பிறவி எண்- 7
ஒரு மனிதனுக்கு லௌகீக ஆர்வத்தை அதிகரிப்பவர் ராகு என்றால், லௌகீகத்தி-ருந்து மீண்டு முக்திக்கு வழிகாட்டுபவர் கேது. அதனால்தான் ஆன்மிக எண்ணத்தைக் கொடுக்கும் கேது தசை முன்னால் வந்து, ஆடம்பரத்தைக் கொடுக்கும் சுக்கிர தசை பின்னால் வருகிறது. காரணமில்லாமல் காரியமில்லை. வாழ்வு நிலையற்றது. ஆனால் வாழும் வாழ்க்கை அர்த்தமுள்ளது என்னும் வாழ்வியல் தத்துவத்தைப் புரியவைப்பவர் கேது. ஞானத்தால் ஒருவர் ஈர்க்கப்பட்டுவிட்டால் மனம் சலனப்படாது. சிற்றின்பம், பேரின்பத்தை முழுமையாக உணரவைப்பது கேது மட்டுமே. பற்றற்ற வாழ்க்கையே நிரந்தரமென்பதைப் புரியவைப்பவர் கேது. கேது வெறுமையையும் வெறுப்பையும் ஞானமென்ற அனுபவத்தையும் சேர்த்தே கொடுப்பார். மனப் பக்குவம் கிடைத்தபிறகு ஆடம்பரமான வாழ்க்கை கிடைத்தாலும், மனம் அதை அமைதியாகக் கடந்துசெல்லும். சுய ஜாதகத்தில் கேது வலுப்பெற்றவர்கள் ஞானிகளாக, சந்நியாசிகளாக, ஆன்மிகவாதிகளாக மாறுகிறார்கள். பொதுவாக தடை, தாமதம், சிக்கல், வம்பு, வழக்கின் குத்தகைதாரர் கேது என்பதால் எண்ணிய-ல் ஏழாம் எண் ஆதிக்கத்தில் பிறந்த வர்களின் வாழ்க்கை கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கிறது. வாழ்க்கையில் ஏற்ற- இறக்கம் மிகுதியாக இருக்கும். திருமணத்திற்கு முன்பு திருமணத்தைத் தடை செய்கிறது. திருமணத்திற்குப் பிறகு இல்லற வாழ்க்கையில் பிடிப்பில்லாத நிலையைத் தருகிறது.
பிறவி எண்- 7, விதி எண்- 1
கேது மற்றும் சூரியனின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் சூரியனும் கேதுவும் பலம்பெற்றால் நிர்வாகத்திறன் நிறைந்தவர்கள். எதையும் எளிதில் புரிந்துகொள்ளும் தன்மை, ஆர்வம் அதிகம். ஆயுள் அதிகம். அறிவும் தெளிவுமுண்டு. மற்றவர்களை மதிப்பவர்கள். பிரசித்தி பெற்ற சங்கங்கள், இயக்கங்களில் நிர்வாகி. ஆரம்பகால வாழ்க்கை வறுமையாகவும், 50 வயதுக்குமேல் திடீர் தன லாபமும் அடைவார்கள். அடக்கம், அன்பு செலுத்துதல், புகழ் விரும்பாமை, பேராசை யற்ற மனப்போக்கு ஆகிய குணங்கள் காணப்படும். சொந்தத் தொழில் செய்யவே விரும்புவார்கள். ஆனால் மற்றவர்களிடம் வேலை செய்யும் அமைப்பே உண்டாகும். முதலாளிகளுக்கு பல ஆலோசனைகளையும், பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளையும் கூறுவார்கள். அதனால் முதலாளி களால் மிக விரும்பப்படுவார்கள். தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் இவர்கள் அடிக்கடி வேலையை மாற்றும் இயல்பினர். சம்பள உயர்வே இவர்களது நோக்கம். மிகவும் சாமானிய சூழ்நிலையி-ருந்து, ஏராளமான இடையூறுகளை சமாளித்து நிலையாக முன்னேறுவார்கள். சூரியன் பலம்குறைந்து கேது பலம்பெற்றால் கண் பாதிப்பு, இதயக் கோளாறு, எலும்பு தொடர்பான பிரச்சினைகள் இருக்கும். இவர்களுக்கு அரசாங் கத்தாலும் தந்தையாலும் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இவரது தந்தை பல சிரமங்களை சந்திக்கக்கூடும். சூரியன் கேதுவுடன் இணைந்து கிரகண பாதிப்படைந்தால் கோபக்காரர், அவசரக் காரர், பிடிவாத குணமுள்ளவர்கள். இவர்களுக்கு இறையருள் இயற்கையிலேயே இருந்தாலும், அதை பொறாமை, சுயம்நலம் போன்ற எண்ணத் தால் இழக்கவேண்டியுள்ளது.
