மனிதர்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவு செய்யும் முக்கிய காரணி பணம். ஒரு மனிதனிடம் போதுமான செல்வம் இருந்தால், அவன் உலகிலுள்ள ஒவ்வொரு பொருள் இன்பத்தையும் அனுபவிக்க முடியும். பணம் இருந்தால் அந்த நபருக்கு வீடு, புகழ், கௌரவம், அதிகாரம் எல்லாம் தேடிவரும். யாருடைய வங்கி இருப்பு அதிகமாக உள்ளதோ அவர்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். பணம் இல்லாதவனிடம் எதுவும் இல்லை. இன்றைய காலகட்டத்தில் பணத்தைவிட முக்கியமானது எதுவுமில்லை. எனெனில் பொருள் உள்ளவனையே சக்திவாய்ந்தவன் என்று உலகம் நம்புகிறது. பணம் உள்ளவர்களுக்கு சமூகம் அதிக மரியாதை கொடுப்பதை அடிக்கடி பார்க்கமுடிகிறது. ஒருவன் தன் வாழ்நாளில் எண்ணற்ற துறைகளில் வெற்றிபெற்றிருந்தாலும், அவனிடம் பணம் இல்லையென்றால் சமூகம் அவருக்கு சிறப்பு மரியாதை கொடுப்பதில்லை. வெற்றியுடன் பணம் இருந்தால், சமூகத்தில் அவருக்கு மரியாதை பல மடங்கு அதிகரிக்கிறது.
பல வீடுகளில் பணப் பற்றாக்குறையால்தான் பலவிதமான பிரச்சினைகள் ஏற்படுகிறது. போதுமான பணம் இல்லாததால், உறவுகள் மதிப்பதில்லை. பணம் சம்பாதிக்கும் பிள்ளையிடம் பாசம் பொழியும் பெற்றோர்கள் பணம் சம்பாதிக்காத பிள்ளையை கண்டுகொள்வதில்லை. பணம் இல்லாதவர் கடன் கேட்டு விடுவானோ என பயந்து உறவுகள் அவர்களை ஒதுக்கி வைக்கிறார்கள். பெற்ற பிள்ளைகள், கட்டிய மனைவி உதாசீனம் செய்கிறார்கள்.
ஆனால் வாழ்க்கையில் எல்லா மகிழ்ச்சியையும் பணத்தால் வாங்க முடியுமா? பணத்தால் இறந்தவனை உயிர்ப்பிக்க முடியுமா, அன்பை, மன அமைதியை, திருப்தியை விலை கொடுத்து வாங்கமுடியுமா என பல ஆறுதல் வார்த்தைகள் பேசினாலும் பணம் இல்லாதவனுக்கு மரியாதை இல்லை என்பது நிதர்சனமான உண்மை.
மனிதன் வளமான வாழ்க்கை வாழ பணம் தேவை. பண ஆசை, பணத்தேவை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. காரணம் விண்ணைத் தொடும் பணவீக்கம். மனிதனின் பல அடிப்படைத் தேவைகளில் முதன்மையானது பணம். பணப்பற்றாக்குறை காரணமாக மக்களிடம் நிதி நெருக்கடி அடிக்கடி காணப்படுகிறது. நிதி நெருக்கடி மற்றும் கடனில் சிக்கித் தவிக்கும் மக்கள் பலர் தற்கொலை போன்ற தவறான நடவடிக்கைகளை மேற்கொள்வது சகஜமாகி விட்டது.
நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் பலர் தங்கள் அன்புக்குரியவர்களை மறந்துவிடுகிறார்கள்.
செல்வம் எப்படி வாழ்க் கையை உருவாக்குகிறதோ, அதேபோல் செல்வம் மனிதனை எல்லா வற்றையும் இழக்கத் தூண்டு கிறது.
