கடன்சுமை தீர்த்து வளம் சேர்க்கும் கணபதி பிரசன்னம்! -கே. குமார சிவாச்சாரியார்

/idhalgal/balajothidam/ganapati-presence-solve-debt-and-add-wealth-k-kumara-sivacharya

ன்பது கிரகங்கள் மனிதர்களது வாழ்க்கையில் தடைக்கற்களை ஏற்படுத்துகின்றன. கடன் தொல்லைகள், லாபத்தில் இயங்கிவரும் நிறுவ னத்தை இழுத்துமூடுவது, "பிசினஸ் மேக்னெட்' என்று பெயர்பெற்று விமானத்தில் உலகைச் சுற்றிவந்த செல்வந்தர்கள் மூலையில் முடங்குவது, சாதாரண மனிதர்களைக்கண்டு தன் தோல்வியுற்ற கதைகளை உணர்ச்சி பொங்கக் கொட்டித் தீர்ப்பது போன்றவை நாம் காணும் காட்சிகள்.

வருத்தப்பட்டுக்கொண்டே இருந்தால் எப்படி? இதற்கு ஒரு தீர்வு வேண்டாமா? அதற்கான வழியைக் கூறுவது ஜோதிட உலகினரின் கடமை.

"ஜோதிடத்தை நம்பமாட்டேன்; கடவுளை நம்புவேன். குறி சொல் வோரை நம்பமாட்டேன்; எங்கள் ஊர் பிரசன்னம் கூறும் வாத்தியரை நம்பு வேன்' என்று சிலர் ஏதோ ஒருவகையில் ஆன்மிக உலகில் நுழைந்து, துரத்தும் துன்பத்திற்குத் தீர்வுகண்டு நிம்மதி அடைகிறார்கள். ஹோரா சாஸ்திரம், பிரசன்ன ஜோதிடம், எண் கணிதம் எல்லாமே ஒன்பது கிரங்களோடு தொடர்புடைய ஒருதாய் மக்களே!

மஸ்ஸராத் எனும் ஜோதிடக் கூறுகள்

கி.மு. 37-69-ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த சேத் (Seth) என்பவர்தான் உலகத்தின் முதல் ஜோதிடராகப் பெயர் பெற்றவர். இத்தகவலை அரேபிய, எகிப்திய, யூத, பெர்சிய ஜோதிட ஆசிரியர் களால் எழுதப்பட்டுள்ள ஆராய்ச்சி நூல்களிலிருந்து அறியலாம். சூரிய பகவான் ஒரு ஆண்டில் தனது குறிப் பிட்ட பாதையில் செல்வதில்லை என்பதை அவர் கண்டுபிடித்ததால், ராசி மண்டலத்தை 12 சமபாகங்களாகப் பிரித்து, சூரியனது சுற்றுப்பாதை 12 பௌர்ணமிகளில் இடைவெளி கொண்டதாக இருப்பதைக்கண்டு, அவரது பாதையும் 12 பாகங்களாகக் கண்டு, குறிகள், ராசிகள், சௌரமான மண்டலங்கள் என்று பாகுபடுத்தி, இதன் தொகுப்பையே (Mazzaroth)) "மஸ்ஸராத்' என்றார்.

சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முன்பாகவே சால்தியர்களும், குருமார்களும், இடையர்களும் அதிக முயற்சியெடுத்து ஆராய்ந்து இந்த சாஸ்திரத்தை விரிவுபடுத்தினர். இவர்களது காலம் ஜோதிட சாஸ்திரத்தின் பொற்காலம் என்றும் அழைக்கப்பட்டது. கிரகங்களின் பெயர்ச்சிகள், எண் குறிகள் மனித வாழ்க்கையோடு தொடர்புடையவை என்று நிரூபணம் செய்தார்கள்.

