பிரசன்னத்தின் வரலாறு- வேதத்தின் அங்கங்கள் ஆறு. அதில் ஒன்றான ஜோதிடம் மிகவும் பயனுள்ளதாகவும், உபயோகம் உள்ளதும் ஆகும். வேதத்தின் ஆறு அங்கங்கள் ஆவன.
1. கல்பம். (வைதீக முறைப்படி வேள்வி களுக்கான நடைமுறை).
2. சிட்சை. (வேத, சாஸ்திர, விஞ்ஞான கல்வி)
3. நிருக்தம். (வாக்கியங்கள் மற்றும் சாஸ்திர விளக்கங்கள்)
4. சந்தஸ். (வெண்பாக்கள் மற்றும் செய்யுள்களின் விளக்கங்கள்)
5. வியாகரணம். (இலக்கணம், மொழி இயல்புகள்)
6. ஜோதிடம். (சூரிய, சந்திர, நட்சத்திரங்கள் ஆகியவற்றின் ஒளிகளின் அடிப்படையில் இயற்றப்பட்ட நூல்) ஆகும்.
ஜோதிடம்- வேதத் தின் கண்கள் என்று கருதப்படுகிறது. உலகி லுள்ள எல்லா விஞ்ஞா னங்களும், விவாதத்திற் கும், தர்க்கத்திற்கு உரி யவை. ஆனால், ஜோதிடம் மட்டுமே பிரத்தி யட்சமான, அதாவது கண்கூடாக காணப்படு வது என சமஸ்கிருத பழமொழி குறிப்பிடு கிறது. இதற்கு சாட்சி சூரிய, சந்திரர்கள் ஆவர். குறிப்பிட்ட நேரத்தில் அவர்களின் உதயமும், அஸ்தமனமும் தவறாது நிகழ் கின்றன. கிரகணங்கள் உண்டாகின்றன. பஞ்சாங்க கணிதர் இந்த வருடம் மழை குறைவு எனக் குறிப்பிட்டால், அந்த வருடம் பஞ்சம் நிலவுகிறது.
எனவே, ஜோதிடம் மனித வர்க்கத்திற்கு ஓர் இன்றியமையாத துணைக் கருவி ஆகும். பிரம்ம தேவனால், நாரத முனிவருக்கு உபதேசிக்கப்பட்ட இந்த சாஸ்திரம், பராசரர் முதல் 18 ரிஷிகளால் விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்டு, பிற்காலத்தில் தோன்றிய வராகிமிகிரர், வரருசி போன்றவர்களால் பாகுபடுத்தப்பட்ட, பின்னர் அவருக்கு பின்னர் வந்த அறிஞர் பெருமக்கள் விளக்கம் அளித்தது ஜோதிட நூல்களாகும்.
இப்படிப்பட்ட ஜோதிட சாஸ்திரத்தில் ஆறு பிரிவுகள் இருக்கின்றன. அவை கோளம் அல்லது பூகோளம், கணிதம், (அங்க கணிதம், பீஜ கணிதம், க்ஷேத்திர கணிதம் முதலியன). ஜாதகம் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு கிரக நிலைகளை அடிப்படையாகக்கொண்டு கணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பலன் உரைக்கும் அற்புத கலையாகும்.
பிரசன்னம்
இது ஒரு குறிப் பிட்ட தருணத்தின் கிரக நிலைகளின் அடிப் படையில் அந்த தருணத் தில் கேட்கப்படும் கேள்விக்கு பதில் எடுத்து உரைக்கப்படும் விளக்கங்களாகும் அல்லது அதன் முற்காலத்தை பற்றிய நிகழ்வுகளை எடுத்துக் கூறுவதாகும்.
முகூர்த்தம்
இது ஒரு குறிப்பிட்ட சுப- அசுப காரியங்களுக்கு ஏற்றதாக நிர்ணயிக்கப்படும் முகூர்த்தத்தின் விளைவை எடுத்துக் கூறுவதாகும்.
நிமித்தம்
இதை குறிசொல்வது என்றுகூட சொல்வதுண்டு. குறிப்பிட்ட நேரத்தில் கண்ணில் படும் நிகழ்வுகளை, காதில் விழும் ஒலிகளை சகுனங்களாக கொண்டு ஜோதிடன் தன்னிடம் பலன் கேட்க வருவோரின் சுப- அசுப கால பலன்களை எடுத்துரைப்பது ஆகும்.
