திருப்பத்தை ஏற்படுத்தும் திதி சூனியம்! -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/didi-witchcraft-makes-turn-melmaruvathur-s-kalaivani

ஜோதிடம் என்னும் பெருங்கடலில் பொதிந்துள்ள பொங்கிஷங்கள் ஏராள மானவை. அவற்றுள் திதி சூனியமும் ஒன்று.

பஞ்சாங்கத்தில் அமைந்துள்ள ஐந்து அங்கங்களில் வாரம், நட்சத்திரம், யோகம், திதி, கரணம், ஆகியவற்றுள் ஒன்றான திதி நிகழ்த்தும் ஆளுமையும், அற்புதங்களும் ஏராளமானவை.

அந்த திதி செயல்படாமல் சூனிய மாகும்பொழுது ஏற்படும் இன்னல்களும் ஏராளமானவை. அவற்றைப் பற்றி பின்வருமாறு காணலாம்.

yy

திதி

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையிலான தூரம் திதியாகும்.

இவை வளர்பிறைத் திதிகள் 15 ஆகவும், தேய்பிறைத் திதிகள் 15 ஆகவும் மொத்தம் 30 திதிகள் அமைந்துள்ளன.

கோட்சாரப்படி சந்திரன் ராசிக் கட்டத்தில் சூரியனை விட்டு ஒவ்வொரு கட்டமாக விலகிப் பின் இணையும் தன் மையை திதி என்னும் அளவு கோலால் குறிப்பிட்டுள்ளனர்.

திதி சூனியம்

ஒரு குழந்தையின் பிறப்பு ஜாதகம் கணிக்கும்பொழுது திதியைப் பற்றிய தெளிவான தரவுகள் எழுதப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு திதியின்பொழுதும் இரண்டு ராசிகள் சூனியம் ஆகின்றன. சதுர்த்தசி திதியில் மட்டும் நான்கு ராசிகள் சூனியம் ஆகின்றன.

இந்த சூனியமாகும் ராசிகள் திதி சூனிய ராசிகள் என்றும், அந்த ராசியின் அதிபதிகள் திதி சூனிய அதிபதிகள் என்றும் ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.

அமாவாசை மற்றும் பௌர்ணமி திதிகளில் மட்டும் எந்த ராசிகளும் திதி சூனியம் அடைவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு ஜாதகத்தில் பலன் காணும் பொழுது திதி சூனியத்தை நிச்சயமாகக் கைக்கொள்ளவேண்டும்.

சூனிய ராசியானது தனக்குரிய காரகங் களை இழக்கும். மேலும் சூனிய ராசிக்குரிய கிரகம் தனக்குரிய காரகத்துவங்களை இழந்து விடும். உதாரணமாக, ஐந்தாமதி பதி சுக்கிரன் திதி சூனிய கிரகம் என்று எடுத்துக்கொண்டால், சுக்கிரனின் காரகங் களான அழகு, இளமை, செல்வம், காமம், காதல் ஆகியவற்றை நிச்சயமாகத் தராது.

ஆனால் ஐந்தாமாதிபதி என்ற முறையில் குழந்தைகள், குலதெய்வ வழிபாடு, அதிர்ஷ் டங்கள், வித்தைகள் ஆகியவற்றைத் தடையின்றி தந்துவிடும்.

துலாம் என்னும் ஐந்தாமிடம் திதி சூனிய ராச

ஜோதிடம் என்னும் பெருங்கடலில் பொதிந்துள்ள பொங்கிஷங்கள் ஏராள மானவை. அவற்றுள் திதி சூனியமும் ஒன்று.

பஞ்சாங்கத்தில் அமைந்துள்ள ஐந்து அங்கங்களில் வாரம், நட்சத்திரம், யோகம், திதி, கரணம், ஆகியவற்றுள் ஒன்றான திதி நிகழ்த்தும் ஆளுமையும், அற்புதங்களும் ஏராளமானவை.

