மனிதர்களாய்ப் பிறந்த அனைவரும் பல்வேறுவிதமான கஷ்டங்களை சந்தித்துவருகிறார்கள்.
பலர் பட்ட கஷ்டத்திற்கான நல்ல பலனோ, உழைத்த உழைப்பிற்கான ஊதியமோ, திறமைக்கேற்ற வேலை யோ, மன நிம்மதியோ கிடைக்காமல் வாழ்க்கை போகும் பாதையில் பயனிக்கிறார்கள். இதுபோன்ற அனைத்துப் பிரச்சினைகளும் ருண பந்தத்தால் ஏற்படுகின்றன. ருணம் என்றால் கடன். சக மனிதர் களுக்குள் கொடுக்கல்- வாங்கல் மூலம் உருவாகும் பந்தம். நம் வாழ்க்கை யின் ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு பந்தத்தை நாம் ஏற்படுத்துகிறோம்.
அந்த பந்தத்தின்மூலம் ஏதாவதொன் றைப் பெற்றுக்கொள்கிறோம் அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம்.
சில சமயங்களில் ஏமாற்றப்படு கிறோம்; பல சமயங்களில் ஏமாற்றுகிறோம். சிலருக்கு நல்லது செய்கி றோம்; பலரிடமிருந்து அளவுக்கு அதிகமாக நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறோம். இந்த கொடுக்கல்- வாங்கலே "ருண பந்தம்' எனப் படுகிறது.
ருண, ரோக, சத்ரு ஸ்தானம் எனும் ஆறாம் பாவகத்தின் மூலமே மனிதர்கள் ருண பந்தத்தை முழுமையாக அனுபவிக்கிறார்கள். ஒருவரி டம் எந்த முகாந்திரமும் இல்லாமல் பெற்ற உதவி, பொருள் அல்லது பணம் திரும்பச் செலுத்தாதபோது மன அழுத்தத்தால் அது ரோகம் எனும் நோயாக மாறுகி றது அல்லது சத்ரு எனும் எதிரியாக உருவெடுக்கிறது.
ருண, ரோக, சத்ரு தொல்லை- பணம் என்னும் காகிதத்திடம் இருந்துதான் பிள்ளையார் சுழி போடுகிறது.
ஒரு மனிதனின் உத்தியோகத்தைத் தீர்மானிப்பது ஆறாம் பாவகம்தான்.ஒருவரின் ஜாதகத்தில் ஆறாமதி பதி எந்த பாவகத்தில் இருக்கிறாரோ அந்த கிரகத்தின் காரகத்துவங்களைச் சார்ந்து கடன், வம்பு, வழக்கு, அடிதடி, சண்டை, போட்டி, பொறாமை, எதிரி, உத்தியோகப் பிரச்சினைகள் இருக்கும். ஆறாமதிபதி 12 பாவகங்களில் நிற்பதால் ஏற்படும் பலன்களையும் அதற்கான பரிகாரங்களையும் காணலாம்.
ஆறாமதிபதி லக்னத்தில்
வாழ்நாள் முழுவதும் கடன் தொடரும். உற்றார்- உறவினர், நண்பர்களே எதிரியாக இருப்பார்கள். ஜாமின் பெறுவதாலும், கொடுப்பதாலும் பொருளாதாரப் பிரச்சினையை விலை கொடுத்து வாங்குவார்கள். நிலையான வேலை, உத்தியோகம் இருக்காது. இவர்களுக்குக் கேட்ட இடத்திலும், கேட்காத இடத்திலும் கடன் கிடைக்கும். இவர்கள் இருக்கும் இடம் தேடி கடன்பணம் செல்லும். லக்னாதிபதியே ஆறாமிடத்துடன் சம்பந்தம் பெறுவதால் தனக்கு ஏற்படும் கடன் பிரச்சினைக் குத் தானே காரணமாக இருப்பார்கள். தங்களுடைய நிதானமற்ற ஆசையால் கடன் வலையில் சிக்குகிறார்கள். கடனை வாங்கும்போது இருக்கும் ஆர்வம் திரும்பச் செலுத்தும்போது இர
மனிதர்களாய்ப் பிறந்த அனைவரும் பல்வேறுவிதமான கஷ்டங்களை சந்தித்துவருகிறார்கள்.
