நட்சத்திரத்திற்கான உணவும், பழங்களும்! மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/food-and-fruit-stars-melmaruvathur-s-kalaivani

னிதனின் வாழ்வியல் பாதையில், ஜோதிடம் என்னும் மாபெரும் வெற்றி கேடயம் அருளப்பட்டுள்ளது. இதன்மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் பலவித பிரச்சினைகளுக்கு பல்வேறுவிதமான தற்காப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

அவற்றில் நமக்கு எது தேவையோ அதைக்கொண்டு நம் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளலாம்.

நம் ஆன்மிகத்தில் ஒரு இன்னலை தீர்த்துக்கொள்ள மூன்று விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவைகள் மணி, மந்திரம், அவுஷகம் என்னும் பெரும் ரகசியங்கள் ஆகும். மணி என்றால் நாம் விடும் மூச்சு. இந்த மூச்சு காற்றின்மூலம் நமது கர்மாவினை கழித்துக்கொள்ளலாம். மற்றொன்று மந்திரம். அதாவது நாம் ஜெபிக்கும் அட்சரங்கள், அட்சரங்களின் கோர்வையே மந்திரங்கள் ஆகும்.

இதன்மூலமும் நம் வினைகளை தீர்க்கமுடியும். மூன்றாவது ஆக அவுஷகம். அதாவது உணவு, பிரசாதம் என்பதாகும். இப்படி நம் உடலில் உள் சென்று வெளியேறும் இம்மூன்றின்மூலம் மட்டுமே நமது பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்பது ஆயிரம் சதவிகிதம் உண்மையாகும். இவையனைத்துமே யாகம் செய்வதிலும், கோவிலின் நிகழ்வுகளிலும் நமக்கு கிடைக்கும்.

அதோடு மட்டுமல்லாமல் அவுஷகம் என்னும், உணவினை பிறருக்கு தானம் செய்வதன்மூலமும், நமக்கு ஏற்ற உணவினை நாம் தேர்ந்தெடுத்து உட்கொள்வதன

னிதனின் வாழ்வியல் பாதையில், ஜோதிடம் என்னும் மாபெரும் வெற்றி கேடயம் அருளப்பட்டுள்ளது. இதன்மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் பலவித பிரச்சினைகளுக்கு பல்வேறுவிதமான தற்காப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

அவற்றில் நமக்கு எது தேவையோ அதைக்கொண்டு நம் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளலாம்.

நம் ஆன்மிகத்தில் ஒரு இன்னலை தீர்த்துக்கொள்ள மூன்று விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவைகள் மணி, மந்திரம், அவுஷகம் என்னும் பெரும் ரகசியங்கள் ஆகும். மணி என்றால் நாம் விடும் மூச்சு. இந்த மூச்சு காற்றின்மூலம் நமது கர்மாவினை கழித்துக்கொள்ளலாம். மற்றொன்று மந்திரம். அதாவது நாம் ஜெபிக்கும் அட்சரங்கள், அட்சரங்களின் கோர்வையே மந்திரங்கள் ஆகும்.

இதன்மூலமும் நம் வினைகளை தீர்க்கமுடியும். மூன்றாவது ஆக அவுஷகம். அதாவது உணவு, பிரசாதம் என்பதாகும். இப்படி நம் உடலில் உள் சென்று வெளியேறும் இம்மூன்றின்மூலம் மட்டுமே நமது பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்பது ஆயிரம் சதவிகிதம் உண்மையாகும். இவையனைத்துமே யாகம் செய்வதிலும், கோவிலின் நிகழ்வுகளிலும் நமக்கு கிடைக்கும்.

அதோடு மட்டுமல்லாமல் அவுஷகம் என்னும், உணவினை பிறருக்கு தானம் செய்வதன்மூலமும், நமக்கு ஏற்ற உணவினை நாம் தேர்ந்தெடுத்து உட்கொள்வதன்மூலமும், நல்ல நிகழ்வினை நமக்கு நாமே உருவாக்கி அதன் வழி பயணிக்கமுடியும்.

