ராகு தசை

எல்லா தசைகளையும்விட இந்த ராகு தசை, ஜாதகர்களை மிகமிக துன்பப்படுத்தும். இது பெருக்கத்துக்குரிய கிரகம். எனவே எந்த நோய் வந்தாலும் பல்கி பெருகிவிடும். ராகுபகவான், தோல்நோய், அம்மை, தொழுநோய், ஆஸ்துமா, மண்ணீரல் வீங்கிப்போவது, கிருமித் தொல்லை, அலர்ஜி, பாதம் வலி, சிறுநரம்புகள், சிறுநீர் குழாய், ஆடுசதை, வாயுக்கோளாறு, வாய், உதடு, காது, மலக் குடல் சார்ந்த நோய்கள், விஷக்கடி என இவ்வகை நோய்களைத் தருவார். ராகு உளுந்து தானியத்தைக் குறிப்பார். மேலும் கேழ்வரகு, பூசணிக்காய், முட்டை கோஸ், முட்டை, அசைவ உணவுகள், மாம்பழம் என இவற்றைக் குறிப்பார்.

ராகு தசை- ராகு புக்தி

இந்த ராகு தசை ஆரம்பித்துவிட்டது என்பதை, ஜாதகர்கள் ஜோதிடர்களிடம் சென்று கேட்காமலேயே ஒரு நிகழ்வின்மூலம் தெரிந்துகொள்ளலாம். ஆமாம், ஏதாவது ஒரு நாய் ஓடிவந்து கடித்துவிடும். பாம்புக்கடி உண்டு. அல்லது ஏதேனும் விஷப்பூச்சி கடித்துவிடும். அல்லது நீங்களே தெரியாமல், ஏதேனும் மருந்தை குடித்துவிடுவீர்கள். அல்லது அம்மை வந்துவிடும். அட, ரொம்ப ஓவராக குடிக்க ஆரம்பித்து, அடிக்கடி மட்டை ஆகிவிடுவீர்கள். மட்டமான பெண்களின் தொடர்பு ஏற்படும். சிற்றின்ப ஆசை வலுக்கும்.

Advertisment

பின் அதுவே நோயின் காரணமாக மாறி விடும். சிறுநீரகக் கோளாறின் ஆரம்பக்கட்ட அறிகுறி தோன்றும். ராகு உளுந்தைக் குறிப்பதால் அடிக்கடி உளுந்து வடை செய்து கொடுக்கவும். கூட இருப்பவர்களுக்கு அவ்வப்போது, டீ, காபி குடிக்கும்போது, மெதுவடை வாங்கிக்கொடுக்கவும். தில்லைக் காளியை வணங்கவும்.

ராகு தசை- குரு புக்தி

ராகு பெருக்கத்தைக் குறிக்க, குரு கொழுப்பைக் குறிப்பார். எனவே தன்னிச்சையாக, ஜாதகர்கள் செம குண்டாகி, நடக்க, உட்கார வெகு சிரமப்படுவர். இந்த அதிக உடல் எடையே, பெரிய நோயாக மாறிவிடும். வாதம் வந்துவிடும். இடுப்பு பிடித்துக்கொள்ளும். தண்டு நாளங்களில் வலிவரும். தொடை பிடித்துக்கொள்ளும். கண்டிப்பாக மூட்டு, கால்கள், பாதம் வீங்கி வலி எடுக்கும். அடிவயிற்றில் கொழுப்புக்கட்டி சேர்ந்து, பிரச்சினை தரும். ராகு உளுந்தைக் குறிக்க, குரு கொண்டைக் கடலையைக் குறிப்பார். உளுந்துவடையும், கடலை சுண்டலு உண்ணவும் வழங்கவும் ஏற்புடையது. தஞ்சை மாவட்டம் வடுவூர் சென்று இராமரை தரிசிப்பது நல்லது. கோவில் குளத்தில் மீன்களுக்கு உளுந்து சாதம் போடலாம்.

