சந்திர புக்திகள் தரும் நோய் தாக்கங்கள்! -ஆர். மகாலட்சுமி

/idhalgal/balajothidam/disease-effects-lunar-enlightenment-r-mahalakshmi

சந்திர தசை

இது 10 வருடகாலம் கொண் டது. பொதுவாக சந்திரன் என்றால் நீர்த் தன்மை, குளிர்ச்சி கொண்டது. மேலும் இது இடது கண்ணைக் குறிக்கும். மேலும் ரத்தம், இதயம், நுரையீரல், சிறுநீர், வயிறு, தூக்கம், மாதவிடாய் என இவ்வித உறுப்புகளைக் குறிக்கும்.

சந்திரனின் காரக தானியம் நெல் மற்றும் அரிசி. மேலும் வாழைக்காய், உப்பு, சுண்ணாம்பு, பால், தயிர், மோர், வெண்ணெய், மீன், தேயிலை, காபி, வெள்ளரிக்காய், முள்ளங்கி, மூலிகைகள், காளான், கரும்பு, பார்லி, முட்டைகோஸ், பூசணி என இவ்வித உணவுப் பொருட்களைக் குறிக்கும்.

சந்திர தசை- சந்திர புக்தி

இந்த தசை, புக்தி ஆரம்பித்தவுடன் நீர் கோர்த்துக்கொண்டு தும்ம ஆரம்பித்துவிடுவீர்கள். தாறுமாறாக சிறுநீர் பெருக்கம் இருக்கும். அடிவயிற்றில், நீர் கோர்த்து வலிக்கும். தலையில் நீர்க்கோர்வை ஏற்பட்டு, கண், நெற்றி, முகம் முழுவதும் விண் விண் என்று தெறிக்கும். சதா கண், மூக்கில் நீர், சளி வந்துகொண்டே இருக்கும். மூக்கின் ஓரத்திலுள்ள சுவாசப் பைகள் நீரால் நிரம்பிவிட்டது என மருத்துவர் கூறுவார். நுரையீரல் நீர் கோர்த்து, சிலசமயம் மூச்சுவிட சிரமம் ஏற்படும். ஆக, சந்திர தசை ஆரம்பித் தவுடன், நீர் சம்பந்த கோளாறுகள் வரிசை கட்டிவரும். சந்திரன் அரிசியை குறிப்பார். எனவே கொஞ்சமாக அரிசியை குருணையாக்கி, நிறைய தண்ணீரில் வேக வைத்து, அதனை கொஞ்சம் உப்புடன், டம்ளரில் ஊற்றி குடிக்குமள வுக்கு தயார் பண்ணிக்கொள்ளவும். கேரள மாநிலம், கொல்லம் நகரிலுள்ள ஸ்ரீ உமா மஹேஸ்வரியை தரிசிப்பது நலம். அருகிலுள்ள கோவிலில், அம்பாளை வணங்கவும். குருவிகளுக்கு நெல் கதிர் வாங்கி கட்டுங்கள்.

சந்திர

சந்திர தசை

இது 10 வருடகாலம் கொண் டது. பொதுவாக சந்திரன் என்றால் நீர்த் தன்மை, குளிர்ச்சி கொண்டது. மேலும் இது இடது கண்ணைக் குறிக்கும். மேலும் ரத்தம், இதயம், நுரையீரல், சிறுநீர், வயிறு, தூக்கம், மாதவிடாய் என இவ்வித உறுப்புகளைக் குறிக்கும்.

சந்திரனின் காரக தானியம் நெல் மற்றும் அரிசி. மேலும் வாழைக்காய், உப்பு, சுண்ணாம்பு, பால், தயிர், மோர், வெண்ணெய், மீன், தேயிலை, காபி, வெள்ளரிக்காய், முள்ளங்கி, மூலிகைகள், காளான், கரும்பு, பார்லி, முட்டைகோஸ், பூசணி என இவ்வித உணவுப் பொருட்களைக் குறிக்கும்.