மனித நாகரீகத்தின் வளர்ச்சியை பண்ட மாற்று முறையிலிருந்து பணப்பரிவர்த்தனைக்கு மாறியதன்மூலம் அறிந்து கொள்ளமுடியும். பணம் இல்லாத உலகத்தைப் பற்றி நினைப்பது கடினம். மனித வாழ்க் க
மனிதர்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவு செய்யும் முக்கிய காரணி பணம். ஒரு மனிதனிடம் போதுமான செல்வம் இருந்தால், அவன் உலகிலுள்ள ஒவ்வொரு பொருள் இன்பத்தையும் அனுபவிக்க முடியும். பணம் இருந்தால் அந்த நபருக்கு வீடு, புகழ், கௌரவம், அதிகாரம் எல்லாம் தேடிவரும். யாருடைய வங்கி இருப்பு அதிகமாக உள்ளதோ அவர்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். பணம் இல்லாதவனிடம் எதுவும் இல்லை. இன்றைய காலகட்டத்தில் பணத்தைவிட முக்கியமானது எதுவுமில்லை. எனெனில் பொருள் உள்ளவனையே சக்திவாய்ந்தவன் என்று உலகம் நம்புகிறது. பணம் உள்ளவர்களுக்கு சமூகம் அதிக மரியாதை கொடுப்பதை அடிக்கடி பார்க்கமுடிகிறது. ஒருவன் தன் வாழ்நாளில் எண்ணற்ற துறைகளில் வெற்றிபெற்றிருந்தாலும், அவனிடம் பணம் இல்லையென்றால் சமூகம் அவருக்கு சிறப்பு மரியாதை கொடுப்பதில்லை. வெற்றியுடன் பணம் இருந்தால், சமூகத்தில் அவருக்கு மரியாதை பல மடங்கு அதிகரிக்கிறது.
பல வீடுகளில் பணப் பற்றாக்குறையால்தான் பலவிதமான பிரச்சினைகள் ஏற்படுகிறது. போதுமான பணம் இல்லாததால், உறவுகள் மதிப்பதில்லை. பணம் சம்பாதிக்கும் பிள்ளையிடம் பாசம் பொழியும் பெற்றோர்கள் பணம் சம்பாதிக்காத பிள்ளையை கண்டுகொள்வதில்லை. பணம் இல்லாதவர் கடன் கேட்டு விடுவானோ என பயந்து உறவுகள் அவர்களை ஒதுக்கி வைக்கிறார்கள். பெற்ற பிள்ளைகள், கட்டிய மனைவி உதாசீனம் செய்கிறார்கள்.
ஆனால் வாழ்க்கையில் எல்லா மகிழ்ச்சியையும் பணத்தால் வாங்க முடியுமா? பணத்தால் இறந்தவனை உயிர்ப்பிக்க முடியுமா, அன்பை, மன அமைதியை, திருப்தியை விலை கொடுத்து வாங்கமுடியுமா என பல ஆறுதல் வார்த்தைகள் பேசினாலும் பணம் இல்லாதவனுக்கு மரியாதை இல்லை என்பது நிதர்சனமான உண்மை.
மனிதன் வளமான வாழ்க்கை வாழ பணம் தேவை. பண ஆசை, பணத்தேவை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. காரணம் விண்ணைத் தொடும் பணவீக்கம். மனிதனின் பல அடிப்படைத் தேவைகளில் முதன்மையானது பணம். பணப்பற்றாக்குறை காரணமாக மக்களிடம் நிதி நெருக்கடி அடிக்கடி காணப்படுகிறது. நிதி நெருக்கடி மற்றும் கடனில் சிக்கித் தவிக்கும் மக்கள் பலர் தற்கொலை போன்ற தவறான நடவடிக்கைகளை மேற்கொள்வது சகஜமாகி விட்டது.
நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் பலர் தங்கள் அன்புக்குரியவர்களை மறந்துவிடுகிறார்கள்.
செல்வம் எப்படி வாழ்க் கையை உருவாக்குகிறதோ, அதேபோல் செல்வம் மனிதனை எல்லா வற்றையும் இழக்கத் தூண்டு கிறது.
மனித நாகரீகத்தின் வளர்ச்சியை பண்ட மாற்று முறையிலிருந்து பணப்பரிவர்த்தனைக்கு மாறியதன்மூலம் அறிந்து கொள்ளமுடியும். பணம் இல்லாத உலகத்தைப் பற்றி நினைப்பது கடினம். மனித வாழ்க் கையின் அனைத்து சம்பவங்களையும் பணம் எனும் சடசடக்கும் காகிதமே நிர்ணயிக்கிறது. மனித வாழ்வின் அன்றாட தேவைகளான உணவு, உடை இருப்பிடம் போன்ற அனைத்து தேவைகளையும் நிறைவு செய்யும் வாழ்வாதார சக்தியாக பணம் விளங்குகிறது.
