நமது தமிழ் பஞ்சாங்கப்படி, 60 வருடங்கள் உள்ளது. இப்போது பிறக்கப் போகும் வருடத்தின் பெயர் விஸ்வாஸு ஆகும்.
விஸ்வாசு வருடத்தின் செய்யுள்
விஸ்வா வருடம் வெள்ளாண்மையேறும்
பசுமாடு பலிக்கும்- சிசு நாசம்
மற்றயரோ வாழ்வார் கண் மாதவங்கண்
மீறுமே
உற்றுலகினல்ல மழையுண்டு
என்று கூறப்பட்டுள்ளது.
தமிழில் 12 மாதங்கள் இருந்தாலும், சித்திரையை தமிழ் வருடப் பிறப்பு என்று ஏன் வைத்துள்ளார்கள். ஏனெனில் சித்திரை மாதம்தான் சூரியன் மேஷ ராசியில் உச்சமடைவார். காலபுருஷ தத்துவப்படி, மேஷம்தான் முதல் வீடாகும். எனவே முதல் வீடான மேஷத்தில், ராஜ கிரகமான சூரியன் உச்சமடையும் மாதமே தமிழ் வருடப் பிறப்பு என்று அழைக்கப்படுகிறது.
இதில் இன்னொரு விசேஷமும் உள்ளது. எப்
நமது தமிழ் பஞ்சாங்கப்படி, 60 வருடங்கள் உள்ளது. இப்போது பிறக்கப் போகும் வருடத்தின் பெயர் விஸ்வாஸு ஆகும்.
விஸ்வாசு வருடத்தின் செய்யுள்
விஸ்வா வருடம் வெள்ளாண்மையேறும்
பசுமாடு பலிக்கும்- சிசு நாசம்
மற்றயரோ வாழ்வார் கண் மாதவங்கண்
மீறுமே
உற்றுலகினல்ல மழையுண்டு
என்று கூறப்பட்டுள்ளது.
தமிழில் 12 மாதங்கள் இருந்தாலும், சித்திரையை தமிழ் வருடப் பிறப்பு என்று ஏன் வைத்துள்ளார்கள். ஏனெனில் சித்திரை மாதம்தான் சூரியன் மேஷ ராசியில் உச்சமடைவார். காலபுருஷ தத்துவப்படி, மேஷம்தான் முதல் வீடாகும். எனவே முதல் வீடான மேஷத்தில், ராஜ கிரகமான சூரியன் உச்சமடையும் மாதமே தமிழ் வருடப் பிறப்பு என்று அழைக்கப்படுகிறது.
இதில் இன்னொரு விசேஷமும் உள்ளது. எப்போதும் கிரக கோட்சாரப்படி சூரியன் கூடவேதான் சுக்கிரனும், புதனும் சுற்றுவர். மிஞ்சிப்போனால் கட்டங்கள் முன்னே, பின்னேதான் இந்த மூன்று கிரகங்களும் இருப்பர். இந்த மூன்றும் அருகருகே இருந்தால்தான் அது உண்மை யான ராசிக் கட்டமாகும்.
இதில் அனேகமாக சூரியன் உச்சம் கண்டிப்பாக உண்டுதான். மற்றபடி சுக்கிரன் உச்சமடைவதும், புதன் நீச பங்கமாகியிருப்பதும் அனேகமாக நடக்கும். எனவேதான் இத்தனை அருமையான கோட்சாரம் கொண்ட நாளை, தமிழ் வருடப் பிறப்பு என்கின்றனர்.
தமிழ் வருடப் பிறப்பு அன்று, நீராடி பூஜைசெய்து, கோவில் சென்று வழிபடுவர். மேலும் விஷுக்கனி காண்பது என்பது மலையாளம் பேசுவோர் மட்டுமல்ல, தமிழ்க் குடும்பங்களிலும் கடைபிடிக்கப்படும் ஒன்றாகும்.
முதல் நாள் இரவே, பூஜையறையில், பெரிய தாம்பாளத்தில், நிறைய பழங்கள், பூக்கள், மஞ்சள் பூக்கள், கண்ணாடி, தங்க ஆபரணம், வெள்ளிப் பொருட்கள், மஞ்சள், குங்குமம் என மங்கல பொருட்களை வைத்துவிடுவர். சித்திரை வருடப் பிறப்பு காலையில் இந்த மங்கல பொருட்களில் கண் விழிப்பர். இது வருடம் முழுவதும் மிக நன்மை தரும். எனவே இதுவரையில் இவ்விதம் பண்ணாதவர்களும், இந்த வருடம் முதல் இவ்வாறு கொண்டாடுங்கள். நல்ல செழிப்பைக் காணலாம்.
சித்திரை வருடப் பிறப்பிற்கு, அறுசுவை விருந்து படைத்து, பின் உண்டு மகிழ்வர். பாயசம், பருப்பு வடை தயாரிப்பர். இதோடு மாங்காய் தொக்கும் செய்வர்.
இதுவல்லாமல் வேப்பம்பூ பச்சடி என்ற ஒன்றை, இந்த சித்திரை வருட பிறப்பு ஸ்பெஷல் உணவாக தயாரிப்பர்.
வேப்பம் பூ பச்சடியும், மகா பெரியவரும் ஒரு சித்திரை தமிழ் வருட பிறப்பு தினத்தில், பக்தர்கள், பெரியவருக்கு வேப்பம் பூ, புளி, வெல்லம் என சமர்ப் பித்தார்கள். உடனே பெரியவர், வேப்பம் பூ பச்சடி எப்படி செய்கிறீர்கள் எனக் கேட்டார். ஆளாளுக்கு ஒன்றை சொன்னார்கள்.
பெரியவர், இந்த மூன்று பொருட்கள் மட்டும் போதாது. கூடவே தேன், நெய் சேர்க்கணும். பக்குவமாக செய்தால், பச்சடி சுவையாக இருக்கும். இவ்விதம் செய்யப்பட்ட பச்சடியை பிறருக்கு கொடுக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால் அவர்கள் வசியமாகி விடுவார்கள்.
முதலில் அம்பாளுக்கு நைவேத்தியம். அம்பாள் வசியமாகிவிடுவாள். அடுத்து கணவனுக்கு கொடுக்கவேண்டும். மனைவி என்ன சொன்னாலும் சரி, சரி என தலையாட்டுவார். பின் வீட்டில் பணிபுரிபவர்களுக்கு கொடுக்கவேண்டும். அவர்கள் முணுமுணுக்காமல் வேலை செய்வார்கள்.
இவ்விதம் வேப்பம் பூ பச்சடியைப் பற்றி பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த வேப்பம் பூ பச்சடியை, சித்திரை வருடப் பிறப்பு பண்டிகைக்கு மட்டும்தான் தயாரிப்போம். எனவே இதனை தயாரித்து, அனைவரின் அன்பையும் பெறுவோம்..
வருட பிறப்பு அன்று, இனிப்பு, புளிப்பு, கசப்பு என அனைத்து ருசிகளுடன் விருந்து சாப்பிடவேண்டும். வருடத்தில் எல்லாம் கலந்தடித்துதான் நடக்கும். அதனையும் பக்குவமாக கைகொண்டு, நிறைவாக்க வேண்டும் என நமது பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள்.
2025 சித்திரை-1, ஏப்ரல் 14 அன்று தமிழ் வருட பிறப்பை கொண்டாடி மகிழுங்கள்.
செல்: 91 73056 04432