இம்மூன்று விஷயங்களில் நம்மால் பிறருக்கு தானம்செய்ய முடிந்தது அவுஷகம் மட்டுமே. எனவேதான் இதன் வழியில் நம் கர்ம வினையினை கழிப்பதோடு, ஜீவிதத்திற்கு உணவும் அளிக்கமுடியும். மேலும் வாழ்வியல் முறையினை உற்று நோக்கினால் பெரும் உயர் குடிமக்கள் அன்னதானத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிதர்சனத்தில் நம்மால் உணரமுடியும். அதோடு மட்டுமல்லாமல் ஜாதகத்தில் சந்திரனின் வளமும், நமக்கு மன திருப்தியும், உயர்வதை அனுபவபூர்வமாக உணரமுடியும்.

சரி எனக்கு எந்த உணவு சரியானது?

நான் எதை உட்கொள்ளவேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்? எதை தானம் செய்ய வேண்டும்? என்பதனை எப்படி? அறிந்துகொள்வது என்ற சந்தேகம் தோன்றலாம், நமது ஜோதிடத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உணவு வகை யும் பழம் அல்லது காய்கறி களும் வழங்கப்பட்டுள்ளது.

அவற்றை நமது தாராபலனுக்கு ஏற்றவாறும், நம் ஜென்ம நட்சத்திரத்திற்கு சாதகமான நட்சத்திரத்தின் உணவினையும், தேர்வு செய்து, அந்த உணவினை நாம் உட்கொள்வது மட்டுமல்லாமல் தானமும், செய்துவந்தால் மலையளவு துயரம் பணியாய் உருகிவிடும்.

பெரும்பாலும் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து 18-ஆவது நட்சத்திரம் பணப்பகை நட்சத்திரமாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது. இந்த நட்சத்திரம் சுட்டிக்காட்டும் உணவினை தவிர்ப்பது நல்லது. அதைபோன்று 22-ஆவது நட்சத்திரம் வைணாசிக நட்சத்திரம் ஆகும். வைணாசிகம் என்றால் உடலை வதைப்பது என்று பொருள்படும். அதற்கான உணவையும் தவிர்த்துவிடுவது சிறப்பினை தரும். மேலும் 27-ஆவது நட்சத்திரம் வணங்கத்தக்க நட்சத்திரமாக அறியப்படுகின்றது. இந்த நட்சத்திரத்திற்கான உணவினை அதிக அளவில் தானம் செய்வதன்மூலம் சிறப் பினை அடையலாம்.

ff

அதேபோன்று பொருளாதார நிலையினை உயர்த்திக்கொள்வதற்கு ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து இரண்டாவது நட்சத்திரத்திற்கான உணவை தானம் செய்வதோடு நாமும் உணவில் சேர்த்துக்கொண்டுவந்தால் பொருளாதார சூழ்நிலையில் தன்னிறைவு பெறமுடியும்.

எந்த நட்சத்திரத்திற்கு எந்த உணவு மற்றும் பழம், காய்கறிகள், என்பதனை பின்வருமாறு காணலாம்.

27 நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரமான

1. அஸ்வினி: நட்சத்திரத்தின் பழம் முந்திரி பழம் ஆகும். உணவு எலுமிச்சம் பழ சாதம். இவற்றினை உட்கொள்வதோடு தானமும் செய்வது சிறப்பு.

2. பரணி நட்சத்திரம்: நெல்லிக்காய் மற்றும் நெல்லிக்காய் சாதம். நெல்லி ஊறுகாய், நெல்லிக்காய் ஜூஸ் போன்றவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம்,

3. கிருத்திகை நட்சத்திரம்: அத்திப்பழம், பேரிச்சம்பழம் போன்றவைகளும் உணவாக வற்றல் குழம்பும், அனைத்து வகை வற்றல் குழம்பும்.

4 ரோகிணி நட்சத்திரம்: நாவல் பழம் உணவு வகையில் தயிர் சாதம், நீர்மோர்.

