குரு புக்திகள் தரும் நோய் தாக்கங்கள்! ஆர். மகாலட்சுமி

/idhalgal/balajothidam/disease-effects-guru-bhuktis-r-mahalakshmi

குரு தசை

இ து 16 வருட தசாக் கால முடையது. குரு என்றால் முதலில் நினைவுக்கு வருவது குண்டாக இருப்பதுதான். குரு கொழுப்பைக் குறிப்பார். மேலும் குருபகவான் வாயுக்கோளாறு, மூளை, தொடை, குடல், ஈரல், சிறுநீரகம், வலதுகாது, மண்ணீரல், நாக்கு, மஞ்சள் காமாலை, கட்டிகள், நீரழிவு போன்றவை சார்ந்த நோய்களைத் தருவார்.

குரு மஞ்சள், கரும்பு, வாழைப்பழம், தேங்காய், பழங்கள், எலுமிச்சை, நிலக்கடலை, தேன், சீரகம், விதைகள், மீன், நீர்பொருட்கள், உப்பு என இவற்றைக் குறித்தாலும், குரு என்றவுடன் அனைவருக்கும் வெள்ளை கொண்டைக் கடலைதான் ஞாபகத்திற்கு வரும்.

குரு தசை- குரு புக்தி

இந்த தசை ஆரம்பித்தவுடன், ஜாதகர் கள் தன்னிச்சையாக உடல் பெருத்து, குண்டாகி விடுவர். சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட விரும்புவர். உடல் எடை கூடுவதால், நடக்க சிரமப்படுவர். தொடை பெருத்துவிடும். உடல் எடை அதிகரிப்பதால் வரும் அனைத்து பிரச்சினைகளும் வரும். குருவின் தானியமான கொண்டைக் கடலை சுண்டல் ஏற்புடையது. சிவனை வணங்கவும்.

guru

குரு தசை- சனி புக்தி

குரு கொழுப்புக்காரகர். சனி ஜீரண உறுப்பைக் குறிப்பார். எனவே இந்த தசா புக்தியில், அதிக கொழுப்பு உணவுகளால் ஜீரணம் கெட்டுப்போகும். எனவே மலச்சிக்கல், வயிறு உப்பிசம், வாந்தி, பேதி ஏற்படும். சிலருக்கு கால்களில் ரத்தக் குழாய் சுருட்டிக்கொள்ளும். ஜீரண உறுப்புகள் பழுதடையும். எனவே, ஒழுங்காக உணவு உண்ண இயலாமல் போகும். சனி எப்போதும் கழிவைக் குறிப்பார். சிலர் சாப்பிடவுடன், பாத்ரூம் நோக்கி ஓடுவர். குரு கொண்டைக் கடலையைக் குறிக்க, சனி எள் தானியத்தைக் குறிப்பார். இது இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது, அவ்வளவு சிலாக்யமில்

குரு தசை

இ து 16 வருட தசாக் கால முடையது. குரு என்றால் முதலில் நினைவுக்கு வருவது குண்டாக இருப்பதுதான். குரு கொழுப்பைக் குறிப்பார். மேலும் குருபகவான் வாயுக்கோளாறு, மூளை, தொடை, குடல், ஈரல், சிறுநீரகம், வலதுகாது, மண்ணீரல், நாக்கு, மஞ்சள் காமாலை, கட்டிகள், நீரழிவு போன்றவை சார்ந்த நோய்களைத் தருவார்.

குரு மஞ்சள், கரும்பு, வாழைப்பழம், தேங்காய், பழங்கள், எலுமிச்சை, நிலக்கடலை, தேன், சீரகம், விதைகள், மீன், நீர்பொருட்கள், உப்பு என இவற்றைக் குறித்தாலும், குரு என்றவுடன் அனைவருக்கும் வெள்ளை கொண்டைக் கடலைதான் ஞாபகத்திற்கு வரும்.

