கடவுளின் புகழ் இந்த பிரபஞ்சத்தில், சூரிய குடும்பத்தின் மூலமாகப் பிரதிபலிக் கப்படுகிறது. மனித வாழ்க்கைமீது, சூரியன், அதன் கிரகங்கள், உபகிரகங்கள், நட்சத்திரக் கூட்டங்களின் கண்காணிப்பில், அவற்றின் அசைவுகள் மற்றும் தாக்கங்கள் மூலமாக, இறைவன் நடத்தும் நாடகமே மிக மாயா வினோதமானது.
மனித குலத்தின் நன்மைக்காக, தங்களின் ஞான திருஷ்டியால் பிரபஞ்ச சக்தியை உணர்ந்த நமது முன்னோர்களாகிய முனிவர்கள், ஜோதிடம் என்னும் பேரறிவை உலகுக்கு அளித்தார்கள்.
நாளடைவில், அவர்களால் அளிக்கப்பட்ட பொக்கிஷங்கள், சிறிதுசிறிதாகக் காணாமல் போயிருந்தாலும், பல துல்லியமான தகவல்கள், இந்த ஜோதிடக் கலையில் மிக்க ஆர்வம் உள்ளவர்களாலும், அதன் காரண காரிங்களை ஆராய முற்பட்டவர்களாலும் அதிர்ஷ்டவசமாகக் காப்பாற்றப்பட்டது.
இந்தக் கட்டுரையில் நாம், வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து, ஆரோக்கிய வாழ்க்கையை அடைவதற்கான சரியான நல்ல நேரத்தை, சிறந்த முகூர்த்தத்தை அறியும் நுணுக்கங்களைப் பற்றிய தகவல்களைக் காண்போம்.
முதலில், நாம் ஒருவர் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய கிரக நிலைகள் என்ன? அதற்கான காரணிகள் என்ன? அது
அறுவை சிகிச்சைவரைக் கொண்டுசெல்லுமா என்பதை ஆராயவேண்டும். ஒரு நோயாளியைக் குணப்படுத்த வேறு வழியின்றிப் போகும்போது, கடைசியாக எடுக்கப்படுவதே அறுவை சிகிச்சைக்கான முடிவாகும்.
ஒருவருக்கு வரக்கூடிய நோயின் தன்மை மற்றும் அதன் பாதிப்புகள் அனைத்தும், அவரின் ஜாதகத்திலுள்ள குறிப்பிட்ட ராசிகளிலுள்ள கிரகங்கள் எந்த அளவுக்கு பாதிப்படைந்துள்ளன என்பதைப் பொருத்தே அமைகிறது.
"பிருஹத்' ஜாதகத்தில் ஒளி கிரகங்களான சூரிய- சந்திரர்களிலிருந்து 7-ஆம் வீட்டை எப்போது செவ்வாயும், சனியும் கடக்கிறார்
களோ, அப்போது ஜாதகருக்கு நோயால் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த இரு அசுப கிரகங்களும், ஒளிகிரகங்கள்மீது தங்கள் தாக்கத்தை அதிகரிக்கும்போது, அத்தகைய ஜாதகருக்கு இறப்பு விரைவிலேயே நிகழுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
லக்னத்தின்மீது, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அசுப கிரகங்களின் ஒன்றிணைந்த இணைவு அல்லது பார்வைகள் மூலமான தாக்கம் காரணமாக, ஜாதகரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, நோயை உற்பத்தி செய்யக்கூடிய தன்மை அதிகரிக்கிறது.
லக்னத்திலிருந்து ஆறாம் வீடு- முக்கியமாக ஜாதகரின் ஆரோக்கிய நிலையைக் குறிகாட்டுகிறது. கிரகங்களின் இயற்கைத் தன்மை, ராசியிலும் நவாம்சத்திலும் அவை இடம்பெற்றுள்ள நிலை ஆகியவையே ஜாதகரின் நோயின் வகை, அளவு மற்றும்
கடவுளின் புகழ் இந்த பிரபஞ்சத்தில், சூரிய குடும்பத்தின் மூலமாகப் பிரதிபலிக் கப்படுகிறது. மனித வாழ்க்கைமீது, சூரியன், அதன் கிரகங்கள், உபகிரகங்கள், நட்சத்திரக் கூட்டங்களின் கண்காணிப்பில், அவற்றின் அசைவுகள் மற்றும் தாக்கங்கள் மூலமாக, இறைவன் நடத்தும் நாடகமே மிக மாயா வினோதமானது.
