பிறவி எண்- 2

சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த எண். சந்திரன் வளர்ந்து தேயும் கிரகமென்ப தால், இரண்டாம் எண் ஆதிக்கம் ஏற்ற- இறக்கம் நிறைந்ததாகவும், மன சஞ்சலத்தை, எண்ணங்களின் ஓட்டத்தை மிகைப்படுத்துவதாகவும் இருக்கும். சந்திரன் தாய்மையுணர்வு நிறைந்த கிரகமென்பதால் இவர்கள் இளகிய மனம் படைத்தவர்களாக இருப்பார்கள். இரண்டாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் வெளித் தோற்றத்தில் சிரித்த முகத்துடனும், மனதிற்குள் நிறைந்த சோகத்துடனும் வாழ்வார்கள்.

பிறவி எண்- 2, விதி எண்- 1

சந்திரனின் 2-ஆம் எண் ஆதிக்கத்தில் பிறந்து, சூரியனின் 1-ஆம் எண் விதி எண்ணாக அமைந்தால், சுய ஜாதகத்தில் சந்திரனும் சூரியனும் பலம்பெற வேண்டும். சூரியன் சிவன்; சந்திரன் சக்தி. சிவனும் சக்தியும் சேர்ந்தால் "மாஸ்'தான். சுய ஜாதகத்தில் சந்திரனும் பலம்பெற்றால் சகலவிதத்திலும் பரிமளிப்பார்கள். சிறந்த கற்பனையாளர்கள். சிந்தனை சக்தி மிகுந்தவர்கள். கவிதை, கதை, கட்டுரை, வசனம் எழுதுவதில் கைதேர்ந்தவர்கள். இயற்கை விரும்பிகள். சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டு வாழ்வார்கள். சமுதாய அந்தஸ்து, கௌரவம் நிறைந்த உத்தியோகம், பதவி உண்டு. பிறரிடம் எதையும் எதிர்பார்க்கமாட்டார்கள். தங்களின் நல்லது- கெட்டதைத் தாங்களே சமாளித்துக்கொள்வார்கள். பிறரின் ஆலோசனையைக் கேட்டால் கௌரவம் குறைந்துவிடுமென்று நினைப்பார்கள். பலர் புகழ்பெற்ற இயக்கம் அல்லது கட்சியில் இணைந்து தனித்திறமையுடன் செயல்படுவார்கள். எதிலும் நேர்மையாகப் பணியாற்றி புகழ்பெறுவார்கள். மிகக் கடினமான வேலையையும் யாருடைய உதவியுமின்றி எளிதாகச் செய்துமுடிப்பார்கள்.

Advertisment

சூரியன், சந்திரன் பலம்குறைந்தவர்கள் காலையில் உற்சாகத்துடனும், மாலையில் கவலையுடனும் இருப்பார்கள். வெளித் தோற்றத்திற்கு எல்லாம் தெரிந்தவர்போல் காணப்பட்டாலும், மனதளவில் எதை, எப்படிச் செய்யவேண்டுமென்ற அடிப்படை அறிவு இருக்காது. பெரும்பாலும் இனிப்பான, குளிர்ச்சியான உணவு, உற்சாக பானம் அருந்துவதில் விருப்பம் அதிகமுண்டு.

பரிகாரம்

பௌர்ணமியன்று சூரிய நாராயணரை வழிபடவேண்டும். மாணிக்கம், முத்து ரத்தினங் கள் அணியலாம்.

Advertisment

பிறவி எண்- 2, விதி எண்- 2

பிறவி எண், விதி எண் இரண்டும் 2-ஆக அமையப்பெற்றவர்களின் வாழ்க்கை சிறு குழப்பம் நிறைந்ததாகவே இருக்கும். சுய ஜாதகத்தில் சந்திரனுக்கு லக்ன சுபர் அல்லது குருவின் சம்பந்தமிருந்தால் சுபப் பலன்கள் நடக்கும். அதிக அனுபவப் பாடம் கற்றவர்கள் என்பதால், எதிலும் நிதானமாக- எச்சரிக்கையுடன் செயல்படுவார்கள். பிரகாசமான வாழ்க்கையைக் கொண்டவர்கள். தானும் சந்தோஷமாக இருப்பதுடன் தன்னைச் சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வார்கள். கிடைத்த சந்தர்ப்பத்தைப் பற்றிக்கொண்டு இலகுவாக வாழ்க்கையில் முன்னேறும் திறமைசாலிகள். அனைவரையும் வசீகரிப்பார்கள்.

