ஜோதிடவியலில் பகுத்து அளிக்கப் பட்ட பாவங்களான 12 பாவகங்களும், முக்கியத்துவம் வாய்ந்தவைகள் என்றாலும், இதில் தனஸ்தானம் என்று அழைக்கப்படும் இரண்டாம் பாவகம், ஒருவருக்கு ஆரம்பக் கல்வி, பணவரவு, குடும்பம், முக அழகு, பேச்சாற்றல், பார்வைத்திறன், நிதிநிலை ஆகியவற்றிற்கு பொறுப்பேற்கின்றது.

அதோடு மட்டுமல்லாமல்; உடல் உறுப்பில் முகம், தொண்டை, வாய், கழுத்து, கண் போன்றவற்றையும் இரண்டாம் பாவகமே செயல்படுத்துகின்றது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பாவத்தில் இயற்கை பாவிகளாகிய சூரியன், செவ்வாய், சனி மற்றும் ராகு- கேது, ஆகியோர் அமரும்பொழுது, சில பாதிப்பு களை நிச்சயமாக அளித்து சில நிகழ்வுகளைத் தட்டிப் பறித்துவிடுகின்றனர்.

இதில் அந்த பாவ கிரகங்களுக்கு தாங்கள் அமர்ந்த பாவகம் ஆட்சி அல்லது உச்ச வீடாக இருந்தால் இந்தப் பலனில் சில மாறுபாடுகள் இருக்கும்.

உதாரணமாக தனுசு லக்னத்திற்கு இரண்டில் சனி அல்லது செவ்வாய் இருப்பது அசுபப் பலனை குறைத்து செயலாற்றுகின்றது. ஏனென்றால் சனி நின்றால் அது இரண்டாம் அதிபதி இரண்டில் ஆட்சி என்றும், செவ்வாய் நின்றால் உச்சம் என்றும், மேற்கூறிய பலனிலிருந்து விலகி வேறு வழியில் பலனை எடுக்கவேண்டும்.

அதேபோல் செவ்வாய் அதிகாரம்மிக்க, கலகம் நிறைந்த, வார்த்தைகளை உபயோகிக்க தூண்டிவிடும்.

தனஸ்தானத்தில் பாவிகள் வலுப்பெறுவது பொருளாதாரத்தில் நிறைவை அளித்தாலும், குடும்ப வாழ்க்கையில் பல சிக்கல்களை அளித்துவிடுகின்றது.

மேலும் பேச்சின்மூலம் எதிரிகளை உருவாக்கிக்கொள்வது, வம்பு, வழக்கு போன்றவற்றை எளிதில் ஏற்படுத்தி வாழ்வின் பல துன்பங்களை கொடுத்துவிடுகின்றது.

குழந்தைகளை பொறுத்தவரை ஆரம்பக் கல்வியில் சில இடர்பாடுகளை நிச்சயமாக தந்துவிடுகின்றது.

ss

இயற்கை பாவிகளான கிரகங்கள் ஆட்சி, உச்சம்பெறாத நிலையில் தனஸ்தானத்தில் அமரும்பொழுது, ராஜ கிரகமான சூரியன் எங்கும் ஓர் அதிகார தோரணையில் பேசும் ஆற்றல் இயல்பிலேயே அமைந்துவிடும். இரண்டில் சூரியன் அமர்ந்தால் அதன் தசா புக்தி காலங்களில் கண்கள் பாதிக்கப்படுவ தைக் காணமுடிகின்றது. அதேபோல் முகத்தில் பருக்கள், அம்மை தழும்பு போன்றவற்றை உருவாக்கிவிடுகின்றது.

இது கடகம் மற்றும் மீன ராசிகளுக்கு விதிவிலக்கு. கடகத்திற்கு தனஸ்தானத்தில் சூரியன் ஆட்சியும், மீனத் தில் உச்சமும் அடைவ தால் இந்த இரண்டு ராசி களும் விதிவிலக்குக்கு உட்படுகின்றது.

Advertisment

செவ்வாய் தன ஸ்தானத்தில் அமரும்பொழுது குடும்பத்தில் வாக்குவாதம், குடும்பத் திற்குள்ளாகவே கலகம்செய்வது, பேச்சில் ஒருவித வெறுப்பை காட்டுவது போன்றவற்றையும், ஆரம்பக் கல்வியில் தடை யையும் மிக எளிதில் அளித்துவிடுகின்றது.

இரண்டில் அமரும் செவ்வாய் தோஷத் தையும் கொண்டு சேர்க்கின்றது. இதனால் குடும்பம் அமைவதிலும் சில பிரச்சினைகளைத் தந்து செல்கின்றது. இவர்களுக்கு பூமியின்மூலம் வருவாய் இருந்தாலும், பொருளாதாரத்தில் ஒரு நல்ல நிலையை அளித்து குடும்ப வாழ்க்கையில் பெரும் சீர்கேட்டை அளித்துவிடுகின்றது.

வாக்கு ஸ்தானத்தில் அமரும் ராகு பிரம்மாண்டமான பேச்சு, அதீத ஆசை போன்றவற்றை அளிக்கும்.

