னந்தத்தின் இருப்பிடமாக திகழ வேண்டிய நமது இல்லங் களில், பலவித துயரும், துன்பமும், ஆட்கொண்ட சூழ்நிலை, சிலரின் இல்லத்தில் உருவாகி விடுகின்றது.

அதோடு உறவுகளுக்கு இடையிலான பிரிவு, அன்பைப் பகிரும் இடத்தில் அடாவடி, அமைதியான சூழ்நிலையில் பயணிக்கும் சூழ்நிலையில் ஆக்ரோஷ பேச்சு, வருவாயீட்டும் இடத்தில் சுனக்கம், லாபம் தேடி நடக்க நட்டம் நாடிவருவது, போன்றவை மக்களிடையே பெரும் மன உளைச்சலையும், பாதிப்பையும், ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.

இதற்கெல்லாம் ஜாதகத்தில் தசா புக்தி, காரணமாக திகழ்ந்தாலும், அதையும் மீறி அஞ்சக்கூடிய ஆற்றல் எதிர்மறை சக்தியை கொண்டுசேர்க்கும் கண் திருஷ்டிக்கு உள்ளது.

அதன் பொருட்டே கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது, என்றார்கள் நம் மூத்தோர்கள், கண்ணடியா அப்படி என்றால்? கண்ணடி என்பது பார்வையினை குறிக்கும். ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் பார்வை வகுக்கப்பட்டுள் ளது. என்பது அனைவரும் அறிந்ததே. அதில் சுபர் பார்வை அசுபர் பார்வை என்று பகுக்கப்பட்டுள்ளது. சுப கிரக பார்வையினால் சுபத்தன்மையும், அசுபர் பார்வையினால் எதிர்மறை நிகழ்வுகளையும், சந்தித்து வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

Advertisment

அதேபோல்தான் கிரகங்களின் கூட்டு பிரதிநிதியான மனிதனின் பார்வையும் சிலருக்கு சுபிட்சத்தையும், சிலருக்கு பிரச்சினைகளையும் கொண்டு சேர்க்கும் என்பது உறுதியாகின்றது.

சரி இந்த கண் திருஷ்டியால் என்னதான் செய்துவிடமுடியும்.

கோபம், பொறாமை, குரோதம், விரோதம், பகைமை என்ற விஷ எண்ணங்கள்கொண்ட மனம் படைத்தவர்களின் விழியில் இருந்து புறப் பட்டு வெளியே வரும் நச்சு சுமந்த பார்வைக்கு தோஷங்களை உண்டுசெய்யும் வல்லமை உண்டு.

Advertisment

இந்தப் பார்வையானது ஒருவரின்மீது தீமைகளை விளைவிக்கும் அபார சக்தி உடையது. இதைதான் கண் திருஷ்டி என்கிறோம்.

இதனால் குடும்பத்தில் பல பிரச்சினைகள் நிகழும். முன்னேற்றத்தில் ஒரு தடையை உருவாக்கும், குடும்ப உறவு களுக்கு இடையே புரிதல் இல்லாத நிலையினை உருவாக்கி சண்டை, சச்சரவு உண்டுசெய்யும். ஆரோக்கியம் அற்ற சூழ்நிலையினை தரும், பணவரவில் சுணக்கத்தை தருவதோடு வியாபாரம் சரிவர அமையாதது, விவசாயம் பொய்த்துப் போவது, சோம்பல், காலம் கடத்துவது போன்ற சூழ்நிலைகள் உருவாகும். அவ்வளவு எதற்கு சமைக்கும் உணவில் ருசியெற்று போய்விடும்.

சாப்பிடும் எண்ணத்தையே ஒரு சலிப்புக்கு உரியதாக மாற்றிவிடும். தன்னை அழகாக முன்னிலைப்படுத்த விடாது. இத்தனை எதிர்மறையான நிகழ்வுகளையும் நிறுவி ஒரு இல்லத்தை ஸ்தம்பிக்க வைக்கும் வல்லமை இந்த கண் திருஷ்டிக்கு உண்டு என்பது மிகையல்ல.

dd

நமது ஆதி முனிவன் அகத்தியன் திருக்கரங்களால் உருவாக்கப்பட்ட மகா சக்திவாய்ந்த கண் திருஷ்டி கணபதியின் உருவ அமைப்பை கவனித்தோம் என்றால் அதில் விஷ்ணுவின் அம்சமான சங்கு, சக்கரம், சிவம்சமான மூன்று கண்கள், சக்தியின் அம்சமான சூலம், அனைத்து தெய்வங்களின் ஆயுதங்கள், சீரும் சிங்கம், மூஞ்சூறு வாகனம், ஆகியவற்றுடன் லட்சுமி கடாட்சத்தை பறைசாற்றும் விரித்து செந்தாமரையில், போர் கோளத்தில் உதித்த நிலையில் நிற்கும் கணபதியை உருவாக்கி அதன் வல்லமை என்ன என்பதை நாம் அறிய செய்துள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் இவரது தலையை சுற்றி ஒன்பது நாகங்களும், அக்கினி பிழம்பும் உள்ளன. 51 அச்சரங்களை, 51 கண்கள் விழித்திருக்கும் நிலையில், ஒரு அளப்பரிய சக்தியினை கருவாக்கி, உருவாக்கியதன்மூலம் இந்த கண்திருஷ்டி கணபதியின் விந்தையை நம்மால் உணர்ந்து கொள்ளமுடியும்.