சுய ஜாதகத்தில் சந்திரன் பலம்குறைந்து, லக்னரீதியான அசுபர் அல்லது இயற்கை பாவிகளான சனி, செவ்வாய், ராகு- கேதுவின் சம்பந்தம்பெற்றால் பெரிய பாதிப்பிருக்கும். சந்திரன் ஒளிபெற சூரியன் அவசியம்.

அதாவது இந்த எண்னைச் சார்ந்தவர்கள் சுயமாக செயல்படுவதில்லை. பிறரைச் சார்ந்தே வாழ்வார்கள். குடும்பத்தில் ஏதாவதொரு உறுப்பினரின் கட்டுப்பாட்டில்தான் வாழ்வார்கள். அவர்களைத் தவிர பிறரின் ஆலோசனைக்கு செவிசாய்க்க மாட்டார்கள். பொருளாதாரத்திலும், குடும்ப வாழ்க்கையிலும் மனநிறைவு, தன்னிறைவு ஏற்படாது. இந்த எண் ஆதிக்கத்தில் பிறந்த பலர் இரட்டைத் திருமண வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். பலர் குடிப்பழக்கத்தில் முழ்கி வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள்.

பரிகாரம்

திங்கட்கிழமையும், பிரதோஷமும் இணைந்த நாளில் அம்மையப் பனை வழிபடவேண்டும். சந்திரகாந்தக் கல் அணிய லாம்.

ff

பிறவி எண்- 2, விதி எண்- 3

சந்திரன் மற்றும் குருவின் ஆதிக்கம் நிறைந்த அற்புதமான எண்களின் சேர்க்கை. குருச் சந்திர யோகம். சுய ஜாதகத்தில் சந்திரனும் குருவும் சுப வலிமை பெற்றவர்கள் விதியை மதியால் வெல்லும் சூட்சுமதாரிகள். கௌரவமான பதவி, அந்தஸ்து, ராஜயோக வாழ்க்கை உண்டு. பொன், பொருள், பூமி லாபங்கள், வாகன வசதி உண்டு. உழைப்பால் உயர்ந்து அந்தஸ்தும் செல்வாக்கும் பெறுவார்கள். திருமணத்திற்குப்பிறகு வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். மதப் பற்றும், ஆன்மிக நாட்டமும் நிறைந்தவர்கள். சொந்த வாழ்க்கையைவிட பொதுவாழ்க்கையில்தான் அதிகப்படியான ஆர்வம், அக்கறை இருக்கும். அனைவரும் விரும்பும்படியான அமைதியான உள்ளம், மனம் உள்ளவர்களாக இருப்பார்கள். இனிய சொற்களால் எல்லாரையும் வசப்படுத்து வார்கள். சுற்றமும், நட்பும் நிரம்பப் பெற்றவர்களாக இருப்பார்கள். எதிரிகளைக்கூட நண்பர்களாகவே கருதுவார்கள். பழைய சாஸ்திரங்கள், பழக்க வழக்கங்கள், கட்டுப் பாடுகள் ஆகியவற்றின்மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. கல்வி நிறுவனம் நடத்துதல், ஆசிரியப் பணி, வங்கிப் பணிகளில் பெரும்பான்மையாகப் பணிபுரிவார்கள். சுய ஜாதகத்தில் குருவும் சந்திரனும் பலம்குறைந்தால் பொருளாதாரத்தில் தன்னிறைவு இருக்காது. வண்டிச் சக்கரம் போல் ஏற்ற- இறக்கம் நிறைந்த வாழ்க்கையே வாழநேரும். அதிர்ஷ்டம் குறைவுபடும். பிள்ளை களால் மன சஞ்சலம் மிகுதியாக இருக்கும். கடின முயற்சிக்குப்பிறகு வெற்றியுண்டு.

பரிகாரம்

வியாழக்கிழமை சந்திர ஓரையில் சித்தர்களை வழிபடவேண்டும். கண் சிகிச்சைக்கு உதவவேண்டும்.

