ஒருமுறை காஞ்சி மகாபெரியவரிடம் வந்த பக்தர் ஒருவர், தனக்கு முதுகுவலியும், நடுத்தண்டில் வலியும் தாங்கமுடியாத அளவில் இருப்பதாக புலம்பினார். அதைக்கேட்ட பெரியவர், அந்த பக்தரை நல்லெண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, மிளகு ரசமும், பிரண்டைத் துவையலும் வைத்து சாப்பிடும்படி அறிவுரைத்தினார் கள். மூன்று மாதம் சென்றபின், பெரியவரை சந்தித்த அந்த பக்தர், தனக்கு வலி நீங்கி, பூரண குணம் ஏற்பட்டதாக மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் தெரிவித்தார். பெரியவரின் வாக்கு தெய்வ வாக்கு எனவே வலி நீங்கியதில் வியப்பில்லை.
மேற்கண்ட நிகழ்வை ஜோதிடக்கண்கொண்டு பார்க்கும்போது, திருவள்ளுவரின் குறள்போல "நோய் நாடி, நோய் முதல்நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்'' என ஆழ்ந்து யோசித்து கூறியிருப்பதாக தெரிகிறது. நோயின் காரண கிரகத்தையும், அதன் காரக உணவையும் கண்டறிந்து கூறியுள்ளார்.
ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்கள் உள்ளது என உங்களுக்குத் தெரியும். அந்த ஒன்பது கிரகங்களும், ஒவ்வொரு உடல் பாகத்தை ஆள்கின்றனர். அதுபோல அந்த கிரகங்களும், ஒவ்வொருவிதமான நோய்களை, மனிதருக்கு கொடுக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருக்கின்றனர். இதேபோல் ஒவ்வொரு கிரகத்துக்கும், அதற்குரிய தானியங்கள், உணவு பொருட்கள் உள்ளது.
இதன்மூலம், ஒவ்வொரு கிரகங்களின், தசாபுக்தி காலங்களில், அவர்களுக்கு உரிய உணவை எடுத்துக்கொண்டால் அதுவே நோயின் தாக்கத்தைக் குறைத்து, ஜாதகர்களின் வாழ்வை நிம்மதியாக்கும். கிரகங்களும், அவைகளின் தசாபுக்தி தரும் நோய்களையும், அதற்குரிய உணவையும், பரிகாரங்களையும் யோசிக்கலாம்.
கேது தசை- கேது புக்தி
கேது பகவான், நரம்பு, மர்ம உறுப்பு, முடி, ஆசன வாய், மயக்கம், தற்கொலை எண்ணம், நகச்சுற்று, பித்தம் என இவைகளின் காரகர் ஆவார். எனவே கேது தசை ஆரம்பித்தவுடன், ஜாதகர்களுக்கு ஒரு தெளிவில்லாத மனக் குழப்பம் ஏற்படும். மேலும் அவர் வாங்கிய சாரநாதர், மற்ற கிரகம் சம்பந்தம் பொறுத்து, மேற்கண்ட வியாதிகளில் ஒன்று உங்களைத் தாக்கும். கேதுவின் தானியம் கொள்ளு. மேலும் கொத்தவரங்காய், புடலங்காய், வேர்க்கடலை, பீன்ஸ், வெண்டைக்காய், சோளம், அன்னாச்சிப் பழம் என இவையும் கேதுவுக்குரிய காய்கள். எனவே கேது தசை ஆரம்பித்தவுடன் இவைகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்வது, நோய் எதிர்ப்புக்கு துணை செய்யும். கேது தாய்வழி பாட்டனாரை குறிப்பார். எனவே அந்த வயதில் உள்ளவரை கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கேது தசை- சுக்கிர புக்தி
இந்த தசை புக்தியில் நீர்ச் சுருக்கு எனும் வியாதி வரும். பெண்களுக்கு கர்ப்பபையில் கட்டி ஏற்படும். தலையில் முடி உதிர்ந்து வழுக்கை மண்டை ஆகிவிடும். கேது கொள்ளைக் குறிக்க, சுக்கிரன் மொச்சையை குறிப்பார்.
எனவே இக்காலங்களில், இந்த இரண்டு தானியங் களையும், சுண்டலாக செய்து சாப்பிடுங்கள். நிறைய பழங்கள் எடுத்துக்கொள்ளவும். துர்க் கையை வணங்கவும். முழு மட்டையுடன்கூடிய தேங்காயை விநாயகர் கோவிலுக்கு கொடுக்கவும்.
