மது ஜோதிடவியலில் மனித வாழ்வியலுக்கு அத்தியா வசியமான சுகத்தில் இருந்து, ஆடம்பரமான சுகம் வரையிலும் அடையும் வழியினை, நம் முன்னோர்கள் பகுத்து அளித்துள்ளனர் என்பது வியக்கத்தக்க ஒரு விஷயமாகும். அப்படி அளித்துள்ள முறைகளில் நாம் மறந்த விஷயங்கள், மறுத்த விஷயங்கள் பல உள்ளன என்றபொழுதிலும், தத்து கொடுத்து வாங்குவது என்ற ஒரு விஷயம், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

நமது சொல் வழக்கில் இன்றும் குழந்தைகளிடம் விளையாட்டாக தவிட்டுக்கு வாங்கிய குழந்தை என்று கூறுவோம். இந்த நிகழ்வு அரங்கேறாத இல்லங்கள் இருப்பது குறைவு ஆனால் இதில் ஒரு பெரும் சூட்சமம் அமைந்துள்ளதை இவர்கள் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை.

அது என்ன தத்து கொடுப்பது, தவிட்டுக்கு கொடுப்பது, பெற்ற பிள்ளையை பெரும்பாடு பட்டேனும் பெற்றவர்களுக்கு வளர்க்க தெரியாதா? என்ற கேள்வியும், ஐயமும், நம்மிடமே எழுவது நியாயம்தான். மறுப்பதற்கில்லை; ஆனால் மூத்தோர்கள் பின்பற்றிய வழக்கம் எங்குமே பொய்த்ததில்லை என்பதே ஆணித்தரமான உண்மையாகும்.

சில குடும்பங்களில் ஒரு குழந்தை பிறந்த பிறகுதான் வாழ்க்கை முன்னேற்றத்தை நோக்கி சென்று இருக்கின்றது என்பார்கள். இந்தப் பெண் பிறந்த பிறகுதான் எனக்கு நல்ல வேலை கிடைத்தது, இந்த ஆண் பிள்ளை பிறந்த பிறகுதான் எனக்கு வெளிநாட்டு யோகம் அமைந்தது என்றெல்லாம் சொல்வதை நாம் கேட்டிருப்போம். சிலர் இந்த குழந்தை பிறந்த பிறகுதான் எனக்கு வேலை இழப்பு நிகழ்ந்தது என்று கூறுவதையும் நாம் அறிந்திருப்போம். இதற்கான காரண காரியங்கள் என்ன என்று ஆராயும்பொழுது, குழந்தையின் ஜாதகத்தை அலசினால் அதில் சில கிரக இணைவுகளும், பாவகரீதியான பிரச்சினைகளும் இருப்பதனை கவனிக்க முடிகின்றது.

Advertisment

அதற்காக இந்தக் குழந்தை பிறந்த பிறகு தான் இந்த பிரச்சனைகள் நிகழ்கின்றது. இந்த பிரச்சினைகளுக்கு இந்த குழந்தைதான் காரணம் என்ற முட்டாள்தனமான வாதத்தை ஏற்கவும் முடியாது.

அவரவரின் சுய ஜாதகத்திற்கு ஏற்றவாறே அடுத்த வாரிசுகள் உருவாகும். என்பதுதான் உண்மை. சுய ஜாதகத்தில் ஒரு நிகழ்வு நிகழும் சூழ்நிலை இல்லாமல் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டும் அந்த கிரக இணைவு இருப்பதே இல்லை.

சரி; எது போன்ற கிரக இணைவோ, சூழ்நிலைகளோ, அந்த குழந்தையை தத்து கொடுக்கும் சூழ்நிலையை உருவாக்குகின்றது என்பதனை பின்வருமாறு காணலாம்.