பிறவி எண்- 2, விதி எண்- 4

சந்திரன் மற்றும் ராகுவின் குணங்களை மிகைப்படுத்தும் எண்ணாகும். இது கிரகண தோஷ அமைப்பாகும். வீட்டின் தென்மேற்குப் பகுதி பாதிப்பிருக்கும். மிகுதியான பய உணர்வு நிறைந்தவர்கள். நீர்க் கண்டம் மற்றும் விஷ ஜந்துக்களால் அபாயமுண்டு. தாயார் ஆரோக்கியக் குறைபாடுள்ளவர். தாயின் அன்பும், ஆதரவும் கிடைக்காது. திருமணத் தடை, குழந்தை பாக்கியத்தில் பாதிப்பிருக்கும். திருமணத்திற்குப்பிறகு குடும்ப வாழ்க்கை கலகம் நிறைந்ததாக இருக்கும். வெகுசிலருக்கு மிக வேகமான முன்னேற்றமும், எதிர்பாராத இறக்கமும் ஏற்படுத்தக்கூடிய சமநிலையற்ற எண். எல்லாவிதமான உறவுகள் இருந்தாலும், உறவுகளால் பயனற்ற நிலை, உறவுகளைப் பிரிந்துவாழும் நிலையுடையவர்கள். உலகமே வசப்படவேண்டுமென்ற பிரம்மாண்ட ஆசையிருக்கும். குறுக்குவழியில் முன்னேற ஆசைப்படுவார்கள். தீய எண்ணம் மற்றும் கெட்ட பழக்க வழக்கங்கள் அதிகமாக இருக்கும். வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பான முன்னேற்றம் தரும்.

பரிகாரம்

பௌர்ணமி நாட்களில் புற்றுக் கோவில்களில் வழிபடவும். திங்கட்கிழமை பிரதோஷ வழிபாடு சிறப்பு.

பிறவி எண்- 2, விதி எண்- 5

புதன் மற்றும் சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த எண். புதன் புத்தி கிரகம். சந்திரன் வேகமான கிரகம். சுய ஜாதகத்தில் புதனும் சந்திரனும் பலம்பெற்றால் வேகம் கலந்த விவேகத்துடன் செயல்படுவார்கள். செல்வாக்கு, சொல்வாக் குள்ள நபர்களாக இருப்பார்கள். தங்களது ஆலோசனைகளைப் பிறர் கேட்க வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். தன்னை நம்பி வருபவர்களுக்கு, நிச்சயம் வெற்றியைத் தரும் ஆலோசனை வழங்குவதில் வல்லவர்கள். மத்திம வயதிற்குப்பிறகு பெரும் செல்வம் உண்டாகும். செல்வத்தைச் சேர்ப்பதில் மிகவும் ஆசையுடையவர்கள். உலக சுகங்களை அனுபவிப்பதிலும் மிகவும் நாட்டமுண்டு. திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவர்கள். துரும்பையும் தூணாக்கும் தந்திரவாதிகள். பொறுமையாகவும், இளகிய மனமுடையவர்களாகவும் இருப்பார்கள். நல்ல பேச்சாற்றல் உடையவர்கள். கற்பனை கலந்து கவர்ச்சியுடன் பேசுவதால் இவர்களுக்குப் பொதுஜனத் தொடர்புண்டு.

சுய ஜாதகத்தில் புதன், சந்திரன் பலம்குறைந் தால் தொழில் மந்தம், பொருளாதாரப் பிரச்சினை, மனக்கஷ்டம் ஏற்படும். இவர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டாலும் அலைச்சல்தான் மிகுதியாக இருக்கும். மனதின் வேகத்திற்கேற்ப செயல்களில் வேகமிருக்காது. காரணமற்ற கற்பனைக் கவலைகளால் வாழ்க்கையைத் தொலைப்பார்கள். தோல் வியாதி, அரிப்புத் தொல்லை இருக்கும்.

பரிகாரம்

புதன்கிழமை காலை 8.00-9.00 மணிவரையிலான சந்திர ஓரையில் மகாவிஷ்ணுவை வழிபடவும். மரகதப் பச்சை ரத்தினம் பயன்படுத்தலாம்.

