இன்றைய காலகட்டத்தில் தனிமனிதனின் செயல்பாடானது சமுதாய சூழலுக்கேற்ப சில நேரங்க ளில் தன்னிலை மறக்கச் செய்து விடுகிறது. போட்டிகள் நிறைந்த இந்த உலகில் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக வும், தனி மனிதனின் குடும் பச் சூழ்நிலை காரண மாகவும், சில நேரங்களில் அந்த நபர் தான் செய்வது தவறா- சரியா என்றுகூட எண்ணாமல் சில செயல்களைச் செய்துவிட்டு, அதன்பிறகு அந்த செயலை நினைத்து வருந்தும் நிலை ஏற்படுகிறது. அன்றாட செய்தித்தாள் மற்றும் வலைப்பக்க செய்திகளைப் பார்க்கும்பொழுது நிறைய வக்ர செயல்கள் தென்படு கின்றன. மக்கள் தொகை அதிகரிப்ப தாலும், பொருளாதார பிரச்சினைகள் காரணமாகவும் நிறைய குற்றச் செயல்கள் அதிகரித்துவிட்டன.
ஒரு நபர் தான் செய்வது இன்னதென்று தெரியாமல் செயல்படும் நிலை எவ்வாறு ஏற்படுகிறதென ஜோதிடரீதியாக இங்கு பார்ப்போம். ஒருவர் ஜாதகத்தில் சுப கிரகங்கள் வலுவாக இருந்தால் அந்த நபரின் செயல்பாடுகள் மிகத் திருப்திகரமாக இருக்கும். பலருக்கு வழிகாட்டியாக இருக்கும் நிலையும் ஏற்படுகிறது. அதுவே பாவ கிரகங்க
இன்றைய காலகட்டத்தில் தனிமனிதனின் செயல்பாடானது சமுதாய சூழலுக்கேற்ப சில நேரங்க ளில் தன்னிலை மறக்கச் செய்து விடுகிறது. போட்டிகள் நிறைந்த இந்த உலகில் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக வும், தனி மனிதனின் குடும் பச் சூழ்நிலை காரண மாகவும், சில நேரங்களில் அந்த நபர் தான் செய்வது தவறா- சரியா என்றுகூட எண்ணாமல் சில செயல்களைச் செய்துவிட்டு, அதன்பிறகு அந்த செயலை நினைத்து வருந்தும் நிலை ஏற்படுகிறது. அன்றாட செய்தித்தாள் மற்றும் வலைப்பக்க செய்திகளைப் பார்க்கும்பொழுது நிறைய வக்ர செயல்கள் தென்படு கின்றன. மக்கள் தொகை அதிகரிப்ப தாலும், பொருளாதார பிரச்சினைகள் காரணமாகவும் நிறைய குற்றச் செயல்கள் அதிகரித்துவிட்டன.
ஒரு நபர் தான் செய்வது இன்னதென்று தெரியாமல் செயல்படும் நிலை எவ்வாறு ஏற்படுகிறதென ஜோதிடரீதியாக இங்கு பார்ப்போம். ஒருவர் ஜாதகத்தில் சுப கிரகங்கள் வலுவாக இருந்தால் அந்த நபரின் செயல்பாடுகள் மிகத் திருப்திகரமாக இருக்கும். பலருக்கு வழிகாட்டியாக இருக்கும் நிலையும் ஏற்படுகிறது. அதுவே பாவ கிரகங்கள் வலுப்பெறும் பொழுது அந்த ஜாதகரின் செயல்பாடுகள் மாறுபடுகின்றன.
ஒருவரின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தைக் கொண்டு அந்த ஜாதகரின் குணநலன்கள் பற்றியும், அந்த ஜாதகர் மற்றவரிடம் பழகக்கூடிய பண்பைப் பற்றியும் அறிந்துகொள்ளலாம். அடுத்து, ஜென்ம லக்னத்திற்கு 5-ஆம் வீட்டைக்கொண்டு அந்த ஜாதகரின் எண்ண ஓட்டங்கள், ஆசாபாசங்கள், ஜாதகரின் உணர்ச்சிகள் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம். 9-ஆம் வீட்டைக்கொண்டு ஜாதகர் செய்யும் தானதர்மங்கள், மற்றவர்களுக்குச் செய்யும் உதவிகள் போன்றவற்றை அறிந்துகொள்ளலாம். லக்னத்திற்கு 6-ஆம் வீட்டைக்கொண்டு மறைமுக எதிர்ப்புகளைத் தெரிந்துகொள்ளலாம்.
ஜென்ம லக்னத்திற்கு 1, 5, 9 ஆகிய ஸ்தானங்களில் சுப கிரகங்களான குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன், சுபர் சேர்க்கைபெற்ற புதன், கேது ஆகியவை அமைவது சிறப்பு. அதிலும் குறிப்பாக ஜென்ம லக்னத்திற்கு 1, 5, 9-ல் குரு, கேது, சந்திரன் அமையப்பெற்றவர்கள், குரு, சந்திரன், கேது ஆகிய கிரகங்கள் ஒருவருக் கொருவர் 1, 5, 9-ல் அமையப்பெற்றவர்கள் பெரும்பாலும் ஆன்மிக- தெய்வீகப் பணிகள், உதவிசெய்யும் பண்பு கொண்டவர்கள்.
