செவ்வாய் சனியால் உண்டாகும் பாதிப்பும் பரிகாரங்களும்... திருக்கோவிலூர் பரணிதரன்

/idhalgal/balajothidam/effects-and-remedies-mars-and-saturn-thirukovilur-paranidharan

ஜோதிடம் என்பது அறிவியல் சாஸ்திரம். நாம் பிறக்கின்ற நொடியினைக் கணக்கிட்டு எழுதப்படும் நம் பிறப்பு ஜாதகத் தில் கிரகங்கள் சஞ்சரிக்கும் நிலையினை வைத்தே நம் தலையெழுத்து தீர்மானிக்கப் படுகிறது.

இந்த நிலையில் நம் ஜாதகத்தில் தோஷங் களைக் கண்டறிதல்போலவே பெரிதும் கவனிக்கத் தக்கது, அசுப கிரகங்களான செவ்வாய் சனியின் சஞ்சார நிலையாகும்.

அதற்கு காரணம், செவ்வாயும் சனியும் ஒருவருக்கொருவர் எதிரானவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து எந்த வீட்டில், எந்த ராசியில் இருந்தாலும், அல்லது ஒருவரை ஒருவர் இவர்கள் பார்த்துக்கொண்டாலும் அந்த ஜாதகருக்கு சங்கடங்களுக்குமேல் சங்கடங்கள் அதிகரிக்கும் என்று கூறுகிறது அனைத்து ஜோதிட நூல்களும், செவ்வாய், சனி என்னும் இரண்டு கிரகங் களின் சஞ்சார நிலைகள்தான் வாழ்க்கை யில் சிக்கல்களையும் ஆபத்தையும் தோற்று விக்கிறது.

இவர்கள் இருவரும் இணைந்து நிற்பதோ, பார்த்துக்கொள்வதோ அவர்கள் நிற்கும் அந்த பாவகத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தும். பாதிப்பை உண்டாக்கும் என்று நம் முன்னோர்கள் எழுதிவைத்துள்ளனர்.

ஒன்பது கிரகங்களுக்கும் அவர் அவர் களுக்கென்று தனித்தனியே காரகங்கள் உண்டு. அதன் அடிப்படையில் செவ்வாய் பகவானுக்கும், சனிபகவானுக்கும் உள்ள காரகத்துவத்தின் அடிப்படையை நாம் கவனிக்கவேண்டும்.

சனிபகவான் பற்றி சொல்லவேண்டு மென்றால், நீதிமான், நிதானமாக செயல்படக் கூடியவர், மந்தக்காரகன் என்பதால் இவருடைய செயல்பாடு மிகவும் பொறுமை யானதாகவே இருக்கும். கடந்த பிறவிகளில் நாம் செய்த பாவ- புண்ணியங்களைக் கணக்கிட்டு அதற்கேற்ப ஒவ்வொருவருக்கும் பலன்களை வழங்குபவர் கர்மக்காரகனான சனிபகவான்.

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பிறந்தாலும் கடந்த பிறவிகளில் அவர்கள் செய்த பாவ- புண்ணியங்களுக்கேற்பவே இப்பிறவியில் ஒவ்வொருவருக்கும் பலன்கள் மாறுபடுகிறது.

சனிபகவானே நம்முடைய இப்பிறவிக் குரிய பலன்களை வழங்குபவராக உள்ளார். நம் மனதில் பயத்தை உருவாக்குபவரும் இவரே. மனதில் போராட்டங்களையும், குழப்பங்களையும் உண்டாக்குபவரும் இவரே. நம் வாழ்க்கையைப் புரட்டிப் போடுபவரும் இவரே.

நினைத்த மாத்திரத்தில் எந்தவொரு முடிவிற்கும் வரமுடியாத நிலையை நமக்கு உண்டாக்குபவர் சனிபகவான். விதியின் வழியில் செல்லவைப்பார். கர்ம வினைகளை அனுபவிக்க வைப்பார். கடுமையாக நம்மை சோதிப்பார். வா

ஜோதிடம் என்பது அறிவியல் சாஸ்திரம். நாம் பிறக்கின்ற நொடியினைக் கணக்கிட்டு எழுதப்படும் நம் பிறப்பு ஜாதகத் தில் கிரகங்கள் சஞ்சரிக்கும் நிலையினை வைத்தே நம் தலையெழுத்து தீர்மானிக்கப் படுகிறது.

இந்த நிலையில் நம் ஜாதகத்தில் தோஷங் களைக் கண்டறிதல்போலவே பெரிதும் கவனிக்கத் தக்கது, அசுப கிரகங்களான செவ்வாய் சனியின் சஞ்சார நிலையாகும்.

