சென்ற இதழ் தொடர்ச்சி...

காலசர்ப்ப தோஷம்

ராசிக்கட்டத்தில் ராகு- கேது ஆகிய கிரகங்களுக்குள்ளாகவோ அல்லது கேது- ராகுவிற்கு உள்ளாகவோ மற்ற ஏழு கிரகங்களும் அடைபட்டிருக்கும் ஜாதகம் காலசர்ப்ப தோஷம் கொண்ட ஜாதகமாகும்.

பாம்பை அடித்து, அது சாகும்போது தன்னைக் கொல்பவரைப் பார்த்துப் பழிப்பதால் இந்த தோஷம் உண்டாவதாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

Advertisment

cc

காலசர்ப்ப தோஷமுடைய ஜாதகர்களுக்கு முப்பத்துமூன்று வயதுவரை வாழ்க்கையில் போராட்டம் என்ற நிலையே இருக்கும். திருமணத்தில் தொடர்ந்து தடைகள் இருந்துகொண்டே இருக்கும். ஒருசிலர் காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டு, திருமணத்திற்குப்பின் பிரச்சினை பிரச்சினை என்று பிரச்சினையிலேயே காலத்தைத் தள்ளி, ஒரு கட்டத்தில் ஒருவரை விட்டு ஒருவர் விலகவேண்டிய நிலைக்கு வந்துவிடுவார்கள். வாழ்க்கை, தொழில் என்று எல்லாவற்றிலும் தொடர்ந்து சங்கடமான நிலையையே சந்திக்கவேண்டி வரும். குழந்தை பிறப்பதிலும் தாமதம், தடை உண்டாகும். அதற்குப்பின் பிறக் கும் குழந்தையும் உடல்நலக்குறைவுடனே பிறக்கும். தொடர்ந்து அதன் உடல்நிலையில் சங்கடம் இருந்துகொண்டே இருக்கும்.

காலசர்ப்ப தோஷத்திற்கு சிறந்த பரிகாரத் தலமாக காள ஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ் வரர் ஆலயம் விளங்குகிறது. இங்கு நடைபெறும் பரிகாரப் பூஜையில் பங்கேற்று வழிபட்டபின், பூஜையில் வைத்த வெள்ளியால் செய்யப்பட்ட ராகு- கேது உருவங் களை எடுத்துக்கொண்டு ஆலயத் திற்குள் சென்று, சிவபெருமானை யும், அவருடைய மூச்சுக்காற்றி னால் அசைந்துகொண்டிருப்ப தாகக் கூறப்படும் தீபச் சுடரையும் தரிசித்து வணங்கி, கையிலுள்ள ராகு- கேது உருவங்களை வலது இடதாக, இடது வலதாக தலையை மூன்று சுற்று சுற்றி, அங்குள்ள உண்டியலுக்குள் அதைப் போட்டுவிட்டுவர தோஷம் நீங்கும்.

Advertisment

காலசர்ப்ப தோஷத்திற்கு காளஹஸ்திக்கு அடுத்த பரிகாரத் தலங்களாக திருப்பாம்புரமும், திருநாகேஸ்வரமும் விளங்கு கின்றன.

அரச மரத்துடன் இணைந்து வளரும் வேம்பு மரங்களை யும், அதனருகில் கல்லினால் ஸ்தாபனம் செய்துவைக்கப்பட் டுள்ள நாகர் சிலைகளையும் தொடர்ந்து வழிபட்டுவர, தோஷம் நீங்கி நன்மைகள் நடப்பதாக சிலருடைய அனுபவத்தில் தெரிந்துகொள்ளமுடிகிறது. என்றாலும் காளஹஸ்தி சென்று பரிகார பூஜை செய்துவருவதே சிறப்பென்பது நம்பிக்கையாக உள்ளது.

புனர்பூ தோஷம்

ராசிக்கட்டத்தில் சந்திரனுடன் ஒரே வீட்டில் சனி பகவான் இணைந்திருக்கும் அமைப்புடைய ஜாதகம் புனர்பூ தோஷம் கொண்ட ஜாதகமாகும். சந்திரனை ஏழாம் பார்வையாக சனி பார்ப்பதும், சனியை ஏழாம் பார்வையாக சந்திரன் பார்ப்பதுமான அமைப்பைக் கொண்ட ஜாதகமும் புனர்பூ தோஷம் கொண்டதாகும். சனிபகவான் தனது மூன்றாம் பார்வையால் சந்திரனைப் பார்ப்பதும், பத்தாம் பார்வையால் சந்திரனைப் பார்ப்பதுமான அமைப்பைக்கொண்ட ஜாதகமும் புனர்பூ தோஷம் உடையதாகும்.

