சனி தசை
இது 19 வருடங்களைக் கொண்ட தசையாகும். பொதுவாக சனி என்றாலே, நோய், சோம்பல், விருத்தி இல்லாமை, தடை, தாமதம் என இவையே பெருமளவிற்கு நடக்கும். சனி முக்கியமாக கால் மற்றும் முட்டுகளைக் குறிப்பார். கை- கால் இழுத்துக்கொள்வது, தசைகளில் வலி, நரம்புவலி, வயிற்றில் கோளாறு, வழுக்கை விழுதல், மனம் பேதலித்தல், வாயுக்கோளாறு, தாடையில் இம்சை, கழிவு உறுப்புகளில் கஷ்டம் என இவற்றை சனி பகவான் தருவார்.
சனியின் தானியம் எள் ஆகும் மற்றும் கடுகு, நிலக் கடலை அனைத்து எண்ணெய் வகைகள், பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, ஆமணக்கு, வாழை, உருளைக்கிழங்கு, பார்லி, கருப்புநிற தானியங்கள் என இவற்றை சனி உணவுப் பொருளாகக் குறிப்பார்.
சனி தசை- சனி புக்தி
இந்த சனி தசை ஆரம்பித்துவிட்டது என்பதை, உங்களுக்கு வரும் அதிகப்படியான தூக்கமும், அதிக சோம்பலும், நோய்வாய்படுதலுமாக காட்டிக்கொடுக்கும். சனி தசை ஆரம்பித்தவுடன், அனேகமாக அனைத்து ஜாதகர் களும், கால் வலி தாங்க முடியவில்லை என அரற்ற ஆரம்பித்து விடுவர். ஆக, இந்த தசை ஜாதகரை நடக்க முடியாமல் பண்ணிவிடும். சனியின் காரகம் எள். எனவே எள் தானம் நன்று. ஆனால் எள்ளை மட்டும் தனியாக கொடுத்தால் யாரும் வாங்க மாட்டார்கள். எனவே எள் உருண்டையாக கொடுத்தால், எள்ளும் இனிப்பும் கொடுப்பவருக்கும், வாங்குபவர்க்கும் பரம சௌகர்யமாக உணர்வர். சனி தசைக்கு, சனீஸ்வரரை வணங்கவேண்டும். முதிய ஊனமுற்றவருக்கு உதவுதல் நல்லது.
சனி தசை- புதன் புக்தி
இந்த தசாபுக்தி, பொதுவாக, மூட்டுகள் சேரும் இடங் களான, மூட்டு, கணைக்கால், கைகள், தோள்பட்டை, விரல் மூட்டுகள் என இப்பகுதிகளை வச்சு செஞ்சுவிடும். நரம்புத் தளர்ச்சியை கொடுத்துவிடும். சிலருக்கு புக்தி பிசகுவது ஏற்பட்டு, வார்த்தைகள் குளறும். வாதம் ஏற்படும். உடம்பு முழுவதும் சோர்வும் பலவீனமும் ஆகிவிடும். சிலருக்கு கால்கள் தசை சுருங்கி, தேமல் படர்ந்தபோல் ஒருவித அருவெருப்பு தோற்றம் தரும். இந்தக்காலக் கட்டத்தில் கால்கள் விஷயத்தில் அதிக கவனம் தேவை. சனி எள் தானியத்தைக் குறிக்க, புதன் பச்சைப் பயறை குறிப்பார். எள் சாதமும், பச்சைப்பயறு சுண்டலும் உண்ணமும், வழங்கவும் சரியாக இருக்கும். சென்னை பொழிச்சலூர் சென்று வணங்கலாம். அருகிலுள்ள சனீஸ்வர பகவானுக்கு, வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து வணங்கலாம். அல்லது ஆஞ்சனேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடவும். துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகளின் படிப்பு செலவுக்கு உதவவும்.
சனி தசை- கேது புக்தி
இந்த இரண்டு, கிரகங் களுமே, நோயைக் கொடுக்கக்கூடிய கிரகங் கள். இந்தக் கால நேரத் தில், ஜாதகர்களின் கால்களில் மிக கோளாறை உண் டாக்கி, அவர்களின் நடமாட்டத்தை தடை செய்துவிடும். எனவே அவர்கள் நோய் காரணமாக, ஓரிடம் முடங்கிவிடுவர்.
