பெண் ஜாதக ரகசியம்! -எஸ். விஜயநரசிம்மன்

/idhalgal/balajothidam/girl-horoscope-secret-s-vijayanarasimhan

பெண்கள் எப்போதுமே தனித் தன்மை உடையவர்கள். பாரதத் திரு நாட்டில் அவர்களுக்கென்று ஒரு தனி மதிப்பு உண்டு. பண்டைய நூல்களில் ஸ்திரீ ஜாதகங்களைப் பற்றிய விசேஷமான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. அந்தக் குறிப்புகளில் சில வியக்கத்தக்கவை- உண்மையானவை. வராகமிகிரர் தனது "பிருகத் ஜாதக'த்தில் எழுதியுள்ள கருத்துகள் சிலவற்றைத் தெரிந்துகொள்வது தற்கால வளரும் ஜோதிடர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

பெண்கள் ஜாதகத்தில் களத்திர பாவத்தில் எந்த கிரகமும் இல்லாதிருக்கவும், மேலும் அந்த 7-ஆமிடம் சுய பலமோ, நற்கோள்களின் பார்வை பலமோ இல்லாமலிருந்தால், அவளுக்கு வாய்க்கும் கணவன் கீழ்த்தரமான குணங்களை உடையவனாகவும், விகாரமான புத்தி உடையவனாகவும் இருப்பான். அதே 7-ஆமிடத்தில் திருநங்கை கிரகங்களான புதனோ, சனியோ இருக்க, அவன் ஆண்மையற்றவனா கவோ அல்லது தீய பழக்க வழக்கங்களால் ஆண்மை இழந்தவனாகவோ இருப்பான். ஆயினும் சுப கிரகங்களின் பார்வை களத்திர பாவத்தின் மீது விழுமானால், இந்த நிலைகள் ஏற்படாது.

ww

களத்திர பாவம் சர ராசியாகி, அதை சுப கிரகங்கள் பார்க்காவிட்டால் மற்றும் அதில் சனியும் புதனும் இணைந்திருக்குமானால், அந்தப் பெண்ணின் கணவன் திருமணத்திற்குப் பிறகு அவளைத் தள்ளி வைத்துவிடுவான். அதுவே பெண் ராசியான

பெண்கள் எப்போதுமே தனித் தன்மை உடையவர்கள். பாரதத் திரு நாட்டில் அவர்களுக்கென்று ஒரு தனி மதிப்பு உண்டு. பண்டைய நூல்களில் ஸ்திரீ ஜாதகங்களைப் பற்றிய விசேஷமான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. அந்தக் குறிப்புகளில் சில வியக்கத்தக்கவை- உண்மையானவை. வராகமிகிரர் தனது "பிருகத் ஜாதக'த்தில் எழுதியுள்ள கருத்துகள் சிலவற்றைத் தெரிந்துகொள்வது தற்கால வளரும் ஜோதிடர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

பெண்கள் ஜாதகத்தில் களத்திர பாவத்தில் எந்த கிரகமும் இல்லாதிருக்கவும், மேலும் அந்த 7-ஆமிடம் சுய பலமோ, நற்கோள்களின் பார்வை பலமோ இல்லாமலிருந்தால், அவளுக்கு வாய்க்கும் கணவன் கீழ்த்தரமான குணங்களை உடையவனாகவும், விகாரமான புத்தி உடையவனாகவும் இருப்பான். அதே 7-ஆமிடத்தில் திருநங்கை கிரகங்களான புதனோ, சனியோ இருக்க, அவன் ஆண்மையற்றவனா கவோ அல்லது தீய பழக்க வழக்கங்களால் ஆண்மை இழந்தவனாகவோ இருப்பான். ஆயினும் சுப கிரகங்களின் பார்வை களத்திர பாவத்தின் மீது விழுமானால், இந்த நிலைகள் ஏற்படாது.

ww

களத்திர பாவம் சர ராசியாகி, அதை சுப கிரகங்கள் பார்க்காவிட்டால் மற்றும் அதில் சனியும் புதனும் இணைந்திருக்குமானால், அந்தப் பெண்ணின் கணவன் திருமணத்திற்குப் பிறகு அவளைத் தள்ளி வைத்துவிடுவான். அதுவே பெண் ராசியானால் அவ ளுடனே வசிப்பான். உபய ராசியானால் மனைவியைப் பிரிந்து, பொருள் தேடுவதற்காக அடிக்கடி வெளிநாட்டிற்கோ, தூர தேசத்திற்கோ போகின்றவனாகவும் இருப்பான்.

