செவ்வாய் புக்திகள் தரும் நோய் தாக்கங்கள்! ஆர். மகாலட்சுமி

/idhalgal/balajothidam/disease-effects-mars-bukthis-r-mahalakshmi

செவ்வாய் தசை

இதன் தசாக் காலம் ஏழு வருடங்கள் ஆகும். செவ்வாய் ஒரு அதிக உஷ்ண கிரகம். இது பொதுவாக இரத்தத்தைக் குறிப்பது. எலும்பு மஜ்ஜை, இரத்தம், தலை, இரத்த நாளங்கள், கழுத்து, மலக்குடல், இரத்த அழுத்தம், வலிப்பு நோய், பித்தம் சம்பந்த நோய்கள், புண்கள், அடிபடுவதால் வரும் காயங்கள், மூட்டுவலி, பல்வலி, இதயம், ரத்த சிவப்பணு என இவற்றைக் குறிக்கும்.

செவ்வாயின் தானியம் துவரை ஆகும். மேலும் பாகற்காய், முருங்கை, பீட்ரூட், கருப்புக்கட்டி, சிவந்த பழங்கள், மூங்கில், வேர்க்கடலை, காப்பி, தேயிலை, கடுகு, வெல்லம், புழுங்கல் அரிசி, பூண்டு, கொத்தமல்லி மற்றும் அசைவ உணவுகளை காரகமாக கொண்டவர் செவ்வாய் ஆவார்.

செவ்வாய் தசை- செவ்வாய் புக்தி

இந்த காலம் ஆரம்பித்தவுடன் ஜாதகர்கள் உடல் தன்மை உஷ்ணமாவதாக உணர்வர். எவ்வளவு தண்ணீர் குடித்தாலும், நாக்கு வரண்டு இருக்கிறது என்பர். அங்கங்கே காயம் கொப்பளிக்கும். ஏனோ தலையில் அடிபட்டுக் கொள்வீர்கள். பெண்களுக்கு மாதவிடாய் இரத்தப்போக்கு அதிகரிக்கும். இரத்தமூலம், மூத்திரக் கோளாறு என இவை அதிகரிக்கும். செவ்வாய், துவரையை குறிப்பதால், அதனை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. பழனி முருகனை வணங்குவது நன்று.

செவ்வாய் தசை- ராகு புக்தி

மிகக் கடினமான தசா, புக்திகளுள் இதுவும் ஒன்று. இரு பாவர்கள் சேர்ந்து, ஜாதகரின் காலக்கட்டத்தை நகர்த்துவார் கள். செவ்வாய் இரத்தைக் குறிக்க, ராகு விஷத்தைக் குறிப்பிடுவார். எனவே இந்த கால நேரத்தில் நாய் கடிக்கும். எலி குதறிவிடும். பாம்பு சிண்டிப் பார்க்கும். இதனால் ஜாதகர்களின் இரத்தத்தில், விஷம் கலக்கும் வாய்ப்பு வரும். மேலும் குஷ்டம், கால் ரொம்ப வீங்கி போதல், தீக்காயம் ஏற்படுதல், இளம் பெண்களுக்கு மிக அதிக தீட்டுக

செவ்வாய் தசை

இதன் தசாக் காலம் ஏழு வருடங்கள் ஆகும். செவ்வாய் ஒரு அதிக உஷ்ண கிரகம். இது பொதுவாக இரத்தத்தைக் குறிப்பது. எலும்பு மஜ்ஜை, இரத்தம், தலை, இரத்த நாளங்கள், கழுத்து, மலக்குடல், இரத்த அழுத்தம், வலிப்பு நோய், பித்தம் சம்பந்த நோய்கள், புண்கள், அடிபடுவதால் வரும் காயங்கள், மூட்டுவலி, பல்வலி, இதயம், ரத்த சிவப்பணு என இவற்றைக் குறிக்கும்.

செவ்வாயின் தானியம் துவரை ஆகும். மேலும் பாகற்காய், முருங்கை, பீட்ரூட், கருப்புக்கட்டி, சிவந்த பழங்கள், மூங்கில், வேர்க்கடலை, காப்பி, தேயிலை, கடுகு, வெல்லம், புழுங்கல் அரிசி, பூண்டு, கொத்தமல்லி மற்றும் அசைவ உணவுகளை காரகமாக கொண்டவர் செவ்வாய் ஆவார்.