5 மிருகசீரிஷ நட்சத்திரம்: தேங்காய் மற்றும் இளநீர். உணவு வகையில் எல்லாவித பருப்பு சாதம்.

6. திருவாதிரை நட்சத்திரம்: எல்லாவித வாழைப்பழம், உணவு வகையில் களி, மற்றும் கூழ் வகைகள்.

7. புனர்பூச நட்சத்திரம்: கரும்பு சாறு மற்றும் கரும்பு, உணவு வகையில் பால் சாதம்.

8. பூச நட்சத்திரம்: விளாம்பழம் மற்றும் ஆப்பிள். உணவு வகையில் சாம்பார் சாதம்.

9. ஆயில்ய நட்சத்திரம்: இவர்களுக்கு பழம் குறிப்பிடவில்லை முருங்கைக்காய் மற்றும் மோர் வற்றல் குழம்பு.

10. மக நட்சத்திரம்: வெண்பூசணி, மாங்காய், உணவு கீரை சாதங்கள்.

11. பூரம் நட்சத்திரம்: எலுமிச்சை பழம் மற்றும் ஊறுகாய். உணவு பலாப்பழ சாதம்.

12. உத்திர நட்சத்திரம்: மாதுளை சாறு மற்றும் பழம், உணவு வகையில் புளியோதரை.

13. அஸ்தம் நட்சத்திரம்: ஆரஞ்சு பழம். உணவு வகையில் தேங்காய் சாதம்.

14. சித்திரை நட்சத்திரம்: பப்பாளி மற்றும் சாத்துக்கொடி. உணவு சக்கரைப் பொங்கல்.

15. சுவாதி நட்சத்திரம்: உலர் திராட்சை மற்றும் வேர்க்கடலை. உணவு எல்லா வகை பருப்பு பொடி சாதம்.

16. விசாக நட்சத்திரம்: விளாம்பழம் மற்றும் சப்போட்டா. உணவு கறிவேப்பிலை பொடி சாதம்.

17. அனுஷ நட்சத்திரம்: நுங்கு. உணவு வகையில் வெண்பொங்கல்.

18. கேட்டை நட்சத்திரம்: வல்லாரை மற்றும் செர்ரி பழம். உணவு மாங்காய் சாதம்.

19. மூலம் நட்சத்திரம்: கொய்யா பழம். உணவு அதிரசம்.

20. பூராடம் நட்சத்திரம்: வெள்ளரிப்பழம். உணவு காளான் சாதம் மற்றும் போலி வகை.

21. உத்திராடம் நட்சத்திரம்: பலாப்பழம். உணவு கடலைமாவினால் செய்யப்பட்ட உணவு வகைகள்.

22. திருவோணம் நட்சத்திரம்: சீதாப்பழம். உணவு அரிசி மாவினால் செய்யப்பட்ட உணவு வகைகள்.

23. அவிட்டம் நட்சத்திரம்: தக்காளி மற்றும் ஆப்பிள். உணவு அவுல் சம்பந்தப்பட்ட உணவு.

24. சதயம் நட்சத்திரம்: எல்லா நிற திராட்சை பழங்களும். உணவு சேமியா மற்றும் இடியாப்பம்.

25. பூரட்டாதி நட்சத்திரம்: மாம்பழம் மற்றும் புட்டு வகைகள்.

26. உத்திரட்டாதி நட்சத்திரம்: அண்ணாச்சி பழம். உணவு உளுந்து சம்பந்தப்பட்ட உணவு வடை மற்றும் களி.

27.ரேவதி நட்சத்திரம்: இலந்தை பழம் பேரிச்சம்பழம். உணவு கொத்தமல்லி சாதம்.

மேற்கூறிய உணவு வகைகளை அந்தந்த நட்சத்திரங்கள் வரும்நாளில் தானம்செய்வது பெரும் சிறப்பினை தரும்.

செல்: 80563 79988

bala101123
இதையும் படியுங்கள்
Subscribe