இந்த கட்டுரையில் நாம் பிரசன்னத்தை பற்றித் தெரிந்துகொள்வோம். பிரசன்னம் என்பது நிமித்தத்தையும் உள்ளடக்கியதாகும். பிரசன்ன ரீதியாக ஜோதிடர் பலன் சொல்லும்பொழுது பிரசன்ன ஜாதகத்திற்கு 40 விழுக்காடு பலனும், நிமித்தத்திற்கு 40 விழுக்காடு பலனும் கணக்கிடுவதுண்டு. மீதியுள்ள 20 விழுக்காடு ஜோதிடரின் ஆத்ம சக்தியை பொறுத்தே அமையும். உதாரணமாக, தன் மனைவியின் உடல்நிலை பற்றி அறியவந்த ஜாதகரிடம், ஜோதிடர் "வீட்டில் சென்று தங்கள் மனைவி எப்படி உள்ளார்?' என்று பார்த்துவாருங்கள் என்று கூறிய ஜோதிடரிடம் ஏன்? இவ்வாறு கூறினீர்கள் என்று அவர் நண்பர் வினவியபோது, அந்த ஜாதகர் வந்தபோது சண்டையிட்டுக் கொண்டிருந்த பல்லிகளில் ஒன்று இறந்துவிட்டதை கண்டதால் அதை நிமித்தமாக வைத்தே அவ்வாறு கூறினேன் என்றார். அதே போல், அவரின் மனைவியும் இறைவனடி சேர்ந்தார். இதுவே நிமித்தத்தின் அறிகுறியாகும்.
இப்படிப்பட்ட ஜோதிட சாஸ்திரத்தில் பிரசன்னம் என்பது ஒரு முக்கிய அங்கமாகும். பண்டைக்காலத்தில் ஜமதக்னி முனிவர் மகன் பரசுராமர் கேரளத்தில் பிறந்து வாழ்ந்து வந்தார். மகா முன்கோபி, க்ஷத்திரியர்கள் கூட்டத்தை அழிப்பதில் குறியாக இருந்தார். மேலும், தந்தை சொல்லுக்கு கட்டுப்பட்டு தன் தாயையே கொன்றவர். அவர் தான் செய்த இத்தகைய பாவங்களுக்கு பரிகாரம் செய்ய நாரதரிடம் கேட்டபோது, நாரதர் 408 சிவ ஸ்தலங்களையும், 1,008 தேவி ஸ்தலங்களையும், 108 சுப்பிரமணிய ஸ்தலங்களையும் நிர்மாணிக்கும்படி பரசுராமரிடம் கூறினார். அப்படி நிர்மாணிக்கப்படும் கோவில்களில் ஒழுங்காக பூஜைகள் நடக்க வேண்டும் என்பதற்காகவும், அதிலுள்ள குற்றம் குறைகளை எப்படி கண்டறிந்து பரிகாரங்கள் செய்யவேண்டும் என்பதற்காகவும் நாரதரால் உபதேசிக்கப்பட்ட விஷயங்களை கேரள ஜோதிடர்கள் பிரசன்ன சாஸ்திரமாக உருவாக்கினார்கள்.
ஒருமுறை மைசூர் ராஜதானியை திப்புசுல்தான் ஆண்டுவந்தான். திருவிதாங்கூர் மீது படையெடுக்க முற்பட்டபோது, ஜோதிடர் அவரிடம் நேரம் சரியில்லாததால் முயற்சியை கைவிடக் கூறினார். ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாத திப்பு கூண்டில் இருந்த கிளியை தன் கையில்பிடித்து, வாளை உருவி, ஜோதிடரிடம் இப்போது என்ன நடக்கும்? என்று வினவி, இப்போது நீ சரியாக சொல்லிவிட்டால் படை எடுக்கமாட்டேன் என்று சொன்னான். ஜோதிடர் ஒரு ஓலையில் "கிளி சாகாது, அரசர் கையில் காயம் ஏற்படும் என்று எழுதிவைத்தார். கிளியைக் கொல்ல அதை வெளியில் எடுக்க முயன்றபோது கிளி பறந்தது, சுல்தான் கையில் காயம் ஏற்பட்டது. அரசன் ஜோதிடர் எழுதியதை பார்த்தபோது அவர் கணிப்பு சரியாக இருந்ததால், சுல்தான் படையெடுப்பை கைவிட்டான். இதில் இருந்து பிரசன்னத்தின் மகிமை தெரிகிறதல்லவா?'' பிரசன்னத்தில் அநேக பிரிவுகள் உண்டு அஷ்ட மங்கல பிரசன்னம் இது கேரளாவில் கையாளப்படும் விசேஷ முறையாகும். இதில் ஐந்து செயல்பாடுகள் உண்டு.