செவ்வாய் தசை- செவ்வாய் புக்தி

இந்த காலம் ஆரம்பித்தவுடன் ஜாதகர்கள் உடல் தன்மை உஷ்ணமாவதாக உணர்வர். எவ்வளவு தண்ணீர் குடித்தாலும், நாக்கு வரண்டு இருக்கிறது என்பர். அங்கங்கே காயம் கொப்பளிக்கும். ஏனோ தலையில் அடிபட்டுக் கொள்வீர்கள். பெண்களுக்கு மாதவிடாய் இரத்தப்போக்கு அதிகரிக்கும். இரத்தமூலம், மூத்திரக் கோளாறு என இவை அதிகரிக்கும். செவ்வாய், துவரையை குறிப்பதால், அதனை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. பழனி முருகனை வணங்குவது நன்று.

செவ்வாய் தசை- ராகு புக்தி

மிகக் கடினமான தசா, புக்திகளுள் இதுவும் ஒன்று. இரு பாவர்கள் சேர்ந்து, ஜாதகரின் காலக்கட்டத்தை நகர்த்துவார் கள். செவ்வாய் இரத்தைக் குறிக்க, ராகு விஷத்தைக் குறிப்பிடுவார். எனவே இந்த கால நேரத்தில் நாய் கடிக்கும். எலி குதறிவிடும். பாம்பு சிண்டிப் பார்க்கும். இதனால் ஜாதகர்களின் இரத்தத்தில், விஷம் கலக்கும் வாய்ப்பு வரும். மேலும் குஷ்டம், கால் ரொம்ப வீங்கி போதல், தீக்காயம் ஏற்படுதல், இளம் பெண்களுக்கு மிக அதிக தீட்டுக்கான இரத்தப் போக்கு ஏற்படுதல், (இந்த தசா, புக்தியில், பெண்களுக்கு பிரசவ நிலை ஏற்பட்டால், முதலிலேயே, கண்டிப்பாக மருத்துவரிடம் அழைத்துச் சென்றுவிடவேண்டும்), மூலநோய், சிறுநீர் வழி புண் என மர்ம ஸ்தானங்களில் சீழ் மற்றும் வலி பிராண்டி எடுக்கும். கவனமாக இருக்கவும். செவ்வாய் துவரையையும், ராகு உளுந்தையும் குறிப்பார். சிம்பிளான உதாரணம் இட்லி, தோசை, சாம்பார் காம்பினேஷன், இதனை பயன்படுத்தலாம். ஈரோடு, கொடுமுடி சென்று வணங்குவது நல்லது. அருகிலுள்ள கோவிலில் துர்க்கையை வணங்கவும். இஸ்லாமிய இளைஞர்களின் தேவை கேட்டறிந்து உதவவும்.

ss

செவ்வாய் தசை- குரு புக்தி

சிறுநீர் தொந்தரவு தரும். மண்டையில் அதிக உஷ்ணம் சம்பந்தமாக வலி, அழுத்தம், அஜிர்ணக் கோளாறு, தசைகள் பெருத்துப் போதல், கபம் கட்டிக்கொள்தல், கொழுப்பு அதிகரித்தல், அதிக எடை போடுவதால் மூட்டுவலி வருதல், பாத வலி, உயர் இரத்த அழுத்தம் ஏற்படுதல் என இவை உண்டாகும். இந்த நேரத்தில் ஜாதகர்களின் இரத்தத்தில், கொழுப்பின் அளவு கண்டிப்பாக அதிகரிக்கும். எனவே அது சார்ந்த பிரச்சினை உண்டாகும். செவ்வாய் துவரையை குறிக்க, குரு கொண்டைக் கடலையை குறிப்பார். இது இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால், அஜிர்ணக் கோளாறு, வாயுத் தொல்லை ஏற்படும். ஒவ்வொரு நாள், ஒவ்வொன்றை சாப்பிடவும். வைத்தீஸ்வரன் கோவில் முருகரை வணங்கவும். மேலும் திருச்செந்தூர் முருகரை வணங்குவது மிகச்சிறப்பு. அந்தண இளைஞர்களுக்கு ஆவன செய்யுங்கள்.