அவர்கள் சார்ந்த சமுதாயத்தில்- குறிப்பாக அவர்கள் சார்ந்த மதத்தின் அடிப்படையான பொதுப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.
நவகிரகங்களில் பாவ கிரகங்களான சனி, ராகு, செவ்வாய் ஒருவரின் ஜாதகத்தில் வலுவாக அமைவது அவ்வளவு விசேஷம் என கூறமுடியாது. ஜென்ம லக்னத்தில் சனி, ராகு, செவ்வாய் போன்ற கிரகங்கள் அமைவதும், லக்னாதிபதி செவ்வாய், சனி, ராகு சேர்க்கைபெறுவதும், லக்னாதிபதி செவ்வாய், சனி, ராகு நட்சத்திரங்களில் அமை வதும் மாறுபட்ட சுபாவத்தை ஏற்படுத் தும். லக்னத்தில் சனி, ராகு, செவ்வாய் அமையப்பெற்று சுபர் பார்வை இல்லாத பொழுது அந்த ஜாதகர்கள் மிகவும் முன்கோபம் கொண்டவராகவும், முரட்டு சுபாவம் கொண்டவராகவும் சமுதாயத்தில் செயல்படுகிறார்கள்.
ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் ஜென்ம லக்னத்தில் அமையப்பெற்றால், செவ்வாயின் தசைக் காலங்கள் நடைபெறும்பொழுதும், லக்னாதிபதி செவ்வாயோடு இருக்கும்பொழுதும் அந்த ஜாதகருக்கு முன்கோபம் அதிகப்படியாகவே இருக்கிறது. அதுபோல ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் ராகு அமைவது, லக்னாதி பதி ராகு சேர்க்கைபெறுவது, லக்னாதிபதி ராகு நட்சத்திரத்தில் அமையப்பெற்றவர்களுக்கு முன்கோபம் தன்னிலை மறந்து செயல்படும் நிலை ஏற்படுகிறது. இயற்கை யிலேயே ராகு தன்னிலை மறந்து செயல்பட வைக்கும். அதிலும் குறிப்பாக ராகு ஒரு ஜாதகத்தில் செவ்வாய் வீட்டில் அமையப் பெற்றாலோ, சனி வீட்டில் அமையப்பெற் றாலோ மேலும் கோபத்தை அதிகப்படுத் தும். இப்படிப்பட்ட அமைப்பு கொண்டவர் களுக்கு, ராகு, செவ்வாய், சனி சேர்க்கை 1, 5, 9 ஆகிய ஸ்தானங்களில் அமையப்பெற்று, அதன் தசைக் காலங்களில் முன்கோபம் அதிகம் வரும் நிலை, தன்னை மறந்து செயல்பட்டு தேவையற்ற சிக்கல்களில் சிக்கிக்கொள்ளக்கூடிய நிலை ஏற்படுகிறது.
அதுபோல லக்னத்தைவிட 6-ஆம் வீடு அதிக பலம்பெறக்கூடாது. லக்னத்தைவிட 6-ஆம் வீடு அதிக பலம்பெற்று, 6-ல் சனி, செவ்வாய், ராகு போன்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று சுபர் பார்வையின்றி இருந்தால், அதன் தசைக் காலங்களில் தேவையற்ற செயல்களில் ஈடுபட்டு வீண் சிக்கலையும், வம்பு வழக்குகளையும் எதிர்கொள்ள நேரிடும். ஒரு ஜாதகத்தில் சனி, செவ்வாய், ராகு ஆகிய கிரகங்கள் லக்னம் மற்றும் சந்திரனுடன் வலுவாக அமையப்பெற்று, சுபர் பார்வையின்றி இருந்து, அதன் தசைபுக்தி நடைபெறும் பொழுது, கோட்சார கிரக நிலையும் சாதக மற்று இருந்துவிட்டால் அந்த ஜாதகருக்கு ஏற்படும் நெருக்கடிகளால் தன்னிலை மறந்து செயல்பட்டு வீண் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்படும்.
ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத் திற்கோ, சந்திரனுக்கோ குரு பார்வை இருந் தால் அந்த ஜாதகரின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். பலருக்கு வழிகாட்டியாகவும் இருப்பார்கள். அதுவே பாவ கிரகங்கள் ஆதிக்கம் லக்னத்தில் அமையப்பெறும்.
ஜாதகர்கள் எந்த செயல் செய்யுபொழுதும் சற்று சிந்தித்து செயல்பட்டால், வீண் பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம். குறிப்பாக பாவகிரக தசாபுக்தி நடைபெறும் பொழுது சற்று பொறுமையாக நடப்பதும், இறை வழிபாடுகள் மேற்கொள்வதன்மூலமும் நமக்கேற்படும் தேவையற்ற நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். குற்றச் செயல்களைக் குறைக்கமுடியும்.