அதற்கு காரணம், செவ்வாயும் சனியும் ஒருவருக்கொருவர் எதிரானவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து எந்த வீட்டில், எந்த ராசியில் இருந்தாலும், அல்லது ஒருவரை ஒருவர் இவர்கள் பார்த்துக்கொண்டாலும் அந்த ஜாதகருக்கு சங்கடங்களுக்குமேல் சங்கடங்கள் அதிகரிக்கும் என்று கூறுகிறது அனைத்து ஜோதிட நூல்களும், செவ்வாய், சனி என்னும் இரண்டு கிரகங் களின் சஞ்சார நிலைகள்தான் வாழ்க்கை யில் சிக்கல்களையும் ஆபத்தையும் தோற்று விக்கிறது.

இவர்கள் இருவரும் இணைந்து நிற்பதோ, பார்த்துக்கொள்வதோ அவர்கள் நிற்கும் அந்த பாவகத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தும். பாதிப்பை உண்டாக்கும் என்று நம் முன்னோர்கள் எழுதிவைத்துள்ளனர்.

ஒன்பது கிரகங்களுக்கும் அவர் அவர் களுக்கென்று தனித்தனியே காரகங்கள் உண்டு. அதன் அடிப்படையில் செவ்வாய் பகவானுக்கும், சனிபகவானுக்கும் உள்ள காரகத்துவத்தின் அடிப்படையை நாம் கவனிக்கவேண்டும்.

சனிபகவான் பற்றி சொல்லவேண்டு மென்றால், நீதிமான், நிதானமாக செயல்படக் கூடியவர், மந்தக்காரகன் என்பதால் இவருடைய செயல்பாடு மிகவும் பொறுமை யானதாகவே இருக்கும். கடந்த பிறவிகளில் நாம் செய்த பாவ- புண்ணியங்களைக் கணக்கிட்டு அதற்கேற்ப ஒவ்வொருவருக்கும் பலன்களை வழங்குபவர் கர்மக்காரகனான சனிபகவான்.

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பிறந்தாலும் கடந்த பிறவிகளில் அவர்கள் செய்த பாவ- புண்ணியங்களுக்கேற்பவே இப்பிறவியில் ஒவ்வொருவருக்கும் பலன்கள் மாறுபடுகிறது.

சனிபகவானே நம்முடைய இப்பிறவிக் குரிய பலன்களை வழங்குபவராக உள்ளார். நம் மனதில் பயத்தை உருவாக்குபவரும் இவரே. மனதில் போராட்டங்களையும், குழப்பங்களையும் உண்டாக்குபவரும் இவரே. நம் வாழ்க்கையைப் புரட்டிப் போடுபவரும் இவரே.

நினைத்த மாத்திரத்தில் எந்தவொரு முடிவிற்கும் வரமுடியாத நிலையை நமக்கு உண்டாக்குபவர் சனிபகவான். விதியின் வழியில் செல்லவைப்பார். கர்ம வினைகளை அனுபவிக்க வைப்பார். கடுமையாக நம்மை சோதிப்பார். வாழ்க்கைக்குரிய பாடங் களைக் கற்றுத்தருவார். இதுதான் நம்வழி, இதுதான் நம் வாழ்க்கை என்பதை உணரவைத்து அதன்பிறகு அவ்வழியில் நடைபோட வைப்பார். கடின உழைப்பிற்கும், ஒழுக்க நெறிக்கும் காரக மானவர் சனிபகவான்.

செவ்வாய் பகவான் இதற்கு எதிர்மறையானவர்.

எந்த ஒன்றி லும் வேகம், விரைந்து முடிவெடுத்தல், தைரியம், வீரியம், பராக்கிரமம், எவருக் கும் அஞ்சாத மனவலிமை, நினைத்த மாத்திரத்தில் ஒரு செயலை செய்து முடித்து விட வேண்டும் என்ற உத்வேகம். தனக்கு நிக ரானவர் யாரு மில்லை என்று கருதிடக்கூடியவர். வேகமாக செயல் பட்டு விரைவாக அனைத்தையும் காணவேண்டும் என்ற மனப்பான் மையை உண்டாக்கு பவர் செவ்வாய் பகவான். இவருடைய ஆதிக்கத்தில் பிறந்த வர்கள் எரிமலை போல் வாழ்பவர்கள். எந்த ஒன்றிற்காகவும் எப்பொழுதும் அச்சப்படாதவர்கள். யாருக்கும் தலை வணங்காதவர்கள். தன் கண்ணெதிரே நடக்கும் தவறுகளைக் கண்டு கொதிப்பவர்கள். அதர்மத்திற்கு எதிராக ஆவேசமாக செயல்படக் கூடியவர்கள். போர்க்குணம் மிக்கவர்கள். எது நடந்தாலும் அதுபற்றி எந்தவொரு கவலையும் இல்லாமல் துணிச்சலுடன் நடைபோடக்கூடிய ஆரோக்கியம் கொண்டவர்கள்.

