சுக்கிர தசையின் காலம் 24 ஆண்டுகள். பொதுவாக, சுக்கிர தசையை அனைவரும் கொண்டாடுவர். ஆனால் எல்லாருக்குமே, சுக்கிர தசை ஓஹோ என்றிருக்கும் என்று கூற இயலாது. சுக்கிரன் நின்ற இடம், சாரம், பார்வை, சேர்க்கை என இன்னபிற கிரக அமைப்புகள் அவரின் பலாபலனை நிர்ணயிக்கும்.
சுக்கிரனின் தானியம் மொச்சை. மேலும், சுக்கிரன், கடுக்காய், ஆப்பிள், கரும்புச் சாறு, மாம்பழம், புளி, தேங்காய், மாங்காய், இனிப்புகள், நெல்லிக்காய், சர்க்கரை, பழங்கள், வெல்வம், கற்கண்டு, தக்காளி, இனிப்பு பானங் கள், திராட்சை என இவற்றையும் குறிப்பார்.
சுக்கிரன் பொதுவாக சிறுநீரகம், கர்ப்பைபை, முகம் சிறுநீரகம் இவற்றைக் குறிப்பார். நிறைய ஜாதகர்கள் சுக்கிர தசை, சுக்கிர புக்தியில், நீரழிவு நோய் தொடங்குவதை உணர்ந்திருப்பீர்கள். நிறைய கெட்ட பழக்கங்களும் ஒட்டிக் கொள்ளும். முக்கியமாக, மது, போதை, புகை வழக்கம் ஆரம்பிக்கும். மேலும் கண் பார்வை குறைபாடு ஏற்பட்டாலும், அதற்கு கவர்ச்சியான கண்ணாடி அணிந்துகொள்வீர்கள். இது சுக்கிர தசை, சுக்கிர புக்தியில் தொடங்கும். மகாலட்சுமியை வணங்கவும்.
சுக்கிர தசை- சூரிய புக்தி
இந்த இரண்டு கிரகங்களுமே, கண்களை குறிக்கும். ஆக இந்த கால கட்டத்தில், கண்களில், நீர் அழுத்தம் ஏற்பட்டு, வலி ஏற்படும். மேலும் முக்கில் எரிச்சல், கண்களை சுற்றி கரு வளையங்கள், உதடுகள் உஷ்ணத்தால் வறண்டு போதல் என இவை அனைத்தும் ஒன்று மாற்றி ஒன்றாக வரும். சில பெண்களுக்கு கர்ப்பைபை, உஷ்ணத்தால் வறண்டு காணப்படுவதாக மருத்துவர் கூறுவர். கன்னம் சும்மா பண்ணு மாதி
சுக்கிர தசையின் காலம் 24 ஆண்டுகள். பொதுவாக, சுக்கிர தசையை அனைவரும் கொண்டாடுவர். ஆனால் எல்லாருக்குமே, சுக்கிர தசை ஓஹோ என்றிருக்கும் என்று கூற இயலாது. சுக்கிரன் நின்ற இடம், சாரம், பார்வை, சேர்க்கை என இன்னபிற கிரக அமைப்புகள் அவரின் பலாபலனை நிர்ணயிக்கும்.
சுக்கிரனின் தானியம் மொச்சை. மேலும், சுக்கிரன், கடுக்காய், ஆப்பிள், கரும்புச் சாறு, மாம்பழம், புளி, தேங்காய், மாங்காய், இனிப்புகள், நெல்லிக்காய், சர்க்கரை, பழங்கள், வெல்வம், கற்கண்டு, தக்காளி, இனிப்பு பானங் கள், திராட்சை என இவற்றையும் குறிப்பார்.