பிறவி எண்- 2, விதி எண்- 6

சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் சந்திரன், சுக்கிரன் பலம்பெற்றால் வாக்கு சாதுர்யம், புகழ், அந்தஸ்துண்டு. இளம்வயதில் திருமணம் நடக்கும். தம்பதிகள் மிக மகிழ்ச்சி யுடன், ஓருயிர், ஈருடலாக வாழ்வார்கள். இல்லற இன்பத்தில் ஆர்வம் மிகுதியாக இருக்கும். எளிய நிலையில் இருந்தாலும் திருமணத்திற்குப்பிறகு முன்னேற்றமான வாழ்க்கையுண்டு. வாழ்க்கைத் துணை வசதியானவராக இருப்பார். அல்லது நல்ல உத்தியோகத்திலுள்ள வரன் அமையும். குடும்பம் கோவிலாக இருக்கும். ஒருவரின் பேச்சுக்கு மற்றொருவர் கட்டுப்படுவார். நண்பர்கள், தொழில் கூட்டாளிகளுடன் இணைந்து கூட்டுத் தொழிலில் லாபம் ஈட்டுவார்கள். சம்பந்தி நல்ல பொருளாதார வசதி மிகுந்தவராக இருப்பார். சமுதாய மதிப்பு நிறைந்த இடத்தில் சம்பந்தம் அமையும். விலையுயர்ந்த பட்டுத் துணிகள், நகைகள், அழகு, ஆடம்பரப் பொருட்கள், வாசனை திரவியங்கள் அதிகம் பயன்படுத்துவார்கள். அளவுக்கு அதிகமாக சாப்பிடும் குணமுள்ளவர்கள்.

சுய ஜாதகத்தில் சந்திரன், சுக்கிரன் பலம் குறைந்தால் மாமியார்- மருமகள் பிரச்சினையில் குடும்ப வாழ்க்கை கலகம் நிறைந்ததாக இருக்கும். அதிர்ஷ்டம் குறைவுபடும். தம்பதிகளுக்குள் ஈகோ மிகுதியாகும். பெற்றோர்களுடன் கருத்து வேறுபாட்டால் தனிக்குடித்தனம் செல்வார்கள். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கை யாளர்களால் வஞ்சிக்கப்படுவார்கள்.

பரிகாரம்

வெள்ளிக்கிழமை காலை 11.00-12.00 மணிவரையிலான செவ்வாய் ஓரையில் துர்க்கையை வழிபடவும். உணவில் நெய், பால், தயிர் அதிகம் பயன்படுத்தவேண்டும்.

பிறவி எண்- 2, விதி எண்- 7

சந்திரன் மற்றும் கேதுவின் ஆதிக்கம் நிறைந்த எண். மன சஞ்சலத்தை மிகைப்படுத்தும். மனோவசியம் மற்றும் மந்திர தந்திரங்களில் இவர்களுக்கு ஈடுபாடுண்டு. தாய்மையின் இயல்பான பாசம், குடும்பப்பற்று ஆகியவை உண்டு. ஆன்மிகம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடும், விருப்பமும் கொண்டவர்கள். இறைவனின்மீது நம்பிக்கை கொண்டவர்கள். அந்த நம்பிக்கையின்மூலமே எண்ணிய காரியத்தை சாதித்துக்கொள்ளும் திறமைகொண்டவர்கள். சுயநலமின்றி செயல்பட்டு தியாகத்தால் புகழடைவார்கள். மற்றவர்களின் நலனுக்காகத் தமது வாழ்க்கையை அர்ப்பணிப்பார்கள். நடுத் தரமான வாழ்க்கை நிலையை மட்டுமே ஏற்படுத் தும் அமைப்பு. சிறுவயது முதலே லட்சியத் துடன் வாழ்க்கையை நடத்துவார்கள். ஜாதகத் தில் சந்திரன், கேது சேர்ந்திருந்தால் மனநல பாதிப்பு, திருமணத்தடை அதிகமுண்டு. பல சம யங்களில் சொல்புத்தியும் இல்லாமல் சுயபுத்தி யும் இல்லாமல் நிர்கதியாக வாழ்கிறார்கள்.

பரிகாரம்

சனிப் பிரதோஷ வழிபாடு சிறப்பு. திங்கட் கிழமை எமகண்ட நேரத்தில் விநாயகரை வழிபடவேண்டும்.