குரு தசை- குரு புக்தி

இந்த தசை ஆரம்பித்தவுடன், ஜாதகர் கள் தன்னிச்சையாக உடல் பெருத்து, குண்டாகி விடுவர். சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட விரும்புவர். உடல் எடை கூடுவதால், நடக்க சிரமப்படுவர். தொடை பெருத்துவிடும். உடல் எடை அதிகரிப்பதால் வரும் அனைத்து பிரச்சினைகளும் வரும். குருவின் தானியமான கொண்டைக் கடலை சுண்டல் ஏற்புடையது. சிவனை வணங்கவும்.

guru

குரு தசை- சனி புக்தி

குரு கொழுப்புக்காரகர். சனி ஜீரண உறுப்பைக் குறிப்பார். எனவே இந்த தசா புக்தியில், அதிக கொழுப்பு உணவுகளால் ஜீரணம் கெட்டுப்போகும். எனவே மலச்சிக்கல், வயிறு உப்பிசம், வாந்தி, பேதி ஏற்படும். சிலருக்கு கால்களில் ரத்தக் குழாய் சுருட்டிக்கொள்ளும். ஜீரண உறுப்புகள் பழுதடையும். எனவே, ஒழுங்காக உணவு உண்ண இயலாமல் போகும். சனி எப்போதும் கழிவைக் குறிப்பார். சிலர் சாப்பிடவுடன், பாத்ரூம் நோக்கி ஓடுவர். குரு கொண்டைக் கடலையைக் குறிக்க, சனி எள் தானியத்தைக் குறிப்பார். இது இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது, அவ்வளவு சிலாக்யமில்லை. எனவே கொண்டைக்கடலை சுண்டலும், எள் மிட்டாயுமாக சாப்பிடலாம்; கொடுக்கலாம். திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரரை வணங்கவும். அருகிலுள்ள சிவன் கோவிலில், தட்சிணாமூர்த்திக்கு, சனிக்கிழமை நல்லெண்ணெய் தீபமேற்றி வணங்கவும். மிகவும் சிரமத்திலுள்ள வயதான அந்தணரின் தேவைக் கேட்டறிந்து உதவுங்கள்.

குரு தசை- புதன் புக்தி

அதிகமான மன உளைச்சல் ஏற்படும். அஜீரணக் கோளாறு வரும். வயிற்றில் அடிக்கடி வலி பின்னி எடுக்கும். ஈரல் கோளாறு ஏற்படும். மஞ்சள்காமாலை வரும் வாய்ப்புண்டு. மூக்கில் கட்டிகள் கிளம்பும். தோல் வியாதிகள் படையெடுக்கும். வாதம் வர வாய்ப்புண்டு. ஒருசிலருக்கு நாக்கு இழுத்துக்கொண்டு, பேசமுடியாமல் போகலாம். குரு கொண்டைக் கடலையைக் குறிக்க, புதன் பச்சையப்பயிறை குறிப்பார். இவற்றை சுண்டலாகவோ, சப்ஜியாகவோ செய்து சாப்பிட்டு, விநியோகமும் செய்யலாம். சங்கரன் கோவில் சங்கர நாராயணரை வணங்கவும். அருகிலுள்ள சிவன் கோவிலில், சிவனுக்கு வில்வ தளம் கொண்டு வணங்கவும். அந்தண சிறுவர்களின் தேவையறிந்து உதவவும்.

குரு தசை- கேது புக்தி

குரு மூளை யைக் குறிக்க, கேது தடை களை, கட்டி களைக் குறிப் பார். எனவே இந்தக் கால கட்டத்தில் ஜாதகர்கள், தலை அடிக் கடி வலிக்கிறது அல்லது லைட்டா தலை சுற்றுவது மாதிரி கேரா இருக்கு என்றோ உணர்ந் தால், உடனே மருத்துவரை அணுக வேண் டும். கையில் கிடைத்த இரண்டு மாத்திரையை முழுங்கினால் சரியாகிவிடும் என அசால்ட்டாக இருக்க வேண்டாம். அது மண்டையில் சிறு கட்டிகள் உள்ளதைக் குறிப்பதாகவும் இருக்கும். மேலும் பெண்களுக்கு தீட்டு நாட்கள் ஒழுங்கற்று அமையும். குரு குழந்தைகாரர். கேது தடைகாரகர். எனவே பெண்கள், இந்த சமயத்தில், கர்ப்பமாகி இருப்பின், கவன மாக இருக்கவேண்டும். கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புண்டு. சிலர் ஆஸ்துமா போன்ற நோய் தாக்குதலுக்கு ஆளாவர். குரு கொண்டைக் கடலையைக் குறிக்க, கேது கொள்ளு தானியத்தைக் குறிப்பார். கொண்டைக் கடலை சுண்டலும், கொள்ளு சூப்பும் குடிக்கலாம்; வழங்கலாம். இந்தக் காலகட்டத்தில், உங்கள் மனதுக்கு இஷ்டமான சித்தரை வணங்கவும். சன்யாசிகளுக்கும், பசு மடங்களுக்கும் உதவவும்.