அதனால்தான் "பணம் பத்தும் செய்யும்' என்று கூறிவைத்தார்கள். தற்போது பணம் சம்பாதிப்பது மட்டுமே மனிதர்களின் வாழ்நாள் லட்சியம் குறிக்கோளாக மாறி விட்டது. பணம் சம்பாதித்து பணக்கார யோக அந்தஸ்து பெறவே அனைவரும் விரும்புகிறார் கள். மனிதர்கள் பணக்கார யோகத்தை விரும்பினாலும் அந்த யோகம் எளிதில் அனைவருக்கும் கிட்டுவதில்லை. பணத்தால் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அனுபவிக்கும் யோகங்களை 3 விதமாகப் பிரிக்கலாம்.
1. பிறவி யோகம்
2. திடீர் யோகம்
3. நிலையற்ற யோகம்
பிறவி யோகம்
பணக்கார குடும்பத்தில் வாரிசாகப் பிறந்து, கடைசிவரை கோடீஸ்வரராக வாழும் யோகம் வெகுசிலருக்கே அமையும். நான்காம் அதிபதி, செவ்வாய், ஒன்பது, பத்தாம் அதிபதி கள் பலம்பெற்ற ஜாதகர் கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்திருப்பார்கள். முன்னோர் கள் செல்வமும் செல்வாக்கும் மிக்கவர்களாக இருப்பார்கள். வாழ்நாள் முழுவதும் பணக் கஷ்டம் தெரியாமல் இருப்பார்கள்.
திடீர் யோகம்
வாழ்க்கையில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவர் சாதாரண அடிமட்டதில் அடிமைத் தொழில் செய்துகொண்டு ஜீவனத்துக்குகூட கஷ்டம் அனுபவிப்பார்கள், சுகபோக வாழ்க்கை இந்த ஜென்மத்தில் கிடைக்காது என்று நினைக்கும் பலர் திடீர் யோகத்தின் மூலம் சமூகத்தில் உச்ச நிலையை அடைகின் றனர். தகுதிக்கு மீறிய வாழ்வு கிடைத்து அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் பாக்கியத்தை அடைகிறார்கள். எதிர்பாராத ராஜயோகத்தால் சிலர் கோடீஸ்வரராகி விடுகிறார்கள். அடிமட்ட நிலையில் இருக்கும் திடீர் யோகம்பெற சுய ஜாதகத்தில் 1, 2, 5, 9, 11-ஆம்மிடம் பலம்பெற வேண்டும்.
நிலையற்ற யோகம்
வசதியாக வாழ்ந்துகொண்டு இருப்பவர் திடீரென தாழ்வான நிலைக்கு செல்வதும், சாதாரண நிலையில் வாழ்ந்தவர் எதிர்பாராத திடீர் தனயோகம் பெற்று உயர்ந்த நிலைக்கு செல்வது அல்லது குறுகிய காலம் வசதியான வாழ்க்கை வாழ்வது அல்லது குறுகிய காலம் பணத்தடுமாற்றம் ஏற்படுவது என ஏற்ற இறக்கம் நிறைந்த நிலையற்ற பலனை அனுபவிப்பார்கள். ராசிக் கட்டத்திலுள்ள பன்னிரு பாவகங்களில் பணபர ஸ்தானம் சிறப்பாக அமைந்தால் மட்டுமே பணம் எனும் தனம் வசப்படும். பணபர ஸ்தானம் என்பது ஒரு ஜாதகத் தில் ஜென்ம லக்னத்திலிருந்து இரண்டு மற்றும் பதினொன்றாமிடமாகும். இரண்டாமிடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமும் பதினொன்றாமிடமான லாப ஸ்தானமுமே ஜாதகரின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்யும் பாவகங்களாகும்.