மனித குலத்தின் நன்மைக்காக, தங்களின் ஞான திருஷ்டியால் பிரபஞ்ச சக்தியை உணர்ந்த நமது முன்னோர்களாகிய முனிவர்கள், ஜோதிடம் என்னும் பேரறிவை உலகுக்கு அளித்தார்கள்.
நாளடைவில், அவர்களால் அளிக்கப்பட்ட பொக்கிஷங்கள், சிறிதுசிறிதாகக் காணாமல் போயிருந்தாலும், பல துல்லியமான தகவல்கள், இந்த ஜோதிடக் கலையில் மிக்க ஆர்வம் உள்ளவர்களாலும், அதன் காரண காரிங்களை ஆராய முற்பட்டவர்களாலும் அதிர்ஷ்டவசமாகக் காப்பாற்றப்பட்டது.
இந்தக் கட்டுரையில் நாம், வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து, ஆரோக்கிய வாழ்க்கையை அடைவதற்கான சரியான நல்ல நேரத்தை, சிறந்த முகூர்த்தத்தை அறியும் நுணுக்கங்களைப் பற்றிய தகவல்களைக் காண்போம்.
முதலில், நாம் ஒருவர் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய கிரக நிலைகள் என்ன? அதற்கான காரணிகள் என்ன? அது
அறுவை சிகிச்சைவரைக் கொண்டுசெல்லுமா என்பதை ஆராயவேண்டும். ஒரு நோயாளியைக் குணப்படுத்த வேறு வழியின்றிப் போகும்போது, கடைசியாக எடுக்கப்படுவதே அறுவை சிகிச்சைக்கான முடிவாகும்.
ஒருவருக்கு வரக்கூடிய நோயின் தன்மை மற்றும் அதன் பாதிப்புகள் அனைத்தும், அவரின் ஜாதகத்திலுள்ள குறிப்பிட்ட ராசிகளிலுள்ள கிரகங்கள் எந்த அளவுக்கு பாதிப்படைந்துள்ளன என்பதைப் பொருத்தே அமைகிறது.
"பிருஹத்' ஜாதகத்தில் ஒளி கிரகங்களான சூரிய- சந்திரர்களிலிருந்து 7-ஆம் வீட்டை எப்போது செவ்வாயும், சனியும் கடக்கிறார்
களோ, அப்போது ஜாதகருக்கு நோயால் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த இரு அசுப கிரகங்களும், ஒளிகிரகங்கள்மீது தங்கள் தாக்கத்தை அதிகரிக்கும்போது, அத்தகைய ஜாதகருக்கு இறப்பு விரைவிலேயே நிகழுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
லக்னத்தின்மீது, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அசுப கிரகங்களின் ஒன்றிணைந்த இணைவு அல்லது பார்வைகள் மூலமான தாக்கம் காரணமாக, ஜாதகரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, நோயை உற்பத்தி செய்யக்கூடிய தன்மை அதிகரிக்கிறது.
லக்னத்திலிருந்து ஆறாம் வீடு- முக்கியமாக ஜாதகரின் ஆரோக்கிய நிலையைக் குறிகாட்டுகிறது. கிரகங்களின் இயற்கைத் தன்மை, ராசியிலும் நவாம்சத்திலும் அவை இடம்பெற்றுள்ள நிலை ஆகியவையே ஜாதகரின் நோயின் வகை, அளவு மற்றும் அதை குணப்படுத்தக்கூடிய சாத்தியக் கூறுகள் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கின்றன. மேலும், துல்லியமாக அறிய, அவற்றின் தசாபுக்தி மற்றும் கோட்சார நிலைகளின் தொடர்பு ஆராயப்படவேண்டும்.