கேது தசை- சூரிய புக்தி
பொதுவாக, பாம்பு, கிரகங்களான ராகு அல்லது கேதுவுடன், சூரியன் அல்லது சந்திரன் சேரும்போது ஒரு கிரகண நிலை ஏற்படும். எனவே, அதிக பித்தம் ஏற்பட்டு, அவை சம்பந்த மான வியாதி வரும். நிறைய பேருக்கு, அதிக உஷ்ணத்தால் நகச் சுற்று ஏற்படும். அதற்கு கேதுவின் அதிபதியான துர்க்கைக்குரிய எலுமிச் சையை கையில் வைத்துக்கொள்வதும் நடக்கும். உங்கள் வீட்டில் வயதானவர்கள் இருப்பின், அவர்களுக்கு தேமல் போன்று வரும் வாய்ப் புண்டு. கேதுவுக்குரிய கொள்ளை சப்ஜி மாதிரி செய்தும், சூரியனுக்கு உரிய கோதுமையை சப்பாத்தியாகச் செய்தும் உண்ணவும். ஞாயிற்றுக்கிழமைகளில், நவகிரகங்களில் கேதுபகவானுக்கும், விநாயகருக்கும் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. மெழுகுவர்த்தி தானம் நல்லது.
கேது தசை- சந்திர புக்தி
இதுவும் சற்று கிரகண நிலை கால கட்டம் தான். இந்த காலகட்டத்தில், அநேகமாக சிறுநீரகத்தில், நீர் கட்டிக்கொள்ளும் சிறுநீர் சரியாக வெளியேறாது. அதனை கேது தடைசெய்து, சொட்டு, சொட்டாக சிறுநீர் பிரிய செய்வார். இதனால் ஜாதகர் களுக்கு சொல்லொணா வலி ஏற்படும். சில குழந்தைகளுக்கு, சொறி சிரங்கு உண்டாகி, அதில் நீர் கோர்த்துக்கொள்ளும். கேது கொள்ளு தானியத்தைக் குறிக்க சந்திரன் அரிசியை குறிப்பார். எனவே இரண்டும் சேர்ந்த கஞ்சி மாதிரி தயாரித்து பருகலாம்.
திங்கட்கிழமைகளில், கேது
பகவானையும், விநாயகரையும் அபிஷேகப் பொருட்களை காணிக்கை கொடுத்து வணங்க லாம். நீர் சார்ந்த காய்கறிகள் தானம் நல்லது.
கேது தசை- செவ்வாய் புக்தி
செவ்வாய் கிரகம் எப்போதும் இரத்தத்தைக் குறிப்பது. கேது தடை செய்யும் கிரகம் அல்லது சுருக்கும் கிரகம். எனவே இந்த காலகட்டத்தில், ஜாதகர்கள், அனேகர், இரத்த ஓட்டம் சரியாக இல்லை என ஸ்டண்ட் வைத்துள்ளனர், அதனால் இரத் தக்குழாயின் அடைப்பு நீங்கி, இரத்த ஓட்டம் சரியாகிவிட்டது என்பர். அல்லது கட்டி ஏற்பட்டு, அறுவை சிகிச்சை செய்து, கட்டியை நீக்குவர். எது எப்படி யாயினும், கேது- செவ்வாய் சேர்க்கை துன்பம் தரும். கொள்ளு, துவரை மற்றும் காய் கறிகள் சேர்த்து ஒரு கலவை சாதம்போலவோ அல்லது இரண்டும் சேர்த்து துவை யலாகவோ செய்து சாப்பிடவும். அங்காரக சதுர்த்தி அன்று.
செவ்வாய்க்கிழமை+ சதுர்த்தி திதி வரும் நாளன்று திருமலைக் கோட்டை சோடஸ கணபதியை வணங்கவும். செடி வைக்கும் மண் தொட்டியை வாங்கி தெரிந்தவர்களுக்கு கொடுக்கவும்.
கேது தசை- ராகு புக்தி
இருப்பதிலேயே ரொம்ப மோசமான விளைவுகளை, ஜாதகருக்கு கொடுக்கும் காலமிது. இந்நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும். சில சமயம் கட்டுப்பாடின்றி, அதுபாட்டுக்கு சிறுநீர் கழிந்து, உடைகள் ஈரமாகி, ஜாதகர்கள், தர்ம சங்கடத்திற்கும் அவமானத்திற்கும் ஆளாவார்கள். மற்றும் வாயு பிரிவது ரொம்ப சத்தமாக, அதுவும் பொது இடத்தில், நாலுபேர் நடுவில் உண்டாகும். இதனாலும் ஜாதகர்கள் ரொம்ப கேவலமாக உணர்வர். இந்த ராகு- கேதுக்கள் மர்ம உறுப்பையும், வாயுவையும் குறிப்பதால், இவ்விதம் நிகழும். இதற்கு உங்களுக்கு இஷ்டமான துர்க்கை வழிபாடு நல்லது. கேது கொள்ளு தானியத்தை குறிக்க, ராகு உளுந்து தானியத்தை குறிப்பார். இது இரண்டையும் சேர்த்து துவையல் அரைக்கலாம். அல்லது வறுத்து, பொடித்து கஞ்சியாக்கி குடிக்க லாம். அல்லது உங்கள் வீட்டில், ராகி மாவு அரைக்கும் வழக்கம் இருப்பின், இது இரண்டையும் சேர்த்துவிடுங்கள். உளுந்து வடை செய்து, தெரிந்தவர்களுக்கு கொடுங்கள்.