சந்திர தசை- சந்திர புக்தி

இந்த தசை, புக்தி ஆரம்பித்தவுடன் நீர் கோர்த்துக்கொண்டு தும்ம ஆரம்பித்துவிடுவீர்கள். தாறுமாறாக சிறுநீர் பெருக்கம் இருக்கும். அடிவயிற்றில், நீர் கோர்த்து வலிக்கும். தலையில் நீர்க்கோர்வை ஏற்பட்டு, கண், நெற்றி, முகம் முழுவதும் விண் விண் என்று தெறிக்கும். சதா கண், மூக்கில் நீர், சளி வந்துகொண்டே இருக்கும். மூக்கின் ஓரத்திலுள்ள சுவாசப் பைகள் நீரால் நிரம்பிவிட்டது என மருத்துவர் கூறுவார். நுரையீரல் நீர் கோர்த்து, சிலசமயம் மூச்சுவிட சிரமம் ஏற்படும். ஆக, சந்திர தசை ஆரம்பித் தவுடன், நீர் சம்பந்த கோளாறுகள் வரிசை கட்டிவரும். சந்திரன் அரிசியை குறிப்பார். எனவே கொஞ்சமாக அரிசியை குருணையாக்கி, நிறைய தண்ணீரில் வேக வைத்து, அதனை கொஞ்சம் உப்புடன், டம்ளரில் ஊற்றி குடிக்குமள வுக்கு தயார் பண்ணிக்கொள்ளவும். கேரள மாநிலம், கொல்லம் நகரிலுள்ள ஸ்ரீ உமா மஹேஸ்வரியை தரிசிப்பது நலம். அருகிலுள்ள கோவிலில், அம்பாளை வணங்கவும். குருவிகளுக்கு நெல் கதிர் வாங்கி கட்டுங்கள்.

சந்திர தசை- செவ்வாய் புக்தி

சந்திரன் நீர்க்காரகர். செவ்வாய் உஷ்ணகாரகர். எனவே சொறி, சிரங்கு உண்டாகி, அதில் சீழ் வைக்கும் நிலை வரும். மூளையில் அழுத்தம், கோடைக் கட்டி, அம்மை நோய், முட்டில் நீர் கோர்த்து நடக்க சிரமப்படுதல், மார்பில் சளி சேர்ந்து, மூச்சுவிட சிரமம் இவை ஏற்படும். ஒருசிலருக்கு ரத்தத்தில், சிவப்பணு குறைந்துவிட வாய்ப்புண்டு. இந்த காலகட்டத்தில், எதிர் மறை தன்மைகள் கொண்ட ஒரே நோய், ஜாதகரை சிரமப்படுத்தும். சந்திரன் அரிசியையும், செவ்வாய் துவரம் பருப்பையும் குறிப்ப தால், எப்போதும் வீடுகளில், சாதம், சாம்பார் என வைத்துக் கொள்ளலாம். சென்னை மாங்காடு காமாட்சியம்மனை வணங்கு வது நல்லது. அருகில் உள்ள அம்மனை, குங்குமம்கொண்டு அர்ச்சிக்கவும். பாதுகாப்பு பணியில் உள்ள பெண்களுக்கு உதவுங்கள்.

dd

சந்திர தசை- ராகு புக்தி

இந்த தசை, புக்தியில், அனேக ஜாதகர்களுக்கு, புக்தி மாறாட்டம், அறிவு குழப்பம், மனநிலை பிறழ்வு, ஞாபகமறதி நோய், விக்கல் தொல்லை, மண்டையில் அடிபடுதல் என ஏற்படும். சிலருக்கு மஞ்சள்காமாலை அல்லது ஃபுட் அலர்ஜியினால் வாந்தி, பேதி ஏற்படும். சந்திரன் அரிசியையும், ராகு உருந்தையும் குறிப்பதால், இது இரண்டையும் மாவாக்கி, களி முதலியன செய்து கொடுக்கலாம். இதனை பிறர்க்கு முக்கியமாக இளம் பெண்களுக்கு கொடுக்கலாம். இந்த காலக்கட்டத்தில், துர்க்கைக்கு விளக்கேற்றவும். மேலும் உங்கள் ஊரிலுள்ள, சித்தர்களின் ஜீவசமாதிக்குச் சென்று வணங்கி, தேவை கேட்டறிந்து உதவிசெய்யவும். சிலர் மது, குடி போன்ற கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகி, உடல்நலம் கெடுவர்.

