முற்பிறவி சாபம்! திருமணத் தடைக்கு அகத்தியர் சொன்ன பரிகாரம்! -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/curse-past-life-remedy-given-by-agastya-marriage-ban-chittardasan-sundarji

சுமார் 65 வயதுடைய ஒருவர் 35 வயதுடைய தன் மகனுடன் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். அவர்களை அமரவைத்து, "என்ன விஷயமாகப் பலன்கேட்க வந்துள்ளீர்கள்' என்றேன்.

"ஐயா, தங்களிடம் சுமார் மூன்று வருடங்களுக்குமுன்பு, மகனின் திருமணத் தடைவிலகி, திருமணம் நடைபெற பலன்கேட்டு வந்திருந்தேன். ஓலையில் அகத்தியர், சில பிரார்த்தனைகளையும், நடைமுறையில் சில செயல் களைக் கடைப்பிடித்து செயல்பட்டால், திருமணத் தடை விலகுமென்று கூறினார்.

மனைவியாக வரப்போகின்றவளைப் பற்றியும் கூறினார். ஆனால் அகத்தியர் கூறியபடி கடைப்பிடித்து செயல்பட்டும், தடைவிலகி இவனுக்கு திருமணம் நடக்க வில்லை. ஏனென்று கேட்கவே நாடியில் பலன்கேட்க வந்துள்ளேன்'' என்றார்.

aaa

அவர் கூறியவற்றை பொறுமையாகக் கேட்டுவிட்டு, ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன்.

அகத்தியர் எழுத்து வடிவில் தோன்றி பலன் கூறத் தொடங்கினார்.

"அகத்தியர் கூறிய படி செயல்பட்டும், திருமணம் நடக்கவில்லை என்கின்றான். ஆனால் நான் கூறியதை புரிந்து செயல்ப

சுமார் 65 வயதுடைய ஒருவர் 35 வயதுடைய தன் மகனுடன் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். அவர்களை அமரவைத்து, "என்ன விஷயமாகப் பலன்கேட்க வந்துள்ளீர்கள்' என்றேன்.

"ஐயா, தங்களிடம் சுமார் மூன்று வருடங்களுக்குமுன்பு, மகனின் திருமணத் தடைவிலகி, திருமணம் நடைபெற பலன்கேட்டு வந்திருந்தேன். ஓலையில் அகத்தியர், சில பிரார்த்தனைகளையும், நடைமுறையில் சில செயல் களைக் கடைப்பிடித்து செயல்பட்டால், திருமணத் தடை விலகுமென்று கூறினார்.

மனைவியாக வரப்போகின்றவளைப் பற்றியும் கூறினார். ஆனால் அகத்தியர் கூறியபடி கடைப்பிடித்து செயல்பட்டும், தடைவிலகி இவனுக்கு திருமணம் நடக்க வில்லை. ஏனென்று கேட்கவே நாடியில் பலன்கேட்க வந்துள்ளேன்'' என்றார்.

aaa

அவர் கூறியவற்றை பொறுமையாகக் கேட்டுவிட்டு, ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன்.

அகத்தியர் எழுத்து வடிவில் தோன்றி பலன் கூறத் தொடங்கினார்.

"அகத்தியர் கூறிய படி செயல்பட்டும், திருமணம் நடக்கவில்லை என்கின்றான். ஆனால் நான் கூறியதை புரிந்து செயல்படவில்லை என்பதே உண்மை. இவனின் திருமணத்தடைக்கு, முற்பிறவியில், இவனும், இவனின் பெற்றோர் களும் சேர்ந்து, இவன் முற்பிறவி மனைவிக்கு செய்த பாவம், அதனால் அவள் மனம் வெறுத்துவிட்ட சாபம்தான் காரணம் என்பதை விளக்கமாகக் கூறி, அந்த சாபம் நீங்க சில நடைமுறை நிவர்த்திகளையும், சில பிரார்த்தனைகளையும் கூறினேன்.

இவர்கள் பிரார்த்தனைகளை மட்டும் செய்துவிட்டு, திருமணம் நடைபெற நான் கூறிய நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வில்லை. இவன் தவறு செய்துவிட்டு, அகத்தியன் வாக்கு, பொய்யாகிவிட்டது என்று என்முன் வந்துள்ளான். திருமணம் நடைபெற, தடைவிலக மறுபடியும் கூறுகின் றேன். அதனை முறையாகக் கடைப்பிடித்து செயல்படச் சொல்; திருமணம் கைகூடும்.

இவனுக்கு சமீபத்தில், ஒரு பெண்ணை திருமணம்செய்ய, நிச்சயதார்த்தம் செய்தார்கள். ஆனால் அந்தப் பெண் இவனைத் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டாள். அந்தத் திருமணம் நின்றுபோனதால்தான், இன்று அகத்தியனை தேடிவந்துள்ளான். மறுபடியும் சாபத்தை கூறுகின்றேன்.