Advertisment

rr

ராகு தசை- சனி புக்தி

இது ஒரு கொடூரமான நோய்க் காலமாக அமையும். இந்நேரத்தில் வரும் நோய், பெருகிவிடும். படர்தாமரை அல்லது கன்னத் தில் கருப்புத்திட்டு, உடம்பில் தேமல் போன்ற நோய் என நிறைய தோல் நோய் வரும். இந்நேரத்தில் மிகச் சிலருக்கு குஷ்டம் ஏற்படும். வாதநோய் வாட்டும். மூட்டுவலி பிராணன் போகும். ஆஸ்துமா வரும் வாய்ப்புண்டு. எலும்புகளில் சீழ் கட்டும். இதய துடிப்பு தாறுமாறாகும். இக்கால கட்டத்தில் சிலருக்கு கால் அல்லது கையை நீக்கும் அபாயம் ஏற்படும். ராகு உளுந்தைக் குறிக்க, சனி எள் தானியத்தைக் குறிப்பார். உளுந்து சாதமும், எள் துவையலும் ஏற்புடையது. திருவாடனை அருகிலுள்ள பாகம் பிரியாள் கோவில்சென்று வணங்கவும். அருகிலுள்ள கோவில் நவகிரகத்தில், ராகு பகவானுக்கு சனிக்கிழமையன்று நல்லெண்ணெய் தீபமேற்றவும். இஸ்லாமிய நண்பர்களுக்கு எள் மிட்டாய் வாங்கிக்கொடுங்கள்.

ராகு தசை- புதன் புக்தி

ராகு கறுப்பு நிறத்தைக் குறிக்க, புதன் தோல் வியாதியைக் குறிக்க, தோல் முழுவதும் கருப்பு நிற படர்நோய் படரும். கன்னம், கழுத்தில் பொன்னுக்கு வீங்கி நோய் வரும். தொண்டையில் ஏதேனும் வலி வரும். தோள்வலி பரவும். காது குடைச்சல் கொடுக்கும். அல்லது காதில் சீழ் பிடிக்கும். சிலருக்கு அடிக்கடி விக்கல் ஏற்பட்டு, அதுவே நோயாக மாறும். ராகு உளுந்தைக் குறிக்க, புதன் பச்சைப் பயிறை குறிப்பார். உளுந்து வடையும், பச்சைப் பயிறு சுண்டலும் உண்ணவும் வழங்கவும் ஏற்றது. புன்னை நல்லூர்- மாரியம்மனை வணங்கலாம். அருகி லுள்ள பெருமாள் கோவிலில் அனந்த சயன பெருமாளை வணங்கவும். இஸ்லாமிய சிறுவர்களுக்கு, விளை யாட்டுப் பொருட்கள், புதிர் விளையாட்டு புத்தகம் இவை வாங்கிக் கொடுக்கலாம்.

ராகு தசை- கேது புக்தி

ஒரு செந்நிற பாம்பு, ஒரு கருநிற பாம்புக்கு இடையே ஜாதகர் மாட்டிக்கொண்டதாக அர்த்தம். இந்த ஒரு தசை- புக்திக்கு மட்டும், குறிப்பிட்ட வியாதிகள் வரும் என்று கூற இயலாது.