சுக்கிரன் பொதுவாக சிறுநீரகம், கர்ப்பைபை, முகம் சிறுநீரகம் இவற்றைக் குறிப்பார். நிறைய ஜாதகர்கள் சுக்கிர தசை, சுக்கிர புக்தியில், நீரழிவு நோய் தொடங்குவதை உணர்ந்திருப்பீர்கள். நிறைய கெட்ட பழக்கங்களும் ஒட்டிக் கொள்ளும். முக்கியமாக, மது, போதை, புகை வழக்கம் ஆரம்பிக்கும். மேலும் கண் பார்வை குறைபாடு ஏற்பட்டாலும், அதற்கு கவர்ச்சியான கண்ணாடி அணிந்துகொள்வீர்கள். இது சுக்கிர தசை, சுக்கிர புக்தியில் தொடங்கும். மகாலட்சுமியை வணங்கவும்.
சுக்கிர தசை- சூரிய புக்தி
இந்த இரண்டு கிரகங்களுமே, கண்களை குறிக்கும். ஆக இந்த கால கட்டத்தில், கண்களில், நீர் அழுத்தம் ஏற்பட்டு, வலி ஏற்படும். மேலும் முக்கில் எரிச்சல், கண்களை சுற்றி கரு வளையங்கள், உதடுகள் உஷ்ணத்தால் வறண்டு போதல் என இவை அனைத்தும் ஒன்று மாற்றி ஒன்றாக வரும். சில பெண்களுக்கு கர்ப்பைபை, உஷ்ணத்தால் வறண்டு காணப்படுவதாக மருத்துவர் கூறுவர். கன்னம் சும்மா பண்ணு மாதிரியில்லாமல், டொக்கு விழுந்துவிடும். சுக்கிரனின் தானியம் மொச்சை. சூரியனின் தானியம் கோதுமை. எனவே கோதுமையை சப்பாத்தியாகவும், மொச்சையை, சப்ஜியாகவும் செய்து சாப்பிடலாம். பிறருக்கும் கொடுக்கலாம். உப்பிலியப்பனை தரிசிப்பது நல்லது. அருகிலுள்ள பெருமாள் கோவிலில், மகாலட்சுமி தாயாருக்கு நெய் விளக்கு ஏற்றவும்.
அலங்கார விளக்கு வாங்கி கொடுக்கலாம்.
சுக்கிர தசை- சந்திர புக்தி
கண்ணிலிருந்து நீர் வழிந்துகொண்டே இருக்கும். முகம் நீர் கோர்த்து, வீங்கிவிடும். சிலருக்கு சிறுநீரகம் நீர் பாதிப்பால் வேதனை கொடுக்கும். பெண்களுக்கு கர்ப்பபையில், நீர்க்கட்டி பெரிதாக இருப்பதாக மருத்துவர் கூறுவர். சிறுநீர் கட்டுப்பாடில்லாமல் பிரியும். நிறைய ஜாதகர்கள், நீரிழிவு நோய் இருப்பதை, இந்த கால நேரத்தில் மருத்துவரி டம் சென்று, சோதனை செய்து உறுதிசெய்வர். சுக்கிரன் மொச்சையைக் குறிக்க, சந்திரன் அரிசியை குறிப்பார். ஆக சாதமும், அதற்கு மொச்சைக் குழம்பும் வைத்து சாப்பிடவும்.
பிறருக்கும் கொடுக்கவும். பௌர்ணமி விரதமிருந்து, இஷ்ட அம்பாளை சேவிக்க வும். பழச்சாறு தானம் நல்லது.