குரு தசை- சுக்கிர புக்தி

இக்காலக் கட்டத்தில் நீரழிவு நோய் தொடங்கும் அறிகுறி தென்படும். தொடை களில் வீக்கம் வரும். நுரையீரல் நோய் ஏற்படும். முழங்கால் வீங்கிவிடும். குடல் இறக்கம் ஏற்படும். அடிவயிறு வீங்கிவிடும். சில பெண்கள் கர்ப்பபை, அடிவயிறு கனமாக இருப்பதாக உணர்வர். சோதித்தால், கர்ப்பபையில் கொழுப்புக்கட்டி, திரண்டு இருப்பதாக மருத்துவர் கூறுவர். எனவே அடிவயிறு வலித்தால், பெண்கள் மிக கவனமாக இருக்கவேண்டும். மிகச் சிலருக்கு புற்றுநோய் வரும் வாய்ப்புண்டு. குரு கொண்டைக் கடலையை குறிக்க, சுக்கிரன் மொச்சையைக் குறிப்பார். கொண்டைக்கடலை சுண்டலும், மொச்சைக் குழம்பும் தயாரிக்கலாம். மீனாட்சி யம்மன் கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசிப்பது நல்லது. அருகிலுள்ள கோவிலில் தட்சிணாமூர்த்திக்கு, கற்கண்டு கொண்டு வணங்கவும். இளம் அந்தண பெண்களுக்கு, அழகுப் பொருட்கள் வாங்கிக் கொடுங்கள்.

குரு தசை- சூரிய புக்தி

குரு கொழுப்பைக் குறிக்க, சூரியன் உஷ்ணம், பித்தம் இவற்றை தருவார். ஆக, ஜாதகருக்கு எப்போதும், ஒரு லூஸ் மோஷன், டென்ஷன் இருந்து கொண்டே இருக்கும். மேலும் இந்தக் காலக்கட்டம். ஜாதகர்களின் தொடையை பதம் பார்த்துவிடும். சிலர் பக்கவாத நோயால் பாதிக்கப்படுவர். கண்கள் பாதிக்கும். சிலருக்கு, அதிக கொழுப்பால், கண் அழுத்தம் ஏற்பட்டு, பார்வை மறைக்கும். இந்த நேரங்களில் ஜுரம் ஏற்பட்டால், அதிகமாகிவிடும்; கவனம் தேவை. குரு கொண்டைக் கடலையையும், சூரியன் கோதுமையையும் குறிப்பதால், கோதுமை சப்பாத்தியும், கொண்டைக்கடலை குருமாவும் ஏற்புடையது. சூரியனார் கோவில்சென்று வணங்கவும். அருகிலுள்ள சிவனுக்கு, ஞாயிற்றுக்கிழமை தீபமேற்றி வணங்கவும். வயதான அந்தணரின் தேவைக் கேட்டறிந்து உதவுங்கள்.