ராகு- கேதுவிற்கு சொந்த வீடு கிடையாது. எந்த வீட்டில் இருக்கின்றனரோ அதனை அடிப்படையாகக்கொண்டு நோய் தருவர். எனினும் பொதுவாக, இந்த ராகு தசை- கேது புக்தியில் நிறைய விஷம் சம்பந்தம் ஜாதகருக்கு ஏற்படும். அது நாய், எலி, தேனி, வண்டு, பாம்பு என விஷ பூச்சி கடிப்பதால் உபாதை ஏற்படும். மயக்க நிலையில் ஜாதகரை தள்ளிவிடும். இந்த மயக்கம் என்பது விஷக்கடியால் இருக்கலாம். அறுவை சிகிச்சைக்குமுன் கொடுக்கும் மருந்து மயக்கமாக இருக்கலாம். அதிகம் குடிக்க வைத்து வரும் மயக்கமாக இருக்கலாம். வேண்டுமென்றே, மெதுவான உயிர்கொல்லும் விஷங்களைச் செலுத்தி, வரவழைக்கப்பட்ட மயக்கமாக அமையலாம். வெளியே சொல்லமுடியாத, பெரு வியாதிகள் வரக்கூடும். எது எப்படியாயினும். ஜாதகர் வெளியுலகின் வெளிச்சத்திற்கு வர இயலாமல் போகும் நிலையை, இந்த ராகு- கேதுக்கள் உண்டாக்கிவிடுவர். எனவே ஜாதகர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். ராகுவுக்குரிய உளுந்தை கஞ்சியாகவும். கேதுவுக்குரிய கொள்ளை துவையலாகவும் செய்து சாப்பிடலாம். இம்மாதிரி மிகமிக துன்ப காலங்களில், சீரடி சாய்பாபா, காஞ்சி பெரியவர், இராகவேந்திரர் மற்றும் உங்கள் ஊரிலுள்ள சித்தர் பீடங்களை மனமார வணங்குங்கள்.

ராகு தசை- சுக்கிர புக்தி

இந்தக் கால நேரத்தில் பெண்களுக்கு கர்ப்பபையில், தீட்டுக்கட்டி சேர்ந்து, வயிறு வீங்கினாற்போல் ஆகிவிடும். சிலருக்கு குடல்வால் நோய் இம்சைபடுத்தும். சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும். மேலும் கிருமிகள் சம்பந்த நோய் மூத்திரம் மற்றும் கண், காதுகளில் ஏற்பட்டு வெகு துன்பம் தரும். முகம், கன்னம் இவை கருநிற படை சேர்ந்து, அருவெறுப்பு கொடுக்கும். இந்தக் காலத்தில், பெண்கள் கர்ப்பபை சம்பந்தமாக, கொஞ்சம் முன் ஜாக்கிரத்தையாக இருப்பது நல்லது. ராகு உளுந்தை குறிக்க சுக்கிரன் இனிப்பைக் குறிப்பார். எனவே ஜிலேபி, ஜாங்கிரி போன்றவைத் தயாரித்து, உண்ணவும், விநியோக்கவும் செய்யலாம். பட்டீஸ்வரம் துர்க்கையை வணங்கவும். இஸ்லாமிய இளம்பெண்களுக்கு, ஜாங்கிரி வாங்கிக் கொடுங்கள்.

ராகு தசை- சூரிய புக்தி

இது ஒரு கிரகண நிலை தசா, புக்தி ஆகும். சூரியன் முக்கியமாக இதயத்தைக் குறிப்பார். இதில் ராகு சம்பந்தம் ஏற்பட்ட வுடன், நிறைய ஜாதகர்களுக்கு இதய படபடப்பு ஆரம்பிக்கும். இதனால் கண் இருட்டிக்கொண்டு, மயக்கம் வரும். கடுமையான காய்ச்சல் ஏற்படும். எலும்புகள் முதுகுத்தண்டு இவை கடுமையான கோளாறுகளைக் காட்டிக்கொடுக்கும்.

இதனால் அனேக ஜாதகர்கள் நகர முடியாமல் ஒரே இடத்தில், கட்டிப்போட்டதுபோல் சிறைப்பட நேரும். இதுதான் ராகு- சூரியனின் கிரகண நிலை நோய்த் தாக்கமாகும். சிலர் கண் பிரச்சினையினாலும், இவ்விதம் ஒரே இடத்தில் முடங்க நேரிடும். ராகு உளுந்தைக் குறிக்க, சூரியன்- கோதுமை யைக் குறிப்பார். இரண்டுமே கஞ்சியாக்கி குடிக்க ஏற்றது. திருவண்ணாமலை சென்று, அருணாச்சலஸ்வரரை வணங்குவது நல்லது. அருகிலுள்ள ஆலயத்தில், ஞாயிற்றுக் கிழமைகளில், காளிக்கு, விளக்கேற்றி வணங்கவும். இஸ்லாமிய பெரியவர்களின் தேவை கேட்டறிந்து உதவவும்.