பலர் பட்ட கஷ்டத்திற்கான நல்ல பலனோ, உழைத்த உழைப்பிற்கான ஊதியமோ, திறமைக்கேற்ற வேலை யோ, மன நிம்மதியோ கிடைக்காமல் வாழ்க்கை போகும் பாதையில் பயனிக்கிறார்கள். இதுபோன்ற அனைத்துப் பிரச்சினைகளும் ருண பந்தத்தால் ஏற்படுகின்றன. ருணம் என்றால் கடன். சக மனிதர் களுக்குள் கொடுக்கல்- வாங்கல் மூலம் உருவாகும் பந்தம். நம் வாழ்க்கை யின் ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு பந்தத்தை நாம் ஏற்படுத்துகிறோம்.
அந்த பந்தத்தின்மூலம் ஏதாவதொன் றைப் பெற்றுக்கொள்கிறோம் அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம்.
சில சமயங்களில் ஏமாற்றப்படு கிறோம்; பல சமயங்களில் ஏமாற்றுகிறோம். சிலருக்கு நல்லது செய்கி றோம்; பலரிடமிருந்து அளவுக்கு அதிகமாக நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறோம். இந்த கொடுக்கல்- வாங்கலே "ருண பந்தம்' எனப் படுகிறது.
ருண, ரோக, சத்ரு ஸ்தானம் எனும் ஆறாம் பாவகத்தின் மூலமே மனிதர்கள் ருண பந்தத்தை முழுமையாக அனுபவிக்கிறார்கள். ஒருவரி டம் எந்த முகாந்திரமும் இல்லாமல் பெற்ற உதவி, பொருள் அல்லது பணம் திரும்பச் செலுத்தாதபோது மன அழுத்தத்தால் அது ரோகம் எனும் நோயாக மாறுகி றது அல்லது சத்ரு எனும் எதிரியாக உருவெடுக்கிறது.
ருண, ரோக, சத்ரு தொல்லை- பணம் என்னும் காகிதத்திடம் இருந்துதான் பிள்ளையார் சுழி போடுகிறது.
ஒரு மனிதனின் உத்தியோகத்தைத் தீர்மானிப்பது ஆறாம் பாவகம்தான்.ஒருவரின் ஜாதகத்தில் ஆறாமதி பதி எந்த பாவகத்தில் இருக்கிறாரோ அந்த கிரகத்தின் காரகத்துவங்களைச் சார்ந்து கடன், வம்பு, வழக்கு, அடிதடி, சண்டை, போட்டி, பொறாமை, எதிரி, உத்தியோகப் பிரச்சினைகள் இருக்கும். ஆறாமதிபதி 12 பாவகங்களில் நிற்பதால் ஏற்படும் பலன்களையும் அதற்கான பரிகாரங்களையும் காணலாம்.
ஆறாமதிபதி லக்னத்தில்
வாழ்நாள் முழுவதும் கடன் தொடரும். உற்றார்- உறவினர், நண்பர்களே எதிரியாக இருப்பார்கள். ஜாமின் பெறுவதாலும், கொடுப்பதாலும் பொருளாதாரப் பிரச்சினையை விலை கொடுத்து வாங்குவார்கள். நிலையான வேலை, உத்தியோகம் இருக்காது. இவர்களுக்குக் கேட்ட இடத்திலும், கேட்காத இடத்திலும் கடன் கிடைக்கும். இவர்கள் இருக்கும் இடம் தேடி கடன்பணம் செல்லும். லக்னாதிபதியே ஆறாமிடத்துடன் சம்பந்தம் பெறுவதால் தனக்கு ஏற்படும் கடன் பிரச்சினைக் குத் தானே காரணமாக இருப்பார்கள். தங்களுடைய நிதானமற்ற ஆசையால் கடன் வலையில் சிக்குகிறார்கள். கடனை வாங்கும்போது இருக்கும் ஆர்வம் திரும்பச் செலுத்தும்போது இருக்காது. அந்தஸ்து, ஆடம்பரம் என சுய செலவால் கடனை அதிகரித்துக்கொண்டே இருப்பார்கள். எந்தத் தேவைக்குக் கடன் வாங்கினாலும் சுய தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள். தலைக்கு வந்தது தலைப்பாகையைத் தட்டும்போது மட்டுமே கடனைப் பற்றிய சிறு கலக்கம் இருக்கும். செவ்வாய்க்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் சிவனுக்குப் பாலாபிஷேகம் செய்து வழிபடவும்.