Advertisment

ஐப்பசி மாதம் பத்தாம் தேதிக்குள் பிறக்கும் குழந்தைகளுக்கு சூரியன் துலாத்தில் பரம நீசமாகும், இங்கு தந்தை கிரகமான மற்றும் ஆத்ம காரகனாகிய சூரியன், நீசம் ஆகும் சூழல் அந்தக் குழந்தையின் வளர்ச்சி காலத்தில் தந்தைக்கு மாபெரும் பொருள் இழப்பினை தரும். மேலும் ஒன்பதாம் அதிபதியும் பலம் குறைந்த அமைப்பு பெற்றிருந்தால் தந்தைக்கு கண்டங்களையும், பொருளிழப்பு மற்றும் சொத்து இழப்புக்களையும், கொண்டுசேர்க்கும். தந்தையின் ஜாதகத்திலும் இதை சார்ந்த தசாபுக்தியே நிகழும். இந்த அமைப்புள்ள ஜாதகத்தை சிவன் ஆலயங்களில் தெய்வத்திற்கு தத்து கொடுத்து வாங்குவது தந்தையின் பிரச்சினைகளை கலையும் என்பது 100 சதவிகித உண்மை. மேலும் குருவின் ஒரு சுற்றுலா 12 வயதிற்குள் குழந்தையை தத்து கொடுத்து வாங்கவேண்டும்.

அதோடு மட்டுமல்லாமல் கால புருஷனுக்கு நான்காம் இடமாகிய மாத்ரு ஸ்தானம் எனப்படும் கடகத்தின் நாயகி சந்திரன், விருச்சிகத்தில் நீசம். மேலும் குழந்தையின் ஜாதகத்தில் நான்கில் பாவ கிரகங்கள் அமர்ந்தோ, சேர்ந்தோ, இருந்து நான்காம் அதிபதியும் பலம் குறைந்து இருந்தால் தாயாருக்கு நான்காம் அதிபதியின் தசையிலேயே அல்லது சந்திர தசையிலேயே உடல்ரீதியான உபாதைகளையும், கண்டங் களையும், அளிக்கும். இந்த அமைப்புடைய ஜாதகங்களை அம்மன் கோவிலில் தத்து கொடுத்து வாங்கவேண்டும்.

அதேபோன்று லக்னாதிபதியும், ஒன்பதாம் அதிபதியையும், சனி மற்றும் செவ்வாய் பார்ப்பது அல்லது லக்னம் மற்றும் ஒன்பதாம் இடங்களில் சனி, செவ்வாய், சேர்ந்து அமர்வது போன்றவை அந்த குடும்பத்தில் சொத்து இழப்புகளையும், பொருள் இழப்புகளையும், உறுதிப்படுத்தும். மேலும் ஐந்து, எட்டு, பத்து போன்ற பாவகங்களுடன் செவ்வாய், சனியின், தொடர்பானது பெரும் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் லக்னம் மற்றும் எட்டாம் பாவங்களின் பலவீனமா னது, அந்த குழந்தைக்கு உடல் சார்ந்த நிறைய பிரச்சினைகளை தரும். அடிக்கடி மருத்துவ செலவு, அடிபடுவது போன்ற நிகழ்வினை ஏற்படுத்தும். இதுபோன்ற சூழ்நிலையில் இருக்கும் ஜாதகங்களையும், தத்து கொடுத்து வாங்குவது மேலும் அந்த குழந்தையின் வளர்ச்சிக்கு பெரும் பாதுகாப்பினை அளிக்கும்.

ff

அதேபோன்று எந்த கிரகமாக இருந்தாலும், கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம், போன்ற நட்சத்திரத்தில் அமர்ந்து தசா புக்தி நடத்தும் காலங்களில் அந்த கிரகம் சார்ந்த உறவுக்கு கண்டங்கள் ஏற்படும். ஒரு ஜாதகத்தில் செவ்வாய், மூலம், மகம், அஸ்வினியில் ஏறி நின்று தசை நடத்தினால், அந்த ஜாதகரின் இளைய சகோதரனுக்கு கண்டங் களை அளிக்கும்.