ராகு தசை- சந்திர புக்தி

இந்த தசை- புக்தி காலத்தில் அனேக ஜாதகர்களுக்கு மனக்குழப்பம், மனக்கிலேசம், ஞாபகமறதி, சொன்னதையே திருப்பிச் சொல்தல், வீண் கற்பனை பைத்தியம் பிடித்த மாதிரி புலம்புதல், எதைப் பார்த்தும் பயப்படுதல், அனாவசியமான கவலைகள், மனச்சிதறல், தூக்கம் வராமல் தவிப்பது, மனநோய், சில ஜாதகர்கள் யாரோ ஒருவர், இவர் காதுக்குள் பேசுவதாக கூறுவது என எப்போதும் மனப்பதட்டத்தில், படபடப்புடன் இருப்பர். எனவே இந்த தசை- புக்தி ஆரம்பித்தவுடன், ஜாதகர்கள் தியானம் செய்ய ஆரம்பிக்கவேண்டும். இந்த அடிப்படை மனநோய், பிற வியாதி களைக் கூட்டிக் கொண்டுவரும். இராமேஸ் வரம் சென்று வணங்குவது சாலச் சிறந்தது. அருகிலுள்ள துர்க்கையை வணங்கவேண்டும். ராகு உளுந்தைக் குறிக்க சந்திரன் அரிசியைக் குறிப்பார். எனவே இட்லி, தோசை போன்ற காலை நேர உணவுகள் உண்ணவும், விநியோகத்துக்கும் நல்லது. மனநோய் மருத்துவமனைக்கு உதவவும்.

ராகு தசை- செவ்வாய் புக்தி

இந்த தசை, புக்தி இணைவும் சற்று கலவரமான காலகட்டம்தான். செவ்வாய் இரத்தத்தை குறிப்பதால், இரத்த அழுத்தம் அதிகமாகும். பித்தம் அதிகமாகி, மண்ணீரல் வீங்கிப் போகும். இதயத்திலுள்ள சிறு நரம்புகள் தகராறு பண்ணும். மார்பில் படபடப்பு அதிகமாகும். பற்களில் ஈறுவீக்கம் ஏற்படும். அநேக ஜாதகர்கள் விபத்தைச் சந்திப்பர். உங்களில் சிலர் திருடர்களிடம் அகப்பட்டு, பொருளையும் இழந்து, செமத்தியாக அடியும் வாங்கிக்கொண்டு வருவீர்கள். நிறைய காயங்களும், இரத்த இழப்பும் ஏற்படும் காலமாக அமையும். ராகு உளுந்தைக் குறிக்க, செவ்வாய் துவரையைக் குறிப்பார். இரண்டும் இணைந்த சாம்பார் வடை சாப்பிடவும் வழங்கவும் நல்லது. திருநாகேஸ்வரம் சென்று, பாலாபிஷேகத்தால் ராகுவை குளிரச் செய்வது நல்லது. அருகிலுள்ள கோவிலில், செவ்வாய்க்கிழமை ராகு பகவானை தீபமேற்றி வணங்க வேண்டும். நாக சுப்பிரமணியரை வணங்குங்கள். இஸ்லாமிய இளைஞர்களின் தேவைக் கேட்டறிந்து உதவுவங்கள்.

ராகு தசை ஆரம்பித்தவுடன், மகா காளியின் பாதங்களை இறுக்கமாக பற்றிக்கொள்ளுங்கள். வாரந்தோறும் எலுமிச்சை பழத்தை காளி, துர்க்கையின் பாதத்தில் வைத்து பின் வீட்டு பூஜையறையில் வைத்துக்கொள்ளவும். மகிஷாசுரமர்த்தினி சுலோகம் அல்லது துர்க்கை பாடல்களை பாடுவது நல்லது.

செல்: 94449 61845