"கற்காலங்களில் வாழ்ந்த அக்கேடியன்கள், சுமேரியர்கள் வானத்தையும் வானத்தில் உலவும் பொருட்களின் அசைவையும் கவனித்தனர்' என்று டாக்டர் தாம்ஸன் கூறினார். பூமியின்மீதுள்ள உயிர்கள்மீதும், உயிரில்லாதவைமீதும் சில ஆதிக்கங்களை எடுத

ன்பது கிரகங்கள் மனிதர்களது வாழ்க்கையில் தடைக்கற்களை ஏற்படுத்துகின்றன. கடன் தொல்லைகள், லாபத்தில் இயங்கிவரும் நிறுவ னத்தை இழுத்துமூடுவது, "பிசினஸ் மேக்னெட்' என்று பெயர்பெற்று விமானத்தில் உலகைச் சுற்றிவந்த செல்வந்தர்கள் மூலையில் முடங்குவது, சாதாரண மனிதர்களைக்கண்டு தன் தோல்வியுற்ற கதைகளை உணர்ச்சி பொங்கக் கொட்டித் தீர்ப்பது போன்றவை நாம் காணும் காட்சிகள்.

வருத்தப்பட்டுக்கொண்டே இருந்தால் எப்படி? இதற்கு ஒரு தீர்வு வேண்டாமா? அதற்கான வழியைக் கூறுவது ஜோதிட உலகினரின் கடமை.

"ஜோதிடத்தை நம்பமாட்டேன்; கடவுளை நம்புவேன். குறி சொல் வோரை நம்பமாட்டேன்; எங்கள் ஊர் பிரசன்னம் கூறும் வாத்தியரை நம்பு வேன்' என்று சிலர் ஏதோ ஒருவகையில் ஆன்மிக உலகில் நுழைந்து, துரத்தும் துன்பத்திற்குத் தீர்வுகண்டு நிம்மதி அடைகிறார்கள். ஹோரா சாஸ்திரம், பிரசன்ன ஜோதிடம், எண் கணிதம் எல்லாமே ஒன்பது கிரங்களோடு தொடர்புடைய ஒருதாய் மக்களே!

மஸ்ஸராத் எனும் ஜோதிடக் கூறுகள்

கி.மு. 37-69-ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த சேத் (Seth) என்பவர்தான் உலகத்தின் முதல் ஜோதிடராகப் பெயர் பெற்றவர். இத்தகவலை அரேபிய, எகிப்திய, யூத, பெர்சிய ஜோதிட ஆசிரியர் களால் எழுதப்பட்டுள்ள ஆராய்ச்சி நூல்களிலிருந்து அறியலாம். சூரிய பகவான் ஒரு ஆண்டில் தனது குறிப் பிட்ட பாதையில் செல்வதில்லை என்பதை அவர் கண்டுபிடித்ததால், ராசி மண்டலத்தை 12 சமபாகங்களாகப் பிரித்து, சூரியனது சுற்றுப்பாதை 12 பௌர்ணமிகளில் இடைவெளி கொண்டதாக இருப்பதைக்கண்டு, அவரது பாதையும் 12 பாகங்களாகக் கண்டு, குறிகள், ராசிகள், சௌரமான மண்டலங்கள் என்று பாகுபடுத்தி, இதன் தொகுப்பையே (Mazzaroth)) "மஸ்ஸராத்' என்றார்.

சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முன்பாகவே சால்தியர்களும், குருமார்களும், இடையர்களும் அதிக முயற்சியெடுத்து ஆராய்ந்து இந்த சாஸ்திரத்தை விரிவுபடுத்தினர். இவர்களது காலம் ஜோதிட சாஸ்திரத்தின் பொற்காலம் என்றும் அழைக்கப்பட்டது. கிரகங்களின் பெயர்ச்சிகள், எண் குறிகள் மனித வாழ்க்கையோடு தொடர்புடையவை என்று நிரூபணம் செய்தார்கள்.

"கற்காலங்களில் வாழ்ந்த அக்கேடியன்கள், சுமேரியர்கள் வானத்தையும் வானத்தில் உலவும் பொருட்களின் அசைவையும் கவனித்தனர்' என்று டாக்டர் தாம்ஸன் கூறினார். பூமியின்மீதுள்ள உயிர்கள்மீதும், உயிரில்லாதவைமீதும் சில ஆதிக்கங்களை எடுத்துக் கூறினர்.