இந்த மகன், முற்பிறவியில், ஒரு பெண்ணை திருமணம்செய்து, தாய்- தந்தை, குடும்ப உறவு களுடன், கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தான். இவள் மனைவிக்குரிய மரியாதையை, குடும்பப் பொறுப்புகளை தராமல், இவனும், குடும்பத்தினரும், அவளை அலட்சியமாக, அடிமைபோல் நடத்தினார்கள். இவர்களின் கொடுமையை தாங்க முடியாமல், இவன் மனைவி வீட்டைவிட்டு வெளியேறினாள்.

ஏன் விரட்டப்பட்டாள் என்றே சொல்லலாம்..

அப்போது அவள் மனம் வெறுத்து விட்ட சாபம், இப்பிறவியில் திருமணம் கூடாமல், ஒரு மனைவியை அடையமுடியாமல் தடுத்துவருகின்றது.

இந்த மகனின் முற்பிறவியில், மனைவியாக வீட்டிற்கு வாழவந்த பெண்ணை, விரட்டிவிட்டு, கணவன்- மனைவி பிரிவதற்கு இவன் பெற்றோரும், குடும்ப பெரியவர்களும் காரணமாக இருந்தனர். அதனால் இந்த பிறவியில் இவனுக்கு பெற்றவர்கள் தங்கள் விருப்பப்படி, பெண்தேடி, தீர்மானித்து, திருமணம்செய்ய எண்ணி செயல்பட்டால், நினைப்பதுபோல் பெண் அமையாது; திருமணம் நடக்காது. இவன் திருமணத்தடைக்கு, தாய்- தந்தையே காரணம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

குடும்பப் பெரியவர்களும், பெற்றவர்களும், தங்கள் அந்தஸ்து, கௌரவம், தொழில், சீர்வரிசை, ஜாதகம், பத்து பொருத்தம் எனஅனைத்தும் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் பெண் பார்த்து வருகின்றார் கள். இவர்கள் எண்ணம்போல் எந்தப் பெண்ணும் அமைந்து திருமணம் நடக்காது.

முற்பிறவியில், தன் பெற்றோர், குடும்பத்தினர், பேச்சைக் கேட்டு, தன் மனைவியைப் பிரிந்தான். இந்த பிறவியில், தனக்கு யார் மனைவியாக வரவேண்டும்? எந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும் என்று இவன்தான் தீர்மானித்து, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், தன் விருப்பம் போல் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும்.

எந்தப் பெண் இவனைத் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கின்றாளோ, அவளே இந்த பிறவியில் இவனுக்கு மனைவி. இவனுக்கு யார்? பெண் தர சம்மதிக்கின்றார்களோ, அவர்களே இவனுக்கு மாமனார்- மாமியார். இருமனமும் விரும்பி செயல்பட்டால் திருமணம் நடக்கும். அகத்தியன் கூறிய நடைமுறை வழிகளைக் கடைப்பிடித்து, பெண் பார்த்து திருமணம் செய்துகொள்ளச் சொல்'' என்று கூறிவிட்டு, அகத்தியர் ஓலையில் இருந்து மறைந்தார்.

அந்தப் பெரியவரும், எங்கள் மகள் திருமண விஷயத்தில் இனி நாங்கள் தலையிட மாட்டோம். அகத்தியர் கூறிய வழியினை கடைப்பிடித்து, பெண் பார்த்து திருமணம் செய்துவைக்கின்றோம் என்று கூறி விடை பெற்றுச் சென்றார்கள்.

ஒரு மனிதனின் வாழ்க்கையில், பிறப்பு, இறப்பு போன்று திருமணமும் பிறப்பிலேயே தீர்மானிக்கப்பட்டு விடுகின்றது. மனித வாழ்க்கையில், திருமணம், தொழில், செல்வம், உயர்வு, நிம்மதி, குடும்ப ஒற்றுமை போன்ற அனைத்தையும், கடவுள், கிரகங்கள், நட்சத்திரங்கள், பத்து பொருத்தங்கள், பரிகாரம் பஞ்சாங்கம், ஜோதிடம், பரிகாரம் தீர்மானிப்பது இல்லை. திருமணம், தொழில், பிழைப்பு, செல்வம், சேமிப்பு போன்ற வாழ்க்கை உயர்வுக்கு தேவையான அனைத் தும், அவரவர் அறிவு, அனுபவம், உழைப்பு, இவை மட்டுமே தீர்மானித்து, அமைதியான வாழ்க்கை, உயர்வு இவற்றைத் தரும் என்பதை நானும் புரிந்துகொண்டேன்.

செல்: 99441 13267

bala271224
இதையும் படியுங்கள்
Subscribe