கேது தசை- குரு புக்தி
இப்போதில் ஜாதகர்கள் நிறைய கட்டி ஏற்பட்டு, துன்பம் அடைவர். அனேகமாக தொடை இடுக்கு, பாதம் கைவிரல்கள் என இவற்றில் கட்டி வரும். கட்டி வந்தால், உடனே நம் வீடுகளில் மஞ்சளை அரைத்து பற்று போட்டுவிடுவர். யோசியுங்கள். குருபகவான், மஞ்சளின் காரகர். எனவே அவர் சம்பந்தமான நோய்க்கு, அவரின் காரக மஞ்சளை தடவுகின்றனர். அனேகமாக மஞ்சள் போட்டால் கட்டி உடைந்து விடும். இதில் கேதுவுக்குரிய, அவரின் அதி தேவதையான துர்க்கையின் வேப்பிலையை யும் சேர்க்க, கட்டி ஓடிவிடும். அருகிலுள்ள கோவிலில், விநாயகருக்கும், சிவனுக்கும் மஞ்சள் சார்ந்த பொருட்களை காணிக்கை செலுத்தவும். கேது கொள்ளு தானியத்தை குறிப்பார். குரு, கொண்டைக் கடலையை குறிப்பார். எனவே இரண்டுவித சுண்டல் செய்து சாப்பிடலாம். தானமும் செய்யலாம். இந்நேரத்தில் முழு மஞ்சள் தானம் செய்வதைவிட மஞ்சள் பொடி தானமே சிறப்பு.
கேது தசை- சனி புக்தி
நரம்பு தளர்ச்சி ஏற்படும். மேலும் கேதுவும், சனியும் பாதங்களை குறிக்கிறார்கள். எனவே கேது தசை, சனி புக்தி, ஜாதகர்களின் பாதத்தை பதம் பார்த்து விடும். எனவே இந்நாட்களில், வேறு நோய் உள்ளவர்களும், பாதத்தில் சிறு மாறுதல், வலி நரம்பு பிடித்து இழுப்பதுபோல் தோன்ற ஆரம்பித்தவுட னேயே, மருத்துவரிடம் சென்றுவிட வேண்டும். கேதுவுக்கு கொள்ளு என்று தெரியும். சனியின் தானியம் எள். எனவே இரண்டையும் வறுத்து பொடி செய்து, கொஞ்சம் வெல்லம் சேர்த்து இனிப்பு உருண்டையாகவோ அல்லது கொஞ்சம் மிளகாய் வற்றல் உப்பு சேர்த்து, இட்லிப் பொடியாகவோ உணவில் சேர்த்துக்கொள்வதும், பிறருக்கு கொடுப்பதும் நல்லது. அருகில் மாடு வளர்ப்பவர்களுக்கு, புண்ணாக்கு வாங்கி மாட்டுத் தீவனமாக கொடுக்கவும். ஆஞ்சனேயர் வழிபாடு நல்லது.
கேது தசை- புதன் புக்தி
இந்த நாட்களில் தேமல் எனும் படர் நோய் தாக்கும்; வேறு சிலர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவர். மேலும் இக்காலத்தில் மறதி, மந்தம், ஒரு மாதிரி பைத்தியம் பிடித்தது போன்ற நிலை உண்டாகக்கூடும். மொத்தத்தில் ஜாதகரை, சுறுசுறுப்பாக அலையவிடாமல், ஒரே இடத்தில் உட்கார வைத்துவிடும். கேது கொள்ளையும், புதன் பச்சைப் பயிரையும் குறிப்பார். எனவே, சுண்டல்செய்து சாப்பிடலாம். அல்லது கொள்ளு ரொட்டியும், பச்சைப்பயிறு சப்ஜியும் உணவாக கொள்ளலாம். பிறருக்கும் கொடுக்கலாம். சின்னக் குழந்தைகள், இந்த தசாபுக்தியை கடக்கும்போது பேச்சுத் தடங்கள் அல்லது ரொம்ப பொய் பேசுவது என்றிருப்பர். கற்பக விநாயகரை வணங்குவது நல்லது. குழந்தைகளுக்கு தொலைபேசி பொம்மையை வாங்கிக்கொடுங்கள்.
கேது தசை ஆரம்பித்தவுடனேயே, விநாயகரை அருகம்புல்லால் வணங்குவதும், விநாயகர் அகவல் படிப்பதும் நல்லது.
செல்: 94449 61845