இன்றைய நாளில் ஜோதிடர் களை நோக்கிப் படையெடுத்துக் கொண்டிருப்பவர்களில் ஒரு பகுதி யினர் அவர்களுடைய பிள்ளை களின் திருமணத்திற்காக ஆண்டுக் கணக்கில் வரன் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தான்.
திருமணத்திற்காக செய்யாத முயற்சி யில்லை; பதிவுசெய்து வைக்காத இட மில்லை. ஆனால் எதிர்பார்த்தபடி ஜாதகம் வருவதில்லை. சிலருக்கு எப்படியோ பேசி முடித்து நிச்சயம்செய்து, திருமணம் நடக்கும் நேரத்தில் தடைப்பட்டு விடுகிறது.
இதற்கெல்லாம் என்ன காரணமென்று தெரிந்துகொள்ள முடியாமல், இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி ஏதேதோ கோவில்களுக்குப் போய்வருபவர்களும், சொல்பவர்களின் பேச்சையெல்லாம் கேட்டு பரிகாரம், பூஜையென்று செலவழித் துக் கொண்டிருப்பவர்களும் பலர் இருக்கின்றனர்.
அடித்தட்டிலிருந்து உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் வரையில், நாற்பது வயதைக் கடந்தபின்னும் திருமணமாகாமல் வரன் தேடித்தேடி அலுத்துப் போனவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் நோக்கமே இப்பதிவு.
ஒவ்வொருவரின் ஜாதகத்திற்குள்ளும் அவரவருடைய வாழ்க்கைக்குரிய வழி மட்டுமல்ல; அவர்களுடைய வாழ்க்கையில் தடைகளை உண்டாக்கிக் கொண்டிருக்கும் தோஷங்களும் மறைந்திருக்கின்றன. இந்த தோஷங்கள்தான் வேலைவாய்ப்பில் தடை, தொழிலில் தடை, திருமணத்தில் தடை, குழந்தை பிறப்பில் தடை, தீராத நோய் என்று வாழ்க்கையில் சோதனைகளுக்குமேல் சோதனைகளை உண்டாக்கி வருகின்றன.
பூஜைசெய்தால் சரியாகிவிடும்; கழிப்பு கழித்தால் சரியாகிவிடும் என்று சொன்னவர்களை நம்பி, ஆயிரம் ஆயிரமாய் செலவுசெய்தும் எந்தப் பலனும் கிட்டாமல் மனம் உடைந்து போனவர்களும் இங்கே உண்டு.
திருமணத்திற்காக வரன் தேடிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் ஜாதகத் திற்குள்ளும் இருக்கும் தோஷங்கள் பற்றி யும், அதற்குரிய மிகமிக எளிய பரிகார முறைகள் பற்றியும் இக்கட்டுரையில் எழுதியுள்ளேன்.
பதினெட்டு வயதில் திருமணம் செய்து கொண்டு இருபது வயதில் குழந்தை பாக்கியம் காண்பவர்களாக பலர் இருக்கும் நிலையில், ஒரு சிலருக்கு மட்டும் நாற்பது வயது கடந்த நிலையிலும் திருமணம் நடக்காமல் இருப்பது ஏன் என்ற ஆராய்ச்சிக்குக் கிடைத்த விடைகள்தான் கிரக தோஷங்கள் என்பது.
திருமணம் நடத்துவதைத் தடுத்துக் கொண்டிருக்கும் தோஷங்களில் பிரதானமானவை... பித்ரு தோஷம், பிரம்மஹத்தி தோஷம், காலசர்ப்ப தோஷம், புனர்பூ தோஷம், ராகு- கேது தோஷம் என்னும் நாகதோஷம், செவ்வாய் தோஷம் ஆகியவையாகும்.