பரிகாரம்
ஞாயிற்றுக்கிழமை சூரிய ஓரையில் விநாயகருக்கு வஸ்திரம் சாற்றி வழிபடவேண்டும்.
பிறவி எண்- 7, விதி எண்- 2
கேது மற்றும் சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் சந்திரன், கேது சம்பந்த மில்லாதவரை பெயரும் புகழும் அமைதியும் கிடைக்கும். இல்லையெனில் தீயவழியில் சென்று தனக்குத் தானே ஆபத்தையும் அவமானங்களையும் தேடிக்கொள்வார்கள். பெரும்பாலும் ஒருவரின் ஜாதகத்திலுள்ள கிரக அமைப்புகள் பிறவி எண், விதி எண் சார்ந்தே உள்ளன. சந்திரன், கேது சம்பந்தமிருந்தால் இவர்களுக்கு அனைத்து காரியங்களும் தடை, தாமதத்துடன்தான் நடக்கும். மனம் அமைதியில்லாத நிலையில்தான் எப்போது மிருக்கும். சந்திரனுக்கு கேது சம்பந்தம் இருப்பவர் கள் வாழ்வதற்காக உழைக்கலாம்; ஆனால் உழைப்பே வாழ்க்கையாக இருக்கக்கூடாதென்ற எண்ணமுடையவர்கள். இரவில் வேலை செய்து பக-ல் உறங்குவார்கள். கிடைத்த வேலையைச் செய்து, இருப்பதை உண்டு, படுத்த இடத்தில் நிம்மதியாகத் தூங்க வேண்டுமென்று நினைப் பார்கள். அதேநேரத்தில் நேர்மை, நியாயம் நிறைந்த வர்கள். அமானுஷ்ய சக்தி நிறைந்தவர்கள். உள்ளுணர்வால் அனைவரின் எதிர்காலப் பலனையும் கூறுவார்கள். எளிதில் காதல்வலை யில் சிக்கக் கூடியவர்கள். இவர்களுக்கு குடும்ப வாழ்கையில் நிம்மதி இருக்காது. மேலும் குடும்ப வாழ்க்கை சுகம் தராது. எனவே இந்த எண்காரர்கள் சரியான பெயரை அமைத்துக் கொள்ள வேண்டும்.
பரிகாரம்
தினமும் விநாயகர் அகவல் படித்து வர வெற்றிமேல் வெற்றி வந்துசேரும்.