சந்திர தசை- குரு புக்தி

இந்தக் கால நேரத்தில் அதிக உணவு உண்ணுவதால், உடம்பில் கொழுப்பு அதிகரித்துவிடும். மேலும் மார்பு சளி, நுரையீரல்களில் நீர் கோர்த்தல், சிரங்கில் சீழ் வைப்பது, ரத்தம் கெட்டுப்போதல், மஞ்சள் காமாலை என இதுபோன்ற நோய்கள் வரும். சாப்பாட்டில் கவனமாக இருக்கவேண்டும். சந்திரன் அரிசியைக் குறிக்க, குரு கடலையைக் குறிப்பார். சாப்பாட்டின்போது, கொண்டைக்கடலை சேர்ந்த தொடுகறிகளை பயன்படுத்தி, பயனடையலாம். நெல்லை ஸ்ரீகாந்திமதி அம்மனை வழிபடலாம். அருகிலுள்ள கோவிலில், அம்பாளுக்கு மஞ்சள் மற்றும் மஞ்சள் சார்ந்த பொருட்களை காணிக்கை செலுத்தலாம். பழுத்த சுமங்கலிக்கு, மஞ்சள் கொடுக்கலாம்.

சந்திர தசை- சனி புக்தி

இந்த தசா புக்தி ஆரம்பித்தவுடன், நிறைய ஜாதகர்கள் பல்வலி ஏற்பட்டு, சரியாக சாப்பிட முடியாமல் துன்பப்படுவர். சிலருக்கு விலா எலும்புகளில் வலி, வாந்தி, மூச்சுவிட சிரமம், ஏற்படும். மிகச் சிலருக்கு வெளியே நடமாட முடியாத அளவில் முடக்கிப்போடும். ஏதோ ஒரு வியாதி வரக்கூடும். சந்திரன் ரத்த ஓட்டத் தைக் குறிப்பார். சனி தடையைக் குறிப்பிடுவார். எனவே ரத்த ஓட்டம் தடைப்படும் நோய்கள் வந்து, ஜாதகரை ஒரே இடத்தில் உட்கார வைத்துவிடும். அடிக்கடி, மருத்துவரிடம் சோதனைக்கு செல்லும்விதமாக அமையும். திருக்கடையூர் அபிராமி அம்மனை சேவிப்பது மிகச் சிறந்தது. அருகிலுள்ள அம்மன் கோவிலில், விளக்கெரிய எள் எண்ணெய், வாங்கிக்கொடுங் கள். மருத்துவ சோதனை செய்யவேண்டிய பெண்களின் தேவை கேட்டறிந்து உதவுங்கள்.

சந்திர தசை- புதன் புக்தி

வாயுக் கோளாறு அதிகம் ஏற்படும். வயிற்றில் அஜிர்ண தொல்லை உண்டு. நுரையீரலில் மூச்சுத் திணறல் உண்டாகும். ஒருசிலர் காக்கை வலிப்பால் துன்புறுவர். கண் இமைகளில் கோளாறு ஏற்படும். ஒருசிலர் பேச்சில் குளறு படி ஏற்படும். சொன்னதையே திருப்பி திருப்பி சொல்வர். திருவாடனை அருகிலுள்ள பாகம் பிரியாள் கோவிலுக்கு சென்று வழிபடுவது நல்லது. சந்திரன் அரிசியையும், புதன் பச்சை பாசிபயிறையும் குறிப்பதால், வெண் பொங்கல் வைத்து, குழந்தைகளுக்கும் கொடுப்பது நல்லது.