பித்ரு தோஷம்
ஒருவருடைய ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது? இதற்காக ஜோதிடரிடம்தான் போகவேண்டும் என்பதில்லை. உங்களுடைய ஜாதகத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
ஜாதகத்தில் உங்களுடைய லக்னம் எதுவோ அந்த வீட்டில் ல/ என்று போட்டிருக்கும். யார் எந்த லக்னமாக இருந்தாலும், ல/ என்று குறிப்பிட்டுள்ள வீட்டையே ஒவ்வொருவரும் தங்களுடைய முதலாவது வீடாக எடுத்துக்கொள்ள வேண்டும். லக்ன வீட்டை முதல்வீடாக வைத்து அடுத்தடுத்த வீடுகளை எண்ணி வரும்போது கடைசி வீடாக பன்னிரண் டாவது வீடு வரும். லக்னம் என்ற 1-ஆவது வீட்டில் ராகு இருந்தால் 7-ஆவது வீட்டில் கேது இருப்பார். 1-ஆவது வீட்டில் கேது இருந்தால் 7-ஆவது வீட்டில் ராகு இருப்பார். இப்படி கிரகங்கள் அமைந்துள்ள ஜாதகமென்றால் அது பித்ரு தோஷமுள்ள ஜாதகமாகும்.
இதேபோல், 3 மற்றும் 9-ஆவது வீடுகளில் ராகு- கேது இருந்தாலும், 5 மற்றும் 11-ஆம் வீடுகளில் ராகு- கேது இருந்தாலும் இந்த வகையான ஜாதகங்கள் எல்லாம் பித்ரு தோஷமுடைய ஜாதகங்களாகும்.
இதேபோல், உங்கள் ராசிக்கட்டத்தில் சூரியன் அமர்ந்துள்ள வீட்டில், சூரியனுடன் ராகுவோ கேதுவோ இணைந்திருந்தாலும் அது பித்ரு தோஷமுடைய ஜாதகமாகும்.
அடுத்து, உங்கள் ராசிக்கட்டத்தில் சந்திரன் அமர்ந்துள்ள வீட்டில் சந்திரனுடன் ராகுவோ கேதுவோ இணைந்திருந்தால் அதுவும் பித்ரு தோஷமுடைய ஜாதகம்தான்.
தாய்லி தந்தை வம்சாவளியாக வருவதாகக் கூறப்படும் இந்த தோஷம், ஜாதகரின் பித்ருக்களினுடைய ஆன்மா சாந்தியடையாமல் போனதாலும், முற்பிறவியில் நம் முன்னோர்களோ அல்லது நாமோ கருச்சிதைவு செய்ததாலும், உடன் பிறந்தவர்களுக்குப் பாதகம் இழைத்ததாலும் உண்டாவது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
இத்தகைய செயல்களால் உண்டாகும் பித்ரு தோஷத்தினால் ஜாதகரின் திருமணத் தில் தடையுண்டாகும். திருமணம் நடந்தா லும் அது விவாகரத்துவரை செல்லும். தம்பதியரிடையே ஒற்றுமை இருக்காது. குடும்ப வாழ்க்கை எப்போதும் பிரச்சினையாகவே இருக்கும். ஒருசிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம், ரகசிய உறவு, கலப்புத் திருமணம், பெற்றோர்களுக்குத் தெரியாமல் ரகசிய வாழ்க்கை என்ற நிலை உண்டாகும்.
ஜாதகருக்குக் கிடைக்கவேண்டிய நன்மைகள், முன்னேற்றம், வெற்றி, இறையருள் என்று எல்லாவற்றையும் இந்த தோஷமானது தடுத்துவிடும்.
இதற்கு என்னதான் பரிகாரம் என்று பார்க்கும்போது, முதன்மையான பரிகார மாகக் கூறப்படுவது புண்ணிய ஸ்தலமான இராமேஸ்வரத்திற்குச் சென்று, ஆலயத்திற்கு எதிரிலுள்ள (கடல்) அக்னி தீர்த்தத்தில் மூழ்கி நீராடியபின், ஆலயத் திற்குள் உள்ள இருபத்திரண்டு புண்ணிய தீர்த்தங்களில் நீராடிவிட்டு திலஹோமம் செய்து, தனுஷ்கோடிக்குச் சென்று பிண்டத்தைக் கரைத்துவிட்டு வந்து இராமநாதசுவாமியையும் அம்பாளையும் அர்ச்சித்துவந்தால் பித்ரு தோஷம் அகலும். அதன்பிறகு திருமணத்தில் இருந்த தடைகள் முதல் மற்ற அனைத்து தடைகளும் அகலும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
காளஹஸ்தி, திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம் போன்ற தலங்களிலும் பித்ரு தோஷத்திற்குப் பரிகாரம் செய்யப்படுகிறது என்றாலும், இதற்குரிய பரிகாரத்திற்கு இராமேஸ்வரமே முதன்மையானதும் சிறப்பு மிக்கதாகவும் கூறப்படுகிறது.