அந்த முடக்கத்துக்கு காரணம், முழங்கால் நோய், கால் தடித் துப்போவது, காலில் கொப்புளம் வருவது, கால் நரம்பு சுருட்டிக் கொள்வது, காலில் சீழ் வைத்தல், கணைக் கால் வீங்குவது என ஏதோ ஒன்று காரணமாகி, ஜாதகர் ஒரே இடத்தில் நிலை கொண்டு விடுவார். சனி எள்ளைக் குறிக்க, கேது கொள்ளு தானியம் குறிப்பார். எள் சாதமும், கொள்ளு துவையலும் சாப்பிடவும், வழங்கவும் சரியாக இருக்கும். காளஹஸ்தி, பாதாள கணபதியை வணங்கு வது நல்லது. அருகிலுள்ள விநாயகர் கோவிலுக்கு, நல்லெண்ணெய் வாங்கிக் கொடுங்கள். நல்லெண்ணெயை காலில் தேய்த்துவிட்டு, தலைக்கும் குளியுங்கள். கோவில் வாசலிலுள்ள யாசருக்கு, உணவு வாங்கிக்கொடுங்கள்.
சனி தசை- சுக்கிர புக்தி
இந்தக் கால நேரத்தில் கால்களில் நீர் கோர்த்துக்கொள்ளும். கர்ப்பபையில் ஏதேனும் வில்லங்கம் தோன்றும். நீரழிவு நோய் மெதுவாக எண்டரி கொடுக்கும். இப்போது புண் எங்கு ஏற்பட்டாலும், அதில் நீர் வடியும் தன்மை இருக்கும். இந்தக் காலக்கட்டத்தில் ஏற்கெனவே, நீரழிவு நோய் இருப்பவர்கள். கால்களை, பாதங்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளவேண்டும். ஏனெனில், கால் பாதம் இவை அகற்றப்படும் நிலை உண்டாகும் வாய்ப்புண்டு. சனியின் தானியம் எள். சுக்கிரன் இனிப்பைக் குறிப்பார். எனவே வறுத்த எள்ளையும், பொடித்த சர்க்கரையும் சேர்த்தரைத்து எள் உருண்டை செய்து சாப்பிடவும்; தானமும் செய்யலாம். காஞ்சிபுரம் சென்று ஏகாம்பரநாதர் கோவில்சென்று வணங்கலாம். அருகிலுள்ள, சனீஸ்வரருக்கு வெல்லம் அல்லது சர்க்கரை யுடன் வணங்கவும். கஷ்டப்படும் இளம் பெண்களுக்கு, எவர்சில்வர் பாத்திரம் வாங்கிக்கொடுங்கள். அந்த பாத்திரத்தில் கொஞ்சம் இனிப்புவகைகள் போட்டு கொடுப்பது விசேஷம்.
சனி தசை- சூரிய புக்தி
இந்த இரு கிரகங்களும், மிக பகை உடைய கிரகங்கள். எனவே இந்த தசாபுக்தி காலத்தில், ஜாதகரை மிக வலியில் துடிக்க வைப்பது நீயா- நானா? ஒரு கை பார்த்து விடுவோம் என்று, மாற்றி, மாற்றி நோயை வாரி வழங்குவர். தொடை எலும்பு முறியக் கூடும். அதிக சளி கட்டிக்கொள்ளும். மாரடைப்பு ஏற்படும். முழங்காலில் வலி அதிகரிக்கும். இந்த நேரத்தில் சளி, கோழை அதிகம் ஏற்பட்டால், உடனே தகுந்த மருத்துவரை பார்க்கவேண்டும். ஈஸினோ பீலியா, இதய நோய் இவை பாடாய்படுத்தும். சனி எள் தானியத்தைக் குறிக்க, சூரியன் கோதுமையைக் குறிப்பார். இரண்டையும் தனித்தனியே பக்குவம் செய்து சாப்பிடவும். திருநள்ளாறு சென்று வணங்கலாம். அருகிலுள்ள கோவிலில், ஞாயிற்றுக்கிழமை, சனீஸ்வர பகவானுக்கு தீபம், நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும். கீழ்மட்ட வேலை செய்வோரின், தந்தைக்கு தேவைக் கேட்டறிந்து உதவவும்.