இந்த தோஷத்திற்கும் கிரக வாயிலாகவே ஒரு பரிகாரம் உண்டு. அது... சந்திரன், சனியுடன் சூரியன் இணைந்துவிட்டாலும் அல்லது சந்திரன், சனியை சூரியன் பார்த்தாலும், குரு பகவானின் பார்வையோ சேர்க்கையோ பெற்றாலும், குரு பகவானின் வீட்டில் சந்திரன், சனி இணைந்திருந் தாலும் புனர்பூ தோஷம் ஜாதகத்திலேயே நிவர்த்தியாகி விட்டது என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

புனர்பூ தோஷமுடைய ஜாதகர்களுக்கு திருமணத்தில் தடையுண்டாகும். திருமணம் முடிவுசெய்யப் பட்ட நிலையில் ஆணோ பெண்ணோ- வேறொருவரைத் திருமணம் செய்துகொள்ளக்கூடியவர்களாக மாறுவார் கள். ஒருசிலருக்கு திருமணம் நிச்சயமான நிலையில் நின்றுபோகும், சிலருடைய திருமணங்கள் காவல் நிலையம்வரை சென்று பிரச்சினைக்கு வழிவகுக்கும். ஒருசிலருக்கு திருமணம் நிச்சயம் செய்த நிலையில் பெற்றோர்களில் யாராவது ஒருவர் மரணிப்பதால், திருமணத்தில் தடை உண்டாகும். இத்தகைய நிலைகளுடன் தலைவலி, அச்ச உணர்வு, படபடப்பு போன்றவையும் புனர்பூ தோஷத்தால் உண்டாகுமென ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

நாம் தெரிந்தோ தெரியாமலோ யாருடைய திருமணத்திலாவது சங்கடங்களை ஏற்படுத்தி, அவர்களுடைய திருமணம் நடைபெறாமல் செய்தாலும், விவாகரத்து செய்வதற்குத் துணையாக இருந்தாலும் அவர்களுடைய சந்ததிக்கு புனர்பூ தோஷம் உண்டாகும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

இதற்குரிய பரிகாரங்களில் பிரதானமானது, குலதெய்வத்திற்கு முடி காணிக்கை செய்து, படையலிட்டுப் பூஜை செய்வதாகும்.

தொடர்ச்சியாக மூன்று பௌர்ணமி தினங் களில் விரதமிருந்து, திருவண்ணாமலை கிரிவலம் சென்றுவருவதுடன், மூன்று துறவிகள் வீதம் மூன்றுமுறை ஒன்பது துறவிகளுக்கு வஸ்திரதானம் செய்தால் தோஷம் பரிகாரமாகி திருமணம் கூடிவரும்.

சந்திர தலமான திருப்பதிக்கு திங்கட் கிழமையிலோ சனிக்கிழமையிலோ அல்லது சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி, அஸ்தம், திருவோண நட்சத்திர நாட்களிலோ, சனிபகவானின் பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திர நாட்களிலோ சென்று தரிசனம் செய்துவருவதும் புனர்பூ தோஷத்திற்கு சிறந்த பரிகாரமாகக் கூறப் படுகிறது.

திருமணஞ்சேரிக்குச் சென்று அங்கு நடைபெறும் பரிகாரப் பூஜையில் பங்கேற்பதும் புனர்பூ தோஷத்திற்குப் பரிகாரமாகும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

இந்தப் பரிகாரங்களில் ஏதேனும் ஒன்றைச் செய்தாலும் திருமணத் தடைகள் அகலும்.

நாக தோஷம் என்னும் ராகு- கேது தோஷம்

நம்முடைய ஜாதகத்தில் ஒன்று மற்றும் ஏழாம் இடத்திலும், இரண்டு மற்றும் எட்டாம் இடத்திலும், மூன்று மற்றும் ஒன்பதாம் இடத்திலும், நான்கு மற்றும் பத்தாம் இடத்திலும், ஐந்து மற்றும் பன்னிரண்டாம் இடத்திலும் ராகு- கேதுவோ, கேது- ராகுவோ இருந்தால் அந்த ஜாதகருக்கு சர்ப்ப கிரகங்களான ராகு- கேதுவால் தோஷம் உண்டாகிறது.

