பிறவி எண்- 8

கர்மவினைப்படி, விதிப்படி ஒரு மனிதன் வாழ்வில் அனுபவிக்கவேண்டிய அனைத்து சுப, அசுபப் பலன்களை வழங்குபவர் சனிபகவான். எட்டாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீதி, நேர்மைக்குக் கட்டுப்பட்டவர்கள். எந்த செயலையும் அவசரமாகவோ, பரபரப்பா கவோ செய்யமாட்டார்கள். எதிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பார்கள். இவர்கள் மனதில் ஏதாவதொரு சோகம், நிம்மதியின்மை ஆட்டி வைக்கும். வாழ்நாள் முழுவதும் பிறருக்காகவே வாழ்கிறார்கள். உறவுகளால் கெட்டபெயர், அவமானமுண்டு. அதேநேரத்தில் எவ்வளவு தாழ்ந்த நிலைக்குப் போனாலும் உழைத்து முன்னேறிவிடுவார்கள்.

ஜனனகால ஜாதகத்தில் சனி நின்ற நிலைக் கேற்பவே ஒருவருக்கு தொழில், உத்தியோக அனுகூலமுண்டு. சனியின் பலம் ஒரு ஜாதகத் தில் இருந்தால் மட்டுமே பதவிகளை அடைய இயலும். அடித்தட்டிலிருந்து உழைத்து உயர்ந்த வர்களாக இருப்பார்கள். தேவைப்படும் இடத்தில் உழைப்பையும், புத்தி சாதுர்யத்தையும் இணைத்துப் பயன்படுத்துபவர்கள்.

எந்த எண்ணிற்கும் இல்லாத சிறப்பு இந்த எட்டாம் எண்ணிற்குண்டு. எந்த எண்ணையும் எண்ணால் எழுதும்பொழுது எழுத்து கீழே வரும். ஆனால் எட்டாம் எண்ணை மட்டும் எழுதும்பொழுது மேலே செல்லும். இவர் களுக்கு வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கை வரப்பிரசாதமாக அமையும்.

Advertisment

பிறவி எண்- 8, விதி- 1

சனி மற்றும் சூரியனின் ஆதிக்கம் கலந்த எண். சுய ஜாதகத்தில் சனியும் சூரியனும் பலம்பெற்றால் இவர்கள் சுகத்தையும் துக்கத் தையும் சரிசமமாக பாவிப்பார்கள். பார்வைக் குக் கடின மனமும், பிடிவாதமும் உடையவரா கத் தோன்றினாலும், சகிப்புத்தன்மை நிறைந்த வர்கள். எதையும் நன்கு ஆராயும் மனதை உடையவர்கள். எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் முழு ஆதிக்கத்தை செலுத்துவார்கள். சாமர்த் தியசாலிகளான இவர்கள் எல்லா காரியங்களிலும் வெற்றிகாண்பார்கள். தெய்வ நம்பிக்கை அதிக முண்டு. மற்றவர்களைத் துல்லியமாக எடைபோடுவ தில் திறமைசாலிகள். எடுத் துக்கொண்ட காரியங்களை எவ்வளவு எதிர்ப்புகளும் தடைகளும் வந்தாலும், அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் செய்துமுடிப்பார்கள். குடும்பம் உறவுகள், குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

சுய ஜாதகத்தில் சனியும் சூரியனும் பலம்குறைந்தால் இவர்களுக்கு எப்பொழுது, எப்படி கோபம் வருமென்று யாராலும் கூறமுடியாது. பிடிவாத குணம் இவர்களிடம் அதிக முண்டு. சேமிப்பென்பது குறைவாகவே இருக் கும். கண் பாதிப்பிருக்கும். தந்தையின் ஆதரவு குறையும். சிலர் தன் ஆண் வாரிசுகளிடம் விலகியே நிற்கிறார்கள். இவர்கள் பகுத்தறிவுக் கருத்துகளை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். யாரையும் அவ்வளவு எளிதில் நம்பிவிட மாட்டார்கள். இவர்களுக்கு நிரந்தர நட்பும் கிடையாது, விரோதியும் கிடையாது. நெருங்கிய ரத்த உறவுகளின் கர்மாவில் கலந்துகொள்ள முடிவதில்லை. அப்படி கலந்துகொண்டாலும் மன வருத்தமே மிஞ்சும்.