செவ்வாய் தசை- சனி புக்தி

இந்த தசை புக்தியும் மிக கோளாறுகளை தரும் காலமாகும். செவ்வாய் இரத்த காரகன். சனி நோய் காரகன். எனவே நிறைய நோய்கள் இரத்தம் சம்பந்தமாகவே வரும். மலம் கழிக்கும்போது இரத்தமும் கூடவே வரும். பெண்களுக்கு தீட்டு சம்பந்த பிரச்சினை அதிகரிக்கும். தலையில் அடிபட நேரும். நரம்பு பலவீனமாகி, மூட்டு கால்வலி ஏற்படும். பல் ஈறுகளிலிருந்து இரத்தம் வரும். ஜிரண உறுப்புகளில், இரத்தம் சம்பந்தமான நோய் வரக்கூடும். மேலும் இந்த தசை- புக்தி காலத்தில் அனேகர் விபத்துக்குள்ளாவார்கள். செவ்வாய் துவரையையும், சனி எள் தானியத்தையும் குறிப்பார். இரண்டையும் தனித்தனியே பக்குவம் செய்து சாப்பிடவும். எள் மிட்டாய் தானம் நல்லது. குன்றக்குடி முருகனை தரிசிப்பது நல்லது. இந்த காலத்தில், பைரவர் வழிபாடு அவசியம் செய்யவேண்டும். இது விபத்திலிருந்து, ஜாதகரை ரட்சிக்கும் பரிகாரம் ஆகும். வயதானவர்களுக்கு சாம்பார் சாதம் அல்லது எள் சாதம் விநியோகம் நல்லது.

செவ்வாய் தசை- புதன் புக்தி

இந்த நேரத்தில் கண்டிப்பாக நரம்பு தளர்ச்சி ஏற்படும். சிலருக்கு குடல் இறக்க வியாதி உண்டு. பலருக்கு சிறுநீர் இன்ஃபெக்ஷன் என்று மருத்துவரிடம் சென்றால், அவர் மூத்திர பையில் கல் படிந்துள்ளது. அதனால் வலி என்பார். எனவே அதன்பொருட்டு அவசர அறுவை சிகிச்சை செய்யவேண்டி இருக்கும். மேலும் சில பெண்களுக்கு, கர்ப்பபை ஆபரேஷன் பண்ணவேண்டி வரும். ஆசன வாயில் கட்டி, புண் இவை ஏற்படும். செவ்வாய் துவரையைக் குறிக்க, புதன் பச்சை பயறைக் குறிப்பார். இது இரண்டும்கூட வேறு சில தானியம் சேர்த்து அடையாகச் செய்து சாப்பிடலாம். சுவாமி மலை முருகனை வழிபடலாம். முருகனுக்கு பச்சை ஆடை சார்த்தி வழிபடவும். பள்ளிகளுக்கு, மருத்து உதவி உபகரணம் வாங்கிக்கொடுங்கள்.

செவ்வாய் தசை- கேது புக்தி

இந்த காலக் கட்டத்தில், உடலில் எவ்வளவு பெரிய உபாதைகள் தோன்றினும், ஒன்று அது வெளியே தெரியாமல் கமுக்கமாக இருக்கும். அல்லது அது என்னவிதமான நோய் என மருத்துவர்களால் கண்டுபிடிக்க இயலாமல் திணறுவர். அடிவயிறு, மலக்குடல் இவை கிருமிகள் தாக்குதலுக்கு ஆளாகும். மூளையில் அழுத்தம் அதிகரிக்கும். இதனால் சிலர் மறதி மற்றும் காக்கை வலிப்பு நோய்க்கு ஆளாவர். ஒற்றைத் தலைவலி பின்னி எடுக்கும். வெகுசிலருக்கு, தலையில் இரத்தம் கட்டிப்போய், இரத்த ஓட்டம் தடைபடுவதால், அது தரும் நோய்களை ஜாதகர் அனுப்பவிப்பார். செவ்வாய் துவரையையும், கேது கொள்ளு தானியத்தையும் குறிப்பார். பருப்பு சாதமும், கொள்ளு துவையலுமாக சாப்பிடலாம். அங்காரக சதுர்த்தியன்று விநாயகரை வணங்கலாம். வெள்ளியங்கிரி முருகரை வணங்கவும். விநாயகர் கோவிலுக்கு துவரம்பருப்பு காணிக்கை செலுத்தவும். கிறிஸ்துவ இளைஞர்களுக்கு உதவவும்.

