ருவரின் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்களை ஜாதகத்தையும், தசாபுக்தியையும் வைத்துதான் தெரிந்துகொள்ளமுடியும். சமீபத்தில் சென்னையில் என்னை சந்தித்த ஒரு அன்பரின் ஜாதகத்தைப் பார்த்து "உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் உத்தியோகமே சிறப்பு' என்று கூறினேன். அதற்கு அந்த நபர், "என் ஜாதகத்தை பலரிடம் காண்பித்துள்ளேன். அதில் பெரும்பான்மையானவர்கள் எனக்கு சுயதொழில் அமைப்புள்ளது; குறைந்தது இரண்டு தொழில் செய்வேன் என்று கூறியுள்ளார்கள். ஆனால் நீங்கள் உத்தியோகமே சிறப்பென்று கூறுகிறீர்களே' என்றார்.

"யார் என்ன சொன்னார்கள் என்பது வேண்டாம். என் கணிப்பில் நீங்கள் வங்கிப்பணியில் இருக்கவேண்டும்' என்று கூறினேன். "நீங்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்' என்று கேட்டேன்.

"ஆமாம்; வங்கிப் பணியில்தான் இருக்கிறேன். கடந்த 12 வருடங்களாக நான் பலமுறை வேலையிலிருந்து விடுபட்டு சுயதொழில் துவங்க வேண்டுமென்று முயற்சித்துள்ளேன். இதுவரை என் முயற்சி கிணற்றில் விழுந்த கல்லாகத்தான் இருக்கிறது' என்றார்.

ஜோதிடத்தில் பலன் சொல்வதற்கு பல முறைகள் இருந்தாலும், பாவகமும், காரகமும், அதில் நின்ற கிரகங்களின் பலமும், தசாபுக்தியும் மிக முக்கியம். இதற்குமீறி எந்தப் பலனும் நடக்கும் வாய்ப்புமில்லை. அதன்படி 28-6-1983 காலை 5.30 மணிக்கு சென்னையில் பிறந்த இந்த ஜாதகருக்கு நடப்பு குரு தசை, புதன் புக்தி. குரு தசை 2-7-2033 வரை; புதன்புக்தி 8-6-2024 வரை. ஜாதகர் மிதுன லக்னம். லக்னத் தில் சூரியன், செவ்வாய், ராகு. அதாவது 3-ஆமதிபதி சூரியனும் 6, 11-ஆமதிபதி செவ்வாயும் லக்னத்தில். 7, 10-ஆமதிபதி குரு 6-ல் அமர்வு. 6-ல் நின்ற குரு தனது 5-ஆம் பார்வையால் 10-ஆமிடமான தொழில் ஸ்தானத்தையும், 7-ஆம் பார்வையால் 12-ஆமிடமான விரய ஸ்தானத்தையும், 9-ஆம் பார்வையால் 2-ஆமிடமான தன ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

Advertisment

sad

5, 12-ஆமதிபதி சுக்கிரன் 2-ஆமிடமான தன ஸ்தானத்தில் நிற்கிறார். ஒருவரின் வருமானத்தைக் குறிக்கக்கூடிய 2-ஆமிடத்தில் 5-ஆமதிபதி சுக்கிரன். ஆக தொழில், வருமான ஸ்தானத்திற்கு 2, 5, 6, 10 பாவகங்கள் சம்பந்தம் பெறுவதால் ஆசிரியர், ஜோதிடர், வங்கிப்பணி இந்த மூன்றும் ஜாதகருக்கு சாதகமாக இருந்தாலும், குரு 5-ல் நிற்கும் உச்சம்பெற்ற சனியின் சாரம் பெற்றதால் வங்கிப் பணி மட்டுமே ஜாதகருக்கு நிலைக்கும். 7, 10-ஆமதிபதி குருவை புதன், சுக்கிரன் பார்ப்பதால் ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் அமையுமென்று கூறுவது பொருந்தாத பலன். 7, 10-ஆமதிபதி குரு 6-ல் அமர்ந்ததே சுய தொழிலைவிட உத்தியோகமே சிறப்பென்பதைத் தெளிவாக்குகிறது. நண்பர்களுடன் இணைந்து கூட்டுத் தொழில் செய்யக்கூடாது என்பதையும் புரியவைக்கிறது.

