக இந்த விஷயத்தில் மற்ற கிரகங்கள் செயல்படாது.

இனி, எந்த பாவ நிலைகள் காதல், காமம், இணைதல் நிலைபாடுகளை வெளிப்படுத்தும் என்பதைப் பார்ப்போம்.

காதல் என்ற ஈர்ப்பு நிலைப்பாட்டை ஐந்தாம் பாவம் சொல்லும். இந்த பாவமே விதையின் தன்மையையும் மூலத்தன்மை யையும் உள்ளடக்கி வைத்திருக்கும்.

ஐந்தாம் பாவத்தின் காதல், மூலம், விருப்பம் போன்ற பல்வேறு தன்மைகளைப் பூர்வபுண்ணியம் என்ற ஒற்றை அடை மொழியில் அடைத்திருப்பார்கள் ஜோதிடத் தில்.

அதேபோல் ஆண்- பெண் இருவரின் நிலையில், ஆண் என்ற தன்மைக்கு எதிர் தன்மையான பாவம் ஏழாமிடம். பெண் தன்மைக்கு, அதற்கு எதிர்தன்மையான ஆண் நிலைப்பாட்டைச் சொல்லும் பாவம் ஏழாமிடம். இதில் கூட்டாளி, நமக்கு எதிரிலிருக்கும் நிலைப்பாடுகள், இணக்கம் மற்றும் ஒத்துவராதது என்ற பல செயல்நிலைகள் பொதிந்திருக்கின்றன.

அடுத்து எட்டாம் பாவம்- இணைதலுக்கு உண்டான பாவம். இணைதல் எப்படி- எவ்வாறிருக்கும் என்பதைச் சொல்லும் எட்டாம் பாவத்தில் பல்வேறு தன்மைகள் இருந்தாலும், இணைதலைப் பற்றி சொல்லும் பாவம் இதுவே.

11-ஆம் பாவம் என்பது 5 என்கின்ற காதல் மற்றும் மூலத் தன்மை பாவங்களுக்கு ஏழாம் பாவமாக வரக்கூடியது, காதல், விருப்பம், சிந்தனை போன்ற பலன்களைச் சொல்லும் 11-ஆம் பாவம்.

ஆக, விருப்பமோ காதலோ மூலமோ- எந்த நிலைப்பாட்டை மனிதனுக்கு வழங்கும் என்பதை வெளிப்படுத்தும் பாவம். அதனால் தான் 11-ஆம் பாவத்திற்கு லாபம் என்ற பெட்டகம் வழங்கப்பட்டிருக்கிறது.

12-ஆம் பாவம் மிக முக்கிய பாவமே. அயன, சயன, போகம் என்ற பல்வேறு நிலைப்பாடுகளை இந்த பாவத்திற்குக் கொடுத்திருக்கிறார்கள். அதாவது இதன் ஒட்டுமொத்த சுருக்கம் "அனுபவித்தல்' என்பது.

ஆக 5, 7, 8, 11, 12-ஆகிய பாவங்களின் நிலைப்பாடுகளே ஈர்ப்பு, காதல் மற்றும் இணைதலைத் தீர்மானிக்கிறது.

5, 7, 8, 11, 12-ஆம் பாவ நிலைப்பாடுகள், ஆண்- பெண் இணைதலில் முக்கிய பங்குவகித்தாலும், அதற்கெல்லாம் ஆதார பாவமாக இருப்பது 3-ஆம் பாவமே.

இந்த 3-ஆம் பாவம் வீரியம் என சொல்லப் பட்டாலும், நான் இங்கு "தொடர்பு கொள்ளுதல்' என்கின்ற காரகத்தை மட்டுமே எடுத்துக் கையாள்கிறேன்.

ஒரு மனிதன் இவ்வுலகில் வாழ்க்கை என்ற நிலைப்பாட்டை அமைத்துக்கொள்வதே இந்த தொடர்புகொள்வதனால்தான். "தொடர்பு' என்ற தன்மை இல்லாவிட்டால் இவ்வுலகம் மட்டுமல்ல; பிரபஞ்சத் தன்மை யும் நின்றுவிடும்.

முறையான காதலுக்கும் முறையான தொடர்புகொள்ளுதலுக்கும் 5, 7, 9-ஆம் பாவங்கள் என்று எடுத்துக்கொண்டாலும், காமத் தொடர்புக்கு 3, 7, 11-ஆம் பாவங்கள் தான் செயல்படும். 5, 7, 9 மற்றும் 3, 7, 11 -ஆம் பாவங்களுடன், அனுபவித்தலுக்கு தனித்துவமான 12-ஆம் பாவம் வே‌ண்டு‌ம். இந்த பாவம் அனுபவித்தலுக்கு மட்டுமல்ல; உணர்தலுக்கான பாவமும்கூட. எல்லா உணர்வுகளையும் உணர்த்துவது இந்த 12-ஆம் பாவமே.