சனி தசை- சந்திர புக்தி
இந்தக் கால நேரத்தில், நோய் வந்தது, மாத்திரை சாப்பிட்டோம். சரியாகப் போய் விட்டது என இருக்கவே இருக்காது. "போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோடு' என்கிற கதையாக சுகமாகிவிட்டது என்று நினைத்த நோய், பூமராங் மாதிரி திரும்ப வந்து தாக்கும். சனி கால்களைக் குறிக்க, சந்திரன் அதில் நீர் கோர்க்க வைத்து, கால் களை யானைக் கால் அளவிற்கு வீங்க வைத்துவிடுவார். சிலரின் முழங்கால் மூட்டு நழுவுவதும் இப்போது நடக்கும். நுரையிரலில் அதிக சளி சேர்த்துக்கொள்ளும். மார்பில் சீழ் பிடித்து மூச்சுவிட சிரமமாகும். விலா எலும்புகளில் காயம் ஏற்படும். சிலர் தலையில் நீர் கோர்த்து, மிகுந்த தலைவலியால் அவதிப்படுவர். சனி எள் தானியத்தைக் குறிக்க, சந்திரன் அரிசியைக் குறிப்பார்.
எனவே எள் சாதம் தயாரித்து, முதலில் காகத் துக்கு வைத்துவிடுங்கள். திருச்சி ஜம்புகேஸ் வரர் கோவிலுக்கு ஒரு முறை சென்று வழிபடவும். அருகிலுள்ள கோவிலில், சனீஸ் வரர் சந்நிதிக்கு, அபிஷேகப் பொருட்களை காணிக்கை செலுத்தவும். கூடவே, அந்த சந்நிதி அர்ச்சருக்கு, தாராளமாக தட்சணை கொடுங்கள். இதனால் சொஸ்தமாகிவிட்ட நோய், திரும்ப வராது. கீழ்மட்ட தொழிலாளர் களின் தாயாருக்கு, தேவை கேட்டறிந்து உதவவும்.
சனி தசை- செவ்வாய் புக்தி
இதுவும் இருப்பதிலேயே மிக மோசமான தசாபுக்தி காலமாகும். இதில் யார் பெரியவர், யார் பெரிய ரௌவுடி எனும் போட்டி நடந்து, ஜாதகர் கசக்கி பிழியப்படுவார். ரத்தத்தில் சிகப்பணுக்கள் குறையும். ரத்தம் சுண்டி, சோகை உண்டாகும். எலும்புகள் பாதிக்கப்பட்டு, சிலருக்கு கை- கால் நீக்கப்படும் அபாயம் உண்டு. ஏற்கெனவே கால்வலி இருப்பவர்கள், இந்த நேரத்தில் கடுமையான வலி அவஸ்தையை உணர்வர். செவ்வாய் அறுவை சிகிச்சையைக் குறிப்பார். எனவே இந்த நேரத்தில் நிறைய ஜாதகர்கள் இருக்கிற முட்டியை கழட்டி போட்டுவிட்டு, ஆபரேஷன்மூலம் புது முட்டியை போட்டுக்கொள்வர். சனியும், செவ்வாயும் இணைந்த காலம், ஜாதகரை நோயினால் இளைக்கச் செய்யும். சனி எள்ளினை குறிக்க, செவ்வாய் துவரையைக் குறிப்பார். சாம்பார் சாதமும், எள் துவையலும் சரியான காம்பினேஷன். கேட்டுவாங்கிச் சாப்பிடுவர். திருவண்ணமாலை சென்று சேவிக்கவும். அருகிலுள்ள சனீஸ்வரரை, துவரம் பருப்பை பாதத்தில் வைத்துக் வணங்கவும். கீழ்நிலை ஊழியர்களின், இளம் வயது சகோதரருக்கு தேவைக் கேட்டறிந்து உதவவும்.