அக்காலத்திலேயே ஜோதிட சாஸ்திரம் பிரசித்தமாகி, அப்போது வாழ்ந்த செல்வந்தர்கள், குருமார்கள், அரசர்கள், அரச குமாதர்கள் ஆகியோர்மீது அதிக ஆதிக்கம் செலுத்தியது. கிரேக்கர்கள் (சஹற்ஹப் ஆள்ற்ழ்ர்ப்ஞ்ஹ்) "நேட்டல் அஸ்ட்ரா லஜி' என்றும் ஜனன சாத்திரத்தின்மீதே அதிக கவனத்தைச் செலுத்தி வந்தார்கள். பிரிட்டிஷ் காட்சியகத் தில் பாபிலோனிய ஜோதிடர்களின் சாசனத்தகடு களில், 5000 ஆண்டுகளுக்குமுன்பே எழுதப்பட்ட பலவகை ஜோதிடப் பிரிவுகள் இருப்பது தெரிய வந்தது.

அவற்றில் வைத்திய முறை ஜோதிடம், லோகாயத சாஸ்திரம், முண்டேன் என்னும் சட்ட முறை, ஜனனகால ஜோதிடம், முகூர்த்த ஜோதிடம், கேரள ஜோதிடம், சகுன ஜோதிடம், ஹோரா முறை பிரசன்ன ஜோதிடம் ஆகிய பல்வேறு பிரிவுகள் காணப்பட்டன.

gg

அதில் எளியமுறையில் பலன்காணும் பிரசன்ன முறை எங்கும் வெற்றி தரும் ஜோதிட வழியாகப் பிரபலமடைந்துள்ளது.

பிரசன்னம் சரியாக இருக்குமா?

"நவகிரகங்களின் சுழற்சியை வைத்து சொல்லும் பலன்களே சில காலங்களில் நடப்பதில்லை. பிரசன்ன விதிகளைப் பின்பற்றிப் பலன் கூறுவதும் அதை எடுத்துப் பரிகாரம் தேடுவதும் சரியானதாக இருக்குமா' என்று கேள்வி கேட்போரும் உண்டு.

வராகமிகிரருக்கு வியாக்கியானம் (உரை) எழுதிய பட்டோத்பலர் என்பவர் "பிரசன்ன கியானம்' என்ற நூலை எழுதி அனைவரையும் வியக்க வைத்தார். இவர் தனது சுலோகம் 1-ல், முதலில் ஜோதிடம் கேட்போர் மகாகணபதியை வணங்கி, சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஏழு கிரகங்களை எடுத்துக் கொண்டு, பிரசன்ன கியான் அறிவுக்கலையால் அனைவரையும் வியக்க வைக்கிறார்.

இந்த பிரசன்ன நூலறிவை உணர்ந்து சொல் வதற்கு பத்து படிநிலைகளை அறிந்து தெளிவது அவசியம் என்று கூறினார். அந்த பத்து நிலை களை "ஜாதக பாரிஜாத'மும், அதன் உயர்ந்த பலன்களைச் "சித்தாந்த சாராவளி'யும் விளக்கின. 1. தீப்பதலி மனம் எழுச்சியடைதல்; 2. ஸ்வஸ்தலி திருப்தியான; 3. ப்ரமுதிதலி திருப்தியை உட்கொண் டது; 4. சாந்தம்- அமைதி நிலை; 5. சாக்தா- திறமை, தகுதி, ஊக்கம்; 6. ப்ரபிரித- துன்பம், கடன், துயர்; 7. தின- மகிழ்ச்சியின்மை, துர்பாக்கியம், அச்சப் படல்; 8. கால- கொடுமை, தீமைகள்; 9. விகால- தடுமாற்றம், திடமின்மை; 10. பீதி- பயமுறுத்தல், அச்சுறுத்தல் தொடர்புடை யவை.

