மனச் சிக்கல்கள் தீர்க்கும் மலர் மருந்து! (3) மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/cure-mental-disorders-3-melmaruvathur-s-kalaivani-tamil-detected-english-us

ரு மலர் மலரும்பொழுது, சத்தம் உணரப்படவில்லை என்றாலும், அந்த மலர்ச்சியானது நிறம், மனம், அழகு என்று பரிமாணித்து ஒரு ஆனந்தத்தை மனிதர்களிடையே வும், பிற உயிர்களிடத்தும் நிகழ்த்து கின்றது.

பொதுவாகவே தலையில் சூடிக்கொள்ளும் மலரின் வாசம் மனதில் சில வகையான உணர்வுகளையும், அமைதியும் அளிக்கவல்லது.

இதன்பொருட்டுதான் கோவில்களில் புஷ்ப நீராஞ்சனத்தின் மகத்துவமும் அமைக்கப்பட்டுள்ளது. சிலவகை மலர்கள் விஷ ஜந்துக்களையும் ஈர்க்கவல்லதாக அமைந்துவிடுகின்றது.

மனம் வீசுகின்ற தன்மை மனதை இலகுவாக்குவதில் முத-டம் பெறுகின்றது. என்றோ அனுபவித்த வாசம் காலத்தையும் நினைவூட்டுகின்றது.

இந்த

ரு மலர் மலரும்பொழுது, சத்தம் உணரப்படவில்லை என்றாலும், அந்த மலர்ச்சியானது நிறம், மனம், அழகு என்று பரிமாணித்து ஒரு ஆனந்தத்தை மனிதர்களிடையே வும், பிற உயிர்களிடத்தும் நிகழ்த்து கின்றது.

பொதுவாகவே தலையில் சூடிக்கொள்ளும் மலரின் வாசம் மனதில் சில வகையான உணர்வுகளையும், அமைதியும் அளிக்கவல்லது.

இதன்பொருட்டுதான் கோவில்களில் புஷ்ப நீராஞ்சனத்தின் மகத்துவமும் அமைக்கப்பட்டுள்ளது. சிலவகை மலர்கள் விஷ ஜந்துக்களையும் ஈர்க்கவல்லதாக அமைந்துவிடுகின்றது.

மனம் வீசுகின்ற தன்மை மனதை இலகுவாக்குவதில் முத-டம் பெறுகின்றது. என்றோ அனுபவித்த வாசம் காலத்தையும் நினைவூட்டுகின்றது.

இந்த மலர் மருந்தில் கிரகங்களின் தன்மையும் கணக்கிடமுடியும். குறிப்பாக-

1. சூரியன்- LARCH

2.சந்திரன்- GENTAIN

3. செவ்வாய்- IMPATIENCE

4. புதன்- ELM

5. குரு- WILDOAT

6. சுக்கிரன்- WALNUT

7. சனி- STAR Of BETHLEHEM

8. ராகு- CHERRY PLUM

9. கேது- ROCK ROSE என்று பகுக்கப் பட்டுள்ளது.

ஜாதகரீதியாக எந்த கிரகம் பலவீ னம் அடைந்துள்ளதோ, அது தொடர்பான மருந்தை எடுத்துக்கொள்ளும்பொழுது, தசாபுக்திகள் சார்ந்த பிரச்சினைகளும் களையப்படுவது உறுதியாகின்றது.

அதோடு ஒவ்வொரு ராசிக்கும் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று காலங்கள் பகுக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக மேஷ ராசி இறந்த காலத்தைக்கொண்டது என்பதனால் கிரகரீதியான மருந்துகளுடன் காலத்தைக் குறிகாட்டும் மருந்தையும் இணைத்து எடுத்துக்கொள்வது சிறப்பினைத் தரும்.

ss

மேஷ ராசி

1. ஆட்சிக்குள் செவ்வாய்.

2. உச்சமடையக்கூடிய கோள் சூரியன்.

3. நீசம் அடையக்கூடிய கோள் சனி.

4. 6-க்குடையவர் புதன்.

5. 8-க்குடையவர் செவ்வாய்.

இந்த ஐந்து பேரும்தான் கலந்து கலந்து நமக்கு நன்மையும், தீமையையும், வரத்தையும், சாபத்தையும் வழங்குவார்களே தவிர, மற்றவர் யாரும் தனியாக வந்து ஒரு பிரச்சினையை கொடுப்பது என்பது கிடையாது. இங்கு பாதகாதிபதியாக சனியும், மாரகாதிபதிகளாக சுக்கிரனும் அமைந்துவிடுவார்கள். இவர்களின் பங்கும் இதில் பயணிக்கும் என்கின்றபட்சத்தில் இதன் கூட்டில் ஏற்படுகின்ற மருந்தை எடுத்துக் கொள்வது சிறப்பு.

அஸ்வினி நட்சத்திர மாக இருந்தால்-

ROCKROSE+ (IMPATIENCE+ LARCH+ ELM+ STAR Of BETHLEHEM)

என்கின்ற கூட்டும்.

பரணி நட்சத்திரத்திற்கு WALNUT-ம்.

இறந்த காலத்தின் மருந்தாக HONEYSUCKLE என்கின்ற மருந்தையும் இணைத்து எடுத்துக் கொள்ளும்பொழுது மேஷ ராசிக்கு சிறப்பானதொரு தன்மையை வழங்கும்.

ஆநடஊச (காரணம் தெரியாத பயம்).

இது மலர் மருத்துவத்தில் இரண்டாவது மருந்தாகும்.

இதன் மனநிலை காரணமே இல்லாமல் எப்பொழுதும் ஒரு பயத்துடனே இருப்பது.

இருட்டை கண்டு பயப்படுவது, இயற்கை சீற்றங்களைக் கண்டு பயப்படுதல், நடக்கக்கூடாதது ஏதாவது நடந்துவிடுமோ என்று எண்ணம் வருவது, கெட்ட கனவை கண்டு அதிர்ச்சி அடைதல், மரண பயம், இடி, மின்னலுக்கு பயம், ஊசி போட்டுக்கொள்ள பயம். விபத்து நடந்துவிடுமோ என்கின்ற பயம். பயத்தினால் அமைதி இல்லாமல் இருத்தல் போன்றவற்றை இந்த ஆஸ்பின் என்கின்ற மருந்து குணப்படுத்தும் மிமுலஸ் தெரிந்த பயத்தை எதிர்கொள்ள பயன்படும்.

ஜாதகரீதியாகவும் மனோ தத்துவ ரீதியாகவும் ஒரு நபரை அணுகி இந்த மலர் மருந்தை பயன்படுத்தும்பொழுது அவர்களின் வாழ்வில் எல்லையில்லா சந்தோஷத்தையும், வேண்டியவற்றையும் அடைந்துவிட முடியும் என்பது உறுதி.

தொடர்ந்து பேசுவோம்!

செல்: 80563 79988

bala270625
இதையும் படியுங்கள்
Subscribe