பிறவி எண்- 7, விதி எண்- 3
கேது மற்றும் குருவின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் கேதுவும் குருவும் பலம்பெற்றால் ஆன்மிக மார்க்கத்தில் அதிக ஈடுபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள். எல்லாவித வியாபாரமும் ப-தமாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் ஏற்படும். மக்களைக் கவர்கின்ற சிறந்த எண் இது. எனவே எப்போதும் இவரைச் சூழ்ந்து பத்துபேர் இருப்பார்கள். அரசிய-லும் இவர்களுக்கு அதிர்ஷ்டம், பொதுஜன ஆதரவுண்டு. வாக்கு சொல்லுதல், குறி சொல்லுதல், மதபோதனை செய்தல், சமூக சீர்திருத்தம் போன்ற பணியில் தமக்கென்று தனி முத்திரை பதிக்கிறார்கள். அறிவைத் தூண்டும் தொழில்களான ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், தத்துவப் பேராசிரியர்கள், மேலாளர்கள், மத போதகர், அர்ச்சகர், தத்துவ மேதைகள், மந்திரி, கௌரவமான தொழில், நீதிபதிகள், அரசுத் துறை, நீதித்துறை, அச்சுத் தொழில், எழுத்து போன்ற துறைகளிலும் பிரகாசிப்பார்கள். தர்ம ஸ்தாபனங்கள், கோவில் நிர்வாகம், ஊர்த்தலைமை போன்றவற்றில் கௌரவப் பதவி வகிப்பார்கள். அரசியல் ஈடுபாடும் உண்டு. அதில் நன்கு பிரகாசிப்பார்கள். நல்ல அரசு உத்தியோகங்கள் கிடைக்கும். இவர்கள் எந்தத்துறையில் ஈடுபட்டாலும் முன்னேற்றம் அடைவார்கள். குரு பலம்குறைந்து கேது பலம்பெற்றால், விசேஷமாக தொடங்கிய வாழ்க்கை போகப்போக சுமாரான நிலைக்கு வரும். புகழ் மட்டும் மிஞ்சும். தங்களின் அறிவாற்றல், சாதனைகள்மூலம் மக்களுக்கு மத்தியில் புகழ்பெறுவார்கள். இவர்களது வாழ்வில் பெருமளவிற்கு பொருளாதாரம் பெருகாது. இந்த எண்காரர்களை வேலைக்கு வைக்கும் முதலாளிகள் அதிக லாபம் சம்பாதித்துவிடுவார்கள். இவர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டுத் தாங்கள் செய்யும தொழிலை அடிக்கடி மாற்றிக்கொள்வார்கள். நிரந்தரமான ஒருதொழிலைத் தேர்ந்தெடுத்து, அதில் புதிய வழிமுறைகளையும், புதுமையையும் புகுத்தி வெற்றிபெற வேண்டும். ஆழம் தெரியாமல் ஒன்றில் இறங்கக் கூடாது. குருவும் கேதுவும் பலம் குறைந்தால் ஆன்மிகப் போர்வையில் சுயநலவாதியாக, மதவாதிகளாக அதிகம் சம்பாதித்து அதிகம் இழக்கிறார்கள்.
பரிகாரம்
சனிக்கிழமை குரு ஓரையில் சித்தர்களை வழிபடவேண்டும்.
பிறவி எண்- 7, விதி எண்- 4
கேது மற்றும் ராகுவின் ஆதிக்கம் கலந்த எண். இந்த அமைப்பில் பிறந்தவர்கள் ஜாதகத்தில் வ-மையான ராகு- கேது தோஷம், காலசர்ப்ப தோஷம் அல்லது கிரகண தோஷமிருக்கும். கடுமையான வினைப்பதிவுகள் இருக்கும். இது கர்மதோஷம் இருப்பதை சுட்டிக்காட்டும் கிரக எண்கள். இதன் பலனாக இவர்கள் எதைச் செய்தாலும் தவறாகவே முடியும். கடுமையான தொழில் தடையை ஏற்படுத்தும். வாழ்வில் எவ்வளவு உயரமாகச் சென்றா லும் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தும். ஆயுள் தோஷத்தைக்கூட ஏற்படுத்தும். பூர்வீகத்தைவிட்டு வெளியேற்றும். சொந்த ஊரில்- பூர்வீக ஊரில்- பூர்வீக சொத்தில் குடியிருக்க விடாது. பூர்வீகம் தொடர்பான வம்பு வழக்குண்டு. குலதெய்வ அனுக்கிரகம் இருக்காது அல்லது பூர்வீகம், குலதெய்வம் எதுவென்று தெரியாது. சம்பளமில்லாமல் வேலைசெய்யும் நிலை அல்லது மிகவும் அடிமைத்தனமான வேலைசெய்யும் நிலை, குறைந்த ஊதியத்தைப் பெறுதல் என்ற நிலை ஏற்படும். இந்த கிரக எண் உள்ளவர்கள் அதிக முதலீடு செய்து தொழில் செய்யாம-ருப்பது நல்லது. ஒரு சிலருக்கு 40 வயதாகியும்கூட சொல்-க்கொள்ளும்படியான வேலையில் லாமல், சூதாட்டம், திருட்டு என வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தும். நல்ல திறமையிருந்தும் சரியாக சம்பாதிக்காமல், வருமானமில்லாமல் இருப்பார்கள். கல்வி, திருமணம், புத்திர பிராப்தம், தொழில், உத்தியோகம் போன்ற அனைத்திலும் பிரச்சினை உண்டு. இவர்களுக்கு வெளிநாட்டு வாழ்க்கை வரமாக அமையும்.