இத்தகைய விம்சோத்ரி தசாபுக்தி மற்றும் கோட்சார ஆய்வு, ஜாதகருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுமா? அதன்பிறகு அவரின் ஆரோக்கியம் சீராகி, உடல் தேறி நல்வாழ்வு வாழ்வாரா என்பதற்கான அறிகுறிகளைத் தெளிவுபடுத்தும்.
லக்னத்தோடு இணைந்த, பார்த்த, தொடர்புடைய அசுப கிரகங்கள், ஜாதகருக்கு நோய்மட்டுமன்றி, விபத்து மற்றும் அதன் காரணமாக வாழ்க்கையில் ஏற்படும் பின்னடைவுகள், தீவிர மன உளைச்சல் ஆகியவற்றையும் தருகிறது. இந்த மன உளைச்சல்கள் அனைத்தும் ஒன்றிணைந்து, அவரின் நோயை அதிகரிக்கச் செய்கிறது. ஏனெனில், மனமே நம் முழு உடலையும் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டு அறையாகும்.
முக்கியமாக, அசுப ராசிகளில் இடம் பெற்றுள்ள அசுப கிரகங்களின் கெடுதல் செய்யும் தசாக் காலங்கள், ஜாதகருக்கு இன்னல்களை அளித்து, வைத்தியச் செலவுக்கான பொருள் இழப்பையும் ஏற்படுத்துகிறது. செவ்வாய், சனி, ராகு போன்ற தற்காலிக அசுப கிரகங்களே நோயை உருவாக்கும் மையங்களாகின்றன. ஏழரைச்சனி மற்றும் அஷ்டமச்சனி போன்ற காலங்களில் அறுவை சிகிச்சைக்கு வாய்ப்பு ஏற்படலாமென்று கூறலாம்.
மேலே சொல்லப் பட்ட அசுப கிரகங் களின், ஒரு ராசியின் மீதான இணைந்த தாக்கங்கள் "ட்யூமரை' ஏற்படுத்துவதோடு, அது கடைசியில் தீவிரமாகும்போது புற்றுநோயாக மாறி, அந்தக் கட்டிகளை அகற்ற அறுவை சிகிச்சை செய்யவேண்டிய சூழ்நிலைக்குக் கொண்டுசெல்கிறது.
ராகு மற்றும் செவ்வாய் போன்ற அசுப கிரகங்களின் தசை அல்லது புக்தி நடைபெறும் காலங்களில், அறுவை சிகிச்சைக்கான வாய்ப்புகள் உருவாகின்றன. சந்திரன் மற்றும் சுக்கிரனின் தீவிர பாதிப்புகள், பெண்களுக்கு கர்ப்ப சம்பந்தமான பிரச்சினைகள், ரத்தப்போக்கு போன்றவை காரணமாக அறுவை சிகிச்சைக்கான நிலையை ஏற்படுத்தலாம்.
இரண்டாம் வீடு பாதிப்படையும்போது முகத்தோற்றத்தில் மாற்றம் ஏற்பட, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து திருத்தம் செய்யவேண்டிய நிலை ஏற்படலாம்.
சில நேரங்களில் 12 மற்றும் 6-ஆம் பாவங்களில் அமர்ந்த கிரக தசை ஆரம்பமாகும்போது, மருத்துவச் செலவு போன்ற விரயச்செலவுகள் ஏற்படும்முன், ஜாதகரை வீடு வாங்குதல் அல்லது கட்டுதல் போன்ற செலவுகளைச் செய்யச் சொல்லி ஆலோசனை அளித்து, ஜோதிடர்கள் அவர்களைக் காக்கலாம்.
