ஜாதகமென்பது ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் வான மண்டலத்தி லுள்ள நட்சத்திரங்கள் மற்றும் கிரகங் களின் நிலையைக் காட்டும் ஒரு குறிப் பேடாகும். இந்த குறிப்பில் சந்திரன் உள்ள ராசி ஜென்ம ராசியாகும். சந்திரன் உள்ள நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரமாகும்.

சில குறிப்பிட்ட நட்சத்திரங்கள் தோஷமென்றும், அந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களைத் திருமணம் செய்யக் கூடாது என்ற நம்பிக்கையும் சமுதாயத் தில் நிலவிவருகிறது. குறிப்பாக "மூலத்துப் பெண் மாமனாருக்கு ஆகாது; ஆயில்ய நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாது; விசாக நட்சத்திரம் இளைய சகோதர னுக்கு ஆகாது' என்னும் கருத்து பரவலாக நிலவிவருகிறது.

"ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்' என்றும்; "மூலம் மாமனாருக்கு ஆகாது' என்றும்; "மூல நட்சத்திரப் பெண்ணை மாமனார் இல்லாத வீட்டில்தான் மணமுடிக்க வேண்டும்' என்றும் மூல நட்சத்திரம் பற்றிய பல விமர்சனங்கள் உள்ளன. அது மட்டுமா? இதுபோன்ற நட்சத்திர தோஷம் ஆண்களுக்கில்லை என்றபோதிலும் சமீபகாலமாக மூல நட்சத்திர ஆண்களும் பாதிக்கப்படவே செய்கிறார் கள்.

இந்த நவநாகரீக உலகில் பல பெற்றோர்கள் இதை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு தமது பிள்ளைகளின் வாழ்க்கையைக் கேள்விக் குறியாக்குகி றார்கள். இந்த பழமொழியை ஆதார மாக வைத்து பலர் மூல நட்சத்திரப் பெண்களைத் திருமணம் செய்ய பயப் படுகிறார்கள். மூலத்துப் பெண்ணால் மாமனாருக்கு கண்டம் ஏற்படும் என்ற நம்பிக்கை சமூகத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது.

Advertisment

ff

உண்மையில் மூல நட்சத்திரம் தோஷமா? இல்லையா?

"மூலத்துப் பெண் மாமனாருக்கு ஆகாது' என்றும், "இல்லை; ஒன்றும் செய்யாது' என்றும் பொதுவாகச் சொல்வதை விடுத்து, இதிலுள்ள கருத்தை ஆய்வுசெய்யலாம்.

* காலபுருஷ லக்னமான மேஷத்திற்கு 9-ஆமிடமான தனுசில் மூல நட்சத்திரம் இடம் பெற்றுள்ளது. இது ஜாதகரின் தந்தையைக் குறிக்குமிடம்.

* ஒரு ஜாதகத்தில் மாமனாரைக் குறிப்பது 3-ஆம் பாவகம்.

* காலபுருஷ லக்னமான மேஷத்தை ஜாதகி என வைத்துக்கொண்டால், அதற்கு ஏழாம் வீடான துலாம் ஜாதகியின் கணவனைக் குறிக்கும்.

* ஏழாம் வீட்டிற்கு ஒன்பதாம் வீடான மூன்றாம் வீடு (மிதுனம்) கணவரின் தந்தையைக் குறிக்குமிடம். மிதுனத்திற்கு ஏழாம் வீடு தனுசு ராசியாகும். தனுசிற்கு அஷ்ட மாதிபத்தியம் பெற்ற சந்திரன் இயற்கைப் பாவியான கேதுவின் நட்சத்திரத்தில் மாரக ஸ்தானமான தனுசில் அமர்வது சிறப்பல்ல.

* மிதுனத்திற்கு மாரகாதிபதிகள் 2-க்கு டைய சந்திரன் மற்றும் 7-க்குடைய குரு. 2-க்குடைய சந்திரன் மற்றொரு மாரக ஸ்தானமான 7-ல் அமர்வதும், மாரகாதிபதிகள் ஒருவருக்கொருவர் மாரக ஸ்தானத்தில் தொடர்பு பெறுவதும் கடுமையான மாரகத்தை ஏற்படுத்தும்.

* மேலும் மூல நட்சத்திரம் தனுசு ராசியின் கண்டாந்த நட்சத்திரமாகும். பொதுவாக கண்டாந்த நட்சத்திரங்களில் பிறந்த குழந்தைகள் உறவினரை பாதிக்கும் என்பது பொது விதி.

* காலபுருஷ தத்துவப்படி மாமனாரைக் குறிக்கும் மூன்றாமிடமான மிதுன ராசிக்கு ஏழாம் வீடான தனுசு ராசியில் அமைந்துள்ள கண்டாந்த நட்சத்திரம் மூல நட்சத்திரமாகும். எனவே காலபுருஷ தத்துவப்படி மூலம் மாமனாருக்கு கண்டத்தை ஏற்படுத்தும் என்பது பொதுவிதியாகும்.

