ல்ல தாயார்

கிடைச்சவனுக்கு

நல்ல வீடு கிடைக்கும்..

வருடம்தோறும்

Advertisment

உறவினரோடு வாகனமேறி

குலதெய்வக் கோவில் செல்..

வினையெல்லாம் விலகிப் போகும்...

Advertisment

நான்காமிடத்தில்

நல்லபடி சுக்கிரன்

இருந்தாலும்.. பார்த்தாலும்

நச்சுன்னு வீடு கிடைக்கும்..

நம்பி இரு..

நாலாமிடத்து தசா புத்தி

வந்ததும்

நல்லபடி அமையும்...

நல்லவன்

கெட்டவன்னு இங்க எவனுமில்லை..

உன்னை கெடுக்குறவன்

உனக்குள்ளேயேதான் இருக்கான்..

அடிக்கடி அடுத்தவனை

குறை சொல்லி

உள்ள உறவையும் கெடுக்காதே..

நாலில் ராகு

நாய் படாதபாடு படுத்தி

முதல் வீடு கட்ட

தடை செய்வார்...

கஷ்டப்பட்டு கட்டி முடிச்சுட்டா

இஷ்டப்படி

வீதிக்கொரு வீடு..

வீதி போற்றும்

பிரம்மாண்ட வீடு

அடுத்தடுத்து நீ கட்டுவ...

நான்காம் வீட்டதிபதி

மறைவிடத்திலும்

கெட்டுப் போயிருந்தா..

வீடு கட்டி

கஷ்டப்பட்டவன் ஏராளம்..

எனக்கொரு வீடு

கிடைக்காதான்னு

ஏங்கி செத்தவனும்

தாராளம்..

ss

வீட்டின்

நாலு மூலையிலும்

உப்புக்கல்ல கொட்டி வை..

கல்லா இருந்த

கடவுள் மனசும்

உனக்காக கரையும்..

வாடகை வீட்டுக்காரனும்

சொந்த வீட்டுக்குப் போயிடலாம்...

கட்டத்துல நல்ல கிரகம்

நல்ல வீட கொடுத்திருக்கும்..

ஆனா... வீட்டுக்குள்ள

செய்வினை தோசம் இருந்தா..

எந்நேரமும் சண்டை...

நோயால் கஷ்டம்

எதிர்த்த வீட்டுக்காரனும்

எதிரி ஆவான்..

செய்வினை

செய்த வினைதான்னு

சொல்லிட்டு இருந்தா..

செஞ்சு வச்சவன்

நம்மள செஞ்சுட்டு போயிருவான்..

நாத்திகம்

நல்ல நேரத்துல பேசினா

நல்லதுகூட

நம்ம விட்டு போயிடும்ப்பா...

பரிகாரம்

அடுத்தவனை கெடுக்க இல்லை..

கெடுக்க வந்தவனை

தடுக்க தான்...

உன்னை கெடுக்கிறவன்

கருப்ப ஏவினா

நீ காளிய ஏவு..

இல்லன்னா நீ காலி...

நம்ம கெட்டுப் போகணும்ன்னு

நினைக்கிறவன் வேற நாட்டுல

இருந்தா வரப் போறான்..

உன் பக்கத்துல இருப்பவன்தான்

உன்னைக் கெடுப்பான்..

உன்னைச் சுத்தி

எவனாவது நல்லவன் இருக்கானா?

அவனுக்கு நீ இரக்கப்பட்டா

நீ இருக்க மாட்டடா

இன்னோசென்ட் தம்பி...

நாலாம் வீட்டை

நாலு கெட்டகிரகம்

நாலா பக்கமும்

நங்கூரம் போட்டா..

நல்லவன் வீட்டையும்

வல்லவன் அழிச்சுடுவான்..

குரு பார்த்தாலும்

கெட்ட பார்வையாக்கிடும்...

ஏற்கனவே

பத்து பர்சென்ட்தான்

நமக்கு நல்லது நடக்குது..

அதையும் தடுத்து..

பாதாளத்துல தள்ளுறவனை

பழி வாங்காட்டியும்

நம்மள பாதுகாத்துக்கணும்ல..

ஏன் கண்ணு..

நல்லா வாழணும்ன்னா

நான் சொல்றத கேளு...

நாலு கெட்ட ஜாதகனை

சுத்தி நாலாபுறமும்

கெட்டவன்தான் குடியிருப்பான்..

ஈசான்யத்துல

சுக்கிர ஹோரையில்

சுத்தமான பசும்பாலை

ஊற்றிப் பாரு..

அசுத்தமானது போயிடும்..

அசுத்தமானவனும் போயிடுவான்...

வாசலுக்கு வெளிய

எட்டாத இடத்துல..

எட்டிக்குச்சிய கட்டி விடு..

ஏவல்

உன் வீட்டை எட்டிப் பாக்காதுடா..

ஏவி விட்டவனையே

எரிச்சுப்புடும்...

கன்னி மூலையில

தண்ணி ஊத்தி வச்சுட்டு..

வந்ததெல்லாம் போச்சேன்னு

கண்ணீர் விட்டா

எல்லாம் சரியா போயிடுமா?..

நான் சொல்றத உடனே செய்..

கடல் கோவிலுக்கு போ..

கன்னி மூலைல மண்ணை கொட்டு..

கடல் மண்ணை எடுத்துவந்து

எடுத்த இடத்துல கொட்டு..

உன்னை விட்டுப் போனதெல்லாம்

வரிசையா வந்து நிற்கும்...

எத்தனை காலம்தான்

நல்லவனா இருக்கிறதுன்னு

எப்பவும் நீ கெட்டவனா மாறாத..

ஜாதகத்துல நீ நல்லவனா வாழ

உனக்கு கெட்டியான யோகம் இருக்கு..

கெட்டத விடு..

கெட்டதை தடு..

கெட்டிய வீட்டுக்கு

கெட்டி மேளத்தோட குடி போவாய்...

செல்: 9600353748