தன ஸ்தானம்
ஒருவரின் வாழ்க்கை செல்வச் செழிப் பானதா அல்லது வறுமையில் கஷ்டப் பட நேரிடுமா? சுயதொழில்மூலம் செல்வச் சேர்க்கை ஏற்படுமா அல்லது உத்தியோகத் தின்மூலம் செல்வச் சேர்க்கை ஏற்படுமா ? வாழ்க்கைத்துணை மூலம் செல்வச் சேர்க்கை உண்டாகுமா? அதிர்ஷ்ட வாய்ப்பு கள் ஜாதகருக்கு உண்டா போன்றவற்றை தன ஸ்தானமே தீர்மானிக்கும். தன ஸ்தானம் பலம் பெற்றால் ஜாதகர் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறர்ந்தவர். ஜாதகர் செல்வாக்கு சொல்வாக்கு பெற்ற சீமானாக விளங்குவார். பணக்கஷ்டம் தெரியாதவர். பேச்சுத் திறமை யால் வருமானம் ஈட்டும் காரியவாதிகள். பேச்சுத் தொழிலை மூலதனமாக கொண்ட வர்கள். பல வழிகளில் வருமானம் ஈட்டும் தந்திர வாதிகள். கலகலப்பாக பேசி தன்னை சார்ந்தவர் களை சந்தோஷமாக வைத்து காப்பாற்று வார்கள். இவர் பிறக்கும்போது குடும்பம் சாதாரண நிலையில் இருந்தாலும் இவர் பிறந்த பிறகு வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். தனத்தை பெருக்குவது பற்றியும், தன் குடும்பத்தை காப்பது பற்றியும் சிந்தனை மிகைப்படுத்தலாக இருக்கும். இவர்கள் பூர்வீகத்தில் வருமானம் ஈட்டி சொந்த பந்தங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமையும்.
இதற்கு அசுப கிரகங்களின் சம்பந்தம் இருந்தால் அல்லது தன ஸ்தானம் பலம் குறைந்தால் கடன், வறுமை, கஷ்ட ஜீவனம், பூர்வகத்தில் வாழமுடியாத நிலை, குடும்ப உறவுகளிடம் மதிப்பு, மரியாதை இன்மை, பிறரை அண்டி பிழைத்தல் போன்ற நிலை நீடிக்கும்.
லாப ஸ்தானம்
உப ஜெய ஸ்தானமான 11-ஆம் பாவகத் தின்முலம் பல்வேறு வகையில் தனபிராப்தி, சொத்து சேர்தல், எதிர்பாராத அசுர வளர்ச்சி, திடீர்யோகம், உழைப்பில்லாத செல்வம், உயில் சொத்து, பினாமி பணம், சொத்து பல வகை யில் வருவாய், லாபம் போன்றவை ஏற்படும். தேவைக்கு அதிகமாக பணம் பொன், பொருள் உள்ளவர்கள் ஜாதகத்தில் 11-ஆம் மிடமான லாப ஸ்தானம் வலிமையாக இயங்கும். ஒருசிலர் குறுகிய காலத்தில் பணம், புகழ், அந்தஸ்து பெறுவது 11-ஆம் அதிபதியின் தசை புக்தி காலங்களில் மட்டுமே என்றால் அது மிகையாகாது.
பதினொன்றாம் அதிபதி மற்றும் 11-ல் நின்ற கிரகம் பலம் பெற்றால் ஜாதகர் அதிர்ஷ்டப்பிறவி. கூட்டுக் குடும்பத்தில் சித்தப்பா, மூத்த சகோதரருடன் வசதியான கூட்டுக் குடும்பத்தில் பிறந்து வாழ்வார்கள்.
அவர்களால் லாபமும், அதிர்ஷ்டமும் உண்டாகும். கோடீஸ்வர யோகம், சமுதாய அந் தஸ்து, அரசியல் ஆர்வம், அதிகாரம், கௌரவம் உண்டு. தொட்டதெல்லாம் பொன்னாகும்.
கூட்டுத் தொழிலில் வெற்றி தரும். அதிகமான ஆசைகளும் எதிர் பார்ப்புகளும் இருக்கும். குடும்பம் அமைந்தபிறகு பண வரவு அதிக மாகும். ஜாதகருக்கு பணம் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் லாபம் தரும். சிறுவயதிலேயே வருமானம் ஈட்டத் துவங்கு வார்கள். வங்கித் தொழில், வட்டித் தொழில், பைனான்ஸ், சீட்டு பிடித்தல் போன்றவற்றில் நல்ல ஆதாயம் உண்டு. பேச்சை ழூலதனமாக கொண்ட தொழிலில் சாதனை படைப்பார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து கூட்டுத் தொழில் நடத்துவார்கள்.