முன்ஜென்மத்தில் ஆண் நாகமும் பெண் நாகமும் இணைந்திருந்தபோது அதைத் துன்புறுத்தியவர்களுக்கு இந்த ஜென்மத்தில் லக்னத்திற்கு ஏழாமிடத்தில் ராகு அமர்ந்து மாங்கல்யத்திற்கு தோஷத்தை உண்டாக்கும் என்றும்; பாம்பு இரையைத் தேடிச்செல்லும்போது அதைத் துன்புறுத்தியவர்களுக்கு இந்த ஜென்மத்தில் அவருடைய தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் ராகுவோ கேதுவோ அமர்ந்து தொழிலில் பிரச்சினைகளை உண்டாக்கும் என்றும்; பாம்பு முட்டையிட்டுக் குஞ்சுபொரிக்கும் காலத்திலும், அதன் குட்டிகளுடன் ஒன்றாக இருக்கும்போதும் அதைத் துன்புறுத்தியிருந்தால், இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் ராகுவோ கேதுவோ அமர்ந்து புத்திர தோஷத்தை உண்டாக்கும் என்றும் கூறப் படுகிறது.

ஜாதகத்தில் நம்முடைய வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த ஸ்தானங்கள்- ஜென்ம ஸ்தானமெனும் லக்ன வீடான முதல் வீடும், குடும்ப ஸ்தானமெனும் இரண்டாவது வீடும், தைரிய, வேக ஸ்தானமெனும் மூன்றாவது வீடும், சுகஸ்தானம் மற்றும் பெண்களின் கற்பு ஸ்தானமெனும் நான்காவது வீடும், புத்திர ஸ்தானமெனும் ஐந்தாவது வீடும், களத்திர ஸ்தானமெனும் ஏழாவது வீடும், மறைவு ஸ்தானம் மற்றும் பெண்களின் மாங்கல்ய ஸ்தானமெனும் எட்டாவது வீடும், பாக்கிய ஸ்தானமெனும் ஒன்பதாவது வீடும், தொழில் ஸ்தானமெனும் பத்தாவது வீடும், கட்டில் சுகத்திற்குரிய அயன சயன ஸ்தானமான பன்னிரண்டாவது வீடுகளுமாகும்.

கிரகங்களில் மிகமிக வலிமையுடையவை சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும்தான். மேற்கண்ட வீடுகளில் நமது பிறப்பு ஜாதகத் தில் ராகு- கேது அமர்ந்திருக்கும் ஜாதகர் களுக்கு அந்த ஸ்தானங்கள் பாதிக்கப்படும் என்பது ஜோதிட விதியாகும். கடந்த பிறவிகளில் பாம்புகளுக்கு நாம் செய்த இன்னல்களினால் இந்த ஜென்மத்தில் இத்தகைய நாகதோஷத்திற்கு நாம் ஆளாகிறோம் என்று கூறப்படுகிறது.

நாகதோஷமுடைய ஜாதகர்கள், காளஹஸ்தி சென்று நாகதோஷப் பரிகாரம் செய்துவந்தாலோ, இராமேஸ்வரம் சென்று மூன்று நாட்கள் அங்கு தங்கி கடலில் நீராடி இராமநாதரை வணங்கிவந்தாலோ, திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம், கீழப் பெரும்பள்ளம் ஆகிய ஊர்களில் உள்ள ராகு- கேது தலங்களுக்குச் சென்று பரிகார பூஜை செய்துவந்தாலோ சர்ப்ப கிரகங்களால் உண்டான நாக தோஷம் நீங்கி திருமணத்தில் உண்டான தடைகள் அகலும். கணவன்- மனைவிக்கிடையே உண்டான சங்கடங்கள் விலகும். குழந்தைப் பிறப்பில் இருந்த தடைகள் அகலும் என்பது பலரின் அனுபவத்தின் வழியாக தெரியவந்துள்ளது.

செவ்வாய் தோஷம்

ஜாதகத்தில் இப்படி சில தோஷங்கள் திருமணத்தடைக்கு காரணமாக இருந்தாலும், அனைவருக்கும் தெரிந்த ஒரு தோஷம் இருக்கிறதென்றால் அது செவ்வாய் தோஷம்தான். மற்ற தோஷங்கள் எல்லாம் முற்பிறவிகளில் நாம் செய்த செயல்களாலும், நம் முன்னோர்கள் செய்த பாவங்களாலும் நமக்கு உண்டானவை. ஆனால், செவ்வாய் தோஷமென்பது அப்படியல்ல. நம்முடைய பிறப்பு ஜாதகத்தில், அவர் அமர்ந்துள்ள இடத்திற்கேற்ப அவர் நம் உடலுக்குள் செலுத்திக்கொண்டிருக்கும் ஆதிக்கத்தையே செவ்வாய் தோஷம் என்கிறோம்.