பைரவரை வழிபடுவது, ஆயுளை மேம்படுத்தும்.
சனி தசைலி ராகு புக்தி
இது மகா மட்டமான ரொம்ப மோச மான தசாபுக்தி ஆகும். குஷ்ட நோய் தாக்கும். கை- கால்களில் வாதம் தாக்கி, படுத்த படுக்கையாகி விடுவர். புற்று நோய் வரும் வாய்ப்புண்டு. ஆஸ்த்துமா ரொம்ப தீவிரமாகும். கால் வீங்கிவிடும். அல்லது எலும்பு முறிவு ஏற்படும். பெரிய பெரிய நோய்கள் குறிப்பிடபட்டுள்ளது. ஏனெனில் சனியும், ராகுவும் படு பாதக கிரகங்கள் ஆவர்.
எனவே அவர்களால், சின்ன வியாதிகளைக் கொடுக்க இயலாது. அவர்களின் கெத்து குறைந்துவிடும். எனவே இருப்பதிலேயே பெத்த, பெத்த நோய்களைக் கொடுத்து, தங்கள் பெருமையை தக்க வைத்துக் கொள்வர். சனி எள் தானியத்தைக் குறிக்க, ராகு உளுந்தைக் குறிப்பார். உளுந்து சாதமும், எள் துவையலும் ஏற்புடையது. கறுப்புத் தோளுவுடன்கூடிய உளுந்தை பயன்படுத்து வது கிரக சம்பந்தமாகவும், சத்துணவு சம்பந்த மாகவும் மிகவும் நல்லது. கண்டிப்பாக கால பைரவரை வணங்கவேண்டும். பைரவருக்கு எள்ளுருண்டை, உளுந்துவடை, கறி வப்பிலை சாதம், நாவல்பழம், கருப்பு திராட்சை என இதில் எதையாவது ஒன்றை வைத்து, கால பைரவரை வழிபடவும். சிறிய வேலை செய்யும் இஸ்லாமியருக்கு தேவையறிந்து உதவவும்.
சனி தசை- குரு புக்தி
சனி நோயின் காரகர். குரு சதைப்பிடிப்பை, கொழுப்பை குறிப்பவர். எனவே தசையுள்ள இடத்தில் எல்லாம் பிடித்துக்கொள்ளும். இடுப்பு பிடிப்பு ஏற்படும். கால்களில் ஆடு சதை ஆட்டம் காணும். கணைக்காலில் சுளுக்கு உண்டாகும். வயிறு உப்பிசமாக காணப்படும். சிலருக்கு இதயம் வீங்கி இருப்பதுபோல் உணர்ந்து, வலி எடுக்கும். சிலருக்கு அடி வயிறு பிடித்து இழுப்பதுபோல் உணர்வர். மலச்சிக்கல் அவதி தரும். சிலருக்கு, மருத்துவர், உங்களின் அதிக எடையே, அத்தனை நோய்க்கும் காரணம் என்பார். ஆனால் உடல் எடையைக் குறைக்கும் முயற்சிகள் தோல்வியை தரும். சனி எள் தானியத்தைக் குறிக்க, குரு கொண்டைக் கடலையை குறிப்பார். கொண்டைக்கடலை சுண்டலும், எள் மிட்டாயுமாக தனித்தனியே சாப்பிட்டுக்கொள்ள வேண்டியதுதான். கொடுமுடி சென்று வணங்கலாம். அருகி லுள்ள சிவன் கோவிலில், சனிக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்கலாம். கிராமக் கோவில் பூசாரிகளுக்கு, தேவைக் கேட்டறிந்து உதவவும். குலதெய்வ அர்ச்சகருக்கு தாராள மாக காணிக்கை செலுத்தவும்.
சனி தசை ஆரம்பித்தவுடன் சனீஸ்வரரை யும், ஆஞ்சனேயரையும் வணங்கவும். அனுமன் சா−ஸா பாராயணம் நல்லது.
செல்: 94449 61845