செவ்வாய் மற்றும் சுக்கிரனின் ஈடுபாடு, சில நேரங்களில் விபத்தைத் தந்து, அதன்காரணமாக பாதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலையை உருவாக்கலாம். இதுபோன்ற அவசர சூழ்நிலைகளில், அறுவை சிகிச்சைக் கான நல்ல நேரத்தைத் தீர்மானிக்க இயலாது. முன்னரே ஜாதகத்தைக் காட்டி ஆலோசனை கேட்டிருந்தால், விபத்து ஏற்படும் நிலையைக் கூறி எச்சரித்திருக்க முடியும்.
ராகு தசை அல்லது மாரக கிரக தசைகளில் கோட்சார ராகு, சனி மற்றும் செவ்வாய் ஆகியவற்றின் ஒன்றிணைந்த ஜனன ஜாதகம் பாதக நிலையிலிருந்து, அவரைக் காப்பாற்ற அல்லது கஷ்டங்களைக் குறைக்க அறுவை சிகிச்சைக்கான சூழலை உருவாக்கிவிடுகிறது.
மற்றபடி சாதாரண காலங்களில் அறுவை சிகிச்சை வெற்றிபெறுவதற்கான நல்ல முகூர்த்தத்தை மருத்துவரின் ஆலோசனைப்படியும் குறிப்பது நல்லது. சில மருத்துவர்கள், பாதிக்கப்பட்டவரையே அறுவை சிகைச்சைக்கான அனுகூலமான நேரத்தைக் குறித்துவரக் கேட்டுக்கொள்வதும் உண்டு. அப்படிக் கேட்கப்படும்போது, நல்லநேரம் குறிக்கப் பார்க்கவேண்டிய அடிப்படை விஷயங்களாவன:
* ஜென்ம நட்சத்திரத்திற்கும், அன்றைய நட்சத்திரத்திற்கும் உரிய தாராபலம் பார்க்கவேண்டும்.
* சந்திர பலம் பார்க்கவேண்டும்.
* பஞ்சகம் பார்க்கப்படவேண்டும்.
* அறுவை சிகிச்சைக்கு முக்கியமாக மிருத்தியு பஞ்சகம் மற்றும் ரோக பஞ்சகம் கூடாது. ஏனெனில் இந்த நேரங் கள் மரணத்தைத் தரவோ அல்லது சிகிச்சைக்குப்பிறகு சுகம் பெறக் கால தாமதத்தையோ ஏற்படுத்தலாம்.
* பௌர்ணமி திதி கூடாது. ஏனெனில் அன்று ரத்த ஓட்டம் அதிகரிப்பதன் காரணமாக, ரத்த விரயம் அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது. ஆனால் மேலை நாட்டவர்கள் இந்த நாளைத் தேர்ந்தெடுக்கி றார்கள். இந்துக்கள் அமாவாசை நாளை நல்ல நாளாகக் கருதுவதில்லை.
* ஆயுதங்களையும், அறுவை சிகிச்சை நிபுணரையும் குறிக்கும் செவ்வாய் மற்றும் திறமையாக நோயைக் கண்டுகொள்ளும் திறன், தகவல் தொடர்பு ஆகியவற்றைக் குறிக்கும் புதன் ஆகிய இருவரும் வக்ரநிலை அடையும்போது அறுவை சிகிச்சை செய்வதைத் தவிர்க்கவேண்டும்.
* பௌர்ணமி- பிரதமை, அமாவாசை- பிரதமை, துவாதசி, ஏகாதசி ஆகிய திதிகளுக்கு இடையேயான இரண்டு விநாழிகைகள் அபாயத்தையும், மிகுந்த கெடுதலையும் தரும் காலமாகும்.
* சிசேரியன் பிரசவத்திற்கு ஜோதிடரிடம் நேரம் குறித்துக் கேட்கும்போது, அவர் எப்படிப்பட்ட பிரசவம் ஏற்படுமென்று முடிவுசெய்துகொள்ள வேண்டும். "ஜாதக தத்துவா' எனும் நூலில், லக்னத்திலிருந்தோ அல்லது சந்திரா லக்னத்திலிருந்தோ 4 மற்றும் 7-ஆம் பாவங்களில் அசுப கிரகங்கள் இடம்பெற, ஜாதகிக்கு சுகமான பிரசவம் ஏற்படாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
* பிரசவத்தின்போது, 4-ஆம் வீட்டில் செவ்வாயின் அமர்வு பாதிப்பதால், இரு உயிர்களுக்கும் கண்டம் ஏற்படலாம். ஆனால் லக்னத்துக்கும், சந்திரனுக்கும் சுபர் தொடர்பிருந்தால் பிரச்சினையில்லை.