Advertisment

பரிகாரம்

சனிக்கிழமை சிவ வழிபாடு செய்யவேண்டும்.

பிறவி எண்- 8, விதி எண்- 2

சனி மற்றும் சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் சனியும் சந்திரனும் பலம்பெற்றால் வாழ்வில் சுகதுக்கங்கள் மாறி மாறி வந்தாலும் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு வாழ்வில் எவ்வளவு சோதனைகள் நேர்ந்தாலும் வேதனை அடையமாட்டார்கள். மிகுந்த தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள். கற்பனை வளம் மிக்கவர்கள். நல்ல சிந்தனையாளர்கள். அடுத்தவர் களைத் தங்களது கருத்துகளுக்கு உட்படுத்தும் திறமை கொண்டவர்கள். சமூக சேவையில் மிகவும் நாட்ட மிருக்கும். கடுமையான உழைப்பாளிகள். பெரும் சாதனை புரிவார்கள். நலிவுற்றவர்களைக் கைதூக்கி விடும் நல்ல இயல்பினர். தனித்துச் செயல்புரியும் ஆற்றல் உடையவர்கள். மத்திம வயதிலிருந்தே எல்லா சுகங்களையும் அனுபவிப்பார்கள். பலர் உணவுத் தொழிலில் சாதனை படைக்கிறார்கள்.

சுய ஜாதகத்தில் சனியும் சந்திரனும் பலம்குறைந் தால் அதிகமான தடை, தாமதமுண்டு. மன விரக்தி, தாழ்வு மனப்பான்மை நிறைந்தவர்கள். என்ன வாழ்க்கையென்று அடிக்கடி புலம்புவார்கள். முன்னேற்றத்திற்கு கடுமையாகப் போராட நேரும். வரவுக்குமீறி செலவுசெய்வர். கடன் பெற்றும் வீண் செலவு செய்யத் தயங்கமாட்டார்கள். மற்றவர் களுக்கு உதவும் எண்ணம் கொண்டவராத லால் மற்றவர்கள்மூலம் கடன்கள் ஏற்படக் கூடிய வாய்ப்பு அதிகம். நிலையான- நிரந்தரமான தொழில், உத்தியோ கம் இருக்காது. ஆனால் பலவித மான தொழில் அனுபவமுண்டு. இவர்கள் நண்பர்கள் வட்டம் பெரிதாக இருந்தாலும் யாரையும் நிரந்தர நண்பர் களாக வைத்துக்கொள்ள மாட்டார்கள். காதல் சம்பந் தப்பட்ட விஷயங்களில் ஏமாற்றமுண்டு. மிகுதியான திருமணத்தடை உண்டு. காலதாமத திருமணமே நடக்கும். திருமண ஆசையிலிருந்து விடுபட்டபின் திருமணம் நடக்கும். சிலருக்குத் திருமணம் நடப்பதில்லை.

பரிகாரம்

சனிக்கிழமை சிவசக்தியை வழிபடவேண்டும்.