அந்த திதி செயல்படாமல் சூனிய மாகும்பொழுது ஏற்படும் இன்னல்களும் ஏராளமானவை. அவற்றைப் பற்றி பின்வருமாறு காணலாம்.

yy

திதி

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையிலான தூரம் திதியாகும்.

இவை வளர்பிறைத் திதிகள் 15 ஆகவும், தேய்பிறைத் திதிகள் 15 ஆகவும் மொத்தம் 30 திதிகள் அமைந்துள்ளன.

கோட்சாரப்படி சந்திரன் ராசிக் கட்டத்தில் சூரியனை விட்டு ஒவ்வொரு கட்டமாக விலகிப் பின் இணையும் தன் மையை திதி என்னும் அளவு கோலால் குறிப்பிட்டுள்ளனர்.

திதி சூனியம்

ஒரு குழந்தையின் பிறப்பு ஜாதகம் கணிக்கும்பொழுது திதியைப் பற்றிய தெளிவான தரவுகள் எழுதப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு திதியின்பொழுதும் இரண்டு ராசிகள் சூனியம் ஆகின்றன. சதுர்த்தசி திதியில் மட்டும் நான்கு ராசிகள் சூனியம் ஆகின்றன.

இந்த சூனியமாகும் ராசிகள் திதி சூனிய ராசிகள் என்றும், அந்த ராசியின் அதிபதிகள் திதி சூனிய அதிபதிகள் என்றும் ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.

அமாவாசை மற்றும் பௌர்ணமி திதிகளில் மட்டும் எந்த ராசிகளும் திதி சூனியம் அடைவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு ஜாதகத்தில் பலன் காணும் பொழுது திதி சூனியத்தை நிச்சயமாகக் கைக்கொள்ளவேண்டும்.

சூனிய ராசியானது தனக்குரிய காரகங் களை இழக்கும். மேலும் சூனிய ராசிக்குரிய கிரகம் தனக்குரிய காரகத்துவங்களை இழந்து விடும். உதாரணமாக, ஐந்தாமதி பதி சுக்கிரன் திதி சூனிய கிரகம் என்று எடுத்துக்கொண்டால், சுக்கிரனின் காரகங் களான அழகு, இளமை, செல்வம், காமம், காதல் ஆகியவற்றை நிச்சயமாகத் தராது.

ஆனால் ஐந்தாமாதிபதி என்ற முறையில் குழந்தைகள், குலதெய்வ வழிபாடு, அதிர்ஷ் டங்கள், வித்தைகள் ஆகியவற்றைத் தடையின்றி தந்துவிடும்.

துலாம் என்னும் ஐந்தாமிடம் திதி சூனிய ராசி என்று எடுத்துக்கொண்டால், துலா ராசி என்னும் முறையில் தனது காரகமான வர்த்தகம், கடைத்தெரு, ஏற்றுமதி- இறக்குமதி ஆகியவற்றில் தடையை அளிக்கும். ஆனால் ஐந்தாமிடம் என்கின்ற முறையில் புத்திர பாக்கியம், பூர்வபுண்ணியம், பிதுர் பக்தி, உயர்கல்வி ஆகியவற்றைத் தடையின்றி தந்துவிடும். இந்த வித்தியாசங்களை நன்றாகப் புரிந்து கொண்டு திதி சூனிய பலனை எடுக்க வேண்டும்.

இதுபோன்ற பாவகங்கள் சூனிய மடைந்த நிலையில் ஒரு ஜாதகத்தைக் கையாளும் பொழுது, இந்த நிலை இவர்களுக்கு ஒத்து வராது என்கின்ற தீர்க்கமான முடிவை ஒரு ஜோதிடரால் எடுக்கமுடியும். எனவே திதி சூனியம் காண்பது மிகவும் அத்தியாவசிய மான ஒன்றாகும்.

