சுமார் 45 வயதுடைய ஒருவர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார்.

"25 வயதில் என் பெற்றோர் எனக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். திருமணம் முடிந்த சில மாதங்கள் முதலே, என்னுடன் சண்டை போட்டுக்கொண்டு அடிக்கடி அவள் பிறந்த வீட்டிற்குச் சென்றுவிடுவாள். மூன்று ஆண்டுகளில், அவள் எங்கள் வீட்டிலேயே தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துபோனாள்.

30 வயதில், இரண்டாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்தேன். எனது தாய்க்கும் மனைவிக் கும் ஒத்துப்போகவில்லை. நான் எனது தாய்க்கு ஆதரவாக இருப்பதாகக்கூறி, என் மனைவி என்னிடமும் சண்டை போடுவாள். இரண்டு ஆண்டுகள் சென்றன. இரண்டாவது மனைவி, எனது வீட்டிலேயே விஷம் குடித்து இறந்து போனாள். அதன்பிறகு தனிமையாகவே வாழ்ந்து வருகிறேன்.

dsd

Advertisment

ஜாதகம் பார்த்தபோது, லக்னத் தில் கேதுவும், 7-ஆமிடத்தில் ராகுவும் இருப்பது சர்ப்பதோஷம் என்று கூறி, பல கோவில்களில் பிரார்த்தனைகளையும், களத்திர தோஷப் பரிகாரம், சாந்தி முறைகளையும் செய்தால் தோஷம் நீங்கி, அடுத்து ஒரு திருமணம் முடிந்து, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமையும் என்றார்கள்.

அதன்படி அனைத்துப் பரிகாரங்களையும் செய்தேன். ஆனால் எந்தப் பலனும் இல்லை. எனக்குத் திருமணம் நடக்குமா? என் வாழ்வில் இந்த நிலைக்குக் காரணம் என்ன? நான் திருமணம் செய்த இரண்டு மனைவிகளும் இறந்ததற்கு காரணம் என்ன? எனக்கு நல்லவழி காட்டவேண்டும்'' என்றார்.

ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். அதில் அகத்தியர் எழுத்து வடிவில் பலன்கூறத் தொடங்கினார்.

"முற்பிறவியில் இவன் வசதியான குடும்பத்தில் பிறந்தான். பணபலம், ஆள்பலம் இருந்தது. தன்னை எதிர்ப்பவர்களை அடிப்பது, தன்னைவிட கீழான இன மக்களை கேவலமாகப் பேசுவது, அடிமைகளைப்போல் நினைப்பது, தான் ஆசைப்படும் பெண்களைத் தூக்கிவந்து, பலாத்காரம் செய்வது என அத்தனை பாவங்களையும் செய்தான்.

ஒரு தாயும் மகளும் அந்த ஊருக்குப் பிழைக்க வந்தார்கள். அந்த மகள் மாற்றுத் திறனாளி. ஆனால் பார்ப்பதற்கு அழகாக இருப்பாள். ஒருநாள் அந்தப் பெண்ணை இவன் பார்த்துவிட்டான். அவளை அனுபவிக்க வேண்டும் என்று ஆசை தோன்றியதும், தன் அடியாட்களிடம், எப்படியாவது தூக்கி வரவேண்டும் என்றான்.

ஒருநாள் அவள் தாய் ஏதோ வேலையாக வெளியூர் சென்றுவிட்டாள். இதனையறிந்த அவன் வேலையாட்கள், அன்றிரவு அந்தப் பெண்ணைத் தூக்கிக்கொண்டு, இவன் சொன்ன இடத்திற்கு வந்தார்கள். அவளைத் துன்புறுத்தி, மிருகம்போல் பலமுறை பலாத்காரம் செய்தான். அந்தப் பெண் அன்றிரவே இறந்தாள்.

அவள் இறக்கும்முன் மனம் நொந்து சாபமிட்டாள். "இனி எத்தனைப் பிறவியெடுத்தாலும், இவன் மணந்தவள் அவளே தன் வாழ்வை முடித்துக்கொண்டு இறந்து போகவேண்டும். நான் இறக் கும் இந்த இடத்தில் வீட்டுகட்டி எந்த குடும்பமும் நிம்மதியாக வசிக்கக்கூடாது' என்று பலவிதமான சாபங்களை விட்டு இறந் தாள்.

அந்தப் பெண்விட்ட சாபம் இப்பிறவியில் விதியாக மாறி இவன் வாழ்க்கையில் விளையாடுகிறது. இந்தப் பிறவியில் மனைவி, குடும்பம் என்று வாழவேண்டுமானால், கீழ்சாதியைச் சேர்ந்த ஒரு மாற்றுத்திறனா ளிப் பெண்ணைத் திருமணம் செய்து, அவளை மதித்து, அவள் சொல்வதைச் செய்து மகிழ்ச்சியாக வாழவைக்கவேண்டும்.

முற்பிறவியில் அந்தப் பெண்ணை எந்த இடத்தில் பலாத்காரம் செய்து கொன்றானோ, அந்த பூர்வீக இடத்தில்தான் இப்போது இவன் வீடுகட்டி வசித்துவருகி றான். அந்தப் பெண்ணின் ஆத்மா இன்னும் அந்த இடத்தில் கோபமாக சுற்றுகிறது. இவன் இந்த வீட்டில் வசிக்கக்கூடாது. அந்த ஆத்மாவின் கோபம் மனைவியை மரணமடையச் செய்யும். இவள் மணம்புரிந்த இரண்டு மனைவிகளும் நிம்மதியில்லாமல் வாழ்ந்து, இறந்ததற்கு இதுதான் காரணம். இவனை அந்த வீட்டைவிட்டு வெளியேறி வேறிடம் சென்று வசிக்கச்சொல். இவன் பாவ- சாபத்திற்கு எந்தப் பரிகாரமும் பலன் தராது'' என்றார்.

"அகத்தியர் கூறியபடியே மாற்றுத் திறனாளிப் பெண்ணை மணந்து கொள்கிறேன். கீழ் சாதியில் பிறந்த பெண் ணைத்தான் மணந்துகொள்ள வேண்டுமா?'' என்று கேட்டார்.

அதற்கு ஓலையில் அகத்தியர். "இவனுக்கு சாதி வேண்டுமா? சம்சாரம் வேண்டுமா? முற்பிறவியில் அந்தப் பெண்ணை சாதி பார்த்துதான் அனுபவித்தானா? சாதி மனிதர் களால் உருவாக்கப்பட்டது. சம்சாரம், குழந்தைகள் விதியால் நிர்ணயிக்கப்பட்டது. இவன் குடும்பமாக வாழவேண்டும் என்றால், நான் கூறியபடி செயல்படச் சொல்'' என்று கூறிவிட்டு ஓலையிலிருந்து மறைந்தார்.

"அவ்வாறே செய்கிறேன்'' என்று கூறி விட்டு விடைபெற்றுச் சென்றார். ஒரு இடத்திலோ அல்லது வீட்டிலோ துர்மரணம் நடந்திருந்தால், அந்த இடத்தில் வசிப்பவர் களை அந்த ஆத்மா பாதிப்படையச் செய்யு மென்று நானும் அறிந்துகொண்டேன்.

செல்: 99441 13267