தாயின் சபதம் அனைவரையும் பாதிக்குமா?-சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/does-mothers-vow-affect-everyone-chithardasan-sunderji-jeevanadi-study

சுமார் 40 வயதுடைய ஒருவர், நாடியில் பலன்கேட்க வந்திருந்தார்.

"என் குடும்பம் பாரம்பரியமான பெரிய குடும்பம். சகோதரர்கள் நான்கு பேர்; சகோதரிகள் மூன்று பேர். என் தந்தை எனது 22 வயதிலேயே இறந்துவிட்டார். அதன்பிறகு விவசாயம், குடும்பப் பொறுப்புகளை நான்தான் செய்துவந்தேன். இரண்டு சகோதரிகளுக்குத் திருமணம் செய்துவைத்தேன். குடும்ப சொத்துகள் அழியாமல் பாதுகாத்தேன்.

என் தாய், தனது சகோதரன் மகளை எனக்குத் திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டார். ஆனால் நான் விரும்பிய பெண்ணைத் திருமணம் செய்துகொண்டேன். என் திருமணத்திற்கு தாய், சகோதர- சகோதரிகள் யாரும் வரவில்லை. திருமணத்திற்குப்பிறகு என் தாயும், உடன்பிறந்தவர்களும் என்னை அவர்கள் குடும்பத்தில் ஒருவனாக எண்ணவில்லை. பூர்வீக சொத்துகளில் எனக்கு முறையாகத் தரவேண்டிய பங்கினையும் தரவில்ல

சுமார் 40 வயதுடைய ஒருவர், நாடியில் பலன்கேட்க வந்திருந்தார்.

"என் குடும்பம் பாரம்பரியமான பெரிய குடும்பம். சகோதரர்கள் நான்கு பேர்; சகோதரிகள் மூன்று பேர். என் தந்தை எனது 22 வயதிலேயே இறந்துவிட்டார். அதன்பிறகு விவசாயம், குடும்பப் பொறுப்புகளை நான்தான் செய்துவந்தேன். இரண்டு சகோதரிகளுக்குத் திருமணம் செய்துவைத்தேன். குடும்ப சொத்துகள் அழியாமல் பாதுகாத்தேன்.

என் தாய், தனது சகோதரன் மகளை எனக்குத் திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டார். ஆனால் நான் விரும்பிய பெண்ணைத் திருமணம் செய்துகொண்டேன். என் திருமணத்திற்கு தாய், சகோதர- சகோதரிகள் யாரும் வரவில்லை. திருமணத்திற்குப்பிறகு என் தாயும், உடன்பிறந்தவர்களும் என்னை அவர்கள் குடும்பத்தில் ஒருவனாக எண்ணவில்லை. பூர்வீக சொத்துகளில் எனக்கு முறையாகத் தரவேண்டிய பங்கினையும் தரவில்லை.

tt

திருமணம் முடிந்த சில மாதங்களில் நானும், மனைவியும் வீட்டைவிட்டு தாயால் விரட்டப்பட்டு, தனியாக வசிக்கத் தொடங்கினோம். அதன்பிறகு என் தாய் என்னுடன் பேசுவதே இல்லை. என் உடன்பிறந்தவர்களும் சரியாகப் பேசுவதில்லை. ஒரு தாய் வயிற்றில் ஏழு பேர் பிறந்தோம். இப்போது அவர்கள் ஆறு பேரும் உறவாக, ஒற்றுமையாக, ஒரு குழுவாக வாழ்கிறார்கள். நான் எனது மனைவி, குழந்தைகளுடன் தனித்து வாழ்கிறேன்.

பெற்ற தாய், உடன்பிறந்தவர்களின் கோபத்திற்கும் வெறுப்பிற்கும் ஆளாகிவிட்டேன். அந்தத் தாய் சாபம், சகோதர சாபம், மாமன் மகளைத் திருமணம் செய்துகொள்ளாததால் மனம் வெறுத்த தாய்மாமன் சாபம் போன்றவை எனது அடுத்த பிறவியில் என் வாழ்க்கையை பாதிக்குமா?

எனது வம்சவாரிசுகள் வாழ்வில் ஏதாவது பாதிப்பைத் தருமா என்பதை அறிந்துகொள்ளவே அகத்தியரை நாடிவந்தேன்'' என்றார்.

ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றிப் பலன் கூறத் தொடங்கினார்.

"ஒருவரின் திருமணம். பெற்றவர் களாலோ கிரகங்களாலோ, பக்தியாலோ, சாதி, மதத்தினாலோ, மற்ற மனிதர்களாலோ தீர்மானித்து நடப்பதில்லை. ஒருவனுக்கு யார் மனைவி? ஒரு பெண்ணிற்கு யார் கணவன் என்பது தாயின் கருவில் வளரும்போதே பிறப்பிலேயே தீர்மானிக்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட விதிப்படிதான் நடக்கும்.

இவன் தனது தாய், சகோதரர்கள், தாய்மாமன் ஆகியோருக்கு ஏதாவது கொடுமைகள் செய்து, பாதிக்கப்பட்டிருந்தால்தான் அவர்கள் சாபம் இவனை பாதிக்கும். ஆனால் இவன் வாழ்க்கையில் இவன் குடும்பத்தார் முறையாக இவனுக்குச் சேரவேண்டிய சொத்துகளைத் தராமல், இவனை வீட்டைவிட்டு வெளியேற்றி, இவனுக்கு பாவத்தைச் செய்துவிட்டார்கள். இவனுக்குச் செய்த பாவத்தால், இவனது தாய்க்குதான் புத்திரதோஷம் உண்டாகிவிட்டது! இவன் சொத்தை அபகரித்ததால் இவன் சகோதரர்களுக்கு சகோதர சாபம் ஏற்பட்டுவிட்டது. இவனுக்கு செய்த பாவத்திற்குண்டான தண்டனையை அவர்களும், அவர்களின் வம்சவாரிசுகளும் அனுபவிப்பார்கள்.

அவர்கள் இவனைத்தான் வெறுத்து ஒதுக்கினார்களே தவிர, இவன் அவர்களுக்குப் பாவத்தைச் செய்து ஒதுக்கவில்லை. அதனால் அவர்கள் என்னவிதமான சாபமிட்டாலும் இவனையும், வம்ச வாரிசுகளையும் பாதிக்காது; இவன் பயப்பட வேண்டாம்.

இவன் திருமணம் எவ்வாறு விதிப்படி நிர்ணயிக்கப்பட்ட பெண்ணுடன் நடந்ததோ, அதேபோல். இவன் திருமணத்திற்குப் பின்பு குடும்ப உறவுகளைப் பிரிந்து, தன் மனைவி, குழந்தைகளுடன் தனித்து வாழவேண்டும் என்பதும், முன்னோர் சேர்த்துவைத்த சொத்துகளை அனுபவிக்கக்கூடாது- தன் சுய உழைப்பினால் சம்பாதித்து வாழவேண்டும் என்பதும் விதிப்படி தான் நடந்துள்ளது என்பதை அறிந்துகொண்டு, இனி உறவுகளை விட்டு ஒதுங்கி, தன் மனைவி, குழந்தைகளுடன் நிம்மதியாக வாழட்டும்'' என்று கூறி அகத்தியர் ஓலையிலிருந்து மறைந்தார்.

"என் மனதிலிருந்த குழப்பமும், பயமும் அகத்தியரால், தீர்ந்தது'' என்று கூறி, அகத்தியரை வணங்கிவிட்டு விடைபெற்றுச் சென்றார்.

சிலர் பித்ருதோஷம், தாய் சாபம் என்று சுலபமாகக் பொதுவாக, கூறுவார்கள். நம்மால் குடும்ப உறவுகள் பாதிக்கப்பட்டிருந்தால்தான், அந்த உறவுகளின் சாபம் நம்மை பாதிக்கும். குடும்ப உறவுகள், தாய்- தந்தை, சகோதரர்கள் ஒருவருக்கு தீமைகளைச் செய்திருந்தால், அந்த பாவம் அவர்களையே திரும்பத் தாக்கி அடுத்தடுத்த பிறவிகளில், அவர்களின் வம்சவாரிசுகளுக்கு பாதிப்பைத் தரும் என்பதை நானும் அறிந்து கொண்டேன்.

செல்: 99441 13267

bala221124
இதையும் படியுங்கள்
Subscribe