இப்பொழுது முறையாக லக்னம் முதல் 12 பாவகங்கள் வரை சூனியமானால் நிகழும் நிகழ்வினை ஒன்றன்பின் ஒன்றாகக் காணலாம்.

லக்னம்

ஒரு ஜாதகத்தில் லக்னம் அல்லது லக்னாதி பதி சூனியத்தோடு தொடர்பு கொள்ளும் பொழுது உறவுகளிலிருந்து தனிமைப்படுத்தப் படுகின்றனர். இவர்களுக்கு தலை மற்றும் கண் சார்ந்த பிரச்சினைகள் உருவாகின்றது. 1, 13, 25, 37, 49, 61, 73 ஆகிய வயதுகள் வரும் பொழுது சில உடல் சார்ந்த பிரச்சினைகளை சந்திக்கின்றனர். உடல் தோற்றம் மாறு தலடைந்து அதனால் சில பிரச்சினைகளை சந்திக்கும் சூழல் உருவாகின்றது.

இவர்களுக்கு முதல் பணி மற்றும் தொழில் கைகொடுப்பதில்லை. இரண்டாவது தொழிலோ அல்லது பணியோதான் சிறப்பினை அளிக்கின்றது. இவர்கள் போராடிதான் பதவி உயர்வைப்பெறமுடியும். லக்னம் திதி சூனியம் அடையும்பொழுது அவர் களின் களத்திர வழியில் பிறந்த ஒருவருக்கு காது, மூக்கு, தொண்டை சார்ந்த பிரச்சினை அல்லது சிறு வயதில் உயிரிழப்பு போன்றவை நிகழ்ந்திருக்கும். அதே போன்று மனைவியின் ஆபரணம் திருடு போயிருக்கும்.

இரண்டாம் பாவகம்

பொருளாதாரம், குடும் பம் அமையத் தாமதமாகும். வாக்கின்மூலம் பிரச்சினைகளை சந்திக்கும் சூழல் உருவாகும். இரண்டாமி டம் திதி சூனியம் அடைந்து சுக்கிரன் அல்லது சந்திரன் அல்லது சூரியன் பலவீனம் அடைந்திருந்தால் நிச்சயமாக கண் சார்ந்த பாதிப்புகள் இவர்களை அணுகுகின்றது. இவர்களுக்கு 39 வயதிற்குமேல்தான் பொருளா தார தன்னிறைவு பெறும் சூழல் உருவாகும். தாயாருக்கு நிம்மதியற்ற வாழ்வை இந்த சூழல் அளித்துவிடுகின்றது.

இவர்களின் குலதெய்வம் இருக்கும் இடத் தில் சமாதி, சுடுகாடு போன்றவை அமைந்தி ருக்கும். மேலும் இவர்களின் வம்சத்தில் திதி, தர்ப்பணம், கொடுக்காதவர்கள் இருப்பார்கள்.

பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும். தாத்தாவழியில் காணாமல்போன ஒருவர் இருப்பார். இவர்களுக்கு கமிஷன் மற்றும் தரகு போன்ற வேலைகள் சிறப்பளிக்காது. கை மற்றும் தோள்பட்டையில் காயம் அல்லது அடிபடும் சூழல் உருவாகும். தந்தையின் கடனுக்காக ஒரு சொத்தை இழந்திருப்பார்கள். தந்தைக்குத் தீராத வயிற்றுப் பிரச்சினை இருக்கும்.ஆண் வாரிசுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருக்கும்.

மூன்றாம் பாவகம்

அடிக்கடி இடமாற்றம் ஏற்படும். குரலில் ஒரு மாற்றம் இருக்கும். ஆபரணங்கள் தொலைவதற்கான சூழல் இருக்கும். பத்திரம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் தாயாருக்கு நீண்டநாள் வைத்தியம் செய்யக்கூடிய சூழல் அமையும். மூன்றாமிடம் திதி சூனியமானால் அது பெண் வீடானால் ஆண்கள்மூலமும், ஆண் வீடானால் பெண்கள்மூலமும் மன உளைச்சலைப் பெறும் சூழல் உருவாகும். நிச்சயமாக ஒரு அறுவைச் சிகிச்சை உண்டு.