பொதுவாக பிரசன்னம் என்னும் சொல் லுக்கு கேள்விக்கு பதில் உரைத்தல் என்று பொருள். கேள்வி கேட்கும் நேரம், கேள்வி பிறக்கும் நேரத்தைக் கொண்டு, அப்போ தைய நேர கிரக நிலையை ஆராய்ந்து பலன் கூறுவதே பிரசன்ன முறை. இவ்வரிசையில், விவாஹம், சந்தானம், ஆயுள், ரோகம், மாரணம், ஸ்வப்னம், யாத்ரா, யுத்தம், சாந்தி, வர்ஷம், நீர் (கூபம்), நஷ்டம், போஜனம், பிரேஷ்டிதம் எனும் வெளிநாடு, தாம்பூலம், நாளிகேரம், சோழி, தேவம் (கோவில் கட்ட) பிரசன்னம், ஜாமக்கோள் என்று 20 வகை பிரசன்ன விதிகள் உள்ளன. இதுதவிர கணேசரின் ரூபங்களை அடிப்படையாக வைத்து மலர் பிரசன்னம் என்னும் விசேட மான கடன்தீர் பிரசன்னம் காண்பதை அறிந்து நலம்பெறலாம்.

மலர்ப் பிரசன்ன மகத்துவம்

அகத்தியரும், நாரத முனிவரும், ஔவையும், கலியுகத்தில் ஜோதிட ஆசிரிய ராக வாழ்ந்த பட்டோத்பலரும், "மகா கணபதியை வணங்கி அவர்முன் பிரசன்னம் கண்டால் ஆபத்துகளைத் தவிர்த்து நலமாக வாழலாம்' என்று தங்கள் பாடல்களில் சூட்சுமமாகக் கூறினர்.

"கணபதி என்றிடக் கலங்கிடும் வல்வினை' என்றார் ஔவை. நாரதரோ கனியின் சுவையால் ஒரு நாடகமே நடத்தி மங்களம் உண்டாகச் செய்தார். அகத்தியர் காவிரியைப் பாயந்தோடச் செய்து, கணபதியால் காரியம் கைகூடும் என்று உணர்த்தினார். சனாதனதர்மக் கடவுளாக விளங்கும் ஸ்ரீகணபதிப் பெருமானை சரியான மூர்த்தங்களின் நிலைகண்டு மலர்ப் பிரசன்னம் கண்டால், வாழ்நாள் கடன் தீர்ந்து வளம் காணலாம்.

தோரணர் மலர்ப் பிரசன்னம்

ஒருவரது ஜாதகத்தில் ஆறாம் பாவத்திலிருக்கும் பாவ கிரகங்களின் தாக்குதல் களாலேயே அவருக்கு கடனும் அபரிமித மான செல்வ இழப்பும் ஏற்பட்டு அல்லல் உண்டாகிறது. அதற்கு கேது வடிவாக இருக்கும் கணேசரின் அருட் பார்வையால் தீர்வு கிடைக்குமென்பது ஞான முனிவர் களின் விருப்பமாக உள்ளது.

"திருமகள் அருளிருந்தும் திரவியங்கள் சேராமல்

திருவிருந்தும் வாழ்வில் ஒளியின்றி நிற்கின்றோம்

கடன்பட்டுக் கலங்கும் நெஞ்சைக் கனிவுடன் காத்திடவே

உடன்வந்து உபாயங்கள் காட்டிடுவாய் கரிமுவாய்.'

தோரண கணேசரின் இரண்டாம் அனு வாகப் பகுதி கூறுவதைக் காணும்போது, "எங்களுக்கு நல்லநேரம் வந்துவிட்ட போதிலும், நவ நாயகர்களின் பார்வை தோஷங் களால் தனவரவு சேரவில்லை. நற் பெயருக் கான அமைப்பு எமது விதியில் இருப்பினும் வாழ்க்கையில் துன்பத்தில் நிற்கிறோம்.