செவ்வாய் தசை- சுக்கிர புக்தி

இது ஆரம்பித்தவுடன், பெண்கள், கடும் இரத்தப் போக்கால் அவதியுறுவர். தீட்டு நிற்கும் நிலையிலுள்ள வயதான பெண்களும் மருத்துவரிடம் செல்லும் அளவில் இரத்தப் போக்கு இருக்கும். பிரசவமான பெண்களை பக்குவமாக பார்த்துக்கொள்ளவேண்டும். வளரிளம் பெண்கள், இந்த காலக்கட்டத்தில் வயதுக்கு வரும் வாய்ப்புண்டு. ஆண்களில், சில புள்ளி ராஜாக்கள், சிற்றின்ப நோய்களால் தாக்கப்படுவர். அதிக உஷ்ணத்தால், அவ்வப்போது கபம் கட்டும். செவ்வாய் துவரை போன்ற பருப்பு வகைகளையும், சுக்கிரன் சர்க்கரை போன்ற இனிப்புகளை குறிக்க, இரண்டையும் சேர்த்து, உக்காரை போன்ற பலகாரம் செய்துகொடுக்கவும். பழமுதிர் சோலை முருகனை வணங்கலாம். அருகிலுள்ள வள்ளி- தெய்வானையுடன்கூடிய முருகரை கற்கண்டுடன் வணங்கவும். இளம் வயது ஆண்- பெண்களுக்கு இனிப்பு வாங்கிக் கொடுக்கவும்.

செவ்வாய் தசை- சூரிய புக்தி

இந்த இரண்டுமே பெத்த உஷ்ண கிரகங்கள். அதிக உஷ்ணம், ஜாதகருக்கு டென்ஷன் கொடுத்து, இரத்தக் கொதிப்பை வரவழைக்கும். அதிக இரத்த ஓட்டம் மூளைச் சுரம் அல்லது வயிற்றில் கோளாறை கொண்டுவரும். சிலர் அம்மை நோயால் தாக்கப்படுவர். சூட்டுக்கட்டி வரும். கண்களைச் சுற்றி வளையம் அல்லது கண் சிவந்து போவது என இவை தாக்கும். பொதுவாக உஷ்ண சம்பந்த நோய் ஏதாவது ஒன்று ஜாதகரை தாக்கும். சிலருக்கு அதிக உஷ்ணம், வயிற்றுப் போக்கு கொண்டுவரும். செவ்வாய் துவரையையும், சூரியன் கோதுமையையும் குறிப்பார். எனவே கோதுமை சப்பாத்தியும், துவரம் பருப்பு சப்ஜியும் செய்யலாம். சுவாமி மலை முருகரை வணங்கவும். அருகிலுள்ள சிவன் கோவிலில், செவ்வாய்க்கிழமை, சிவனுக்கு தீபமேற்றி வழிபடவும். சிறுவர்களுக்கு, வெளிச்சம் தரும் விளையாட்டுப் பொருளை வாங்கிக்கொடுங்கள்.

செவ்வாய் தசை- சந்திர புக்தி

இதில் செவ்வாய் உஷ்ண கிரகம். சந்திரன் குளிர்ச்சி கிரகம். எனவே இப்போதில் ஏற்படும் கட்டி, புண்களில், கண்டிப்பாக சீழ் வைத்துவிடும். எனவே சர்க்கரை வியாதி உள்ளவர்கள், உடலில் எங்கும் புண் ஏற்படாதவாறு கவனமாக இருக்கவேண்டும். சிலருக்கு மூத்திரம் பிரிவதில் சிரமம் இருக்கும். மார்பு பகுதியில் அதிக நீர் கட்டிக்கொண்டு, மூச்சுவிட சிரமம் ஏற்படும். சிலருக்கு முகத்தில், நீர் கோர்த்து, முகம் பெரிதாக வீங்கி விடும். இரத்தம் மிக நீர்த்தன்மை கொண்டதாக மாறிவிடும். இரத்தம் உறைவதில் சங்கடம் தோன்றும். செவ்வாய் துவரம் பருப்பையும், சந்திரன் அரிசியையும் குறிப்பதால், சாதம், சாம்பார் ஏற்புடையது. திருச்செந்தூர் முருகனை வணங்கவும். அருகிலுள்ள முருகரை, அபிஷேகப் பொருள்கொண்டு வணங்கவும். இளைஞர்களுக்கு, குடிப்பதற்கு நல்ல இனிப்பான பழச்சாறு வாங்கிக் கொடுக்கவும்.

செவ்வாய்க்கிழமைதோறும் விரதமிருந்து, முருகரை வணங்கவும். கந்த சஷ்டி கவசப் பாராயணம் சிறப்பு.

செல்: 94449 61845

bala190124
இதையும் படியுங்கள்
Subscribe