சூரியன் ஆட்சி, உச்சம்பெறும் சிம்மம், மேஷம் தவிர மற்ற ராசிகள் 7-ஆமிடமாகி, அதில் சுபர் பார்வை பெறாமல் சூரியன் இருக்க, அந்த ஜாதகி திருமணம் முடிந்து சில நாட்களிலேயே கட்டிய கணவனால் கைவிடப்படுவாள்.

செவ்வாய் பலம்பெறும் மேஷம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசிகளைத் தவிர வேறு ராசிகள் களத்திர பாவமாகி, சுப கிரகப் பார்வையின்றியும், சனி, புதன் பார்வை பெற்றும் அங்காரகன் அமர, அந்த ஜாதகி திருமணம் நடந்த சில காலத்திலேயே விதவையாகிவிடுவாள்.

களத்திர பாவம் மகரம், கும்பம், துலாம் இவற்றில் ஒன்றில்லாமல் வேறு ராசியாய் இருக்க, அதில் சனி, புதனுடன்கூடியோ, அஸ்த மனத்திலோ, கிரக யுத்தத்திலோ, சுப கிரகங் களின் பார்வையின்றி இருக்க, அந்த ஜாதகியின் திருமணம் தடைப்பட்டுக்கொண்டே இருக்கும். ஆனால் நல்ல தசாபுக்திக் காலங்களில், வயது முதிர்ந்தபின் அவளுக்குக் கணவன் போன்ற துணைவன் அமைந்து, அவனால் அவளுக்கு எவ்வித சந்தோஷமோ, சுகமோ இருக்காது.

ஒரு உதாரண ஜாதகம் காண்போம். இந்த ஜாதகி பிறந்தது விருச்சிக லக்னம். இவள் ஜாதகத்தில் லக்னத்தில் அமர்ந்துள்ள சனியும் புதனும் களத்திர பாவத்தைப் பார்வை செய்கின்றன. அந்த வீட்டை குருவும் செவ்வா யும் வேறு பார்க்கின்றனர். இவளுக்குத் திருமணத்தில் ஆர்வம் இருந்ததில்லை. புதனும் சனியும் திருநங்கை கிரகங்கள்.

அவர்களை யாரும் பார்க்க வில்லை. 7-ஆமிடமும், லக்னமும் அபுத்ர ராசிகள். பொதுவாகவே விரய பாவத்தில் மூன்று ஆக் னேய கிரகங்கள் இருக்குமானால் அந்த ஜாதகி பிரசவ வேதனையை அறியமாட்டாள் என்பது சாஸ்திரம். (சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியவை ஆக்னேய கிரகங்கள். இதில் ராகுவை ஆக்னேய கிரகமாகக் கணக்கிடுவதில்லை.)

இந்த ஜாதகத்தில் புதன் வீட்டில் குருவும், குரு வீட்டில் சுக்கிரனும், சுக்கிரன் வீட்டில் செவ்வாயும், செவ்வாய் வீட்டில் புதனும் இருக்கின்றன. நவாம்சத்தில் 7-ஆமிடத்தில் சனி இருக்கிறது. 5-ஆமிடம் ஓர் அபுத்ர ராசியாகும். 2-ஆமிடத்தில் சந்திரனும் சுக்கிரனும் இணைந்துள்ளன. இந்தப் பெண்ணின் திருமணமே ஒரு கேள்விக்குறியானது.

ww

7-ஆமிடத்தில் பலமுள்ள பாவகிரகம் இருந்து, சுபர் இணைவின்றி பாவ கிரகத்தால் பார்க்கப்பட்டால் ஜாதகி இளமையிலேயே விதவையாகிவிடுவாள். ஆனால் 7-ஆமிடத்தில் சுப, பாவ கிரகங்கள் நின்று, பலமான பாவ கிரகம் பார்க்குமானால் அந்த ஜாதகிக்கு மறுமணம் உண்டு. சுபர் பார்வையோடு, பலமற்ற பாவகிரகம் 7-ல் நிற்க, அந்த ஜாதகியை அவளது கணவன் தள்ளிவைத்துவிடுவான். 7-ஆம் வீட்டில் மூன்று ஆக்னேய கிரகங்கள் இருக்குமானால் வைதவ்ய தோஷம் ஏற்படும்.