கடன்கள் பலவகையிலும் சேர்ந்து துன்பப் படும் உனது பக்தர்களுக்கு ஏதோவொரு வழியில் தோன்றி நல்வழி காட்டவேண்டும் தோரணரே' என்று, அவருக்குரிய பிரசன்ன துதியால் வேண்டப்படுகிறது. மகிமை வாய்ந்த தோரணரின் மலர்ப் பிரசன்னத்தைக் காணும் முறை, அனைத்து பக்தர்களுக்கும் ஜோதிட ஆசான்களுக்கும் பயன் தரக் கூடியது.

மலரிட்டால் அருளுண்டு

தங்களுக்கு ஏற்பட்டுள்ள தீராத கடன் தொல்லை தீர்க்கும் தோரண கணபதிமுன் மூன்று நெய்தீபங்கள் ஏற்றி, அவருக்குரிய செவ்வாய், ஞாயிறு, சதுர்த்தி காலங்களில் பிரசன்ன துதியைப் பாராயணம் செய்து வணங்குவர்.

ஸ்ரீ ராதா கல்யாண வைபவத்தில், அபிநயம் செய்து கிருஷ்ண பகவானுக்கு மலர் கொண்டு போடுவார்கள். ஜெய தேவரின் அஷ்டபதியில் 16 மலர்களை நர்த்தனமாடிய படியே மலர்தூவி ஆரத்திசெய்வார்கள். ஒரு வீடு கட்ட கிருஹாரம்பம் செய்யும்போது, மனையில் குழியிட்டு நீர்வார்த்து மலரிட்டு, மலர் சுற்றும் நிலைகண்டு அங்குள்ள சல்லியதோஷம், பூமி தோஷம் அறிந்து நீக்குவர்.

அதே வரிசையில் கடன் தீர்க்கும் கணபதி திரு முன்பாக, அவரது பிரசன்னத்தில் கூறப் பட்ட துதிகளைக் கூறி, பிரசன்னப் பலன் தளத்தில் வாசனை மலரிடவேண்டும். அதன் பிறகு எந்த எண் மற்றும் குறியில் நாம் இட்ட மலர் விழுகிறதோ அதற்கான பலனை அறியவேண்டும். பிரசன்னம் அறியும் தளத்தில் மலரிடும் விதியை தெளிவாக அறிந்தபிறகே போடுதல் நல்லது. ஒரு ஜாதகர் இட்ட மலர் பிரசன்ன மேடைமேல் விழாமல் தரையில் விழுந்துவிட்டால், அந்த வாரத்தில் ஏதோவொரு தடை உள்ளதாகக் கருதி விலகிச் செல்லவேண்டும். அடுத்துவரும் மங்களகரமான சுபநாளில் முயற்சிக்கவேண்டும். எந்தவொரு ஜாதகரும் தோரணர் பிரசன்னத்தில் அருளப்பட்டிருக்கும் தெய்வப் பரிகாரத்தை விதிமாறாமல் செய்துவரும்போது கடன் தொல்லை தீர்வது உறுதி.

மலரிடும் பிரசன்ன சாஸ்திர விதி

தோரண கணபதிக்கு உகந்த செவ்வாய், சனிக்கிழமைகளில் மட்டும் அவர் முன்னுள்ள தளத்தில், சாஸ்திர விதிப்படி மலர் போடலாம். கணேசருக்கு அர்ச்சனைசெய்து, குலதெய்வம், இஷ்ட தெய்வத்தை வேண்டி, முதல் அனுவாகத் துதியைக் கூறி பிரசன்ன தளத்தில் முதல் மலரை ஆத்மப் பிரதட்சிணம் செய்து போடவேண்டும்.

"சக்தியின் மைந்தனாய் சித்திகள் சேர்த்திடும்

முக்தியின் பொருள் சொன்ன மூத்த கரிமுகவாய்

காரணனே புகழ்ப் பொருளே கடன்தீர் வீரனே

தோரண கணபதியே தோன்றிடுக என் முன்னே.'

