துலாம்
உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத் திற்கும், பூர்வபுண்ணிய ஸ்தானத் திற்கும் அதிபதி சனிபகவான். புத்திஸ்தானம், பூர்வபுண்ணிய ஸ்தானம், புத்திர ஸ்தானம் என்ற ஐந்தாம் இடத்தில் சஞ்சரித்து வரும் சனி பகவான், குடும்பத்தில் பிரச்சினைகளை உருவாக்கி இருப்பார். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கும். தொழிலில் நெருக்கடி, தடைகள், உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் விரோதம், நண்பர்கள் உறவினரிடம் கருத்து வேறுபாடு, வரவைவிட செலவு அதிகம், கடும் தொல்லைகள், வழக்குகளில் எதிரிடையான பலன், பிள்ளைகளால் மனம் வருந்த வேண்டிய நிலை, கல்வியில் தடங்கல், மேற்படிப்பு முயற்சியையும் கடுமையான சிரமத்தின்மீது தொடர்ந்திட வேண்டிய நிலை, விவசாயத்திலும் செலவு அதிகம், வரவு குறைவு, பொன், பொருளை விற்று நிலைமைகளை சமாளிக்க வேண்டிய நிலை, குலதெய்வம் குடும்ப தெய்வம் என்று நாடிச் செல்ல வேண்டிய சூழல், நிலையான எண்ணமும் இல்லாத நிலையில் இருந்திருப்பீர்கள். சனி பகவானின் மூன்றாம் பார்வை உங்கள் களத்திர ஸ்தானத்தில் பதிந்திருப்பதால் வாழ்க்கைத் துணை வழியே பிரச்சினைகள், வாய் பேச்சினால் வில்லங்கம், கூட்டுத் தொழிலில் கூட்டாளிகளுடன் மனக்கசப்பு, நண்பர்களாக இருந்தவர்களும் எதிரிகளாக மாறும் நிலை, காதல் விவரங்களில் சங்கடம் என்பதெல்லாம் ஏற்பட்டிருக்கும். சனி பகவானின் ஏழாம் பார்வை உங்கள் லாப ஸ்தானத்தில் பதிந்திருப்பதால் ஓரளவிற்கு பிரச்சினைகளை சமாளிக்கும் சக்தி ஏற்பட்டிருக்கும், தடைபட்டிருந்த வருவாய் வந்திருக்கும், லாபம் அதிகரித்திருக்கும், புதிய முயற்சிகளில் நன்மை உண்டாகி இருக்கும், மூத்த சகோதரர்களின் ஆதரவு அதிகரித்திருக்கும், வாழ்க்கைத் துணைக்கும் அப்பால் ஒரு உறவினால் மனம் மகிழ்ச்சி அடைந்திருக்கும், அதன்காரணமாக குடும்பத்தில் குழப்பமும் ஏற்பட்டிருக்கும், ஒருசிலர் இருக்கும் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு பெயர்ச்சியாகி இருப்பீர்கள், இக்காலத்தில் மகிழ்ச்சியை மட்டுமே மனம் எதிர்பார்த்து அதற்கு ஏற்ப செயல் பட்டிருப்பீர்கள். சனி பகவானின் பத்தாம் பார்வை உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானத்தில் பதிந்திருப்பதால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உருவாகி இருக்கும், பண விவகாரங்கள் இழுபறியாக இருந்திருக்கும், கடுமையான நெருக்கடியினை சந்தித்திருப்பீர்கள், கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் தடுமாற்றம் ஏற்பட்டிருக்கும், அதனால் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி இருப்பீர்கள், கண்பார்வையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இவை எல்லாம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கும் சனி பகவானால் நீங்கள் அடைந்துவரும் பலன்களாகும். இந்த நிலையில் சனி பகவான் வக்ரம் அடையும் இக்காலத்தில் இதுவரையில் நீங்கள் சந்தித்து வந்த கெடு பலன்களில் மாற்றத்தை காண்பீர்கள். அதனால் இக்காலம் உங்களுக்கு நற்காலம் என்றே சொல்ல வேண்டும். இதுவரை நீங்கள் சந்தித்துவந்த சங்கடமான நிலை யாவும் இனி விலக ஆரம்பிக்கும். குடும்பத்திற்குள் நிம்மதி உண்டாகும். தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். உத்தியோகத்தில் உங்கள் நிலை மேம்படும். வரவு அதிகரிக்கும். பிரச்சினைகளை எதிர்கொண்டு சமாளிக் கின்ற நிலையை அடைவீர்கள். குரு பகவானின் ஏழாம் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் முழுமையான நற்பலன் களை இக்காலத்தில் நீங்கள் அடைவதற்கு வாய்ப்பு உண்டாகும்.