பரிகாரம்
தினமும் மாலை 4.30 முதல் 6.00 மணிவரையிலான நித்திய பிரதோஷ வேளை யில் சரபேஸ்வரரை வழிபடவேண்டும்.
பிறவி எண்- 7, விதி எண்- 5
கேது மற்றும் புதனின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் கேதுவும் புதனும் பலம்பெற வேண்டும். ஞானத்தை, வாழ்க்கைத் தத்துவத்தை, ஆன்மிக நாட்டத்தை வழங்கக்கூடிய கேதுவின் 7-ஆம் எண்- தேவர்களில் அறிவுக்கும், புத்திக்கும் பெயர்பெற்ற விஷ்ணுபகவானின் முழு கடாட்சமும் பொருந்திய எண்ணான ஐந்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பு. வலை கிரகமான கேதுவும், காதல் கிரகமான புதனும் சேருவதால் வேறெந்த எண்ணுக்கும் இல்லாத காந்தசக்தி இந்த எண் நபர்களுக்குண்டு. மக்களைக் கவர்வதில் இவர்களுக்கு நிகர் எவருமில்லை. எழுத்தாளர் பணியில் நன்கு பிரகாசிப்பார்கள். பேனா நண்பர்கள் அதிகமுடையவர்கள். அரசியல் துறையிலும், அதிர்ஷ்டமுடையவர்கள். இவர்கள் எந்த வியாபாரமும் செய்யலாம். பொதுஜன ஆதரவுண்டு. இவர்கள் இருக்கும் இடத்திற்குக் கூட்டம் அதிகம் வரும். தரகர்களாகவும், கமிஷன் முகவர்களாகவும், டிராவல்ஸ் ஏஜென்டுகள், கணிதம், சார்ட்டர்ட் அக் கௌன்ட் தொழில், பைனான்ஸ், கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்றவர்களாகப் புகழ்பெறுவார்கள். சுய ஜாதகத்தில் கேது மற்றும் புதன் பலம்குறைந்தால் இவர்கள் சுயநலம், வஞ்சகம், பொறாமை ஆகியவற்றால் எதிரிகளை வீழ்த்துவார்கள். இதுவே இவர்களுக்குப் பெரும்பாலான எதிரிகளை உருவாக்கிவிடும். கூட்டுத் தொழில் செய்யக்கூடாது. தீராத கடன், நோயைத் தந்து வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி விடுகிறது. சுயதொழில் புரிபவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பலர் தரங்கெட்ட காதல் வாழ்க்கையில் சிக்குகிறார்கள்.
பரிகாரம்
சங்கடஹர சதுர்த்தி நாட்களில் விரதமிருந்து விநாயகருக்கு அறுகம்புல் மாலை சாற்றி வழிபடவும்.
