சூரிய தசை
இது ஆறு வருடங்கள் கொண்டது. சூரியன் என்றவுடன் உஷ்ணம், கண் என இவை முதலில் ஞாபகத்துக்கு வரும். மேலும் சூரியன் வலது கண், எலும்பு, சுரம், வயிறு, இதயம், தலை, படபடப்பு, தோல் நோய், பித்தம், தலை வழுக்கை, ஜாதகர் பொலிவற்று போதல் என இம்மாதிரி நோய்களின் காரணமாவார். சூரியனின் தானியம் கோதுமை. மேலும் தனியா, மருந்துச் செடிகள், மிளகாய், வெங்காயம், புகையிலை, மிளகு, இஞ்சி, சுக்கு, கத்தரிக்காய், பூண்டு, கேரட், உருளைக்கிழங்கு, ஆரஞ்சு பழம், வேர்கடலை, பெருங்காயம், ஏலக்காய், பாதாம் பருப்பு, ஓமம், மசாலாப்பட்டை, ஜாதிக்காய், தேங்காய் என இவற்றைக் குறிப்பார்.
சூரிய தசை- சூரிய புக்தி
இந்நேரத்தில் ஜாதகர்கள் உடம்பு அதிக உஷ்ணம் ஆனதுபோல் உணர்வர். ஒருவிதமான ஜுரம் அடிப்பதுபோல் இருக்கும். உதடுகள் வறட்சியாகிவிடும். வலது கண் பார்வை பாதிப்பு ஏற்படும். ஒருசிலருக்கு எலும்பு முறியும் அபாயமும் உண்டு. இக்கால கட்டத்தில், கோதுமை சப்பாத்தி, கோதுமை ரவை கிச்சடி என இவற்றை சாப்பிடலாம். சூரிய நமஸ்காரம் மிக நன்று.
சூரிய தசை- சந்திர புக்தி
இந்த பொழுதில், வயிற்றில் சூட்டுவலி ஏற்படும். இடது கண்ணில் சூட்டினால் தொல்லை உண்டாகும். உடலில் தசை பிடித்துக்கொள்ளும். சிறுநீர் வெளியேறுவது சிரமமாக உணர்வர். இதற்கு நாமக்கட்டியை உரைத்து, தொப்புளில் பூசுவதும், செவ்விளநீர் குடிப்பதும் உண்டு. கொப்புளம் ஏற்படும். மிகச் சிலருக்கு ரத்தம் உறைதலில் ஏதேனும் பிரச்சினை ஏற்படும். சிலருக்கு மார்பில் சனி உறைந்து நிற்கும். சூரியனின் தானியம் கோதுமை, சந்திரனின் தானியம் அரிசி. கோதுமையை வறுத்து, அரிசி நொய்யுடன் கஞ்சி வைத்துக் குடிக்கலாம். கோதுமை, அரிசியை முடிந்தளவு தானம் செய்யலாம். சீர்காழி சென்று சிவனை வணங்கவும். அருகிலுள்ள சிவன் கோவில் அபிஷேகத்துக்கு பால், இளநீர் வ
சூரிய தசை
இது ஆறு வருடங்கள் கொண்டது. சூரியன் என்றவுடன் உஷ்ணம், கண் என இவை முதலில் ஞாபகத்துக்கு வரும். மேலும் சூரியன் வலது கண், எலும்பு, சுரம், வயிறு, இதயம், தலை, படபடப்பு, தோல் நோய், பித்தம், தலை வழுக்கை, ஜாதகர் பொலிவற்று போதல் என இம்மாதிரி நோய்களின் காரணமாவார். சூரியனின் தானியம் கோதுமை. மேலும் தனியா, மருந்துச் செடிகள், மிளகாய், வெங்காயம், புகையிலை, மிளகு, இஞ்சி, சுக்கு, கத்தரிக்காய், பூண்டு, கேரட், உருளைக்கிழங்கு, ஆரஞ்சு பழம், வேர்கடலை, பெருங்காயம், ஏலக்காய், பாதாம் பருப்பு, ஓமம், மசாலாப்பட்டை, ஜாதிக்காய், தேங்காய் என இவற்றைக் குறிப்பார்.
சூரிய தசை- சூரிய புக்தி
இந்நேரத்தில் ஜாதகர்கள் உடம்பு அதிக உஷ்ணம் ஆனதுபோல் உணர்வர். ஒருவிதமான ஜுரம் அடிப்பதுபோல் இருக்கும். உதடுகள் வறட்சியாகிவிடும். வலது கண் பார்வை பாதிப்பு ஏற்படும். ஒருசிலருக்கு எலும்பு முறியும் அபாயமும் உண்டு. இக்கால கட்டத்தில், கோதுமை சப்பாத்தி, கோதுமை ரவை கிச்சடி என இவற்றை சாப்பிடலாம். சூரிய நமஸ்காரம் மிக நன்று.