பிறவி எண்- 8, விதி எண்- 3

சனி மற்றும் குருவின் ஆதிக்கம் நிறைந்த எண். எட்டாம் எண் ஆதிக்த்தில் பிறந்து சுகமான வாழ்க்கை வாழ்பவர் களில் விதி எண் மூன்றாகப் பிறந்தவர்கள் விதிவிலக்கு. சுய ஜாதகத்தில் சனியும் குருவும் பலம்பெற்றால் சலிக்காமல் உழைக்கும் உழைப்பாளிகள். நுண்ணிய அறிவு படைத்த சாமர்த்தியசாலிகள். குற்றங்களை மன்னிக்கும் கருணை மனமுண்டு. சாதாரண குடும்பத்தில் பிறந் தாலும் தன் முயற்சியால் வெகுவிரைவில் வாழ்க்கைக்குத் தேவையான அனைத் தையும் சம்பாதிக்கிறார்கள். உழைப்பி னால் பெரும் செல்வத்தைச் சம்பாதிக் கும் யோகம் நிறைந்த வர்கள். பணம் சேர்ப்பதில் கைதேர்ந்த வர்கள். கற்பனை சக்தி யும், கூர்மையான அறிவும் உண்டு. ஆன்மிகம், மதப்பிரசங் கம், அரசியல், ஆடிட் டிங், விவசாயம், கட்ட டங்கள் கட்டுதல், ஆராய்ச்சித் தொழில் போன்றவற்றில் தனி நிபுணத்துவம் உண்டு.

சுய ஜாதகத்தில் சனியும் குருவும் பலம் குறைந்தால் மிகுந்த சோதனைகளை சந்திப் பார்கள். பொருளாதார விஷயத்தில் குறைபாடு உடையவர்கள். முன்னோர் சேர்த்துவைத்த சொத்துகள் விரயமாகும். பண விரயங்களும் அதிகமுண்டு. இவர்கள் அடுத்தவர்களால் அடிக்கடி ஏமாற்றமடைவார்கள். இருப்பினும் மனோதைரியம் மிக்கவர்கள். இவர்கள் ஜாதகத் தில் குருவும் சனியும் அஷ்டம, பாதக ஸ்தானத் துடன் சம்பந்தம் பெற்றிருக்கும். விதியின் சதியால் அடிக்கடி தோல்விகளைச் சந்திப்பார் கள். சிலர் குழந்தையாக இருக்கும்போது காணாமல் போவார்கள். வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பான பலன் தரும்.

பரிகாரம்

பிரதோஷத்தன்று சிவனுக்கு பன்னீர் அபிஷேகம் செய்வதால் மேன்மைபெற முடியும்.

பிறவி எண்- 8, விதி எண்- 4

சனி மற்றும் ராகுவின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் சனியும் ராகுவும் பலம்பெற்றால் ஆன்மிக வாழ்க்கையிலும், பொதுவாழ்க்கையிலும், அரசியலிலும் நிலை யான இடத்தைப் பிடித்துவிடுவார்கள். இவர்கள் வறுமையான குடும்பத்தில் பிறந்தாலும், தங்கள் உழைப்பினால் பெரும் செல்வத்தைச் சேர்க்கிறார்கள். சிலர் அரசு உத்தியோகத்தில் இருப்பார்கள். உயரதிகாரிகளைத் தன்வசப் படுத்தி பதவி உயர்வு, ஊதிய உயர்வுபோன்ற அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்யும் தந்திரசாலிகள். ஓரிடத்தில் லட்சம் பேர் இருந்தால்கூட இவர் களின் தனித்திறமை மிளிரும். தங்களைப் பற்றி பலர் வியப்போடு பேசக்கூடிய சூழ் நிலையை அமைத்து மிக சுலபமாக பிரபலமாகி விடுவார்கள். அதே நேரத்தில் இவர்கள் முதலீடு போட்டுச் செய்யும் சுயதொழில் செய்யாதவரை எந்த பாதிப்புமிருக்காது. முதலீடு அதிகமுள்ள தொழிலில், நினைத் துப் பார்க்கமுடியாத அசுர வளர்ச்சியும், எதிர் பாராத- மீளமுடியாத வீழ்ச்சியுமுண்டு.