* பிருச்சா: ஒரு குடும்பஸ்தன் அல்லது அவனது தோழன், பணியாளன் ஆகியோர், ஒரு ஜோதிடரிடம் போய் அவரை வணங்கி, தாம்பூலம் முதலியவற்றைக் கொடுத்து பிரசன்னத்திற்கு அழைக்கும் செயலாகும். இப்படி அழைக்கப்படும்போது காணப்படும் சூழ்நிலை, நிமித்தம், வந்தவரின் அங்க அசைவு கள், அவர் கூறும் வார்த்தைகள், தட்டிலுள்ள பூ, பழங்கள் ஆகியவற்றையும் குறிக்கும்.
* அடுத்து, ஜோதிடர், ஒரு கிரகஸ்தன் வீட்டிற்குப் போகும் வழியில் கிடைக்கும் அனுபவங்களைக் குறிப்பது "பிரசன்ன மார்க்கம்' என்று சொல்லப்படும்.
* ராசிக் கட்டம் வரைவதும் அதற்கு பூஜைசெய்வதும், சோழி மற்றும் ஸ்வர்ணம் வைப்பதும், விளக்கேற்றி பூஜைசெய்வதும் பிரசன்னம் கேட்க வந்தவர் அங்கிருக்கும் பொருட்களில் ஒன்றை எடுத்து ஜோதிடர் கையில் கொடுப்பதும் பிரசன்ன கிரியை என குறிப்பிடப்படுகிறது.
ப் மேலெழுதிய ஒவ்வொன்றின் அடிப் படையிலும் பலன் உரைப்பது மற்றும் பரிகாரங்கள் சொல்வது இப்படிப்பட்ட அஷ்டமங்கல பிரசன்னம் கோவிலுக்கு வைக்கப்பட்டால் அது தெய்வ பிரசன்னம் என்றும், அரசியலுக்காக வைக்கப்பட்டால் ராஷ்ட்ரீய பிரசன்னம் என்றும், கிராமங் களுக்காக வைக்கப்பட்டால் கிராம பிரசன்னம் என்று சொல்லப்படுகிறது.
அடுத்து யாமளப் பிரசன்னம்
இது பூஜைக்குப் பிறகு தட்டிலிருக்கும் சோழிகளிலில் இருந்து பிரசன்னம் கேட்கவந்தவர் ஒரு கைபிடி சோழியை எடுத்து ஜோதிடர் கையில் கொடுத்து அவற்றை ஒரு கட்டத்திற்கு நான்கு சோழி வீதம் வைத்துக் கொண்டு வந்து, அது எங்கு முடிகிறதோ அதை ஆரூட லக்னமாகக்கொண்டு பலனுரைக்க வேண்டும்.
இவைதவிர நாடி கேரப் பிரசன்னம், தாம்பூல பிரசன்னம் போன்ற பல முறைகளைப் பற்பல இடங்களில் அனுசரிக்கிறார்கள்.
பிரசன்னத்தில் இருந்து பலனுரைக்கும் பொழுது உதய மற்றும் ஆரூட லக்னத்திற்கு முக்கியத்துவம் உண்டு. ஆரூட லக்னத்தை அடிப்படையாகக் கொண்டு முதல் கேள்விக்கும், உதய லக்னத்தைக்கொண்டு 2-ஆவது கேள்விக் கும், சந்திரன் நின்ற ராசியை அடிப்படை யாகக்கொண்டு 3-ஆவது கேள்விக்கான பதிலையும், சூரியன் நின்ற ராசியை அடிப்படையாகக்கொண்டு 4-ஆவது கேள்விக்கும் குரு நின்ற ராசியை அடிப் படையாகக்கொண்டு 5-ஆவது கேள்விக் கும் சுக்கிரன் நின்ற ராசியை அடிப்படை யாகக்கொண்டு 7-ஆவது கேள்விக்கும் செவ்வாய், சனி இவர்களை அடிப்படை யாகக்கொண்டு அதற்கு அடுத்த கேள்வி களுக்கும் பலன் உரைப்பது வழக்கமாகும்.
இப்படி பலனுரைக்கும்பொழுது குடும்பத் தலைவனைப் பற்றிய விஷயங்களெல்லாம் ஆரூட லக்னத்தில் இருந்தும், ஆரூடத்தை அடிப்படையாகக்கொண்டும் எடுத்து ரைக்கப்படவேண்டும்.
செல் 97891 01742