ஆறாமதிபதி இரண்டில்
சொல் புத்தியோ, சுய புத்தியோ இருக்காது. நிலையற்ற பேச்சினால் வம்பு வழக்கு வரும். வாக்கில் நிதானமற்றவர்களிடம் யாரும் அன்பு செலுத்துவதில்லை. எந்தத் தொழில் வாய்ப்பும் தேடிவருவதில்லை. வரவுக்கு மீறிய செலவு வாட்டிவதைக்கும். வருமானம் குடும்பத் தேவையை நிறைவு செய்யமுடியாதபடி இருக்கும். உறவுகளின் தேவையை நிறைவு செய்ய கடன்வாங்கி, வாழ்நாள் கடனாளியாகிறார்கள். குடும்பத்தி னரின் தேவையை நிறைவேற்ற வரவுக்குமீறிய கடன்சுமையில் தவிப்பார்கள். வீட்டுச் செலவை- அதாவது அடிப்படைத் தேவை களான உணவு, உடை போன்றவற்றை சமாளிக்க கடன் வாங்க வேண்டிய நிர்பந்தம் இருக்கும். ஊஙஒ கட்டியே வாழ்க்கையை வெறுத்துவிடுபவர்கள். கடனுக்கு பயந்து நோயாளி யாகிறார்கள். இவர்களது வாழ்க்கை கொடூரமான நரகத்தில் வாழ்வதைப்போல் இருக்கும். செவ்வாய்க்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் நந்திக்கு அரிசிமாவில் அபிஷேகம் செய்து வழிபடவும்.
ஆறாமதிபதி மூன்றில்
உடன்பிறந்தவர்களின் தேவையை நிறைவு செய்வதற்காக வாழ்நாள் கடனாளியாக மாறுகிறார்கள். உடன்பிறந்தவர்களுடன் சண்டை, சச்சரவு இருந்துகொண்டே இருக்கும். முறையற்ற பாகப் பிரிவினையால் பாதிப்பை சந்திப்பார்கள். ஜாமின், ஆவணங்கள் தொடர்பான பிரச்சினையால் கடன் தேடிவரும். கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் சிலர் உடன்பிறந்தவர்கள் பெயரில் சொத்து வாங்கிக் குவித்துவிட்டு பின்நாட்களில் மன உளைச்சலை சந்திக்கிறார் கள். மூன்று, ஆறாமிட பலவீனத்துடன் புதன், சனி, ராகு சம்பந்தம் இருப்பவர்களுக்கு இந்த பிரச்சினை வாழ்வாதாரத்தையே அசைக்கும் விதமாக இருக்கிறது. திட்ட மிடுதல் இருக்காது. சோம்பேறித்தனம் மிகுதியால் நிலையான தொழில், உத்தியோகம் இருக்காது. உள்ளுக்குள் பயந்தவராக இருந்தா லும் வெளியில் வீரமானவராகக் காட்டிக் கொள்வார்கள். முன்னோர்களின் பரம்பரை வியாதி பாதிப்புண்டு. செவ்வாய்க்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் சிவனுக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடவும்.