சுக்கிர தசை- செவ்வாய் புக்தி
இந்த புக்தி ஆரம்பித்தவுடன் பல் வலி வரக்கூடும். மூட்டுகளில், நீர் கோர்த்து, மூட்டுகள் வீங்கி வலி எடுக்கும். சிறுநீரகம் அல்லது கர்ப்பைபைக்குச் செல்லும், ரத்த நாளங்கள் தகராறு செய்யும். சிலருக்கு நெஞ்சில் நீர் கோர்த்து இம்சை தரும். பெண்களுக்கு அதிக உஷ்ணத்தால் கர்ப்பபையில் அதிக வெள்ளைபடுதல் அல்லது வீட்டு விலக்கு சமயத்தில் அதீத ரத்தப்போக்கு ஏற்படும். சுக்கிரன் மொச்சையைக் குறிக்க, செவ்வாய் துவரையைக் குறிப்பார். மொச்சையை தொடுகறியாக செய்து, துவரம் பருப்பை சாம்பாராக செய்து, குடும்பத்தினருக்கும், தெரிந்தவர்களுக்கும் கொடுக்கவும் அல்லது நிறைய காய்கறிகளுடன் இதனைச் சேர்த்து, கலவைக் குழம்பாக வைத்துவிடுங்கள். பழமுதிர்ச்சோலை முருகனை வழிபட நல்லது. அருகிலுஉள்ள வள்ளி, தெய்வானை சமேத முருகரை விளக்கேற்றி வணங்கவும். செடிகள் வாங்கி கொடுக்கவும். அல்லது சிவப்பு நிற பழங்கள் தானம் உசிதம்.
சுக்கிர தசை- ராகு புக்தி இக்கால கட்டம், அனேகருக்கு சிறுநீர் இன்ஃபெக்ஷன் எனும் அலர்ஜி நோய் பீடிக்கும். முகத்தில் கருப்பு தேமல் திட்டு, திட்டாக பரவும். பெண்களுக்கு கர்ப்பைபை, ஏதோ ஒரு காரணத்தால் பெருத்து வீங்கி விடும். இது கர்ப்பத்தினால் அல்லாமல், கட்டி, அலர்ஜி, நரம்பு வீக்கம் என வேறு காரண மாக இருக்கும். இந்த நேரத்தில் வரும் நோய்கள், ஜாதகருக்கு அவமானம் தரும். மிகச் சிலர் பால்வினை நோயால் துன்பம் கொள்வர்.
சுக்கிரன் மொச்சையைக் குறிக்க, ராகு உளுந்தைக் குறிப்பார். எனவே மொச்சை சுண்டலும், உளுந்து வடையும் எடுத்துக் கொள்ளலாம். இதனை முஸ்லீம் நண்பர் களுக்கு கொடுத்து, பகிர்ந்து உண்ணுங்கள். பட்டீஸ்வரம் துர்க்கையை வணங்கவும். அருகிலுள்ள துர்க்கைக்கு எலுமிச்சை மாலை காணிக்கை செலுத்தவும். பிற மதத் தினருக்கு, பழங்கள் வாங்கி கொடுங்கள்.
சுக்கிர தசை- குரு புக்தி
இக்கால கட்டத்தில், ஜாதகர்களுக்கு, சிறுநீரில் உப்புத்தன்மை அதிகரித்து, அது சார்ந்த நோய் வரும். பெண்களுக்கு, கர்ப்பப் பையில், கொழுப்பு கட்டிகள் திரண்டுவிடும். சிலருக்கு வீட்டு விலக்கின் ரத்தப் போக்கு குறைந்து, அது வயிற்றில், கருப்பையில் கட்டி யாகிவிடும். சிலருக்கு தொடைப்பகுதி வீங்கிவிடும். சிலர் மூக்கில் பிரச்சினை ஆகும்.
சில சிறு பெண் குழந்தைகள், அளவுக்கு மீறி பருமனாகிவிடுவர். சுக்கிரன், மொச்சை தானியத்தைக் குறிக்க, குரு கொண்டைக் கடலையை குறிப்பார். எனவே இது இரண்டை யும் சுண்டல் செய்வதோடு, விநியோகமும் செய்யலாம். பெண்களுக்கு இவ்வாறு, மாதவிடாய் கோளாறுகள், இருப்பின் திருச்சி- பேட்டவாய்த்தலை ஸ்தலம் சென்று வணங்கவும். அருகிலுள்ள கோவிலில் வெள்ளிக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்கவும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அழகான வேலைப்பாடுள்ள ஊதுபத்தி ஸ்டாண்ட் வாங்கிக்கொடுங்கள்.
