நிச்சயதார்த்தத்தில் பிரிந்த குடும்பம் - திருமணத்தில் ஒன்று சேர்த்த அகத்தியர்1 சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர் (சென்ற இதழ் தொடர்ச்சி)

/idhalgal/balajothidam/family-separated-by-engagement-reunited-by-marriage1-siddhardasan-sundarji

சென்ற இதழ் தொடர்ச்சி...

ழு மாதங்கள் சென்ற பிறகு, மகனைப் பெற்ற தாயும், தந்தையும் வந்தார்கள். அவர்களிடம் என்ன விஷயம் சொல்லுங்கள் என்றேன்.

அகத்தியர் கூறியபடி பிரார்த்தனைகளை மாற்றம் இல்லாமல் செய்து முடித்தோம். ஆனால் எனது தங்கையும், அவள் கணவரும், நிச்சயதார்த்தம் நின்றதால் அவர்களை நாங்கள் கேவலப்படுத்தி, பெண்ணின் வாழ்க்கையை கெடுத்துவிட்டதாகவும் கூறி, எங்களை எதிரியாக எண்ணுகின்றார்கள்.

என் தங்கைக்கும் அவள் கணவருக்கும், இடையில் இதனால் அடிக்கடி பிரச்சினை, கருத்து வேறுபாடுகள் உண்டாகி அவள் நிம்மதியும் குலைந்துவிட்டது. மேலும் என் மகன் இப்போது செய்த செயலால், எங்கள் இரண்டு குடும்பமும் ஜென்மப் பகையாகிவிட்டது.

உங்கள

சென்ற இதழ் தொடர்ச்சி...

ழு மாதங்கள் சென்ற பிறகு, மகனைப் பெற்ற தாயும், தந்தையும் வந்தார்கள். அவர்களிடம் என்ன விஷயம் சொல்லுங்கள் என்றேன்.

அகத்தியர் கூறியபடி பிரார்த்தனைகளை மாற்றம் இல்லாமல் செய்து முடித்தோம். ஆனால் எனது தங்கையும், அவள் கணவரும், நிச்சயதார்த்தம் நின்றதால் அவர்களை நாங்கள் கேவலப்படுத்தி, பெண்ணின் வாழ்க்கையை கெடுத்துவிட்டதாகவும் கூறி, எங்களை எதிரியாக எண்ணுகின்றார்கள்.

என் தங்கைக்கும் அவள் கணவருக்கும், இடையில் இதனால் அடிக்கடி பிரச்சினை, கருத்து வேறுபாடுகள் உண்டாகி அவள் நிம்மதியும் குலைந்துவிட்டது. மேலும் என் மகன் இப்போது செய்த செயலால், எங்கள் இரண்டு குடும்பமும் ஜென்மப் பகையாகிவிட்டது.

உங்கள் மகன் இப்போது அப்படி என்ன காரியம் செய்துவிட்டார்.

நிச்சயம் செய்த எனது தங்கை மகளை வேண்டாம் என்ற எனது மகன் நாளடைவில் மனம் மாறி, தங்கை மகளுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி, இப்போது ஊரைவிட்டே ஓடிவிட்டார்கள். இப்போது எனது தங்கையும், அவள் கணவரும் மிகப்பெரும் கோபத்தில் உள்ளார்கள். இரண்டு குடும்பமும் உறவாக இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டோம். இப்போது நிரந்தரமான பகையாளியாகிவிட்டோம். நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று அகத்தியர்தான் கூறவேண்டும்.

engagement

அவர்கள் கூறியதை பொறுமையாகக் கேட்டுவிட்டு, ஓலையைப் படிக்கத் துவங்கினேன்.

நான் அன்றே கூறினேன். இப்போது திருமணம் நடக்காது. ஆனால் உங்கள் விருப்பப்படி இருவருக்கும் திருமணம் நடக்கும் என்றேன். இவர்கள் மகன் விரும்பிய பெண், அவனிடம் பணம், பொருள் பெற்றுக்கொள்ள பழகி வந்தாள். இவனைவிட வசதியானவன் கிடைத்தவுடன் இவனைவிட்டு விலகிவிட்டாள். இதனை மகன் புரிந்துகொண்டு அவளைவிட்டு விலகி, மறந்துவிட்டான்.

நான் கூறிய பிரார்த்தனைகளை இவர்கள் முறைப்படி செய்த பின்பு திருமணத்தை தடுத்து வந்த பெண் சாபம் விலகியது. வேண்டாம் என்று கூறிய அத்தை மகள்மீது பாசம் உண்டாகியது. இவருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. மறுபடியும் பெண் கேட்டுப் போனால், பெண்ணைத் தரமாட்டார்கள், பிரச்சினை பெரிதாகி, பிரித்துவிடுவார்கள் என்ற எண்ணம் கொண்டு இப்போது இருவரும் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்கள்.

engagement

இவன் தங்கை மகள் இப்போது இரண்டுமாத கர்ப்பமாக உள்ளாள். இவர்களுக்கு இது தெரியாது. இவன் தங்கை மகளுக்கு, சில பிரச்சினை களை அனுபவித்து, கருவை கர்ப்பத்தில் சுமந்து, வீட்டைவிட்டு வெளியேறி அவள் விருப்பப்படி திருமணம் நடக்கவேண்டும் என்பதுதான் அவளுக்கு திருமணம் நடைபெற விதிக்கப்பட்ட விதி. விதிப்படியும், பெற்றவர்கள் விருப்பப்படியும் தான் இப்போது அவர்கள் ஒன்றுசேர்ந்துள்ளார்கள்.

இரண்டு குடும்பமும் பகையாகிவிட்டது. என்று இவர்கள் வருத்தப்படுகின்றார்கள். நான் கூறிய பெண்ணின் திருமண விதி பற்றிய ரகசியத்தை இவர்களிடம் கூறாதே. இவன் மனைவியின் சகோதரனை அனுப்பி, இவன் தங்கையிடமும், அவள் கணவனிடமும் பேசச்சொல் அவர்கள் கோபம், விரோதம் நீங்கி, சமாதானமாவார்கள். ஊரறிய, உறவு கள் வாழ்த்த சிறப்பாக அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கச் சொல். அந்தக் குழந்தைகளுக்கு அகத்தியனின் ஆசி என்று கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார். அவர்களை சமாதானப்படுத்தி, அகத்தியர் வாக்கைக் கூறி அனுப்பி வைத்தேன்.

ஒவ்வொரு ஆண், பெண்ணிற்கு யாருக்கு, யார் மனைவி? யார் கணவன், ஒவ்வொருவரின் திருமணம் எப்படி நடக்கவேண்டும் என்று விதி உள்ளதோ அதன்படிதான் நடக்கும் என்பதை பெற்றவர்களும், மற்றவர்களும் புரிந்துகொண்டால், குடும்ப உறவுகளுக்கிடையே பிரிவு, பகை உண்டாகாது சாதி, மதம், பேதம், ஆணவக்கொலைகளும் நிகழாது. வீட்டைவிட்டு வெளியேறி ஓடிப்போனவர்கள் என்ற அவமானமும் சமுதாயத்தில் இராது.

செல்: 99441 13267

bala070723
இதையும் படியுங்கள்
Subscribe