பிரம்மஹத்தி தோஷம்
ஜாதகத்தில் குரு பகவான் எந்த வீட்டில் இருக்கிறாரோ, அதேவீட்டில் அவருடன் சனி பகவான் இணைந்திருந்தால் அந்த ஜாதகம் பிரம்மஹத்தி தோஷமுடைய ஜாதகம் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. குருவுடன் சனி இணைந்து ஒரேவீட்டில் இருந்தாலும், குரு- சனி ஆகிய இரண்டு கிரகங்களும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டாலும், ஒருவரின் நட்சத்திர சாரத்தில் மற்றவர் இருந்தாலும் அந்த ஜாதகமும் பிரம்மஹத்தி தோஷமுடைய ஜாதகமாகும்.
கடந்த பிறவியில் குருவை ஏமாற்றியதால் அவரால் உண்டான சாபம், தெய்வ நிந்தனை, ஆலயத்தை இடித்தது, ஆலய சொத்தை அபகரித்தது, திருமணம் செய்வதாக ஆசைகாட்டிக் கெடுத்துவிட்டு ஏமாற்றியது, உழைத்தவரை ஏமாற்றியதால் அவர்கள் கொடுத்த சாபம், வெள்ளிக்கிழமைகளில் நல்லபாம்பைக் கொன்றது, ஒருவரை ஏதோவொரு காரணத்தால் கொன்றது போன்ற காரணங்களால் பிரம்மஹத்தி தோஷம் உண்டாகும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
இராமாயணப் போரில், சிறந்த தெய்வ பக்தனான இராவணனைக் கொன்ற காரணத்தினால் தனக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானதை உணர்ந்த இராமன், அப்போதே அதற்குரிய பரிகாரம் செய்து கொண்டதை இன்றும் புராணம் கூறிக் கொண்டுள்ளது. இத்தகைய காரணங்களால் உண்டான பிரம்மஹத்தி தோஷமுடைய ஜாதகர்களுக்கு, திருமண முயற்சிகளில் தொடர்ந்து தடை, கிடைக்கவேண்டிய ஒவ்வொன்றும் கூடிவரும் நேரத்தில் கடைசியில் தட்டிக்கொண்டு போவது, எந்த வகையான சிகிச்சை அளித்தாலும் குணமாக்கிட முடியாத நோயினால் அவதி, மனக்குழப்பம், தொழிலில் வீழ்ச்சி, செய்யாத தவறுக்கு தண்டனை, குழந்தை பாக்கியத்தில் தடை என்று தொடர்ந்துகொண்டிருக்கும்.
ராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள தேவி பட்டினத்திற்குச் சென்று, அங்கு கடலுக் கடியில் இருக்கும் நவகிரகங்களை வழிபாடு செய்து, கடலில் நீராடி பெருமாளை மனமுருகி வழிபட்டுவர பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியாகும்.
தேவிபட்டினம் செல்ல இயலாதவர்கள், கும்பகோணத்திற்கு அருகில் திருவிடை மருதூரில் உள்ள மகாலிங்கேஸ்வரர் ஆலயம் செல்லலாம். இந்த ஆலயம் பிரம்மஹத்தி தோஷத்திற்குரிய பரிகாரத்தலமாகவே கூறப் படுகிறது. இங்கு சென்று பிரம்மஹத்தி தோஷத்திற்குப் பரிகாரம் செய்து, ஒரு வாசல் வழியே சென்று மறுவாசல் வழியே வருவது மரபாகும்.
தேவிபட்டினம், திருவிடைமருதூர் என்று இரண்டு தலங்களுக்குமே செல்ல இயலவில்லையா... அமாவாசை நாளில் அருகிலுள்ள சிவாலயத்திற்கு மாலை ஐந்து மணிக்குச் சென்று, சிவனை ஐந்துமுறை வலம்வந்து வணங்குங்கள். இதேபோல் தொடர்ந்து ஒன்பது அமாவாசை நாட்களில் செய்துவர பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியாகி, திருமணத்தில் இருந்த தடை நீங்கும். தீராத நோய் அகலும். வேலைகளில் இருந்த தடைகள் அகலும். குழந்தை பாக்கியம் உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் விலகும். தொடர்ந்து கொண்டிருக் கும் பிரச்சினைகளும் மனக்குழப்பங்களும் விலகும்.