பங்குச் சந்தை விஷயத்தில் சற்று கவனத் துடன் இருக்கவேண்டும். தாய்மாமனுக்கு புத்திரம் சார்ந்த தடைகள் இருக்கக்கூடும். தொழி லால் கடன் ஏற்படும் சூழல் இவர்களுக்கு உருவாகும்.

இந்த மூன்றாம் இடத்தோடு மாந்தியின் தொடர்பு வரும்பொழுது தற்கொலை எண்ணங்கள் மேலோங்கும். உயில் மற்றும் சொத்துகளால் பெரும் ஆதாயங்கள் இருப்பது கிடையாது.

நான்காம் பாவகம்

இவர்கள் உறவுகளிடமிருந்து விலகியிருப் பார்கள். தொழிலில்மூலம் உறவுகளோடு ஒரு பிரச்சினை ஏற்படும். மண வாழ்க்கையில் சிறிய கசப்புகள் உருவாகும். கடன் பிரச்சினை இருக்கும். இவர்கள் கடன் வாங்கி சொத்து வாங்கினால் சிறப்பு. இவர்களுக்கு வளர்ப்புப் பிராணிகள் பெரும் சிறப்பைத் தருவதில்லை. அதேபோன்று குலதெய்வ வழிபாட்டில் ஒரு பிரச்சினையும், பூர்வீக சொத்தில் விரயமும், இதயம் சார்ந்த பிரச்சினைகளும் இருக்கும். இவர்கள் வம்சத்தில் காதல் திருமணங்கள் அதிகமாக நிகழ்ந்திருக்கும்.

ஐந்தாம் பாவகம்

குழந்தைகள் சம்பந்தப்பட்ட நெருடல்கள், காதல் தோல்வி, குலதெய்வ வழிபாட்டில் பிணக்கு, பூர்வீக சொத்தில் வில்லங்கம், மனரீதியான குழப்பங்கள் போன்றவை இருக்கும்.

நான்கு மற்றும் பன்னிரண்டாம் இடம் தொடர்பு வரும்பொழுது இந்த குடும்பத்தில் சிறைக்குச் சென்றவர்கள் இருப்பார்கள். இவர்களின் தாய்மாமன் வழியில் காணாமல் போனவர்கள் இருப்பார்கள்.

ஆறாம் பாவகம்

பெரும்பாலும் திதி சூனியமாகி இருந்தால் பெரும் பாதிப்புகள் நிகழ்வதில்லை. ஆனால் 6, 12 தொடர்பு பெறும்பொழுது நோய் மற்றும் கடனால் இவர்களுக்குப் பிரச்சினைகள் வருகின்றது. அதேபோன்று காலபுருஷனுக்கு ஆறுக்குடைய புதன் தசை நடக்கும்பொழுதும் திடீர் பிரச்சினைகளை சந்திக்கும் சூழல் உருவாகிவிடும். இவர்களுக்கு செய்யும் தொழிலில் சிறுசிறு பாதிப்புகள் வரும். மாமனுக்குத் திருமணம் சார்ந்த பிரச்சினைகள் இருக்கும். குழந்தைகளுக்கு முகத்தில் கண், பல் சம்பந்தமான சிறுநோய்கள் வந்து மறையும்.

குலதெய்வ சிலையின் முகப் பக்கவாட்டில் சின்னத் தழும்புகள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும். இவர்களுக்கு திருமணத்திற்குப் பிறகு ஒரு சிறிய விபத்து நிகழ்வதற்கான சூழல் அமையும்.