சூரிய தசை- சந்திர புக்தி
இந்த பொழுதில், வயிற்றில் சூட்டுவலி ஏற்படும். இடது கண்ணில் சூட்டினால் தொல்லை உண்டாகும். உடலில் தசை பிடித்துக்கொள்ளும். சிறுநீர் வெளியேறுவது சிரமமாக உணர்வர். இதற்கு நாமக்கட்டியை உரைத்து, தொப்புளில் பூசுவதும், செவ்விளநீர் குடிப்பதும் உண்டு. கொப்புளம் ஏற்படும். மிகச் சிலருக்கு ரத்தம் உறைதலில் ஏதேனும் பிரச்சினை ஏற்படும். சிலருக்கு மார்பில் சனி உறைந்து நிற்கும். சூரியனின் தானியம் கோதுமை, சந்திரனின் தானியம் அரிசி. கோதுமையை வறுத்து, அரிசி நொய்யுடன் கஞ்சி வைத்துக் குடிக்கலாம். கோதுமை, அரிசியை முடிந்தளவு தானம் செய்யலாம். சீர்காழி சென்று சிவனை வணங்கவும். அருகிலுள்ள சிவன் கோவில் அபிஷேகத்துக்கு பால், இளநீர் வாங்கிக்கொடுக்கவும். உங்கள் தந்தை வயது உள்ளவர்களுக்கு குடிப்பதற்கு இனிப்பு பானம் வாங்கிகொடுங்கள்.
சூரிய தசை- செவ்வாய் புக்தி
இந்த இரண்டு கிரகங்களுமே உஷ்ண, பித்த கிரகங்கள். இந்த புக்தி ஆரம்பித்தவுடன் ஜாதகர்களுக்கு, ஊரிலுள்ள அத்தனை ஜுரமும் வந்து தாக்கும். அதன் பெயர்தான் டெங்கு, மலேரியா என வேறுபடும். உஷ்ணக்கட்டி, தூக்கமின்மை, கண்ணைச் சுற்றி கறுப்புத் திட்டுகள், கண்கள் சிவப்பது, ரத்தக் கொதிப்பு என ஏதோ ஒன்று பாடாய்படுத்தும். சிலருக்கு முளைச்சுரம் அல்லது தலையில் காயம் ஏற்படக்கூடும். பற்கள் ஆட்டம் காணும். வெகு சிலர் மார்பு இறுக்கி பிடிப்பதுபோல் உணர்வர். சிலருக்கு வலிப்பு நோய் ஏற்படக்கூடும். தலைவலி வரும். சூரியன் கோதுமையைக் குறிக்க, செவ்வாய் துவரையை குறிப்பார். கோதுமையையும், துவரையையும் உடைத்து, நிறைய காய்கறி சேர்த்து கிச்சடியாக செய்து சாப்பிடவும். திருவண்ணா மலை, அண்ணாமலையாரை வணங்குவது மேன்மை தரும். அருகிலுள்ள சிவன் கோவிலில் விளக்கேற்றுவதும் துவரை தானமும் நன்று. இளைஞர்களுக்கு உடற்பயிற்சி கருவிகள் தானம் நல்லது.
சூரிய தசை- ராகு புக்தி
இது ஒரு கிரகண நிலை கால கட்டமாக அமையும். இப்போது ஏற்படும் நோயின் தன்மையை மருத்துவரால் யூகிக்க முடியாமல் போகும். அடிக்கடி மயக்கம் ஏற்படும். இதய துடிப்பு தாறுமாறாக மாறும். முதுகுத் தண்டில் பிரச்சினை உண்டாகும். ரத்தம் கெட்டுப்போகும் வாய்ப்புண்டு. எது எப்படி இருப்பினும், ஜாதகருக்கு நோய் முந்திய பிறகே, மருத்துவர் இன்ன நோய் வந்துள்ளது என்ற முடிவுக்கு வருவார். ராகுபகவான் நோயை மறைத்துவைத்து ஆட்டம் காட்டுவார். சூரியன் கோதுமையை குறிப்பார். ராகு உளுந்தைக் குறிப்பார். கோதுமையை சப்பாத்தியாகவும், உளுந்தை வடையாகவும் தயாரித்து கொடுப்பதோடு, விநியோகமும் நன்று. திருநாகேஸ்வரம் சென்று வணங்கலாம். அருகிலுள்ள கோவிலில், ஞாயிற்றுக்கிழமைகளில், ராகுபகவானுக்கு தீபமேற்றி வழிபடலாம். இஸ்லாமிய பெருமக்கள் யாருக்காவது மின்சார விளக்கு வாங்கிகொடுங்கள்.