பிறவி எண்- 7, விதி எண்- 6
கேது மற்றும் சுக்கிரன் ஆதிக்கம் கலந்த எண். பிறவி எண்- 6, விதி எண்- 7-ல் சொன்ன அனைத்துப் பலன்களும் பொருந்தும். நடிப்பிலும் எழுத்திலும் வெற்றியை அளிக்கிறது. அமைதியின்மை, கோபம், பிடிவாதம், சோகம், இயலாமை, உணர்ச்சிவசப்படுதல் போன்ற மனநிலை பாதிப்பு ஏற்படும். ஒரு தெளிவான சிந்தனை இருக்காது; முடிவெடுக்க முடியாது. உண்மையான அன்பை அனுபவிக்க முடியாமல் ஏமாற்றமடைகிறார்கள். பல ஆண்களுக்குத் திருமணத்தையே நடத்தித் தராத எண்ணியல் சேர்க்கை. திருமணத்திற்கு பெண்தேடியே வெறுப்பை ஏற்படுத்தும். திருமணம் நடந்தபிறகு குடும்ப பிரச்சினைக்காக பஞ்சாயத்திற்கு நடந்தே வாழ்க்கை முடிந்துவிடும். ஆண்களுக்கு எத்தனை திருமணம் செய்தாலும் திருமணத்தில் நிம்மதியில்லாத நிலையுண்டு. சிலருக்கு முதல் திருமணம் மாறுபட்டதாக அமைந்தாலும், இரண்டாவது திருமணம் நல்ல நிம்மதியைத் தருகிறது. பலர் சுக்கிரனின் பலவீனத்தால் தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். பல சந்தர்ப்பங்களில், இந்த எண்களின் சேர்க்கையானது குழந்தையில் லாமை, ஆண்மைக் குறைவு அல்லது தாமத மாகப் பிறந்த குழந்தை அல்லது பலவீனமான குழந்தைகளின் பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள். பலர் போதைப் பழக்கங் களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
பரிகாரம்
வெள்ளிக்கிழமை நவகிரக சுக்கிரனை வழிபடவேண்டும்.
பிறவி எண்- 7, விதி எண்- 7
தனித்த கேதுவின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் கேது பலம்பெற்றால் உயர்ந்த லட்சியம், மேன்மையான சுபாவம், ஆன்மிக எண்ணங்கள் போன்ற உயர்ந்த குறிக்கோளின் அடிப்படையில் செயல்படக் கூடியவர்களாக இருப்பார்கள். கடின உழைப்பு, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நீதி, நேர்மை, நியாயம், தர்மம் போன்றவற்றைக் கற்றுக் கொள்வார்கள். அடுத்தவர்களின் தூண்டுதலை எதிர்பார்க்கமாட்டார்கள். இவர்கள் நீதிக்கும், தர்மத்திற்கும் போராடு வார்கள். மக்களுக்காக மனம்விரும்பி உழைப் பார்கள். மக்களின் சீர்திருத்தத்திற்காகப் போராடுவார்கள். எதிர்பாராத மாறுதலைத் தரும் எண். ஐம்புலன்களுக்கும் எட்டாத அரிய செயல்களையும் இயற்கையிலேயே உள்ளுணர்வாக அறிவார்கள். கேது மறைவு ஸ்தானத்தில் நின்று பலம்குறைந்தால் வாழ்க்கையில் உச்சகட்ட விரக்தி, திருமணத் தடை, வறுமை, கடன் ஆகியவற்றை பிரதிப-க்கும் எண். வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள், ஏற்ற- இறக்கங்கள் இருக்கும். அமைதியின்மை, கோபம், பிடிவாதம், சோகம், இயலாமை, உணர்ச்சிவசப்படுதல் போன்ற மனநிலை பாதிப்பு ஏற்படும்.
பரிகாரம்
தினமும் எமகண்ட வேளையில் விநாயகரை வழிபட வேண்டும்.