விருச்சிகம்
உங்கள் ராசிக்கு மூன்றாம் அதிபதி யாகவும் நான்காம் அதிபதியாகவும் ஸ்தான பலம் பெறுகிறார் சனிபகவான். மூன்றாம் பாவகம் என்பது, தைரிய வீரிய கீர்த்தி சகோதர ஸ்தானமாகும். நான்காம் பாவகம் என்பது மாதுர் மற்றும் சுக ஸ்தானமாகும். சுக ஸ்தானாதிபதி சுக ஸ்தானத் திலேயே சஞ்சரிப்பதால் உங்கள் சுகம் கெட்டிருக்கும், சங்கடம் அதிகரித்திருக்கும். இடையூறுகள், அலைக்கழிப்பு,
துலாம்
உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத் திற்கும், பூர்வபுண்ணிய ஸ்தானத் திற்கும் அதிபதி சனிபகவான். புத்திஸ்தானம், பூர்வபுண்ணிய ஸ்தானம், புத்திர ஸ்தானம் என்ற ஐந்தாம் இடத்தில் சஞ்சரித்து வரும் சனி பகவான், குடும்பத்தில் பிரச்சினைகளை உருவாக்கி இருப்பார். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கும். தொழிலில் நெருக்கடி, தடைகள், உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் விரோதம், நண்பர்கள் உறவினரிடம் கருத்து வேறுபாடு, வரவைவிட செலவு அதிகம், கடும் தொல்லைகள், வழக்குகளில் எதிரிடையான பலன், பிள்ளைகளால் மனம் வருந்த வேண்டிய நிலை, கல்வியில் தடங்கல், மேற்படிப்பு முயற்சியையும் கடுமையான சிரமத்தின்மீது தொடர்ந்திட வேண்டிய நிலை, விவசாயத்திலும் செலவு அதிகம், வரவு குறைவு, பொன், பொருளை விற்று நிலைமைகளை சமாளிக்க வேண்டிய நிலை, குலதெய்வம் குடும்ப தெய்வம் என்று நாடிச் செல்ல வேண்டிய சூழல், நிலையான எண்ணமும் இல்லாத நிலையில் இருந்திருப்பீர்கள். சனி பகவானின் மூன்றாம் பார்வை உங்கள் களத்திர ஸ்தானத்தில் பதிந்திருப்பதால் வாழ்க்கைத் துணை வழியே பிரச்சினைகள், வாய் பேச்சினால் வில்லங்கம், கூட்டுத் தொழிலில் கூட்டாளிகளுடன் மனக்கசப்பு, நண்பர்களாக இருந்தவர்களும் எதிரிகளாக மாறும் நிலை, காதல் விவரங்களில் சங்கடம் என்பதெல்லாம் ஏற்பட்டிருக்கும். சனி பகவானின் ஏழாம் பார்வை உங்கள் லாப ஸ்தானத்தில் பதிந்திருப்பதால் ஓரளவிற்கு பிரச்சினைகளை சமாளிக்கும் சக்தி ஏற்பட்டிருக்கும், தடைபட்டிருந்த வருவாய் வந்திருக்கும், லாபம் அதிகரித்திருக்கும், புதிய முயற்சிகளில் நன்மை உண்டாகி இருக்கும், மூத்த சகோதரர்களின் ஆதரவு அதிகரித்திருக்கும், வாழ்க்கைத் துணைக்கும் அப்பால் ஒரு உறவினால் மனம் மகிழ்ச்சி அடைந்திருக்கும், அதன்காரணமாக குடும்பத்தில் குழப்பமும் ஏற்பட்டிருக்கும், ஒருசிலர் இருக்கும் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு பெயர்ச்சியாகி இருப்பீர்கள், இக்காலத்தில் மகிழ்ச்சியை மட்டுமே மனம் எதிர்பார்த்து அதற்கு ஏற்ப செயல் பட்டிருப்பீர்கள். சனி பகவானின் பத்தாம் பார்வை உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானத்தில் பதிந்திருப்பதால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உருவாகி இருக்கும், பண விவகாரங்கள் இழுபறியாக இருந்திருக்கும், கடுமையான நெருக்கடியினை சந்தித்திருப்பீர்கள், கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் தடுமாற்றம் ஏற்பட்டிருக்கும், அதனால் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி இருப்பீர்கள், கண்பார்வையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இவை எல்லாம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கும் சனி பகவானால் நீங்கள் அடைந்துவரும் பலன்களாகும். இந்த நிலையில் சனி பகவான் வக்ரம் அடையும் இக்காலத்தில் இதுவரையில் நீங்கள் சந்தித்து வந்த கெடு பலன்களில் மாற்றத்தை காண்பீர்கள். அதனால் இக்காலம் உங்களுக்கு நற்காலம் என்றே சொல்ல வேண்டும். இதுவரை நீங்கள் சந்தித்துவந்த சங்கடமான நிலை யாவும் இனி விலக ஆரம்பிக்கும். குடும்பத்திற்குள் நிம்மதி உண்டாகும். தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். உத்தியோகத்தில் உங்கள் நிலை மேம்படும். வரவு அதிகரிக்கும். பிரச்சினைகளை எதிர்கொண்டு சமாளிக் கின்ற நிலையை அடைவீர்கள். குரு பகவானின் ஏழாம் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் முழுமையான நற்பலன் களை இக்காலத்தில் நீங்கள் அடைவதற்கு வாய்ப்பு உண்டாகும்.