செவ்வாய் வீட்டில் சுக்கிரனும், சுக்கிரன் வீட்டில் செவ்வாயும் நவாம்சத்தில் இருக்க, சுக்கிரனுடன் சந்திரன் இருந்தாலும் அல்லது சுக்கிரனையோ, சந்திரனையோ, இருவரையுமோ சனி பார்த்தாலும் ஜாதகி தனது கணவனிடம் உண்மையாக இருக்க மாட்டாள். பர புருஷ சகவாசம் இருக்கும்.

பலமற்ற சுக்கிரனும் செவ்வாயும் களத்திர பாவத்தில் இருக்க, சனி பார்க்க மற்றும் சுக்கிரனோ- செவ்வாயோ சனியின் திரயாம்சத்தில் இருந்தால் அப்பெண் நன்னடத்தை இல்லாதவளாக இருப்பாள்.

அவர்களுடன் சந்திரன் நிற்குமானால் அவளது கணவனும் அவளுக்கு உடந்தையாக இருப்பான்.

மகரம், கும்பம், மேஷம், விருச்சிக ராசிகளில் ஒன்று லக்னமாகி, அங்கு சந்திரனும் சுக்கிரனும் நின்று, அசுபர் பார்வை ஏற்படுமானால், ஜாதகி தீய நடத்தை உடையவளாக இருப்பாள். தன் குடும்ப கௌரவத்தைப் பற்றியோ, கண்ணியத்தைப் பற்றியோ எள்ளளவும் நினைக்கமாட்டாள். அவளது தாயும் இவளின் தீய நடத்தைக்குத் துணைபோவாள்.

நவாம்ச 7-ஆம் வீட்டில் செவ்வாய் இருக்க, லக்னத்தில் இருக்கும் சனி பார்க்க, ஜாதகிக்கு யோனி வியாதி இருக்கும்.

ஆனால் 7-ஆமிடத்தில் சுபர் இருந்து, சுப அம்சங்களோடு இருந்தால், அழகிய இடையும் தொடையும் கொண்டு பிறரை வசீகரிக்கும் அவள், தன் கணவனின் இயற்கையான குறைபாடுகளை அறிந்து தமது உல்லாச வாழ்க்கைக்குப் பயன்படுத்திக்கொள்வாள்.

ஒரு பெண் ஜாகத்தில் சனியும் சுக்கிரனும் சமசப்தமத்தில் பரஸ்பர பார்வை பார்த்துக்கொண்டு, சுக்கிரனின் வீடான ரிஷபம், துலாம் லக்னமாகி, நவாம்ச லக்னம் கும்பமாக, அந்த ஜாதகி காம விகாரம் உள்ளவளும், திருமணம் தடைப்பட்டுக்கொண்டே போனவளும், ஆண்தன்மை கொண்ட பெண் களைக் கொண்டு தன் காம இச்சை களைத் தீர்த்துக்கொள்பவளாகவும் விளங்குவாள்.

இன்னும் சில நூலாசிரியர்கள் இதை இரண்டாகப் பிரித்துக் கூறுகிறார்கள்.

1. சனியும், சுக்கிரனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு, தத்தம் நவாம்ச வீடுகளை மாற்றிக்கொண்டாலும்கூட மேலே குறிப்பிட்ட யோகம் ஏற்படும்.

2. துலாம், ரிஷபம் லக்னமாகி, நவாம்ச லக்னம் கும்பமாகி, சுக்கிரனும், சனியும் தத்தமது நவாம்ச வீடுகளை மாற்றிக்கொண்டாலும் இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்படும்.

"பிருகத் பிராஜாபத்யம்' என்ற நூலில், இப்படிப்பட்ட கிரக நிலை ஆணின் ஜாதகத்தில் ஏற்படுமானால், அப்படிப்பட்ட ஆண், பிற ஆண்களைக்கொண்டு தமது காம விகாரத்தைத் தீர்த்துக்கொள்வான் என்று கூறப்பட்டுள்ளது.

பிருகத் ஜாதகத்தில் வராகமிகிரரால் கூறப் பட்ட பெண்களைப் பற்றிய குறிப்புகள் பயனுள்ளதாக இருக்குமென்று நினைக் கிறேன்.

செல்: 97891 01742

bala130522
இதையும் படியுங்கள்
Subscribe