சூரிய தசை- குரு புக்தி
சூரியன் இதயத்தையும், குரு கொழுப்பையும் குறிப்பார். எனவே இந்த தசாபுக்தி காலத்தில் இதய வீக்கம் ஏற்படும். ரத்த ஓட்டம் தடைப்படும். கொப்புளம், கட்டிகள் தோன்றும். மண்ணீரல் கோளாறு ஏற்படும் வாய்ப்புண்டு. சிலருக்கு தலையில் கட்டி புறப்பட்டு, வெகுவலி தரும் அல்லது கண்ணில் கட்டி கிளம்பும். பொதுவாக உடம்பு பெருத்துவிடும். மருத்துவர் உங்களுக்கு கொழுப்பு அதிகமாகிவிட்டது என்பார். சூரியன் கோதுமையைக் குறிக்க, குரு கொண்டைக் கடலையைக் குறிப்பார். எனவே கோதுமை சப்பாத்தியும், கடலை சப்ஜியும் சாப்பிடவும், விநியோகம் செய்யவும் ஏற்றது. ஞாயிற்றுக்கிழமைகளில் கபாலீஸ்வரர் கோவில்சென்று வழிபடுவது நல்லது. அருகிலுள்ள சிவன் கோவிலில் சிவனுக்கு தீபமேற்றி வழிபடவும். ஆசிரியர் வேலை பார்ப்பவர்களுக்கு அவர்கள் மதம் சம்பந்தமான விளக்கு வாங்கிக் கொடுங்கள்.
சூரிய தசை- சனி புக்தி
அதிக காய்ச்சல் ஏற்படும். சிலருக்கு இது பக்கவாதத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். விஷம் அலர்ஜி சம்பந்தமான கோளாறு ஏற்படும். தோல் நோய் அதிகரிக்கும். மூட்டுவலி வரும். இப்போது வரும் நோய், எளிதில் நீங்காமல் நாட்பட்ட நோயாக மாறும் ஈஸினோ- பீலியா போன்ற நோய்கள் இந்த நேரத்தில் தாக்கும். அதிக சளித்தொல்லை ஏற்படும். சூரியனும், சனியும் எப்போதும் பகை கிரகங்கள். எனவே இந்த தசை புக்தியில் வரும் நோய்கள் சீக்கிரமாக குணமாகாது. நோய் இழுத்துக்கொண்டே போகும். எனவே இக்கால கட்டத்தில் சிறு நோய் அறிகுறி தோன்றினாலும் உடனே அதற்குரிய வைத்தியத்தை மேற்கொள்ள வேண்டும். சூரியனுக்கு கோதுமை சனிக்கு எள் என்பது தெரிந்திருக்கும். சூரியனும், சனியும் பகை என்பதால், இவை சம்பந்தமான உணவுகளை ஒரே நேரத்தில் சேர்த்து சாப்பிட வேண்டாம். ஒருநாள் கோதுமை ரொட்டியும் மறுநாள் எள் உணவுமாக எடுத்துக்கொள்ள வும். திருவாரூர் சென்று வழிபடவும். அருகிலுள்ள கோவிலில், சனிக் கிழமையன்று சூரிய பகவானுக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபடவும். கீழ்நிலை தொழிலாளருக்கு, டார்ச் லைட் வாங்கி கொடுங்கள்.
சூரிய தசை- புதன் புக்தி
முதுகுவலி அதிகம் இருக்கும். நரம்புத் தளர்ச்சி ஏற்படும். குடல் புண் வரும். வாய்ப்புண் ஏற்படும். ஃபுட் பாய்சன் ஏற்பட்டு, வாந்தி, பேதி ஏற்படும். குழந்தை களுக்கு வயிற்றில் பூச்சி தொல்லை தோன்றும். பெரியவர்கள் அஜிர்ண கோளாறு ஏற்பட்டு, உப்பிசமாக உணர்வர். அடிவயிற்றில் வலி உண்டாகும் குடல், சம்பந்தமாக மருத்துவரை நாடக்கூடும். புதன் வாயுக் கோளாறை ஏற்படுத்துவார். எனவே இந்த தசாபுக்தி காலத்தில் வயிறு சதா கடாமுடா என்றிருக்கும். சூரியன் கோதுமையையும் புதன் பச்சைப் பயிறையும் குறிப்பதால், கோதுமை சப்பாத்தியும், பச்சையப் பயிறு சப்ஜியும் தயாரித்து, குடும்பத்துக்கும், தெரிந்தவர்களுக்கும் விநியோகம் செய்யலாம். சென்னை திருவான்மியூர் மருந்திஸ்வரர் ஆலயம் சென்று வழிபடலாம். அருகில் உள்ள ஆலயத்தில், சிவனுக்கு வில்வ தளம் கொண்டு வணங்கலாம். சிறு குழந்தைகளுக்கு விளக்கு எரியும் பென்சில் டப்பா வாங்கி கொடுங்கள்.