முதலில் பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் மூன்றாம் பாவகம் சுபமற்று, செவ்வாயும் சுபத்துவம் இழந்து, மூன்றாம் அதிபதி யும் கேதுவின் நட்சத்திரங்களில் ஏறியமர்ந்தால், அந்த ஜாதகரின் இளைய சகோதரம் மிகவும் துன்பத்திற்கு உள்ளாகும். இதுபோன்ற ஜாதகங்களையும் தத்து கொடுத்து வாங்க வேண்டும்.

மேல் கூறியதுபோன்ற ஜாதக அமைப்பு இருக்கும் குழந்தை களையும், பாலாரிஷ்ட தோஷ முள்ள ஜாதகங்களையும், ஒரு குடும்பத்தில் ஆண் வாரிசுகள் மட்டுமே துன்பத்திற்கு ஆளாகின் றார்கள் என்ற நிலையில் இருப்பவர்களும் அல்லது பெண் வாரிசுகள் சுகம் காண்பதே இல்லை என்கின்ற சூழ்நிலையில் வரும் பரம்பரைகளில் உள்ளவர்களும், அந்த குழந்தையை குருவின் ஒரு சுற்றான 12 வயது ஆவதற்குமுன்பு தத்து கொடுத்து வாங்குவது இந்த மாபெரும் பிரச்சினையிலிருந்து விடுபட வழிவகுக்கும்.

சரி; இந்த அமைப்பு இருந்தும், தத்து கொடுக்கத் தேவையில்லாத ஜாதகங்கள் என்று சில உண்டு. அவைகள் ஒன்று, ஐந்து, ஒன்பதுடன், குரு சேர்ந்து இருப்பதோ அல்லது செவ்வாய் மற்றும் சனிக்கு குருவின் தொடர்பு இருப்பதோ, தத்து கொடுக்க அவசியம் இல்லாத ஜாதகங்கள் ஆகும்.

சரி; இவ்வளவு பிரச்சினைகளை தீர்க்கும் இந்த நிகழ்வினை எவ்வாறு செய்யவேண்டும் என்கின்ற வழிமுறையை பார்ப்போம். எந்த ஜாதகரை தத்து கொடுக்க வேண்டுமோ? அவரின் பிறந்த நட்சத்திரமும், திதி அல்லது கிழமையோ, அந்தநாளில் சிவன் கோவிலில் இரண்டு தாம்பாளங்களில் பழம் மற்றும் பூக்களையும், அர்ச்சனைக்கு உரிய பொருட்களையும், வைத்துக்கொள்ளவேண்டும். அதோடு ஒரு படியில் பச்சரிசி தவிடை நிரப்பிக் கொள்ள வேண்டும். முதலில் குழந்தையின் தாய்லி தந்தை யரின் பெயரை சொல்லி அந்த குழந்தையின் பெயரை சொல்லி அந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் தெய்வத்தின் பெயரையும் கூறி இவர்களின் குழந்தையாகிய இந்தக் குழந்தையை இந்த தெய்வத் தின் இடம் தத்து கொடுக்க ஒப்புக்கொள்கின்றேன் என்று கூறி, குழந்தையை அர்ச்சகரிடம் ஒப்படைக்க வேண்டும். பிறகு கொண்டு சென்ற தவிட்டினை அர்ச் சகரிடம் கொடுத்து இந்த தெய்வத்தின் குழந்தையை நாங்கள் தத்துக்கு பெற்றுக் கொள்கின்றோம், என்று குழந்தையை வாங்கிக் கொண்டு அந்த ஆலயத்தின் தலவிருச்சத்தில் அடியில் குழந்தையை பெற்றோரின் மடியில் சற்று நேரம் அமரவைத்து வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். பிறகு அந்தக் குழந்தையின் எல்லா நிகழ்வுக்கும் அந்த தெய்வமே பொறுப்பு. அந்த குழந்தையின் சுப நிகழ்வு மற்றும் எல்லா சூழ்நிலைக்கும் அந்த தெய்வத்திடம் உத்தரவு வாங்கியே செய்யவேண்டும்.

இந்த சிறிய பரிகாரத்தின்மூலம் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு சேர்க்க முடியும்.

செல்: 80563 79988