சுக்கிர தசை- சனி புக்தி
இந்த புக்தி ஆரம்பித்தவுடன் கன்னம் அல்லது தாடையில் வலிவரும். வழுக்கை விழ ஆரம்பித்துவிடும். இந்த கால கட்டத் தில், ஆண்கள், குழந்தை பேறு சம்பந்தமாக, பரிசோதனை செய்தால், அவர்களுக்கு விந்து எண்ணிக்கை குறைவாக இருக்கும். பெண்களுக்கு கருப்பையை நோக்கி செல்லும் நரம்பு, ஒட்டிக்கொண்டு, சுருங்கியிருப்பதாக மருத்துவர் கூறுவர். சிறு குழந்தைகளுக்கு, எத்துணை சத்தான சாப்பாடு கொடுத்தாலும், மெலிந்திருப்பர். சுக்கிரன் மொச்சையைக் குறிக்க, சனி எள் தானியத்தைக் குறிப்பார். மொச்சைக் குழம்பு, எள் துவையல் அல்லது எள் மிட்டாய் செய்து கொடுப்பதோடு, உங்கள் வீட்டில் வேலை செய்பவருக்கும் கொடுங்கள். பெருமாளும், தாயாரும் சேர்ந்து நின்று, அருள்பாலிக்கும் திருக் கோவில் சென்று வணங்கவும். அழகான மெத்தை விரிப்புகளை, தெரிந்தவர்களுக்கு வாங்கிக்கொடுங்கள்.
சுக்கிர தசை- புதன் புக்தி
நிறைய முடி உதிரும். அடிக்கடி முகம், தொண்டையில் நீர் கோர்த்துக் கொள்ளும். முகத்தில் தேமல் படரும். சிலருக்கு தொண்டையில் சதை வளர்ச்சி உண்டாகும். சில பெண்கள் அரிப்பு எனும் இன்ஃபெக்ஷன் தொல்லை பெறுவர். சுக்கிரன் மொச்சையைக் குறிக்க, புதன் பச்சைப்பயறைக் குறிப்பார். இரண்டையும் சுண்டல்செய்து, சிறு குழந்தைகளுக்கு விநியோகிக்கலாம். திருக்கோஷ்டியூர் சென்று வணங்கலாம். அருகிலுள்ள பெருமாள் கோவிலில் துளசி மாலை வாங்கி சாற்றலாம். அழகான புத்தகப்பை வாங்கி கொடுக்கலாம்.
சுக்கிர தசை- கேது புக்தி
இந்த தசாபுக்தி ஆரம்பித்தவுடன், குழந்தைகளுக்கு, வயிற்றில் பூச்சி நிறைய ஆகிவிட்டது என மருத்துவர் மருந்து கொடுப்பார். பெரியவர்களுக்கும் அலர்ஜி யால் துன்பப்படுவர். பெண்களுக்கு கர்ப்பபை சுருங்கிவிடும். வீட்டு விலக்கம் மாதந்தோறும் வராமல், அது இஷ்டம்போல வந்து, பெண்களை இம்சைபடுத்தும். சில பெண்களுக்கு முகத்தில், ஆண்களைப்போல் முடி வளர்ந்து, வெகு அவமானம் தரும். சுக்கிரன் மொச்சையை குறிக்க, கேது கொள்ளு தானியம் குறிப்பார். கொள்ளு அடையும். மொச்சை தொடுகறியுமாக வைத்துக்கொள்ளலாம். அல்லது கொள்ளு சூப் வைத்து குடித்துவிடுங்கள். அதனை கிறிஸ்துவ நண்பர்களுக்கு பரிமாறவும். அருகிலுள்ள விநாயகரை, இனிப்பு கொண்டு வணங்கவும்.
சுக்கிர தசை ஆரம்பித்தவுடன் மகாலட்சுமியை வணங்குவதுடன், மகாலட்சுமி அஷ்டகம் ஸ்தோத்திரம் கூறவும்.
செல்: 94449 61845