சுருக்கமாக கௌரவத் தொழில் உண்டு. லாப ஸ்தானம் கெட்டால் பொது வாழ்ககை யில் பிரச்சினைகள், ஏமாற்றங்கள் வரும். தீய சகவாசத்தால் பெயர் கெடும். எவ்வளவு சம்பாதித்தாலும் இவர்களால் பணத்தை சேமித்து வைக்கவே முடியாது. பண பர ஸ்தானத் திற்கு கேந்திர, திரிகோணாதிகள் சம்பந்தம் இருப்பது மிகமிக சிறப்பு. லக்னரீதியான அசுப கிரகங்களின் சம்பந்தம் இருப்பது பொருளா தாரத்தில் தன் நிறைவற்ற நிலையைத் தரும்.
பணக்கார யோகம் எப்படி வரும்.
ஜாதகத்தில் 1, 25, 9, 11-ஆமிடங்கள் சுப வலிமை பெறவேண்டும். அத்துடன் சூரியன் பலம் பெற்றால் தந்தையாலும், சந்திரன் பலம் பெற்றால் தாயாலும், செவ்வாய் பலம் பெற்றால் நண்பர், கணவர், உடன்பிறப் பாலும், புதன் பலம் பெற்றால் மாமனாலும், சொந்த அறிவாலும், குரு பலம் பெற்றால் முன்னோர்கள், அறிஞர்கள், அரசியல் வாதிகள், புத்திரர்களாலும், சுக்கிரன் பலம் பெற்றால் மனைவியாலும், சனி, ராகு, கேது பலம் பெற்றால் வேலையாட்கள்மூலமும், நேர்மையற்ற வழியிலும் செல்வம் சேரும். ஜோதிடரீதியாக சுக்கிரன் தரும் செல்வம் ஆயிரக்கணக்கிலும், சனி தரும் செல்வம் லட்சக்கணக்கிலும், குரு தரும் யோகம் கோடிக்கணக்கிலும், ராகு தரும் பணம் கோடியின் மடங்குகளிலும் இருக்கும்.
தசா புக்தி பலம்
ஜனனகால ஜாதகத்திலுள்ள கிரகங்கள் மனிதனின் வாழ்வை நிர்ணயிக்கிறது. ஒருவருக்கு ஜாதகத்திலுள்ள கிரகங்களும், பாவகங் களும் யோகம் தரும் விதத்தில் அமைந்தால் மட்டும் போதாது. ஜாதகத்தில் எத்தனை யோகங்கள், தோஷங்கள் இருந்தாலும் அந்த சாதக பாதகத்தை தரும் கிரகங் களின் தசா புக்திகள் நடைபெற்றால் மட் டுமே ஜாதகர் பலனை அனுபவிக்க முடியும். அவரது வாழ்நாளுக் குள் அனுபவிக்க வேண்டிய பருவத் தில் அந்த யோக கிரகங்களின் தசை வந்தால் மட்டுமே யோகப்பலனை பரிபூரணமாக அனுபவிக்கமுடியும் அந்த விதிப் பயனை ஜாதகர் எப்போது அனுபவிப்பார் என்பதை தசா புக்திகளே தீர்மானிக்கின்றன. அவரது வாழ்நாளுக்குள் அனுபவிக்கவேண்டிய பருவத்தில் தசை வரவேண்டும். அதுவே யோக ஜாதகம். உதாரணமாக ஷட் பலத்திலும் பாவகத்திலும் சுக்கிரன் வலிமைபெற்ற ஒருவருக்கு 25 வயதில் சுக்கிர தசை நடந்தால் சிறப்பான தொழில், தனவரவு, உரிய வயதில் திருமணம், உல்லாச வாழ்க்கை, ஆடை, ஆபரண சேர்க்கை, சொத்து சுக சேர்க்கை உண்டாகும். அதுவே 70 வயதில் வந்தால் சுக்கிரனால் கிடைக்கும் சுக போகத்தை அனுபவிக்க முடியாது. வயதிற்கு பொருத்தமான சுப பலன்களை வழங்கக்கூடிய தசா புக்திகள் தொடர்ந்து நடத்தும் ஜாதகமே யோக ஜாதகம். ஷட் பலத்தால் அதிக வலிமைபெற்ற கிரகங்கள் தங்கள் தசா- புக்தி காலங்களில் அனுகூலமான பலன்களைத்தரும். மிகவும் வலுக்குன்றிய கிரகங்கள் தங்கள் தசாபுக்தி காலங்களில் அனுகூல மற்ற பலன்களைத் தரும்.