ஆறாமதிபதி நான்கில்
தாய் மற்றும் தாய்வழி உறவுகளின் கர்ம வினை பாதிப்பு, நோய் மிகுதியாக இருக்கும். தாய்க்கு அதிக வைத்தியச்செலவு செய்ய நேரும். ஜாதகருக்கும் ஆரோக்கியக் குறைபாடு மிகுதியாக இருக்கும். அதனால் படிப்பில் கவனம் செலுத்தமுடியாமல் கல்வியறிவு குறைவுபடும். தன் தகுதிக்குமீறிக் கடன் பெற்று வீடு, வாகன வசதியை அடைவார்கள். வீடு, வாகனம், அழகு, ஆடம்பரப் பொருட்களில் தவறான முதலீட்டால் கடனை விலைக்கு வாங்குவார்கள். இந்த அமைப்புள்ள பலர் ஒரு காலத்தில் வாழ்ந்து கெட்டவர்களாகவே இருப்பார்கள். பணக்காரக் குடும்பத்தில் பிறந் தாலும் வாழ்வில் அனுபவிக்கும் சுகங்கள் குறையும். இயன்றவரை இவர்கள் தங்கள் பெயரில் சொத்துகள் வாங்காமல் இருப்பதே சிறப்பு. பல தொழில் திறமை இருக்கும். ஆனால் எந்தத் தொழிலும் இவருக்குப் பயன்படாது. எந்த வேலைக்குச் சென்றா லும் முதலாளிக்குத் தன் திறமையால் நிறைய சம்பாதித்துக் கொடுத்து, தான் சொற்ப சம்பளம் பெறுவார்கள். செவ்வாய்க்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் சிவனுக்குத் தயிர் அபிஷேகம் செய்தல் சிறப்பு.
ஆறாமதிபதி ஐந்தில்
முன்னோர்களின் பூர்வீகச் சொத்தை சிறிது சிறிதாக விற்று ஜீவனம் நடத்துவார்கள். பூர்வீகச் சொத்தில் வில்லங்கம் இருக்கும். அல்லது பூர்வீகச் சொத்தை விற்றுக் கடனை அடைப்பார்கள். குலதெய்வக் கடாட்சம் குறைவு படும். தாய்மாமாவுடன் வம்பு வழக்கிருக்கும். முன்னோர்களின் கர்மவினை நோய் பாதிப்பு மிகுதியாக இருக்கும். இது கடுமையான புத்திர தோஷ அமைப்பு. பெற்ற பிள்ளைகளே எதிரியாக மாறுவார்கள். குழந்தைகளின் இனம் புரியாத நோய்த் தாக்கம், உயர் கல்வி, திருமணம் போன்றவற்றால் வருமானத்திற்கு மீறிய செலவால் கடன் வரும். கெட்ட எண்ணங்களின் தாக்கம் மிகுதியாக இருக்கும். காலத்திற்கேற்ப தொழிலில் மாறுதல் செய்யாமல், குண்டு சட்டியில் குதிரை ஒட்டுவார்கள். அல்லது நஷ்டத்திலுள்ள குலத்தொழிலைத் தூக்கி நிறுத்துகிறேன் என்று மிச்ச மீதி இருக்கும் பெயரையும் கெடுத்து நஷ்டத்தை அதிகரிப்பார் கள். சிலருக்கு நெருடலான அரசு உத்தியோகம் கிடைக்கும். சிலர் அரசியல், கௌரவப் பதவி அல்லது ஆன்மிக செயல்களுக்காகவும் கடன்படுவார்கள். செவ்வாய்க்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் சிவனுக்கு கரும்புச்சாறு அபிஷேகம் செய்யவும்.