சுய ஜாதகத்தில் சனியும் ராகுவும் பலம்குறைந் தால் தங்களது பேச்சிலும், முடிவெடுப்பதிலும் வேகமாகச் செயல்படுவார்கள். குறிக்கோள், லட்சியமில்லாமல் இருப்பார்கள். உழைப்பிற் கேற்ற ஊதியமில்லாமை, வருமானமே இல்லாத நிலையிருக்கும். சொற்ப வருமானமும் விரயமாகும். கொடுத்த பணம் திரும்பவராது. குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமில்லாமல் வீணாக ஊர் சுற்றித் திரிவார்கள். சிலர் குடும்பத் தைப் பிரிந்து வாழ்வார்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாது. அதனால் இவருடைய பேச்சிற்கு மதிப்பிருக்காது. சிலருக்கு உழைக்காத அதிர்ஷ்ட வெளிநாட்டு வருமானம் கிடைக்கும்.

பரிகாரம்

சனிக்கிழமை ராகு காலத்தில் சிவ வழிபாடு செய்யவேண்டும்.

dd

பிறவி எண்- 8, விதி எண்- 5

சனி மற்றும் புதன் ஆதிக்கம் சேர்ந்த எண். கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு என்பது அறிஞர் மொழி. தன் புத்தி சாதுர்யத்தால் உட்கார்ந்த இடத்திலிருந்து உலகத்தைத் தன் சட்டைப் பையில் வைத்துக்கொண்டு எளிமை யாக சம்பாதிப்பவர்கள் புதன், சனி வலிமை பெற்றவர்கள். வியாபாரத் தந்திரம் நிறைந்தவர் கள். கல்லைக்கூட காசாக்குவார்கள். இளமை யுணர்வு, காதல், சாதிக்கும் வெறி, சுயநலம், இரட்டை வேடம், நடிப்பு, பிறரைப் புகழ்ந்து வேலை வாங்கும் திறன், மகா புத்திசாலித்தனம்,

ஆழ்ந்த அறிவு நிரம்பியவர்கள். அறிவால், தைரியசாலித் தனத்தால் எதையும் சீர்தூக்கிப் பார்த்து செயல்படுவதில் வல்லவர்கள். பின்னர் வரக்கூடிய விஷயங்களை முன்பே கண்டு பிடித்து அதற்கான தீர்வைநோக்கி திட்ட மிடுவார்கள்.மற்றவர்களின் மனநிலையை அறிந்து அதற்குத் தக்கவாறு தன் முடிவை மாற்றிக்கொள்வார்கள்.

சுய ஜாதகத்தில் சனி, புதன் வலிமை குறைந் தால் மந்தத் தன்மை மிகுதியாக இருக்கும். சொல்புத்தியும் இருக்காது, சுயபுத்தியும் கிடையாது. நீசத்தொழில் அல்லது வேலை வாய்ப்புகளில் நிரந்தரமற்ற தன்மைகளும், நோய் நொடிகளும், கஷ்ட ஜீவனமும் நிரம்பியிருக்கும். பிறந்ததுமுதல் சிறுசிறு நோய்த் தாக்கம், வைத்தியச் செலவிருக்கும். உறவினர்களே பகை யாவார்கள். குறிப்பாக தாய்மாமன்வழி விரயம் அல்லது கருத்து வேறுபாடிருக்கும். எப்பொழு தும் கோப உணர்வு, பழி தீர்க்கும் எண்ணம் இருந்துகொண்டே இருக்கும். நண்பர்கள், விரோதிகளிடம் பொருளிழக்கும் நிலை ஏற்படலாம். கடனுக்காக குறுகிய காலமாவது தலைமறைவாக வாழ்வார்கள். இதற்கு சுப கிரக சம்பந்தமிருந்தால் விபரீத ராஜயோக அடிப் படையில் கடன்தொகை தள்ளுபடியாகும். சிலர் வெளியூரில், வெளிநாட்டில் வேலை பார்க்கும் நிலையிருக்கும்.

பரிகாரம்

பிரதோஷத்தன்று சிவனுக்கு வில்வார்ச் சனை செய்யவும்.