ஜாதகத்தில் பொதுவாக ஆறு, எட்டு, பன்னிரண்டாம், தசைகள் வரும்பொழுது சில நெருடல்கள் உண்டாகும். அதேபோல் ராகு, கேது சந்திரன், சனி ஆகியவை சாதகமற்ற வீடுகளின் தொடர்புபெற்று தசை நடத்தும்பொழுதும் கண் திருஷ்டி அதிகமாக பாதிப்பினை ஏற்படுத்தும்.

பொதுவாக லக்னம், லக்னாதிபதி, சந்திரன் ஆகிய மூன்றும் பலம் குறைந்த ஜாதகங்களே இதுபோன்ற கண் திருஷ்டியினால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

பெரும்பாலும் நல்ல தசாபுக்தி இதன் தாக்கத்தை குறைத்தே கொடுக்கின்றது, பொதுவாக ராகு, கேது, லக்னத்தோடு தொடர்பு பெற்றிருப்பது, ராஜ திருஷ்டி எனப்படுகின்றது.

இவர்கள் ஒரு புது துணி உடுத்தினாலே போதும்.

அதீத திருஷ்டிக்கு ஆட்பட்டுவிடுவார்கள்.

ஒவ்வொருவரின் ஜாதகரீதியான தசா நிலைகளை அனுசரித்து செய்யப்படும் பரிகார முறைகள் தனிப்பட்ட வகையில் பலன் தரும்.

இருந்தபொழுதிலும் சில பொதுவான பரிகாரங்கள் இவற்றிலிருந்து விடுவிக்கும் ஆற்றல் படைத்ததாகவே திகழ்கின்றது. அவற்றில் சிலவற்றை காணலாம். வீட்டு வாசலில் கண் திருஷ்டி கணபதி வைப்பது, நிலை வாசலுக்கு முன் முற்கல் நிறைந்த கற்றாழை, சப்பாத்திக்கள்ளி போன்றவை கட்டுவது.

வாசலில் மஞ்சள் நிறமுடைய பூக்கள் பூக்கும் செடிகள் வளர்ப்பது போன்றவை கண் திருஷ்டியை ஓரளவுக்கு சமன் செய்யும்.

அதோடு மட்டுமல்லாமல் வீட்டுக்குள் தூபம் போடும் முறை கண் திருஷ்டி மற்றும் எதிர்வினை சக்திகளை அறவே அறுக்கும் வல்லமை படைத்தது. தூபம் போடும்பொழுது அதனுடன் கீழ்க்காணும் அனைத்தையும் பொடிசெய்து சேர்த்து போடும்பொழுது செய்வினை, கண் திருஷ்டி முதலான அனைத்து எதிர்மறை விளைவுகளும் அறுக்கப்படும்.

வெண்கடுகு, நாய் கடுகு, மருதாணி விதை, மாவிலை பொடி, நாயுருவி பொடி, வில்வ பொடி, வேப்பிலை பொடி, அருகம்புல் பொடி, நொச்சிப்பொடி, தேவதாரு பொடி போன்றவற்றை சேர்த்து தூபம் போட்டு வர பிரச்சினைகள் மெல்ல மெல்ல அகளுவதை கண்கூடாக காணமுடியும்.

இதனைத் தொடர்ந்து 48 நாட்கள் செய்வது மேலும் சிறப்பினை தரும். மேலே அளிக்கப்பட்டுள்ள பொருட்களில் வெண்கடுகும், நாய்க்கடுகும் ,பைரவர் சம்பந்தப்பட்ட பொருட்கள். வேப்பிலை அம்மன் சம்பந்தப்பட்ட பொருள்.

அருகம்புல் விநாயகர் கையாளக்கூடிய மூலிகை, மேலும் மருதாணி விதை பொடி மகாலட்சுமியின் அம்சம் இவையனைத் தும் தூபமாக மாறி இல்லத்தை காத்துநிக்கும் சூழலை உருவாக்கும்.

இதனுடன் செவ்வாய்க்கிழமைகளில் சனி ஓரையிலும் சனிக்கிழமைகளில் செவ்வாய் ஓரைகளிலும் வரமிளகாய் மற்றும் கல் உப்பு சேர்த்து சுற்றி முச்சந்தியில் போட்டு எரிப்பது மேலும் கண் திருஷ்டியினை காணாமல் செய்யும்.

செல்: 80563 79988