சூரிய தசை- கேது புக்தி
இந்த காலக்கட்டமும் ஒருவித கிரகண நிலையில் இருக்கும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், ஜாதகருக்கு ஒரு நோய் இருக்கும் அறிகுறியோ, வலியோ, வேதனையோ கொஞ்சமும் தெரியாது. திடீரென்று ஒருநாள் புயல்போல் தாக்கும். அப்போதுதான், அடடா, இவருக்கு உடம்பில் இவ்வளவு கோளாறு இருந்திருக்கிறது. ஒன்றுமே தெரியவில்லையே என்பர். இதய நோய்கள், இதய படபடப்பு, மயக்கம், இதயத்தில் அழுத்தம், உணர்வு இழத்தல், ரத்தக் குழாய் உறைதல், கண் நோய் என மிக வலுவான நோய்கள் ஜாதகரை தாக்கி, சுற்றி இருப்பவர்களை மிரளச் செய்யும். சூரியன் கோதுமையையும், கேது கொள்ளையும் குறிப்பார். கோதுமை ரவை கிச்சடியும், கொள்ளுத் துவையலும் தயாரித்து நீங்களும் சாப்பிட்டு, விநியோகமும் செய்யுங்கள். கேது பலவகைகளை குறிப்பவர். அதனால், கோதுமை ரவையுடன் நிறைய காய்கறிகள் சேர்த்துக்கொள்ளுங்கள். திருவண்ணாமலை செந்தூர விநாயகரை வணங்குங்கள். அருகிலுள்ள விநாயகரை, விளக்கேற்றி வணங்கவும். சன்யாசிகளுக்கு உணவு வாங்கிகொடுங்கள்.
சூரிய தசை- சுக்கிர புக்தி
சூரியன் உஷ்ணத்தைக் குறிக்க, சுக்கிரன் கர்ப்பபையை குறிப்பார். அதனால் பெண்களின் கர்ப்பபை, அதிக சூட்டினால் கோளாறுக்கு உள்ளாகும். அல்லது அடிவயிறு, சூட்டினால் வலிக்க ஆரம்பிக்கும். சிலருக்கு அதிக சூடு ஏற்பட்டு, சிறுநீர் பிரிவது சிரமத்துக்குள்ளாகும். முகம் நீர் வற்றி, வயதான தோற்றம் கொண்டுவரும். கண்கள் எரியும். இந்நேரத்தில் குழந்தைகள், வயிறு வலிக்கிறது என அழுவர்.
அப்போது கொஞ்சம் விளக்கெண்ணெயை, தொப்புள் பக்கம் தடவ, வலி குறைந்து விடும். சூரியனின் கோதுமையையும், சுக்கிரனின் சர்க்கரையையும் சேர்த்து அல்வா கொடுங்கள். அப்போதைய காலத்தில், வயிறு வலித்தால், கொஞ்சம் அல்வா சாப்பிடும் வழக்கம் உண்டு. இப்போது அதெல்லாம் செவி வழி செய்தி ஆகிவிட்டது. எனவே சூரிய தசை- சுக்கிர புக்தியில், அல்வா வாங்கி, வீட்டில் உள்ளவருக்கும், தெரிந்தவர்களுக்கும் கொடுங்கள். இராமேஸ்வரம் சென்று, வணங்கலாம். அருகிலுள்ள சிவனுக்கு கல்கண்டு கொண்டு வணங்கவும். முடிஞ்ச போதெல்லாம் அல்வா கொடுங்கள்.
சூரிய தசை ஆரம்பித்தவுடன் சிவ வழிபாடு நல்லது. சிவ பில்வரஷ்டகம் கூறுவது சிறப்பு. கோளாறு பதிகம் பாராயணம் செய்வது நல்லது.
செல்: 94449 61845