* தாய்க்கு நீண்ட ஆயுள் இருந்தாலும், பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றிருந்தாலும், ராகு 11-ல் இருந்தாலும் தாய்க்கும், குழந்தைக்கும் உயிர்பயம் நீங்கும்.
தாயின் ஜாதகத்தில் சர்ப்பதோஷம் இருந்து, கர்ப்பம் தரிப்பதற்குமுன் அதற்குப் பரிகாரம் செய்யாவிடில், குழந்தைக்கு மரண ஆபத்து ஏற்படலாம்.
கணவன் அல்லது மனைவியின் லக்னத் துக்கு அல்லது சந்திரனுக்கு 5-ஆம் வீட்டின்மீது செவ்வாய், சனி மற்றும் ராகு ஆகியோரின் தாக்கம் இருக்க, பிரசவத்தின்போது தாய்க்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. மேலும் இந்த கிரகங்களின் தசாபுக்திகள் நடந்தால் கேட்கவே வேண்டாம்.
பிரசவ நேரத்தில் சந்திரன் மிருத்யு பாகைகளில் இருந்தால் அது குழந்தையை பாதிக்கும். (ஜாதக பாரிஜாதத்தின்படி மேஷத்திலிருந்து மீனம் வரையிலான மிருத்யு பாகைகள் முறையே 8, 25, 22, 22, 21, 1, 4, 23, 18, 20, 20, 20 பாகைகளாகும்.) ஆனால் சந்திரன் புஷ்கராம்சத்தில் இருக்க, அந்த நேரத்தில் பிரசவத்தை வைத்துக்கொள்வது மிகுந்த அனுகூலமான நேரமாகக் கருதப்படுகிறது. (புஷ்கராம்சப் பாகைகள் மேஷம் முதல் மீனம் முறையே 21, 14, 18, 8, 19, 9, 24, 11, 23, 14, 19, 9 பாகைகளாகும்.)
"பிருஹத்' ஜாதகத்தின்படி, மேஷ ராசி முதல் மீன ராசிவரை, காலபுருஷ தத்துவத்தின்படி ஒவ்வொரு ராசிக்கும் உடலின் ஒவ்வொரு பாகம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவை முறையே தலை, முகம், மார்பு, இதயம், வயிறு, இடுப்பு, அடி வயிறு, ரகசிய உறுப்புகள், தொடைகள், முழங்கால், இடுப்பின் பின்புறம் மற்றும் பாதமாகும்.
உதாரணமாக, சந்திரன் மேஷத்தில் இருக்கும்போது மிக்க அவசியம் ஏற்பட்டாலன்றி, மூளை சம்பந்தமான அறுவை சிகிச்சை செய்யக்கூடாது. அதுவே கோட்சாரச் சந்திரன் ஜனனச் சந்திரனைச் சந்திக்கும்போது, அபாயத்தின் அளவு அதிகமானதாக இருக்கும். இதேபோன்று அந்தந்த பாகத்தைக் குறிக்கும் ராசிகளில் சந்திரன் இருக்க, அந்த பாகத்தில் அறுவை சிகிச்சை செய்வதைத் தவிர்க்கவேண்டும்.
அட்டவணை 1-ல் உள்ள நட்சத்திரத்தன்று ஜென்ம நட்சத்திரம் வந்தால், அந்த நாளில், அந்த உடல் பாகத்தில் ஆபரேஷன் செய்யக்கூடாது.