சனிபகவான் நிதானமானவர் என்றால், செவ்வாய் பகவான் வேகமானவர். இவர்கள் இருவரின் தாக்கங்களும் நம் வாழ்க்கையில் இருக்கவே செய்கிறது. நம் ரத்தத்தைக் கொதிக்கவைத்து, ஆவேசத்தை உண்டாக்கி நம்மை யுத்தக்காரனாக வாழவைப்பவர் செவ்வாய் என்றால், நம்மை நேர்மையாக, ஒழுக்கமாக வாழவைத்து மற்றவர்கள் நம்மைப் புகழ்ந்திடக் கூடிய அளவிற்கு நம் வாழ்க்கையை நடத்தி வைப்பவர் சனிபகவான்.

நம் மண்ணில் இயற்கைச் சீற்றங்கள், அரசுக்கு எதிரான போராட்டங்கள் உண்டாக மிகப் பெரும் காரணமாக இருக்கும் கிரகங்கள் சனி, செவ்வாய் என்ற இந்த இரண்டு கிரகங்கள் என்றே கூறவேண்டும்.

இவர்களுக்குள் தொடர்பு உண்டாகும் ú பாதுதான் நாட்டில் அடை மழையும், பெரு வெள்ளமும், தீ விபத்துகளும், நிலநடுக்கமும், விபத்து களும் உண்டாவதை நாம் காணலாம்.

ss

இதற்கு காரணம், பூமிக்கு அதிபதியானவர் செவ்வாய் பகவான் என்பதால், நில அதிர்வு, பூகம்பம் போன்றவற்றுக்கு முக்கிய காரணமாக இவரே இருக்கிறார்.

அதேபோல் கர்ம வினைகளுக்கேற்ப பலன்களை வழங்கிடக்கூடிய சனி பகவான், ஈஸ்வரனையும் அவருடைய ஏழரைச்சனி காலத்தில் பிடித்து அதன் காரணமாக அவரிடமே ஈஸ்வர பட்டத்தையும் பெற்றவர் என்பதில் இருந்தே சனிபகவானின் பெருமையை அறியலாம்.

சனி கொடுக்க எவர் தடுப்பார் என்ற வார்த்தைக்கேற்ப உயரிய பதவிகளை வழங்குபவர் சனிபகவான். ஆட்கள் சேர்க்கையை உண்டாக்குபவர். சொத்து சுகத்தை வழங்குபவர். அனைத்தையும் வழங்கி வாழ்க்கையில் நிலையான இடத்தையும் தருபவர். அதே நேரத்தில், தவறு செய்பவர்கள் யாராக இருப்பினும் அவர்களுக்குரிய தண்டனையை வழங்கு வதும் சனிபகவான்தான்.

கோட்சாரரீதியாக கிரகங்களின் சஞ்சார நிலையில் இவர்களுக்குள் தொடர்பு உண்டா கும் போதெல்லாம் நாட்டில் இயற்கைச் சீற்றம், கலவரம், போராட்டம், ஆட்சியாளர் களுக்கு நெருக்கடி, பாதிப்பு என்று ஏற்படும்.

சனி செவ்வாயின் சேர்க்கை உண்டாகும் போதெல்லாம் யாவும் எதிரும் புதிருமாகி விடும், முட்டலும் மோதலுமாகிவிடும். அதனால் நம் ஜாதகத்தில் இவர்கள் இருவரும் நல்ல நிலையில் இருக்கவேண்டும். அப்போதுதான் நமக்கு நன்மையான பலன்கள் கிடைக்கும்.