ஏழாம் பாவகம்

விருப்பத் திருமணத்தை நிகழ்த்திவைக்கும். அத்தை மற்றும் மாமன்வழி களத்திரம் அமையும். இரண்டாவது குழந்தைக்குப் பிரச்சினைகளை உருவாக்கும். வாடிக்கை யாளர்கள் மற்றும் பங்குதாரர்களுடனான இழுபறிநிலை உருவாகும். கடன் மற்றும் நோய் சார்ந்த நெருடலும், கிட்னி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் இவர்களுக்கு உருவாவதைக் கண்கூடாகக் காணமுடிகின்றது.

எட்டாம் பாவகம்

பெண் ஜாதகமாக இருந்தால் மாங்கல்யம் சார்ந்த பிரச்சினைகளும், நீண்டநாள் வைத்தி யம் செய்யக்கூடிய நோய்களும், மரணபயம் சார்ந்த எண்ணங்களும் இவர்களுக்கு இருக்கும்.

உயில் மற்றும் சொத்துகளால் பெரிய பிரயோஜனம் இவர்களுக்கு அமையாது. வெளிநாடு அல்லது வெளியூர் சென்று வேலை களை அமைத்துக்கொண்டால் சிறப்படைய லாம்.

ஒன்பதாம் பாவகம்

மாமனார்வழியில் இரண்டு தாரங்கள் இருக்கும். மூன்றாவது குழந்தைக்கு பிரச்சினைகள் வரும். மனைவியுடன் பிறந்த ஒருவருக்கு ஆயுள் கண்டம் ஏற்பட்டிருக்கும். கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகளை அளிக்கும். பத்திரம் சார்ந்த வகையில் ஒரு வில்லங்கம் இருக்கும். தாயாருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உருவாகி மறையும்.

பத்தாம் பாவகம்

மாமனார்வழியில் பெரிய இணக்கமான சூழல் இவர்களுக்கு ஏற்படாது. தீர்த்த யாத்திரை செல்வதில் சுணக்கம் ஏற்படும். ஏதேவொரு கருமம் செய்ய தடைகளை ஏற்படுத்தியிருக்கும். திறமைக்கு ஏற்ற லாபங் களை அளிக்காது. அத்தை மற்றும் அவர்களின் வழித்தோன்றல்களுக்கு ஊனம் சார்ந்த பிரச்சினைகள் இருக்கும்.

பதினோராம் பாவகம்

வாழ்வில் ஒரு விரக்தியைக் கொடுக்கின்றது. மூத்த சகோதரன் வழியிலான சிறு தொந்தரவுகள் இருக்கும். நண்பர்களால் தொல்லைகள் ஏற்படும். குலதெய்வம் சார்ந்த பிரச்சினைகள் வரும். மனைவியுடன் பிறந்த ஒருவர் சிறு வயதில் இறந்திருப்பார்.v பன்னிரண்டாம் பாவகம்

தூக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும், தாயாருக்கு கருப்பை சார்ந்த வைத்தியங்களும், தந்தைக்கு வாகனம், சொத்துப் பிரச்சினைகள் வில்லங்கமாகவும் அமையும். ஒரு இனம்புரியாத பயம் இருந்துகொண்டே இருக்கும். தொழிலில் பெரும் திருப்தி இருக்காது. இவரின் சகோதரத்திற்கு அவப்பெயர் ஏற்படும். இவர்களுக்கு குதிக்கால் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருக்கும். மனைவிக்கு குடல் சார்ந்த பிரச்சினைகளும், தந்தைக்கு இதயம் சார்ந்த பிரச்சினைகளும், இருக்கும். இவர்களின் வம்சாவளியில் நீரினால் இறந்தவர்கள் இருப்பார்கள்.

பரிகாரம்: இவர்களின் பிறந்த திதியில், அதற்கான திதி தெய்வத்திற்கு இவர்களின் வயதை ஒத்த நெய்தீபத்தை ஏற்றி 15 நாட்கள் வழிபட, திதிசூனியம் சார்ந்த பிரச்சினைகள் சற்று விலகி, ஆறுதலைத் தரும்.

செல்: 80563 79988

bala200924
இதையும் படியுங்கள்
Subscribe