அதேபோன்று, உடலின் பாகத்திற்குரிய நட்சத்திரம், ஜாதகரின் ஜென்ம நட்சத்திரத்தைத் தொடும் நாளில் அறுவை சிகிச்சை செய்வது ஆபத்தைத் தரும். உதாரணமாக, ஜாதகரின் ஜென்ம நட்சத்திரம் பூசமானால், திங்கள்கிழமையன்று வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்வதைத் தவிர்க்கவேண்டும். ஏனெனில் அன்று செய்யும் ஆபரேஷன் வெற்றிகரமாக முடியாது.
லக்னம், ராசி மற்றும் நட்சத்திர சந்திகளில், அறுவை சிகிச்சை செய்யக்கூடிய லக்ன நேரம் அமையக்கூடாது. (கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசி சந்திகள் ரிக்ஷசந்தி எனப்படும். ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரத்தின் 4-ஆம் பாதம் ரிக்ஷசந்தியாகும்.) இந்த நேரத்தில் பிறக்கும் குழந்தை உயிரிழக்கும். ஆனால் லக்னத்துக்கு சுபர் தொடர்பிருந்தால் பிழைத்துக்கொள்ளும்.
அடுத்து கண்டாந்த நேரத்திலும் பிரசவத்தை வைத்துக் கொள்ளக்கூடாது. நீர் ராசியின் கடைசி 5 பாகையும், நெருப்பு ராசியின் முதல் 5 பாகையும் கண்டாந்தமாகும். கண்டாந்த காலத்தில் ஆபரேஷன் செய்வதும் ஆபத்தாகும்.
லக்ன சந்தி, ராசி சந்தி மற்றும் நட்சத்திர சந்தி ஆகிய காலங்களில் பிரசவத்தை வைத்துக்கொள்ளக்கூடாது. அதுவும் குரு நீசமாக அல்லது செவ்வாயின் ராசியில் அவர் இடம் பெற்றிருக்கக்கூடாது என "சர்வார்த்த சிந்தாமணி' குறிப்பிடுகிறது.
சூரிய உதயத்துக்கு ஒருமணி நேரம் முன்பும், அஸ்தமனத்துக்கு ஒருமணி நேரத்துக்கு முன்பும் பிறக்கும் குழந்தையின் லக்னத்துக்கு 8-ல் அசுப கிரக பாதிப்பிருந்தால் குழந்தை மரணிக்கும்.
"ஜாதக பாரிஜாதம்' சொல்வதென்ன?
* சந்திரன் பாதிப்பு மற்றும் லக்னத்துக்கு 8-ல் அசுப கிரகங்கள் இருக்க தாய், மகவு இருவருக்கும் மரணம்.
* லக்னத்துக்கு சுபர் தொடர்பு மற்றும் இயற்கை சுபர்கள் கேந்திரங்களில் இடம் பெற அந்த நாள், நேரம் மிகவும் சிறப்பானதாகும்.
* ஜனன ஜாதகம் அவரின் உடல் (அக) நிலையையும், கோட்சார நிலையானது புற நிலையையும் குறிகாட்டுகின்றன. மெதுவாகச் செல்லும் கிரகங்களின் தாக்கத்தால் அது குறிக்கும் உறுப்புக்கான ஆபரேஷன், மருத்துவர் இல்லாதது மற்றும் பல காரணங்களால் தள்ளிப் போகலாம்; தாமதமாகலாம்.
முகூர்த்தங்களுக்கு உண்டான தோஷங்களுக்கு ஒரு முடிவில்லை. எந்த வொரு குறையுமின்றி ஒரு நல்ல நேரத்தைத் தேர்ந்தெடுப்பது நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்றாகும். எனவே, லக்னமானது இயற்கை சுபர்களான சுக்கிரன், குரு மற்றும் புதன் ஆகியோரின் தொடர்புடன் இருந்தால், பல லட்சம் தோஷங்கள் மறைந்துவிடுமென பழைய நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. சூரியனின் 11-ஆமிட அமர்வு அனைத்து தோஷங்களையும் அகற்றிவிடும்.
செல்: 63836 25384