நன்மையான பலன்கள் என்பது எப்படி என்பதை நாம் பார்க்கும் முன்பாக, சனிபகவானும் செவ்வாய் பகவானும் ஒரே வீட்டில் சஞ்சரிப்பது, சனி பகவானை செவ்வாய் அல்லது செவ்வாய் பகவானை சனி பார்ப்பது, சனி பகவானின் ராசி களான மகரத்திலோ, கும்பத்திலோ அல்லது, சனிபகவானின் நட்சத் திரங்களான பூசம், அனுஷம், உத்திரட்டாதி யின் சாரத்திலோ செவ்வாய் சஞ்சரிப்பது, செவ்வாய் பகவானின் ராசிகளான மேஷத்திலோ, விருட்சிகத்திலோ அல்லது செவ்வாய் பகவானின் நட்சத்திரங்களான மிருகசீரிடம், சித்திரை, அவிட்டத்தின் சாரத்திலோ சனிபகவான் சஞ்சரிப்பதும் சனி, செவ்வாய் சேர்க்கையாகும்.

இவர்கள் இருவருடைய சேர்க்கையும் பார்வைகளும் சஞ்சார நிலைகளும் நம் வாழ்க்கையில் பல்வேறு சங்கடங்களை ஏற்படுத்தும். மனதில் குழப்பத்தை உண்டாக்கும். எதிர்பார்ப்புகளில் ஏமாற்றத் தையளிக்கும். உடல்நிலையில் நலிவை ஏற்படுத்தும். நோய் நொடிகளில் படுக்க வைக்கும். குடும்ப வாழ்க்கையில் சிக்கலான நிலையினை உருவாக்கும். கணவன்- மனைவிக்கிடையே கசப்பை ஏற்படுத்தும். மணவாழ்க்கையில் போராட்டத்தை உண்டாக்கும். இருவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு பிரிவை சந்திக்க வேண்டிய நிலையினை உண்டாக்கும்.

நம் ஜாதக பாவகரீதியாக பார்க்கும்போது, லக்னத்திற்கு சனி, செவ்வாய் சேர்க்கை உண்டாகும்போது, உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். மனதில் குழப்பமும் சங்கடமும் இருந்துகொண்டே இருக்கும். கௌரவத்திற்கு பங்கம் உண்டாகும்.

குடும்பம், வாக்கு, தன ஸ்தானமான இரண்டாம் இடத்தில் சனி, செவ்வாய் சேர்க்கை உண்டாகும்போது, குடும்பத்தில் கணவன்- மனைவிக்குள் மோதல் ஏற்படும். பணவரவில் தடை உண்டாகும். தேவையில்லாத சங்கடங்கள் தோன்றும். கண்ணில் பாதிப்பு உண்டாகும்.

தைரிய, வீரிய சகோதர, பராக்கிரம ஸ்தானமான மூன்றாம் இடத்தில் சனி செவ்வாய் சேர்க்கை உண்டாகும்போது, சகோ தரர்களுக்குள் பிரச்சினைகள் உருவாகும். ஒற்றுமைக் குலையும். உடல்நலனில் தொண் டைப் பகுதியில் பாதிப்பு ஏற்படும். அந்தஸ்து, புகழ், கௌரவத்திற்கு குந்தகம் உண்டாகும்.

சுக ஸ்தானம், மாதுர் ஸ்தானம், வாகன ஸ்தானம், வித்யா ஸ்தானம் என்னும் நான்காம் இடத்தில் சனி, செவ்வாய் சேர்க்கை உண்டாகும் போது, கல்வியில் தடை உண்டாகும். தாயாரின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். வாகனம் அடிக்கடி பழுதாகும். பயணத்தில் சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

பூர்வபுண்ணிய, புத்திர ஸ்தானம் என்னும் ஐந்தாமிடத்தில் சனி, செவ்வாய் சேர்க்கை உண்டாகும்போது, பிள்ளைகளின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். மேல் கல்வியில் தடைகள் தோன்றும், பூர்வீக சொத்து விஷயத்தில் வம்பு, வழக்கு என்று ஏற்படும். இதயத்தில் பாதிப்பு உண்டாகும்.

ருண, ரோக, சத்ரு ஸ்தானம் என்னும் ஆறாம் இடத்தில் சனி, செவ்வாய் சேர்க்கை உண்டாகும்போது, கடன் அதிகரிக்கும். அதனால், வீண் சங்கடங்கள், அவமானங்கள் உண்டாகும். எதிரிகளின் கை மேலோங்கும்.

களத்திரம், நட்பு ஸ்தானம் என்னும் ஏழாமிடத்தில் சனி, செவ்வாய் சேர்க்கை உண்டாகும்போது, திருமணத்தில் தடை ஏற்படும். அதையும் மீறி திருமணம் நடை பெற்றாலும் தம்பதிகளுக்குள் ஒற்றுமை என்பது இல்லாமல் போகும். கூட்டுத் தொழிலில் சங்கடங்கள் ஏற்படும். கணவன் அல்லது மனைவிக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும்.