குரு தசை- சந்திர புக்தி

குரு, ஜீரணத்துக்கு உரியவர். சந்திரன் நீர்க்காரகர். எனவே இந்த தசா புக்தியில் வயிற்றில் கோளாறு ஏற்படும். அடிவயிறு கனமாகும். சிறுகுடல் பாதிப்படையும். மலம் கழிப்பதில் பிரச்சினை ஏற்படும். மொத்தமாக அஜீரணப் பிரச்சினை, ஜாதகரை பாடாய்படுத்தும். சிலருக்கு உண்ணும் உணவு அல்லது குடிக்கும் தண்ணீர் இவை ஃபுட் பாய்சனாகி, அது வாந்தி, பேதியைத் தரும். சிலருக்கு நுரையீரல்களில் கபம் கட்டி, மூச்சுவிட சிரமப்படுவர். குரு கொண்டைக் கடலையையும், சந்திரன் அரிசியையும் குறிப்பதால், சாப்பாட்டிற்கு, கடலை சுண்டல் சேர்த்து சாப்பிடலாம். இராமேஸ்வரம். இராமநாத சுவாமியை வணங்கவும். அருகிலுள்ள சிவனுக்கு திங்கட்கிழமை அபிஷேகப் பொருட்கள் காணிக்கை செலுத்தவும். வயதான அந்தணப் பெண்மணிக்கு, தேவைக் கேட்டறிந்து உதவவும்.

குரு தசை- செவ்வாய் புக்தி

இந்த தசாபுக்தி ஜாதகருக்கு, ரத்தக் கொதிப்பு கொடுக்கும். தொடைகளில் ரத்தம் கட்டிக்கொள்ளும். குரு குழந்தைகாரகர். செவ்வாய் ரத்தத்தின் காரகர். எனவே, கர்ப்பிணி பெண்களுக்கு, எங்காவது அடிபட்டு அல்லது வேறு காரணத்தால், கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்கு ரத்தம் கெட்டுப்போகும். சிலருக்கு அஜீரணக் கோளாறால், வாந்தி ஏற்பட்டால், ரத்தம் கட்டி தசை பிடிப்பு ஏற்படும். ஈரல் வீக்கம் ஏற்படும். கால் ஆணி வரும். செவ்வாய் துவரையைக் குறிப்பார். சாம்பார் சாதமும், கொண்டைக்கடலை சுண்டலும் சரியாக வரும். இந்த தசாபுக்திக்கு, திருச்செந்தூர் முருகன் மட்டுமே ஏற்புடைய தெய்வம். அருகிலுள்ள முருகர் கோவிலில், வியாழக்கிழமைகளில் மஞ்சள் கொண்டு வணங்குங்கள். அந்தண வாலிபர்களுக்கு தேவைக் கேட்டறிந்து உதவுங்கள்.

குரு தசை- ராகு புக்தி

வாதம் வந்து சேர்ந்துகொள்ளும். நுரையீரல் கிருமிகள் பாதிப்புக்கு ஆளாகும். வெகுசிலர் மலக்குடலில் பாதிப்பு ஏற்பட்டு வேதனையும், வெட்கமும் அடைவர். காலில் ரொம்ப வலி எடுக்கும். கால்கள் அதிகமாக வீங்கி, பெருத்துவிடும். தோலில் படர் தாமரைபோல் வியாதி வரும். அடி வயிற்றில் பெரிதாக கட்டி தோன்றும். சில கர்ப்பிணி பெண்களுக்கு, குழந்தையுடன் கூடவே ஒரு கட்டியும் உருவாகி, அமர்ந்திருக்கும். இதனால் இரட்டைக் குழந்தையை சுமப்பதுபோல் வயிறு பெருத்திருக்கும். பிரசவத்தின்போது, குழந்தையுடன், கட்டியும் வெளியே வந்துவிடும். குரு, கொண்டைக் கடலையைக் குறிக்க, ராகு உளுந்து தானியத்தைக் குறிப்பார். கடலை சுண்டலும், உளுந்துவடையும் நல்ல இணைவுதான். காளஹஸ்தி சென்று வணங்கவும். அருகிலுள்ள சிவன் கோவிலில், தட்சிணாமூர்த்திக்கு தீபமேற்றி வணங்கவும். இஸ்லாமிய மசூதி குருமார்களின் தேவையறிந்து உதவவும்.

குரு தசை ஆரம்பித்தவுடன் சிவனை வணங்குவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். ஸ்ரீருத்ரம், பில்வாஷ்டகம் மற்றும் கோளறு பதிகம் பாராயணம் நல்லது.

செல்: 94449 61845

bala160224
இதையும் படியுங்கள்
Subscribe