சந்திர தசை- கேது புக்தி

இந்த தசாபுக்தி காலத்தில் ஜாதகர்களுக்கு, இனம்புரியாத பயம், படபடப்பு, கெட்ட கனவு, கற்பனை பீதி, யாரோ துரத்துகிறார்கள், யாரோ செய்வினை வைத்துவிட்டார்கள் எனும் விபரீத எண்ணம் ஏற்பட்டு, ஒருவித கலவர உணர்வில் தவிப்பர். இவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா, இல்லையா என்பதே பெரும் விவாவதமாக இருக்கும். எதைப் பார்த்தாலும், எவரைப் பார்த்தாலும் சந்தேகப்படுவர். மிக கோழை ஆகிவிடுவர். தாழ்வு மனப்பான்மையில் சிக்கி சீரழிவர். இந்த உணர்வு கலைவு உடல் நலத்தை மிக பாதிக்கும். இவர்களுக்கு இன்ன நோய், இன்ன வைத்தியம் எனக் கண்டுபிடிப் பதற்குள். சுற்றியுள்ளவர்களுக்கு, தாவு தீர்ந்து விடும். இந்த சந்திர தசை- கேது புக்தி ஆரம்பிப் பதற்கு முன்பிருந்தே, நிறைய தியானம் செய்வதும், இஷ்ட தெய்வத்தை, விரதமிருந்து வணங்குவதும் மிகவும் நல்லது. சந்திரன் அரிசி யையும், கேது கொள்ளையும் குறிப்பார். இரண்டையும் வறுத்து அரைத்து, கஞ்சியாக குடிக்கலாம். அருகிலுள்ள பிள்ளையாரை, திங்கட்கிழமைகளில், அபிஷேகப் பொருட் களை காணிக்கையாக்கி வணங்கவும்.

சந்திர தசை- சுக்கிர புக்தி

இது இரண்டும் நீர் கிரகங்கள். எனவே இந்த காலகட்டத்தில், அனேக ஜாதகர்கள், நீரழிவு நோய் தாக்குதலுக்கு ஆளாவார்கள். மேலும் மார்பில் சளி கட்டிக்கொள்ளும். மேலும் குடிப் பழக்கம் அதிகரிக்கும். நிறைய பேருக்கு தலை ஒரு ஸ்டடியாக இல்லாமல் ஆடிக்கொண்டே இருக்கும். வயதான பெண்களுக்கு, மாதவிடாய் நிற்கும் காலமாக இருப்பின், அது சார்ந்த நிறைய பிரச்சினைகளை சந்திக்கக்கூடும். இளம் பெண்களுக்கு கர்ப்ப பையில், நீர்க்கட்டி பெரிதாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அது சார்ந்த மருந்து எடுத்துக்கொள்ள வேண்டி யிருக்கும். சந்திரன் அரிசியையும், சுக்கிரன் சர்க் கரையையும் குறிப்பார். கூடுமானவரை, குருவாயூரப்பன், கோவிலுக்கு பாயசத்திற்கு பணம் கட்டி, அர்ச்சனை செய்வது, அனைத்து நோய்களையும் தீர்க்கும் அருமருந்தாகும். அதே பாயசத்தை, நீங்கள் அருந்துவதும், விநியோகம் செய்வதும். ஆகச் சிறந்த, அற்புத பரிகாரம் ஆகும்.

சந்திர தசை- சூரிய புக்தி

சந்திரன் அதிக நீர் மற்றும் குளிர்ச்சி கிரகம்.

சூரியன் அதிக வெப்பம் மற்றும் உஷ்ண கிரகம். எனவே சிறுநீர் பிரிவதில் எரிச்சல், நெஞ்சு எரிச்சல், ரத்தம் உறைவது, உடம்பில் ஆங்காங்கே நீர் கொப்புளம், தலையில் நீர் கட்டிக் கொண்டு அதிகவலி, தொண்டையில் சதை வளர்வது என நீரும். நெருப்புமாக, எதிரும் புதிரு மான நோய் தாக்கும். சந்திரன் அரிசியையும், சூரியன் கோதுமையையும் குறிப்பார். அரிசி, ரவை, கோதுமை ரவை சேர்த்து, உப்புமாவாக பண்ணலாம். உங்களுக்கு பிடித்த அம்பாளை, பௌர்ணமி விரதமிருந்து வணங்கவும். முடிந்தளவு அன்னதானம் செய்யவும். முதிர்ந்த தம்பதியரின், தேவை கேட்டறிந்து உதவுங்கள்.

சந்திர தசை ஆரம்பித்தவுடன், உங்கள் இஷ்ட அம்பாளை வணங்குவதும் லலிதா ஸஹஸ்ர நாமம், அம்மன் பாடல்கள் படி வணங்குவதும் நல்லது.

bala081223
இதையும் படியுங்கள்
Subscribe