பிறவி எண்- 8, விதி எண்- 6

சனி மற்றும் சுக்கிரன் ஆதிக்கம் கலந்த எண். சுய ஜாதகத்தில் சனி மற்றும் சுக்கிரன் பலம் பெற்றால் தொழிலால் செல்வாக்கு, அதிகமாகப் புகழ்பெறுவார்கள். தொழில் முன்னேற்றம் மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும். சிந்திக்கும் திறனால், உள்ளுணர்வால் தொழிலில், வாழ்வில் ஏற்படப்போகும் அனைத்து ஏற்ற இறக்கங் களையும் உணர்ந்து செயல்படுவார்கள். திருமணத்திற்குப்பிறகு முன்னேற்றம் அதிகரிக்கும். வசதியான, நல்லதொழில் அல்லது உத்தியோகத்திலுள்ள வரன் அமையும். அழகு, ஆடம்பரப் பொருள்மீது ஆர்வம்கொண்டு விரயம் செய்வார்கள். எதிர்பாலினத்தரைக் கவரும் இயல்புடையவர்கள். புகழுக்கு ஆசைப்பட்டு செலவு செய்வார்கள். இவர்களின் தேவைக்கு எப்படியாவது பணம் வந்துகொண்டே இருக்கும்.

சுய ஜாதகத்தில் சனி, சுக்கிரன் பலம் குறைந்தால் உல்லாச வாழ்க்கையை விரும்பி ஆடம்பரச் செலவு செய்வார்கள். சித்தப்பா, மூத்த சகோதரவழியிலும், இளைய மனைவிமூலமும் விரயம் மிகுதியாக இருக்கும். சிலருக்கு திருமணமே நடக்காது. திருமணம் நடந்தாலும் குடும்ப வாழ்வு சிறக்காது. சுமாரான திருமண வாழ்வே அமையும். சில தம்பதிகள் தொழில், உத்தியோக நிமித்தமாகப் பிரிந்து வாழ்வார்கள். இந்த அமைப்பினர் பழைய பொருள் அல்லது நலிந்த தொழிலை எடுத்து நடத்தினால் லாபம் கிடைக்கும். வெற்றிக்காக நேரம் காலம் பார்க்காமல் உழைப் பதால் வெற்றிக்கனி இவரைத் தேடிவரும்.

பரிகாரம்

வெள்ளிக்கிழமை சுமங்கலிப் பெண்களுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கவும்.

பிறவி எண்- 8, விதி எண்- 7

சனி மற்றும் கேதுவின் ஆதிக்கம் இணைந்த எண். சிறிய செயலுக்கும் அதிக முயற்சிசெய்த பிறகே வெற்றிகிடைக்கும். செயல்திறன் குறைவுபடும். ஞாபகமறதி நிறைந் தவர். திறமையை வெளிக்காட்ட போதிய சந்தர்ப்பம் அமையாது. எந்தத் தொழில் செய்தாலும் நஷ்டம், விரயம் மிகுதியாக இருக்கும். தொழிலுக்காக பயணம் செய்ய நேரும் அல்லது அலைச்சல் மிகுந்த தொழில் செய்வார்கள். உத்தியோகமே சிறந்ததென்றா லும் உழைப்பிற்கேற்ற ஊதியம் இருக்காது. சிலர் வேலை செய்யும் கம்பெனிமூலம் வெளிநாடு செல்வார்கள். இரவு வேலை, இரவுநேரத் தொழில் சிறப்பானது. இருப்பினும் இறுதிக் காலத்தில் பொன்னும், பொருளும், கீர்த்தியும் கிடைத்துவிடும். திருமணத் தடை அதிகமுள்ளவர்கள். பூர்வீக சொத்தை இழக்க நேரும் அல்லது பூர்வீகத்தை விட்டு வெளியேற நேரும். ஒருசிலர் அந்திமக் காலத்தில் பூர்வீகம் திரும்புவார்கள்.

பரிகாரம்

சனிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் ஆஞ்சனேயரை வழிபடவேண்டும்.