நம்முடைய ஜாதகத்தில் லக்னம் அல்லது சந்திரன் அல்லது சுக்கிரனுக்கு இரண்டு, நான்கு, ஏழு, எட்டு, பன்னிரண்டாம் வீடுகளில் செவ்வாய் இருப்பது செவ்வாய் தோஷமென்று கூறப்படுகிறது. செவ்வாய்க்கு சூரியனுடனோ குருவுடனோ சனியுடனோ சம்பந்தம் இருந்தால் தோஷம் பரிகாரமானதாகவும் சொல்லப்படுகிறது.

பொதுவாக செவ்வாய் தோஷமென்பது தோஷமே அல்ல. ஆனால், அது தோஷ மென்று கூறப்படுவதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது.

செவ்வாய் என்பது ஒரு நெருப்பு கிரகம், யுத்த கிரகம், ரத்த கிரகம். இரண்டு என்ற குடும்ப ஸ்தானத்திலும், நான்கு என்ற சுகஸ்தானத்திலும், ஏழு என்ற களத்திர ஸ்தானத்திலும், எட்டு என்ற மறைவு ஸ்தானத் திலும், பன்னிரண்டு என்ற படுக்கை ஸ்தானத் திலும் செவ்வாய் அமர்ந்திருக்கும் ஜாத கருக்கு உடலுறவில் ஆசையும், அதன் மீதான தேவையும் மிக அதிகமாக இருக்கும் என்பதால், இதை மறைமுகமாக தோஷமென்று சொல்- வைத்திருப்பதுடன், இதுபோன்ற அமைப்புகொண்ட ஜாதகருக்கு இதுபோன்ற தோஷமுடைய ஜாதகரை இணைத்துவைத்தால் மட்டுமே ஒருவருக்கேற்ற வகையில் மற்றவரால் ஈடுகொடுத்து வாழமுடியும் என்பதற்காகவும் நம் முன்னோர்கள் கூறிவிட்டுச் சென்றுள் ளனர்.

செவ்வாய் மேற்கண்ட வீடுகளில் ஏதேனும் ஒன்றில் அமர்ந்துள்ள ஜாதகனுக்கோ, ஜாதகிக்கோ வேக, காம உணர்ச்சி அதிகமாக இருக்கும். தாம்பத்தியத்தில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுடன் செவ்வாய் ஆதிக்கமில்லாத ஜாதகரை சேர்த்துவைத்தால், ஒருவரின் ஆசையைப் புரிந்துகொண்டு மற்றவரால் வாழமுடியாமல் போய், சண்டை, சச்சரவு, பிரிவு என்ற நிலை உருவாகிவிடும்.

செவ்வாய் தோஷமுடைய ஜாதகருக்கு செவ்வாய் நீச நிலையிலுள்ள ஜாதகரை இணைத்துவைத்தாலும், தாம்பத்திய உறவில் திருப்தியடையமுடியாத நிலையை உண்டாக்கிவிடும். இதனால் ஒருவருக்கு வேண்டிய சுகம் கிடைக்காத நிலையையும், அடுத்தவர் தனது துணையைத் திருப்திப் படுத்தமுடியாத நிலையையும் அடைந்து விடுவார்கள்.

இதன்காரணமாகவே சம ஆசை, வேகம், ஆர்வம், செயல்பாடு கொண்டு, தம்பதிகள் ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வதற்கு, செவ்வாய் தோஷமுடைய ஜாதகருக்கு செவ்வாய் தோஷமுடைய ஜாதகரை மட்டுமே இணைக்கவேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

திருச்செந்தூர் சென்று கடலில் நீராடி, நாழிக்கிணற்றில் குளித்து செந்தூரானை அர்ச்சித்து வருவதாலும், செவ்வாய்க்குரிய தலமான வைத்தீஸ்வரன் கோவில் சென்று வணங்கி அர்ச்சனை செய்துவருவதாலும் செவ்வாய் தோஷமுடைய ஜாதகருக்கு அதே தோஷமுடைய துணை விரைவில் கிடைத்தி டும் என்பது அனுபவப்பூர்வமான உண்மை யாகும்.