ஆறாமதிபதி ஆறில்
"கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பது பழமொழியாகவே இருக்கும். நடைமுறை வாழ்வில் ஆறாமதிபதியால் ஒருவர் அனுபவிக்கும் இன்னல்கள் அளப் பரியது. லக்னம் வலிமை யில்லாத வர்கள் இதன் தசாபுக்திக் காலங்களில் ஒருவர் அனுபவிக் கும் சங்கடங்களைத் திரைப்படமாக்கினால், உலகிலேயே அதிக வசூல்செய்த படமாக சாதனை படைக்கும். லக்ன வலிமைபெற்ற வெகுசிலர் சினிமா ஹீரோவைப்போல் எதிரிகளை வைத்தே முன்னேறுவார்கள். செவ்வாய்க்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் சிவனுக்கு நல்லெண்ணெயில் சிவப்புத் திரியிட்டு ஆறு விளக்குகள் ஏற்றி வழிபடவேண்டும்
ஆறாமதிபதி ஏழில்
ஆறாம், ஏழாமதிபதி சம்பந்தம், நண்பர் மற்றும் தொழில் கூட்டாளியால் வஞ்சிக்கப்படுதல் அல்லது மனைவி மற்றும் தாய்மாமன்மூலம் பொருள் இழப்பால் கடன் அவதி இருக்கும். மேலும் திருமணத்தடை, திருமணத்திற்குப்பிறகு பிரிவு, பிரச்சினை, களத்திர நஷ்டம், நோய், கடன் உள்ள களத்திரம் என நிம்மதியற்ற திருமண வாழ்க்கை அமையும். செவ்வாய்க்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் சிவனுக்கு ரோஜா மாலை அணிவித்து வழிபடவும்.
ஆறாமதிபதி எட்டில்
மிகக் கொடூரமான அமைப்பாகும். ஆறாம், எட்டாமதிபதி சம்பந்தம் தவறான ஷேர் முதலீடு, அதிர்ஷ்டத்தை வரவழைக்க மாந்திரீ கம், சூதாட்டம், கோர்ட் கேஸ் பிரச்சினை, அதிக வட்டிக்குப் பணம் வாங்குவதால் வட்டிக்கு வட்டிகட்டி தன்னையே மாய்த்துக் கொள்ளுதல், கடனால் அவமானம், வம்பு, வழக்கு, சிறை தண்டனை போன்ற சூழலை ஏற்படுத்தும். பூர்வீகத்தைவிட்டு வெளியூர், வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு பாதிப்பு சற்று குறையும். செவ்வாய்க்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் சிவனுக்குப் பச்சைக் கற்பூர அபிஷேகம் செய்யவும்.
ஆறாமதிபதி ஒன்பதில்
தந்தை இழப்பு அல்லது தந்தையால் பாதிப்பிருக்கும். ஆன்மிகம் மற்றும் அறவழிச் செலவினால் கடன்படுவார்கள். அல்லது தந்தை மற்றும் தந்தைவழி முன்னோர் களால், முன்னோர்களின் சொத்துப் பிரச்சினை போன்றவற்றால் கடன் உருவாகும். அல்லது கௌவரச் செலவால் கடன் ஏற்படும். ஒரு ஜாதகர் தந்தையால் பயன் பெற்றால் வம்சாவளியாக- வாழையடி வாழையாக வாழ்ந்த குடும்பம் என்பதை உணரலாம். குடும்பத் தலைவன், தந்தை சரியில்லாவிட்டால் வம்சாவளியாக ஏதோ பிறந் தோம் வாழ்ந்தோம் என, தந்தை, முன்னோர் களைப்போலவே பிறந்து வாழ்ந்து, பிறந் ததற்கான தடயத்தை விட்டுச்செல்லாமல் தலைமுறையே முடிந்துவிடுகிறது. சிலருக்கு பல தலைமுறையாக அங்காளி பங்காளி கருத்து வேறுபாடு இருந்துகொண்டே இருக்கும். இவர்களுக்கு பொருள்கடன் மட்டுமல்லாமல் முன்னோர்களுக்கு செலுத்தவேண்டிய பித்ருக் கடனும் (பிறவிக் கடனும்) மிகுதியாக இருக்கும். இந்த அமைப்புள்ள பலர் மனம் வெறுத்து தீய பழக்கங்களுக்கு ஆளாகிறார் கள். முன்னோர்களின் கர்மவினைத் தாக்க நோய் மிகுதியாக இருக்கும். செவ்வாய்க்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் சிவனுக்கு புனுகு சாற்றி வழிபடவும்.