பிறவி எண்- 7, விதி எண்- 8
கேது மற்றும் சனியின் ஆதிக்கம் நிறைந்த எண். மிகுதியான கர்மவினைப் பதிவின் பிரதிப-ப்பைத் தரக்கூடிய எண். கேது- தடை, தாமதம்; சனி- கர்மவினை, தொழில். சுய ஜாதகத்தில் சனி, கேதுவுக்கு எந்த சம்பந்தமும் இல்லாதவரை பெரிய பாதிப்பைத் தராது. முன்பே கூறியதுபோல் இந்த எண்ணிற்கு சம்பந்தம் பெற்ற ஜாதக அமைப்பே இருக்கும். திருமணத் தடை அதிகமுண்டு. வியாபாரம், சுயதொழில் சிந்தனை அதிகமிருக்கும். பெரிய முதலீட்டில் தொழில்செய்து வாழ்வாதாரத்தை இழந்த பலருக்கு இதுபோன்ற எண்களின் சம்பந்தமிருக்கும். தொழி-ல் இவர்களுக்கு வாராக்கடனே அதிகம். முதலாளி- தொழிலாளி கருத்து வேறுபாடு அதிகமிருக்கும். இந்த யோகமுள்ளவர்கள் தனிபட்ட வாழ்க்கை அல்லது பொருளாதாரத்தில் தோற்றுப் போகிறார்கள். ஆனால் நிச்சயம் புகழை அடைவார்கள். இதில் எந்த மாற்றமும் இல்லை. சிலர் ஆறு மாதம் தொழில், ஆறு மாதம் உத்தியோகம் என்ற நிலைப்பாட்டில் இருப்பார்கள். அல்லது ஒரு வருடத்திற்குத் தேவையான பொருளாதாரத்தை ஆறு மாதத்தில் சம்பாதித்துவிட்டு மீதமுள்ள ஆறுமாதம் ஓய்வெடுப்பார்கள். தொழில் சார்ந்த நல்ல வாய்ப்புகள் வரும்போது அந்த வாய்ப்புகளை இவர்கள் பயன்படுத்திக்கொள்ள மாட்டார்கள். தொழி-ல் இவர்களுக்கு நிரந்தரமான வருமானம் எப்போதும் இருக்காது. ஆனால் தொழில் ஆலோசனை வழங்கும் கன்சல்டன்சி, தொழிற்கல்வி, தொழில் வாய்ப்புகளைக் கற்றுத்தரும் ஆசிரியராக இருப்பவர்கள், தொழில் நிர்வாக இயக்குனர்கள் போன்ற அமைப்பினர்களுக்கு பெரும் பொருளுண்டு.
பரிகாரம்
சனிக்கிழமை சிவ வழிபாடு செய்யவேண்டும்.
பிறவி எண்- 7, விதி எண்- 9
கேது மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்த எண். இவர்களுக்கு உடன்பிறந்தவர்களால் ஏதேனும் மன உளைச்சல் இருந்துகொண்டே இருக்கிறது. மிகக் குறிப்பாக சொத்தால் பிரிவினை உண்டாகிறது. சிலருக்கு வில்லங்கமான சொத்தால் பண முடக்கம் ஏற்படும். அல்லது மூலப் பத்திரம், ஈ.சி இவற்றின்மூலம் வேறு யராவது சொத்தின்மேல் உரிமை கொண்டாடுவார்கள். அதாவது முறையான ஆவணங்கள் இல்லாத ஒரு சொத்திற்கு பலர் உரிமை கொண்டாடுவது அல்லது சம்பந்தமில்லாத சொத்தை போ-ப் பத்திரங்கள் தயாரித்து விற்பவர்களிடம் வாங்கி ஏமாறுவது அல்லது புறம்போக்கு நிலங்களை பட்டா போட்டு விற்பவர்களிடம் நிலம் வாங்கி ஏமாறுவார்கள். அதனால் சொத்து தொடர்பான வழக்கு, தொடர் சட்டச்சிக்கல் இருந்துகொண்டே இருக்கும். பெண்களுக்கு இந்த கிரக எண்கள் 27 வயதிற்குமேல்தான் திருமணத்தை நடத்துகிறது. திருமணமானபிறகு ஏன் திருமணம் நடந்ததென்று வருந்தும் வகையில்தான் வாழ்க்கை இருக்கும். கணவனை கடும் பகையாளியாக்கி, நீதிமன்றப் படியேறிய பெண்களே அதிகம். வெகுசில தம்பதிகள் விதிவிலக்காக கருத்து வேறுபாடின்றி தொழில் நிமித்தம் அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் வாழ்நாளின் பெரும் பகுதியில் பிரிந்தே வாழ்கிறார்கள்.
பரிகாரம்
செவ்வாய்க்கிழமை எமகண்ட நேரத்தில் சிவ வழிபாடு செய்யவேண்டும்.
(தொடரும்)
செல்: 98652 20406