பிறவி எண்- 8, விதி எண்- 8

தனித்த சனியின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் சனி பலம்பெற்றால் ஜாதகர் பார்க்கும் தொழில்மூலம் புகழ், அந்தஸ்து, கௌரவம் கிடைக்கப்பெறுவார். தொழில் வாய்ப்புகள் தேடிவரும். அதிகாரத் தோரணை மிக்கவர். நிர்வாகத் திறனுண்டு. தொழில் வளர்ச்சி பற்றிய சிந்தனை மிகைப்படுத்தலாக இருக்கும்.

சொந்த முயற்சியில் தொழில் செய்பவர்கள். மிகப் பெரிய தொழிலதிபராக தனித்தன்மையுடன் வலம்வருவார்கள். அதிகார பலம்மிக்க அரசாங் கப் பதவி, அரசியல் செல்வாக்கு, ஆதாயம், செய்யும் தொழிலில் பெருத்த ஆதாயமுண்டு. நல்ல வருமானமுண்டு. தர்ம ஸ்தாபனம் மற்றும் அறக்கட்டளைகள் நிறுவி அன்னதானம், தானதர்மம் செய்பவர்கள். பெற்றவர்களுக்கு கர்மம் செய்யும் பாக்கியம் பெற்றவர்கள்.

இதற்கு அசுப கிரக சம்பந்தமிருந்தால் இவர் களுடைய தொழிலறிவு பிறருக்கே பயன்படும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. சிந்தனைத் திறன் குறைவுபடும். முன்னேற்றம் இருக்காது. பூர்வீகச் சொத்தை அழிப்பார்கள். குலதெய்வக் குற்றம் தீர்க்கமுடியாமல் இருக்கும்.

ஆன்மிக நாட்ட மிகுதியால் தன் தகுதிக்குமீறி ஆன்மிக செலவு செய்வார்கள். திருமணத் தடை அதிகமிருக்கும். பலருக்கு புத்திர பாக்கியமின்மை ஏற்படும். சிலர் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்று அங்கேயே தங்கும் நிலை ஏற்படும். நிறைய அனுபவ முதிர்ச்சியுடைய வர்கள்.

பரிகாரம்

அமாவாசை திதியில் முன்னோர்கள் வழிபாடு மிக அவசியம்.

பிறவி எண்- 8, விதி எண்- 9

செவ்வாய் மற்றும் சனியின் ஆதிக்கம் இணைந்த எண். சுய ஜாதகத்தில் செவ்வாய், சனி பலம்பெற்றால் தொழில் முன்னேற்றம் சிறப் பாக இருக்கும். அதிர்ஷ்டகரமான தொழில் அமையும். நிர்வாகத்திறன், தலைமை தாங்கும் பண்புண்டு. தொழில் நுட்பம் அறிந்தவர்கள்.

அரசாளும் யோகம், அரசுஉத்தியோகம் உண்டு.

பிறரை வழிநடத்தும் அதிகார நிலையில் தான் தனித்தியங்கி பலருக்கு வேலைதரும் இயல்பில் இருப்பார்கள். நீடித்த வருமானமும், தொழில் செய்யும் இடங்களில் நல்ல மரியாதையும் கௌரவமும் ஜாதகருக்குக் கிடைக்கும்.

சுய ஜாதகத்தில் செவ்வாய் சனி பலம் குறைந்தால் கோழையாய், உடல் உழைப்பில் லாமல் இருப்பார்கள். உடன்பிறந்த இளைய சகோதரர்வழியில் விரயச் செலவு, கருத்து வேறுபாடு நிலவும். பலர் தனது தங்கைகளைக் கரைசேர்க்க உரிய வயதில் திருமண வாழ்க்கை யைத் தவறவிடுகிறார்கள். ஜாமின் பிரச்சினை உண்டு. பாகப்பிரி வினை சுமுகமாக இருக்காது. சில ஆண்களுக்கு வீரியம் குறைவுபடும். அதனால் திருமண வாழ்வில் பிளவுண்டாகும்.

பரிகாரம்

சனிக்கிழமை செவ்வாய் ஓரையில் முருகனை வழிபடவும்.

(தொடரும்)

செல்: 98652 20406