இதைவிட எளிமையாக, 6-ஆமதிபதி செவ்வாய் லக்னத் தில் அமர்ந்திருப்பதால் உத்தியோகமே இவருக்கு புருஷ லட்சணம். ஜாதகர் வங்கிப் பணியில் சேரும்போது ராகு தசை. ராகு 6-ஆம் அதிபதி செவ்வாயின் சாரம். 39 வயதான ஜாதகருக்கு குரு தசை இன்னும் பத்து வருடங்கள் உள்ளன. அடுத்துவரும் 8, 9-ஆம் அதிபதியான சனி தசையும், 6-ஆமதிபதி செவ்வாயின் சாரத்தில் இருப்பதால் வாழ்நாள் முழுவதும் ஜாதகர் சுயதொழில் நடத்தும் வாய்ப்பு குறைவு.

அந்த ஜாதகர் மீண்டும் விடாப்பிடியாக, "மனைவி பெயரில், அம்மா பெயரில், குலதெய்வம் பெயரில் தொழில் துவங்க முடியுமா?' என்று கேட்டார். பலர் தங்களின் ஜாதகத்தில் சுயதொழில் அமைப்பிருக்கிறதா என்பதை சரிபார்ப்பதில்லை. "என் அமைப்பிற்கு என்ன தொழில் செய்யலாம்' என்பதில்தான் கவனமாக இருப்பார்கள். சுயஜாதகத்தை சரிபார்த்து, அமைப்பு சரியில்லை என்றாலும், "என் மனைவி பெயரில் தொழில் செய்கிறேன்; அம்மா, அப்பா, குலதெய்வம் பெயரில் தொழில் செய்கிறேன்' என்று முரண்டு பிடிக்கிறார்கள். இந்த ஜாதகருக்கு ஆறாமதிபதி செவ்வாய் லக்னத்திலிருந்து, லக்னாதிபதி புதன் பன்னிரண்டில் மறைவதால், லக்னாதிபதி பலம்குறைந்தும் ஆறாமதிபதி வலுவாகவும் இருக்கிறார் கள். மேலும் அடுத்து வரவுள்ள அஷ்ட மாதிபதி தசையின் அதிபதி சனி உச்சம்பெற்று லக்னாதிபதி புதனைவிட வலிமையாக இருக்கிறார். லக்னம், லக்னாதி பதி பலவீனமாக இருப்பதால் யாருடைய பெயரில் தொழில் செய்தாலும் லாபம் கிடைக்காது. தொழிலை இயக்குபவரின் சுய ஜாதகம், தசாபுக்திக்கேற்பவே ஜாதகரின் செயல்பாடுகள் இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

6-ஆமிடமென்பது நாம் செய்யும் அடிமைத் தொழிலைக் குறிக்கிறது. சனி தசையில் 1, 5, 6, 8, 9 11-ஆம் பாவகம் சம்பந்தம் பெறுவதால் அந்த காலகட்டத்தில் வெளிநாட்டு வேலை, பதவி உயர்வு, ஊதிய உயர்வு என நல்ல மாற்றங்கள் உருவாகும். சுயதொழில் செய்தால் கடன், வம்பு, வழக்கு என மன உளைச்சலை அனுபவிக்க நேருமென்று கூறப்பட்டது.

ஒருவர் விதிக்கப்பட்ட விதியின்படி வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு வாழும்பொழுது வாழ்க்கை சுகமாக இருக்கும். விதிக்கும்மீறிய ஆசையில் நுழையும்போது எதிர்வினைகள், விளைவுகள் மிகுதியாக இருக்கும். அடுத்ததாக ஒருவருக்கு தசாபுக்திக்கு மீறிய பலன்கள் நடக்கும் வாய்ப்பு குறைவு. எனவே ஒருவரின் ஜாதகத்திற்கு பலன் கூறும்போது தசாபுக்திக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பலனுரைத்தால் 100 சதவிகிதம் பொருத்தமாக இருக்கும். எனவே பத்தாம் அதிபதியையும் ஜாதகக் கட்டத்தையும் மட்டும் வைத்து ஒருவரின் தொழிலை நிர்ணயிக்கமுடியாது.

(தொடரும்)

செல்: 98652 20406