பிறவி எண்- 2, விதி எண்- 8

சந்திரன் மற்றும் சனியின் ஆதிக்கம் சேர்ந்த எண். சுய ஜாதகத்தில் சனியும் சந்திரனும் பலம்பெற்றால் கடுமையான தொழில் நெருக்கடி, கடன், திருமணத்தடை, பற்றற்ற வாழ்க்கையைத் தருகிறது. விட்டுக் கொடுக்கும் குணம் உள்ளதால், மக்களால் பெரிதும் விரும்பப்படுவார்கள். தர்மம், நியாயங்களைக் கடைப்பிடிப்பதில் உறுதியுள்ள வர்கள். சுய ஜாதகத்தில் சனி, சந்திரன் சேர்க்கை யிருந்தால் தாலி கட்டும்வரை திருமணம் நடக்குமென்ற உத்தரவாதம் கிடையாது. சிலர் மனப்பக்குவப்பட்டு ஞான மார்க்கத்தில் செல்கிறார்கள். ஒருசிலர் இல்லறத்தில் இருந்துகொண்டே பக்தி மார்க்கத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வார்கள். இல்லற வாழ்க்கையில் இருக்கும்போது பலவிதமான எண்ணங்கள் அலைமோதும். பூர்வபுண்ணியம் மிகுதியாக இருக்கப் பிறந்தவர்கள் பற்றற்ற நிலை ஏற்பட்டு, வாழ்வில் ஒரு குறிப்பிட்ட நோக்கோடு பயணித்து, தனித்தன்மையான கொள்கைப் பிடிப்போடு இருந்து புகழின் உச்சத்தைத் தொட்டுவிடுவார்கள். இந்த அமைப்புள்ளவர்களுக்கு எல்லாமே எதிர்பாராதவிதமாகக் கூடிவரும். எதிர்பாராதவிதமாக எல்லாமே நடக்கும்.

அயல்நாட்டு வாழ்க்கை சிறப்பான முன்னேற் றம் தரும்.

பரிகாரம்

திருப்பதி வேங்கடாசலபதியை சனிக் கிழமை விரதமிருந்து வழிபடவேண்டும்.

பிறவி எண்- 2, விதி எண்- 9

சந்திரன் மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்த எண். இது அற்புத பலன் தரும் எண்ணாகும். பிறவி எண்ணும் விதி எண்ணும் சந்திரன், செவ்வாய் சம்பந்தம்பெற்று சந்திர மங்கள யோகமாக அமையப்பெற்றவர்கள் பாக்கியவான்கள். சுய ஜாதகத்தில் சந்திரன் மற்றும் செவ்வாய் பலம்பெற்றால் வீடு, மனை, பூமி வாகன யோகம் சிறப்பாக அமையும். இளம்வயதில் திருமணம் நடக்கும். பேச்சிலும் முடிவெடுப்பதிலும் வேகமாக செயல்படுவார்கள். நல்ல ஆடம்பரமான வசதியான குடும்பத்தில் பிறந்திருப்பார்கள். சகல சௌபாக்கியங்கள், புகழ், அந்தஸ்து, கௌரவத்துடன் வாழ்வார்கள். தாயார், நிலம், கட்டடம், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் வருமானமுண்டு. தாயார்வழியில் அதிக உறவுகள் இருப்பார்கள். உற்றார்- உறவினர்கள் ஆதரவு, அனுசரணையுண்டு. எவ்வளவு பெரிய செயலானாலும் பயமோ, தயக்கமோ இன்றித் துணிந்து ஈடுபட்டு வெற்றியடைவார்கள். பணம் சம்பாதிப்பதில் குறியாக இருப்பார்கள்.

சந்திரன், செவ்வாய் பலம்குறைந்தால் எந்த இடத்தில் இருந்தாலும் ஓரிடத்தில் நிலையாக வாழமுடியாமல் அடிக்கடி இடப்பெயர்ச்சி செய்ய நேரும். எவ்வளவு சிறப் பாக வாழ்ந்தாலும் மனதை தாங்களாகவே குழப்பு வார்கள். சொத்து சுகத்தை இழப்பார்கள்.

பரிகாரம்

செவ்வாய்க்கிழமை மாரியம்மனை வழிபட வேண்டும்.

(தொடரும்)

செல்: 98652 20406