ஆயுள் மற்றும் அஷ்டம ஸ்தானம் என்னும் எட்டாம் இடத்தில் சனி செவ்வாய் சேர்க்கை உண்டாகும்போது, அரசாங்க ரீதியாக சங்கடங்களைச் சந்திக்க வேண்டிய தாக இருக்கும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுத்து அதற்காக வழக்கில் சிக்க வேண்டிய நிலை ஏற்படும். வாழ்க்கையில் விரக்தி அதிகரிக்கும். தேவையில்லாத முன் கோபம் ஏற்பட்டு அதன்காரணமாக பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும்.

பாக்கிய ஸ்தானம் என்னும் ஒன்பதாம் வீட்டில் சனி, செவ்வாய் சேர்க்கை உண்டாகும்போது சொத்து விஷயத்தில் சங்கடங்கள் ஏற்படும். புதியதாக வாங்கும் சொத்திலும் வில்லங்கம் இருக்கும். வெளி நாட்டிற்கு சென்றால் அங்கும் சங்கடத்தை சந்திக்கவேண்டிவரும். தந்தைக்கும் பிள்ளைக்குமான உறவில் விரிசல் ஏற்படும். தெய்வ நம்பிக்கை இல்லாமல்போகும். தெய்வ அருளும் கிட்டாமல் போகும்.

தொழில் மற்றும் ஜீவன ஸ்தானமான பத்தாம் இடத்தில் சனி, செவ்வாய் சேர்க்கை உண்டாகும்போது, செய்துவரும் தொழிலில் தடைகள் உண்டாகும். போட்டிகள் அதிகரிக்கும். எந்தவொரு தொழிலில் ஈடுபட் டாலும் அதில் நிலையற்றத் தன்மை உண்டா கும். பார்த்துவரும் உத்தியோகத்தில் ஏதேனும் சங்கடம் இருந்துகொண்டே இருக் கும். எதிர்பார்த்த பதவி உயர்வு தடைபடும். மேல் அதிகாரிகளின் ஆதரவு ஏற்படாமல் போகும்.

லாபம், மூத்த சகோதரம், இளைய தார ஸ்தானம் என்னும் பதினொன்றாம் இடத் தில் சனி, செவ்வாய் சேர்க்கை உண்டாகும் போது, மூத்த சகோதரரால் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டிவரும். அயல் நாட்டு விவகாரங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். இளைய தாரத்தால் மனதில் சங்கடம் தோன்றும். உடல்நிலையில் எப்போதும் ஒரு சங்கடம் இருந்து கொண்டே இருக்கும்.

அயன, சயன, மோட்ச ஸ்தானம் என்னும் பன்னிரண்டாம் இடத்தில் சனி, செவ்வாய் சேர்க்கை உண்டாகும்போது, வாழ்க்கையில் வம்பு, வழக்குகள் இருந்துகொண்டே இருக்கும். நிம்மதியான தூக்கம் என்பது இல்லாமல் போகும். எதற்கு இந்த வாழ்க்கை என்று மனதில் விரக்தி ஏற்படும். ஒருபடி ஏறினால் நான்குபடி இறங்கவேண்டிய நிலை உண்டாகும். லாபத்தைவிட விரயம் அதிகரிக்கும்.

இவையெல்லாம் சனி, செவ்வாய் சேர்க்கையால் உண்டாகும் பாதிப்புகள் என்றாலும், குருபகவானின் பார்வை இவர்களுக்கு உண்டானால் மேலே கூறிய சங்கடங்கள் யாவும் இல்லாமல் போகும். குருபகவானின் பார்வை இவர்களுக்கு இல்லையெனில் சனி, செவ்வாய் பாதிப் பிலிருந்து விடுபட எளிய பரிகாரமும் உண்டு. அந்தப் பரிகாரம் என்பது இறை வழிபாடு மட்டும்தான். செவ்வாய் பகவானுக்கு அதிபதியான முருகப் பெருமானின் சந்நிதிகளுக்கும், ஸ்ரீமன் நாராயணன் அல்லது நரசிம்மர் ஆலயங் களுக்கும் சென்று மனமுருகி வணங்கி வழிபடுவதும், அனுமன் மற்றும் விநாயகப் பெருமானைத் தொடர்ந்து வணங்கி வழிபட்டுவருவதாலும் செவ்வாய், சனி சேர்க்கையால் உண்டாகக்கூடிய பாதிப்பு கள் குறையும்; வாழ்க்கை வளமாகும்.

செல்: 94443 93717

bala190124
இதையும் படியுங்கள்
Subscribe