ஒரு ஜாதகரின் உயிர் புள்ளியாகிய லக்னம் என்ற லக்னாதிபதியால் தான் ஒரு ஜாதகம் செயல்படுத்தப்படுகிறது. எனவே லக்னம், லக்னாதிபதிபலம் மிகவும் முக்கியம். தனயோகம் என்பது 1, 2, 5, 9, 11 ஆகிய இடங்கள் மற்றும் அந்த இடத்தின் அதிபதிகள்மூலம் நிர்ணயிக்கிறோம். அத்துடன் தன கிரகங்களான குரு, சுக்கிரன், சனி, ராகு ஆகியோரின் அமர்வு மிக முக்கியம். இவையெல்லாம் சரியாக அமையும் போது பல்வேறு வகையில் தனபிராப்தி உண்டாகும். அதே நேரத்தில் யோகமும், அம்சமும், பாக்கியமும் சேர்ந்து இருந்தால் தனம் எனும் பணம் கொட்டும். எந்த ஜாதகமாக இருந்தாலும் ஏதாவது ஒருவகையில் யோகம் இருக்கும். ஆனால் அந்த யோகம் என்ன தன்மையில் உள்ளது. எந்த அளவில் உள்ளது என்பதில்தான் விஷயம் உள்ளது. இதில் அளவு என்பது நாம் வாங்கி வந்த வரம், கொடுப்பினை, அம்சம். இந்த கர்மா நமக்கு நல்ல அம்சத்தில் இருந்தால் நிச்சயம் செல்வவளம், தன பிராப்தி, பண மழை கொட்டும். மேலும் தனயோகம் ராஜயோகங்கள் இருந்தாலும் தீய கிரக சேர்க்கை, தீய யோகங்கள், நீச யோகங்கள், பரல் பலம் போன்றவை குறைந்த ஜாதகங்கள், நீச தசை, பாதக ஸ்தான தசை, விரய ஸ்தான தசை போன்ற பலம் குறைந்த தசா நடக்கும் ஜாதகங் கள் அடிக்கடி சரிவை சந்திக்கும். வாழ்க்கைப் பாதை சகடயோகம்போல் மாறி மாறி ஏறி இறங்கிக்கொண்டே இருக்கும். தன, லாப கிரக யோகமும், ராஜயோக தசையும், அனுபவிக்கும் பாக்கியமும் ஒருங்கே அமைந்தால்தான் குபேர தன சம்பத்து, கோடீஸ்வர யோகம் சித்திக்கும்.
பரிகாரம்
பணக்கார யோகம்பெற விரும்புபவர்கள் பச்சை மருதாணி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து நவகிரகங்களை மனதார வேண்டி ஒன்பது பிடி பிடித்து காயவைத்து பொடியாக்கி சாம்பிராணிடன் கலந்து தூபம் மிட நல்ல பணவரவு ஏற்படும். இன்றைய போட்டி சூழ்ந்த உலகில் மக்கள் தங்களை சிறப்பாக நிரூபிக்க தங்கள் செல்வத்தை வைத்திருப்பது முக்கியம் என்று கருதுகின்றனர்.
பணத்தால் எல்லா மகிழ்ச்சியையும் வாங்க முடியும் என்று அவன் நினைக்கிறான். அது தவறு. பணத்துடன் குடும்ப குடும்ப உறுப்பினர் களின் அன்பும் இருந்தால் மட்டுமே வாழ்க்கை அழகாக இருக்கும்.
செல்: 98652 20406