சகல ஜஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் தெய்வீக தூப பூஜை! - பொ. பாலாஜி கணேஷ்

/idhalgal/balajothidam/divine-incense-pooja-infuses-all-jaswaryas-b-balaji-ganesh

வ்வொரு வீட்டிலும் வெள்ளி, செவ்வாய் போன்ற நாட்களில் சாம்பிராணி தூபம் போட்டு வீட்டை மங்களகரமாக மாற்றுவது வழக்கம். இந்த சாம்பிராணி தூபம் போடும் முறை சித்தர்கள் வாயிலாக தெரியவந்து, நம் முன்னோர்கள் கடைப்பிடித்து இன்றுவரை நாமும் கடைப்பிடித்து வரும் அற்புதமான முறை. இந்த தூப முறையானது மகாலட்சுமி தாயார் வீட்டிற்குள் நிரந்தரமாக தங்க வைக்கும் அளவிற்கு ஆற்றல்வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்த தூபமானது தெய்வத்தை மகிழ்விப்பதற்காக மட்டுமல்லாது வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலையும் அறவே நீக்கக்கூடிய தன்மை இதற்கு உண்டு. அப்படி யான இந்த த

வ்வொரு வீட்டிலும் வெள்ளி, செவ்வாய் போன்ற நாட்களில் சாம்பிராணி தூபம் போட்டு வீட்டை மங்களகரமாக மாற்றுவது வழக்கம். இந்த சாம்பிராணி தூபம் போடும் முறை சித்தர்கள் வாயிலாக தெரியவந்து, நம் முன்னோர்கள் கடைப்பிடித்து இன்றுவரை நாமும் கடைப்பிடித்து வரும் அற்புதமான முறை. இந்த தூப முறையானது மகாலட்சுமி தாயார் வீட்டிற்குள் நிரந்தரமாக தங்க வைக்கும் அளவிற்கு ஆற்றல்வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்த தூபமானது தெய்வத்தை மகிழ்விப்பதற்காக மட்டுமல்லாது வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலையும் அறவே நீக்கக்கூடிய தன்மை இதற்கு உண்டு. அப்படி யான இந்த தூபமுறையில் சில பொருட் களைச் சேர்த்துபோடும்போது நம் இல்லத் தில் சகலமும் வசியமாகி, சகலரும் வசியமாகி எல்லாவித நன்மையும் தேடிவந்து ஐஸ் வர்யங்கள் கிடைக்க வழிசெய்யும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று தெரிந்துக்கொள்ளலாம்.

தூபம் போடுவதற்கு முதலில் சில பொருட்களை நாம் நாட்டு மருந்து கடை களில் வாங்கிகொள்ள வேண்டும். அது சாம்பிராணி, வெண் கடுகு, நாய் கடுகு, தேவதாரு கட்டை, சந்தன கட்டை, அகில், முகில், மருதாணி விதை, ஜவ்வாது பொடி, கஸ்தூரி மஞ்சள். இவற்றையெல்லாம் வாங்கி பொடி வகை களை தனியாக ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங் கள். கட்டை வகை களை தனியாக வைத்துக் கொள்ளுங் கள். இந்த தூபத்தை தினமும் காலை 6.00 மணிக்கு வீட்டில் விளக்கேற்றிய பிறகு வீட்டின் நிலை வாசலில் வைத்து இந்த தூபத்தைபோட ஆரம்பிக்கவேண்டும்.

bb

அதாவது இந்த கட்டை வகைகளை எல்லாம் சுற்றி வைத்துவிட்டு தீ மூட்டி புகை வந்த பிறகு இந்த பொடிவகைகளை தூவி தூபத்தை வளர்க்கவேண்டும்.

இந்த தூபத்தை உங்கள் வீட்டில் அனைத்து இடங்களிலும் பரவும்படி போடவேண்டும். வீட்டில் ஒரு இடம்கூட விடாமல் அனைத்து இடங்களிலும் போடவேண்டியது முக்கியம். ஏனெனில் ஏதாவது ஒரு இடத்தில் போடாமல் விட்டுவிட்டால் மற்ற இடங்களிலுள்ள எதிர்மறை சக்திகள் அந்த இடத்தில் தங்கிவிடும் என்று சொல்லப்படுகிறது. எனவே இந்த தூபத்தை வீட்டில் அனைத்து இடங்களிலும் (கழிவறை உட்பட) போடவேண்டும்.

அதேபோல் மாலை ஆறு மணிக்கு இந்த தூபத்தை போடவேண்டும். காலை- மாலை இரு நேரமும் தொடர்ந்து இந்த தூபத்தை போட்டுவரும்போது நம்முடைய வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் அனைத்தும் நீங்கி தெய்வம் நடமாட்டம் அதிகமாகி வீட்டில் நல்ல காரியங்கள் தொடர்ந்து நடக்கும். அதுமட்டுமின்றி இந்த தூபம் போடும் இடத்தில் நாம் நினைக் கும் எண்ணங்கள் யாவும் வெற்றியாகும். நாம் செய்ய நினைக் கும் காரியங்கள் எல்லாம் ஜெய மாகும் என்று சொல் லப்படுகிறது.

இந்த பொடி வகைகள் போட்டு வைக்கும் டப்பாவில் ஒரு சிறிய தர்ப் பையை போட்டு வைத்து விடுங்கள். தூபம் போடும்போது தர்ப்பை தனியாக எடுத்துவிட வேண்டும். இந்த தூப முறையை தொடர்ந்து போட்டு வரும்போது உங்களுடைய காரியங்கள் அனைத்தும் சித்தியாகி வேண்டுவன எல்லாம் உங்களுக்கு கிடைத்து வாழ்க்கையில் நீங்கள் நினைத்து பார்க்கமுடியாத நல்ல நிலையை அடைய இந்த சாம்பிராணி தூபம் முறை வழிசெய்யும். சகல ஐஸ்வர்யங்களையும் கொடுக்கக்கூடிய இந்த தூப வழிபாட்டு முறையில் உங்களுக்கு நம்பிக் கை இருப்பின் நீங்களும் உங்கள் இல்லங்க ளில் இதைக் கடைப்பிடிக்கலாம்.

செல்: 98425 50844

bala080324
இதையும் படியுங்கள்
Subscribe