மனித வாழ்க்கைக்கு வளம் சேர்க்க பயன்படும் ஜோதிடவியலில் சாபங்களை பற்றியும், அதன் வகைகளைப் பற்றியும், அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் பல கருத்துகள் உள்ளன.
தோஷங்களும், சாபங்களும் பல இடர்பாடு களை நாம் அனுபவிக்க வழி வகுக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
ஜோதிடத்தில் 13 வகையான சாபங்கள் உள்ளன. அவைகள்: பெண் சாபம், பிரேத சாபம், பிரம்ம சாபம், சர்ப சாபம், பித்ரு சாபம், கோ சாபம், பூமி சாபம், கங்கா சாபம், விருட்ச சாபம், தேவ சாபம், ரிஷி சாபம், முனி சாபம், குலதெய்வ சாபம் என்ற நிலைகளில் நமக்கு உணர்த்தப்பட்டுள்ளது.
இந்த 13 வகையான சாபங்களை உற்று நோக்கினால் இவற்றுள் இரண்டு சாபங்கள் மட்டும் பஞ்சபூதத்தில் அமைந்துள்ள பூமி மற்றும் நீரினை குறிக்கின்றது.
உலகில் அமைந்துள்ள அத்தனை ஆதிக்க சக்திகள் மற்றும் உயிர்களும், ஏன்? இந்தப் பிரபஞ்சமேகூட பஞ்சபூதத்தின் கட்டமைப்பினால் உருவாக்கப்பட்டவைகள்தான்.
அப்படி ஒவ்வொரு உயிருக்கும் ஆதாரமாக அமைந்துள்ள பஞ்சபூதத்தில் இடம் பெற்றிருக்கும் இந்த இரண்டு சாபங்கள் மனித வாழ்வில் ஒரு பெரும் புயலை உருவாக்கி செல்கின்றது.
அவை கங்கா சாபம் மற்றும் பூமி சாபமாகும்.
கங்கா சாபம் இது நீரினால் ஏற்படக்கூடிய சாபமாகும். மனித உடம்பில் 70% நீரின் ஆளுமையில் உள்ளது.
அதோடு மட்டுமல்லாமல் வான்புகழ் வள்ளுவனின் கூற்றும். நீர் இன்று அமையாது உலகெனின் யார் யாருக்கும் வான் இன்று அமையாது ஒழுக்கு என்பதாகும்.
இவ்வளவு சீரையும் சிறப்பையும் தன்னுள் சுமந்துகொண்டிருக்கும் நீரினை கையாளுவதில் நாம் செய்யும் தவறுக்கு தண்டனையே கங்கா சாபமாக உருவெடுக்கின்றது.
கங்கா சாபம் எதனால் உருவாகின்றது. இந்த கங்கா சாபம் நீரில் எச்சில் உமிழ்வது, சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது போன்ற செயல்களாலும் வற்றாத கிணற்றினை தங்களின் லாபத்திற்காக மூடுவதனாலும். தேவையற்ற அசுத்தத்தை நீரில் கலப்பதனாலும், தவித்தவர்களுக்கு தண்ணீர் மறுப்பதனாலும், நீரை பழிப்பதனாலும் இந்த தோஷம் உருவாகின்றது.
மாந்தி பகவான் சந்திரனின் நட்சத்திரங்களில் நின்றவர்களின் வம்சத்தில் நிச்சயமாக தண்ணீரினால் இறந்த ஒருவர் இருப்பார்.
அதேபோன்று சந்திரனின் ஆதிக்கத்தை தன்னும் ஈர்த்து செயல்படும் கருப்பை சார்ந்த பிரச்சினைகளும், இவர்களின் வம்ச பெண்களுக்கு இருக்கும். நீரினால் கண்டம் ஏற்பட வாய்ப்புகளை இந்த சூழல் ஏற்படுத்தித் தரும்.
இந்த தோஷத்தில் இருந்து விடுபடுவதற்கு. மேற்கூறிய கிரக இணைவுகள் இருந்தாலும் அல்லது இவர்களின் வம்சத்தில் நீரின் கண்டத்தினால் இறந்தவர்கள் இருந்தாலும் இவர்கள் தங்களின் வாழ்வில் தண்ணீர் தானம் செய்வது பல பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு வாய்ப்புகளாக அமையும். அதேபோன்று விலங்கு களுக்கும், பறவைகளுக்கும், தங்களால் இயன்ற நீர் அருந்துவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தி தருவதனாலும் இந்த தோஷம் ஒரு கட்டுக்குள் வரும்.
புராதான சிவாலயங்களில் இறைவனின் திருமேனி அபிஷேகத் திற்காக நீரினை எடுத்துச் செல்வதற்கு செப்பு பாத்திரங்களை வாங்கி தருவதனால் இதன் தாக்கம் குறைவதைக் கண்கூடாக காணமுடிகின்றது.
புனித நதியாக போற்றப்படும் கங்கையில் நீராடி இறைவனடியில் சரணடையும் பொழுதும் இந்த தோஷம் நீங்குவதைக் காணமுடிகின்றது.
முடிந்தவரை அமிர்தம் என்று போற்றப்படும் இந்த நீரினை அசுத்தம் செய்யாமல் இருப்பதும், நியாயமாக கையாளுவதும், கங்கா தோஷத்தில் இருந்து நம்மை காப்பாற்றும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
செல்: 80563 79988