ஆறாமதிபதி பத்தில்
இந்த அமைப்புள்ள பலர் தொழில், உத்தியோகம் என நிலையற்ற தன்மை யால் வாழ்நாள் கடனாளியாகிறார்கள். லக்னம் வலிமையில்லாதவர்களுக்கு இந்த சம்பந்தமானது தொழில் நட்டத்தால் கடன் தொல்லையைத் தரும். அதாவது ஆறாம் பாவகம் எனும் பொருள்கடன் இருந்தால் மட்டுமே தன் முயற்சியால் (3-ஆம் பாவகம்) தொழில் செய்து (10-ஆம் பாவகம்) லாபம் (11-ஆம் பாவகம்) எனும் இன்பத்தை அனுபவிக்கமுடியும். இதையே வேறுவிதமாகச் சொன்னால், பொருள்கடன் மிகுதியாக இருக்கும் ஒருவரே பொருளீட்ட, உழைக்க முயற்சிசெய்து லாபம் ஈட்டுவார். வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தினால் ஆறாம் பாவகம் நன்மை செய்யும் பாவகம்தான். வாங்கிய கடனைத் திரும்ப அடைக்க முடியாத வர்களுக்கு ஆறாம் பாவகம் சாபம்தான் என்பதில் சிறிதும் ஐயமில்லை. லக்னம் வலிமையடைந்தவர்களுக்கு ஆறு, பத்தாமிட சம்பந்தம் நிச்சயம் வரமாகவே அமையும். செவ்வாய்க்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் சிவனுக்கு மல்லிகைப் பூவால் அர்ச்சனை செய்வதால் நன்மைகள் அதிகரிக்கும். ஒன்பது பேருக்கு தயிர்சாதம் தானம் தரவேண்டும்.
ஆறாமதிபதி பதினொன்றில்
6-ஆமதிபதி 11-ஆமதிபதியுடன் சம்பந்தப்பட்டால் மூத்த சகோதரிகளால் நஷ்டம், கடன் உருவாகும். சிலர் பேராசை மிகுதியால் உத்தியோகத்தில் இருக்கும் காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சிக்கி வாழ்வாதாரத்தை இழக்கிறார்கள். சிலர் ஆடம்பரச் செலவால் கடனை விலைகொடுத்து வாங்குகிறார்கள். இவர்களுக்கு வழக்குகளில் வெற்றி கிடைக்காது. சிலர் இளைய தாரம் எனும் வைப்பாட்டி கொடுமையால் உடம்பில் உயிரைத் தவிர மற்ற அனைத்தையும் கடனுக்காக இழக்கிறார்கள். செவ்வாய்க்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் சிவனுக்கு சந்தன அபிஷேகம் செய்து வழிபடவும்.
ஆறாமதிபதி பன்னிரன்டில்
இந்த அமைப்புடையவர்கள் கடனுக்காக தலைமறைவு வாழ்க்கையை அனுபவிக்கி றார்கள். அல்லது நோயால் வைத்தியச் செலவுசெய்து கடனாளியாகிறார்கள். அல்லது வாழ்நாளில் பெரும் பகுதியைத் தனிமையில் கடக்கிறார்கள். அல்லது குறைந்த ஊதியத்திற்கு கடுமையாக உழைக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இந்த அமைப்பினருக்கு வெளிநாட்டுக் குடியுரிமை சிறப்பைப் பெற்றுத்தரும். பொதுவாக ஆறாமிடத்திற்கு அதிக கிரகங்கள் சம்பந்தமில்லாமல் இருப்பது நல்லது. அவை எவ்வளவு கொடுத்தாலும் அவற்றால் ஜாதகர் நன்மை பெறமுடியாமல் தவிக்கநேரும்.
சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட மாற்றம் உண்டாகும்.
செல்: 98652 20406