Advertisment

ராகு இவர்களை ஒரு நம்பிக்கை கூறிய மனிதர்களாக மற்றவர்களால் அங்கீகரிக் கப்படுவதற்கு விடுவதில்லை.

மற்றவர்களை பேசி ஏமாற்றுவது, பேராசை காண்பிப்பது போன்ற செயல்களில் மிக எளிதாக இந்த இரண்டாம் இடத்தில் ராகு செயல்படுத்த தூண்டும்.

அல்லது ஏமாற்றும் பேர்வழிகளிடம் சிக்கி தனது உடைமைகளை இழக்கும் சூழலை ராகு வரவழைக்கும்.

இரண்டாம் இடத்தில் ராகுவும் தோஷத் திற்கு உரிய கிரகநிலை என்பதனால் இவர் களுக்கு குடும்ப வாழ்வில் பெரும் சிக்கலையும், முறிவையும் அளித்துவிடுகின்றது.

அதேபோன்று ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பத்தை இவர்களுக்கென்று உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பை ராகு தருகின்றது. குடும்பத்தில் அமைதி என்கின்ற சூழலை இந்த ராகு அவ்வளவு எளிதில் தந்துவிடுவதில்லை. அதீத வாக்கு சாதுரியம் இவர்களுக்கு இருக்கும்.

தனஸ்தானத்தில் தடையை அளிக்கும் கேது ஒரு குழந்தை பேசுகின்ற வயதை அடைந்தும் பேசாமல் இருக்கும் ஜாத கத்தை ஆராயும்பொழுது அதில் இரண்டில் கேது பெரும்பங்கு அளிக்கிறது.

மேலும் திக்கி பேசும் சூழலை இந்த கேது தந்துவிடுகின்றது. எப்பொழுதும் தங்களின் உரையாடலில் ஒரு விரக்தியான சூழலை நிலை நிறுத்திக்கொண்டே இருப்பதில் இந்த கேது பெரும்பங்கு வகிக்கின்றது. வருமானத் தில் தடை, குடும்பம் அமைவதில் சிக்கல், குடும்ப சொத்துகளில் சிக்கல் போன்றவற்றை மிக எளிதில் வசமாக்கிவிடுகின்றது. பத்து வார்த்தை பேசுகின்ற இடத்தில் ஓரிரு வார்த்தைகளுடன் இவர்களின் உரையாடலை முடித்துக் கொள்வார்கள்.

தங்களை பிறரிடம் இருந்து தனிமைப் படுத்திக்கொள்வதில் அலாதியான பிரியம் கொண்டவர்கள் இவர்கள்.

தனஸ்தானத்தில் இரண்டாம் வீட்டில் சனிபகவான் அமரும்பொழுது இவர்களின் உரையாடல்களில் விரும்பத்தகாத சில வார்த்தைகள் இடம்பெற்று விடுகின்றது. பலம் பெறாத சனி இரண்டில் அமரும் பொழுது வருமானத்திலும், தொழிலிலும், சில தடை களை உருவாக்குகின்றது. மற்றவர்கள்மீது சந்தேகப் படும் சூழலை இவர்களுக்கு அளிக்கின்றது.

இவர்களின் பூர்வீகத்தில் ஓர் வாய் பேச முடியாதவர்களோ அல்லது ஏதோ ஒரு ஊனமானவர்களோ இருந்து மடிந்து இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது.

காலாகாலத்திற்கும் மறக்கமுடியாத சில வார்த்தைகளை மிக எளிதில் மற்றவர்கள்மீது பிரயோகம் செய்து அதன்மூலம் தீரா பகையைத் தேடிக்கொள்வார்கள்.

குடும்பம் சார்ந்த வருமானத்திலும் இவர்கள் இந்நிலை அனுபவிக்கின்றார்கள்.

தொழிற்கல்வியின்மூலம் சிறப்பை அடைந் தாலும் குடும்ப வாழ்க்கையில் இவர்கள் சிறப்பு பெறுவதில்லை.

இரண்டாம் இடத்தில் அமையப்பெற்ற பாவ கிரகங்களின் தசைகளில்தான் இந்த பிரச்சினைகளின் தாக்கம் மிக அதிகமாக காணப்படுகின்றது. எனவே வாக்கு ஸ்தானத் தில் குடியேறிய பாவ கிரகங்களின் தசா புக்தி காலங்களில் அதற்குண்டான வழிபாடு களையும், பரிகாரங்களையும் செய்துகொண்டு சற்று அமைதி காப்பது பல இன்னலில் இருந்து உங்களை இடம் மாறச் செய்து உங்களை வாழவைக்கும்.

மாறாக ஸ்தானமாக விளங்குகின்ற இந்த இரண்டாம் பாவகத்தின் தசாபுக்தி காலங் களில் மரணத்திற்கு ஒப்பான கண்டங் களும் உருவாகி நம்மை சற்று கலங்கடிக் கவே செய்கின்றது. இதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிபாடுகளையும் இறை யின் பாதத்தை பற்றும் தன்னம்பிக்கையும் வைத்து பயணிக்க சிறப்பைக் காணலாம்.

செல்: 80563 79988