முதல் பாடலில், "கடன் தொல்லை தீர்வதற்கு உங்களை மனதார வேண்டுகிறேன்; வழி காட்டுவாய்' என்று பிரார்த்தனை மட்டும் முன்வைக்கப்படுகிறது. இரண்டாவது மலரை இடும்போது தோரணரை மனதில் நினைத்து ஆத்மப் பிரதட்சிணம் செய்து, மூன்றா வது அனுவாகம் என்று சொல்லப்படும்- "பொருள் பெற்றவர்களும் தனம் பெற்ற மாந்தர்களும்' என்று தொடங்கும் துதியைக் கூறி வணங்கவேண்டும். கடன் தீர வழியும், எவ்வாறு வணங்கினால் நிம்மதி உண்டாகும் என்றும் மனமுருகி வேண்டப்படுகிறது.

மூன்றாவது மலரை இடும்போது ஐந்தாவது அனுவாகம் என்று சொல்லப்படும் பிரசன்ன துதி வரிசையிலுள்ள, "பூரணியின் மைந்தனாக புவனமதில் தோன்றியவா' என்று தொடங்கும் ஐந்தாம் துதியைக் கூறி, "வாழ்க்கையில் பரிதவித்து எங்கும் செல்லமுடியாமல் தவிக்கும் மக்களுக்கு வழிகாட்டிய தோரணரே, நீங்கள் எங்களுக்கு வழிகாட்டி வாழவைக்க வேண்டும்' என்னும் சரணாகதி தத்துவத்தை சொல்லி பிரார்த்தித்திடவேண்டும்.

பிரசன்ன எண் மேடையில் நாம் இடும் மலர் எந்த எண்ணில் விழுகிறதோ அதன்படி கண்டால், நாம் எந்த தெய்வத்தை வணங்கவேண்டும்- பரிகாரத்திற்கு என்ன மந்திரம், தியானம் கூறவேண்டும் என்று, நாமே கண்டு வியக்குமளவுக்கு அங்குள்ள பலன் உரையில் தெரியவரும்.

உதாரணமாக 16-ஆம் எண்ணில் மலர் விழுந்தால், "லட்சுமி கடாட்சம் உனக் கிருக்கிறது. லட்சுமிக்கு தீபமேற்றினால் விரைவில் கடன் தீரும்' என்று பலன் வரும். இதன் உரை இன்னும் விரிவாக உள்ளது.

5-ஆம் எண்ணில் மலர் விழுந்தால், "பூர்வபுண்ணியம் சரியில்லை; பித்ருக்களைத் திருப்தி செய். ஆறு மாதங்கள் சிவவழிபாடு செய்' என்கிறது விதி.

சங்கில் விழுந்தால், "மகாவிஷ்ணுவை சனி, ஏகாதசியில் நினைத்து வழிபடு. நீ கேட்பது கிடைக்கும்' என்பது பலன்.

இரு கொம்புள்ள ரிஷபத்தில் விழுந்தால், "எதிரிகளால் தொல்லை வரும். எச்சரிக்கையாக இரு. பாசுபத ஜெபம் செய். உறவினர் நட்பு சேரும்' என்பது பிரசன்னப் பலன்.

8-ஆம் எண்ணில் விழுந்தால், "துன்பங்கள் மெதுவாக விலகும். விலகிய பொருள் தாமதமாக வரும். நவகிரகங்களுக்குரிய விதியால் பூஜைசெய்து மதியோடு செயல்படு' என்பது பலன்.

தீபத்தில் மலர் விழுந்தால், "கடன்கள் தீர ஆலயத்தில் தீபமேற்று. தாயாரை வணங்கு. எட்டு திக்கிலும் எதிரிகள் வரலாம். கவனமாக இரு' என்பது பலன்.

இந்த வாசகங்கள் அனைத்திற்கும் ஸ்லோகமாக விளக்கங்கள் உள்ளன. கணபதி மலர் பிரசன்னம் கண்டு கடன்தீர வழி காண்போம்.

செல்: 95511 84326

bala030622
இதையும் படியுங்கள்
Subscribe