இறைநிலையை உணர, கூடல் என்பது ஒரு சுகமான அனுபவமாக வேண்டும். அதுவும் உணர்தலோடுகூடிய அனுபவமாக அமைய, அதற்கு மேற்கூறிய பாவ நிலைப்பாடுகள் ஒரு மனிதனுக்கு இருக்கவேண்டும்.

கிரக மற்றும் பாவத்தன்மைகளை இதுவரை பார்த்தோம். அடுத்து எந்த பாவத்தில் எந்த கிரகம் அமர்ந்து எவ்வாறு தன் நிலைப் பாட்டை வழங்கும் என்பதையும் பார்க்கலாம்.

5-ல் சந்திரன், சுக்கிரன் ஆகியோரில் யாரேனும் இருந்தால் நல்ல கற்பனை வளம், ரசனைத் தன்மை, தன்னைப் புகழும்படியான தோற்றத்தில் வெளிப்படுத்திக்கொள்ளல், மெல்லிய உணர்வுகள் என நல்ல மனநிலையை வழங்கும்.

7-ல் செவ்வாய், சுக்கிரன், ராகு ஆகியோரில் யாரேனும் அமர்ந்தால், அவர்கள் லக்னத்தோடு அல்லது 5, 11-ஆம் பாவங் களைத் தொடர்புகொண்டாலும் அல்லது குரு பார்வை பெற்றிருந்தாலும் அல்லது லக்ன சுபர்களோடு இணைந்தாலும் ஒரு முறையான ஈர்ப்பு ஆண்- பெண் இருவருக்குள்ளும் ஏற்படும். அந்த ஈர்ப்பும் போற்றுகிறாற்போல் ஒரு தன்மையை இருவருக்குமே வழங்கும்.

8-ல் இயற்கை சுபர்கள் தொடர்பு நல்லது. அதேபோல் சனி, கேது அல்லது புதன் 8-ஆம் பாவத்துடன் தொடர்பில்லாத நிலையும் நல்லதே.

11-ல் செவ்வாய், சுக்கிரன், ராகு இணைவோ அல்லது 11-ல் சந்திரன் தொடர்போ அமையும் போது, நல்ல முறையான சிந்தனைகள். கற்பனை வளம் ஏற்படும். இந்த சிந்தனைகளில் நற்பலன்கள்தான் நிகழும். அது மட்டுமல்லாமல் இணக்கம், இயக்கம் எல்லாம் அமைதியாக, சிறப்பாக, சீராக அமையும்.

11-ஆம் பாவத் தொடர்பு ஆண்- பெண் இணைதளில் மிக முக்கிய பங்கு வகிக்கும். ஆசைகளும், கற்பனைகளும் நிறைவேறும் பாவமிது, 12-ஆம் பாவம் என்பது அயன, சயன, போகம் என்ற அடைமொழிக்குள் அமைந்தாலும், 12-ஆம் பாவத்தை அனுபவம் என்ற தன்மையில்தான் நான் பார்க்கிறேன் உங்கள் அனுபவம் எங்கனம் இருக்கும்? அனுபவ அறிவு உங்களை சந்தோஷிக்கச் செய்யுமா? அனுபவம் வாழ்க்கை நடைமுறை யில் மாற்றம் நிகழ்த்துமா? அனுபவம் சுகமானதாக இருக்குமா என்பதை 12-ஆம் பாவம் சொல்லும்.

12-ஆம் பாவம் என்பதை "பள்ளியறை' என்றும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுதான் இருக்கிறது ஆக சந்திரன், சுக்கிரன், செவ்வாய், ராகு அமைப்புகள் 5, 7, 8, 11, 12-ஆம் பாவத் தொடர்புகளில் இணைந்தாலோ, பார்வை பெற்றாலோ, பரிவர்த்தனையில் இருந்தாலோ, சாரம் பெற்றிருந்தாலோ இணைதல் என்பது சுகமான அனுபவமாக இருக்கும். இந்த அனுபவம் விழிப்புணர்வில் இருக்கும்பொழுது நிகழ்ந்தால் அந்த ஆணும் பெண்ணும் இறைநிலையை உணர முடியும்.

காதல், காமம், செயல்பாடு, சிந்தனை, கற்பனை, ஈடுபாடு, நம்பிக்கை, வெளிப் படுத்துதல், அனுபவம் எல்லாம் ஒருசேர கிடைக்கும்பொழுது, இறைநிலையில் நிகழும் ஆண்- பெண் இணைதலில் ஒரு மகிழ்ச்சியான- திருப்தியான ஆழ்நிலைத் தன்மைகளை வழங்கும்.

அவ்வாறு பெறுகிற அனுபவமே இறைநிலையாம். மேற்கூறிய அனைத் தும் இணைதளில் ஒரு அனுபவத்தை வழங்கி னாலும், இறைநிலையைத் தொட ஒரு முக்கியமான பாவத்தின் தொடர்பிருக்க வேண்டும். ஆம்; அது 9-ஆம் பாவமே.

(இன்னும் வரும்)

செல்: 73394 44035

bala221124
இதையும் படியுங்கள்
Subscribe