மேலே குறிப்பிட்ட அனைத்தும் பொதுவான காரணிகளாகும். காலபுருஷ லக்னமான மேஷத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. பிறந்த லக்னம் மாறுபடும்போது 3-ஆமி டம், 9-ஆமிடம், அஷ்ட மாதிபதி, பாதகாதிபதி என அனைத்தும் மாறுபடும். அதன்படி லக்னவாரியாகப் பலன் காணும்போது இதற்கு விதிவிலக்குகள் உண்டு.

மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணின் லக்னம் மேஷம், ரிஷபம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, மீனம் என அமைந்தால் மட்டுமே மாமனாருக்கு தோஷமுண்டு. மூல நட்சத்திரத்தில் பிறந்த மற்ற லக்னப் பெண்களுக்கு தோஷமில்லை.

மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணின் கணவன் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம், கும்பம், மீனம் ஆகிய லக்னங் களில் பிறந்தவராக இருந்தால், அவரின் தந்தைக்கு மூலநட்சத்திரப் பெண்ணால் தோஷமுண்டு. பிற லக்னங்களில் பிறந்த வராக இருந்தால் தோஷமில்லை.

மூல நட்சத்திரப் பெண்ணின் மாமனார் ரிஷபம், மிதுனம், கடகம் துலாம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய லக்னங்களில் பிறந்த வராக இருந்தால், மூல நட்சத்திரத்தில் பிறந்த மருமகளால் தோஷமுண்டு. மற்ற லக்னங் களில் பிறந்த மாமனாருக்கு மூலநட்சத்திர மருமகளால் தோஷமில்லை.

எனவே பொதுவிதியை வைத்துக்கொண்டு எல்லாருக்கும் தோஷமென்று கூறுவது மாபெரும் தவறாகும். மேலும் ஜோதிட ரீதியாக ஒரு குறிப்பிட்ட ராசி, ஒரு கிரகம், ஒரு நட்சத்திரம் மட்டுமே தனித்து எந்தவித பலன்களையும் ஜாதகருக்கு வழங்காது. ஜாதகரையே பாதிக்காத ஒரு நட்சத்திரம் எவ்வாறு மற்றொருவரின் ஆயுளை பாதிக்கும் என்பது சிந்திக்கவேண்டிய விஷயம்.

உளவியல்ரீதியாக மூல நட்சத்திரம் மாமனாரை பாதிக்குமா என்ற கருத்தை முன்வைத்தால், கூட்டுக் குடும்பம் நடை முறையில் இருந்த காலகட்டத்தில் நிலவிய வழக்கம் இப்பொழுதும் பலரின் வாழ்க்கை யைக் கெடுக்கிறது. மூல நட்சத்திரத்தில் பிறந்த வர்கள் நிர்வாகத் திறமையும் தன்னம் பிக்கையும் நிறைந்தவர்கள். பிறருக்கு அடிபணியாத அதிகார குணமுடையவர்கள். பிறருடைய தவறை சுட்டிக் காட்டுபவர்கள். சந்தர்ப்பத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்துவதில் வல்லவர்கள் என்பதால், இவர்களின் குண நலன்கள் மாமானாருடன் ஒத்துப்போகாது. கூட்டுக் குடும்பத்தில் முக்கிய பொறுப்புகள், வரவு- செலவு களை நிர்வகிக்கும் மாமனாருடன், தனித் தன்மையோடு செயல்படும் குணமுடைய மூல நட்சத்திரக்காரர்கள் தலையிடுவதால் மாமனார், மருமகள் உறவு ஒத்துப்போகாது.

தற்காலத்தில் கூட்டுக் குடும்பக் கட்ட மைப்பு மிகமிகக் குறைந்துவருவதால் மாமனார்- மருமகள் மோதல் ஏற்படும் சாத்தியக்கூறு குறைவு. எனவே மூல நட்சத்திர வரனை தைரியமாகத் தேர்வுசெய்யலாம்.

அத்துடன் ஒருவரின் ஜனமும் மரணமும் அவரவரின் சுய ஜாதகத்தின் அடிப்படையில் தான் நிகழுமே தவிர, வேறொருவருடைய ஜென்ம நட்சத்திரத்தால் நிகழும் சாத்தியக் கூறுகள் இல்லை. மேலும் பெண்ணின் லக்னம், கணவனின் லக்னம், மாமனாரின் லக்னமும் பார்த்துதான் முடிவெடுக்க வேண்டும். ஜோதிடர்களிடம் மூன்று ஜாதகங்களையும் கொடுத்து கவனமாக முடிவெடுக்கவும்.

மூல நட்சத்திரத்தில் பிறந்து திருமணத் தடையை சந்திக்கும் பெண்கள் 48 நாட்கள் தொடர்ந்து ஆஞ்சனேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட தடைகள் தகரும்.

மூல நட்சத்திரத்தில் பிறந்து திருமணத் தடையை சந்திக்கும் ஆண்கள் 11 மூல நட்சத்திர நாட்களில் வெண்ணெய்க் காப்பு சாற்றி வழிபட நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும்.

செல்: 98652 20406