விருச்சிகம்
உங்கள் ராசிக்கு மூன்றாம் அதிபதி யாகவும் நான்காம் அதிபதியாகவும் ஸ்தான பலம் பெறுகிறார் சனிபகவான். மூன்றாம் பாவகம் என்பது, தைரிய வீரிய கீர்த்தி சகோதர ஸ்தானமாகும். நான்காம் பாவகம் என்பது மாதுர் மற்றும் சுக ஸ்தானமாகும். சுக ஸ்தானாதிபதி சுக ஸ்தானத் திலேயே சஞ்சரிப்பதால் உங்கள் சுகம் கெட்டிருக்கும், சங்கடம் அதிகரித்திருக்கும். இடையூறுகள், அலைக்கழிப்பு, குடும்பத்தில் வீண் விரோதம், ஊர் விட்டு ஊர் சென்று வசிக்க வேண்டிய நிலை, பெற்ற தாயின் உடல்நலத்திற்கு பாதிப்பு, ஒரு சிலருக்கு தாயுடனும் தாய்வழி உறவு களுடனும் விரோதம் ஏற்பட்டதுடன் அவர்களை விட்டு விலக வேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்கும். வீடு, சொத்து வாகனத்தால் தொல்லைகள், உற்றார்- உறவினர்களிடம் பகை, செய்துவந்த தொழிலிலும் பார்த்துவரும் உத்தியோகத் திலும் சங்கடங்கள், பிரச்சினை என்று ஏற்பட்டிருக்கும். ஒரு சிலருக்கு நோயினால் பாதிப்பு ஏற்பட்டு சுகத்திற்கு இடையூறு உண்டாகி இருக்கும். இந்த நேரத்தில் சனி பகவானின் மூன்றாம் பார்வை உங்கள் ருண, ரோக சத்ரு ஸ்தானத்தில் பதிந்திருப்பதால் மறைமுக விரோதிகளின் தொல்லைகள் விலகி இருக்கும். அவர்களை மிக சுலபமாக எதிர்த்து வெற்றி கண்டிருப்பீர்கள். கடன் தொல்லைகளிலிருந்து விடுபட்டிருப் பீர்கள். தொழிலை விருத்தி செய்ய திட்டமிட்டு செயல்பட்டிருப்பீர்கள். வேலையில்லாமல் இருந்தவர்கள் கடுமையான முயற்சிக்குப்பின் வேலைவாய்ப்பை அடைந்திருப்பீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் கிடைத்திருக்கும். எதிர்பாராத பண வரவு எங்கிருந்தாவது வந்திருக்கும். நோய்க்கு தக்க சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பீர்கள். சனி பகவானின் ஏழாம் பார்வை உங்கள் ஜீவன ஸ்தானத்தில் பதிந்திருப்பதால் நீங்கள் செய்துவரும் தொழிலில் நெருக்கடி அதிகரித்திருக்கும். உங்கள் கவனக் குறைவினா லும் அசட்டை தனத்தாலும் முக்கியமான காரியங்களில் தோல்வி ஏற்பட்டிருக்கும். பதவி உயர்விற்காக காத்திருந்தவர்களுக்கு இக்காலத்தில் அது கிடைக்காமல் போயிருக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறாத நிலை ஏற்பட்டிருக்கும். உங்கள் மதிப்பிற்கும் கௌரவத்திற்கும் பல வகைகளிலும் சோதனை ஏற்பட்டிருக்கும். ஜீவனத்திற்கும் இக்காலத்தில் சிரமம் உண்டாகியிருக்கும். அதனால் மனச்சோர்வு, உடல் சோர்வு, டென்ஷன் என்ற நிலை ஏற்பட்டிருக்கும். சனி பகவானின் பத்தாம் பார்வை உங்கள் ஜென்ம ஸ்தானத்தில் பதிந்திருப்பதால் அலைச்சல் அதிகரித்திருக்கும் வேலைப்பளு கூடியிருக்கும். உறவினர்களிடம் பகையும் வேலைகள் காரணமாக வெளியூர் வாசம் செய்ய வேண்டிய நிலையும் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல வேண்டிய சூழலும் ஏற்பட்டிருக்கும். உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு உங்களை அச்சுறுத்தி இருக்கும். இந்த நிலையில் சனி பகவான் வக்ரமடையும் இக்காலத்தில் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த சங்கடங்கள் காணாமல் போகும். மற்ற கிரகங்களின் சுப ஆதிபத்தியம் உங்களைப் பாதுகாக்கும். குறிப்பாக, ஆறாம் இடத்தில் சஞ்சரித்துவரும் ராகு பகவானால் அதிகபட்சமான நன்மைகளை இக்காலத்தில் நீங்கள் அடைவீர்கள். உடல்நிலையில் இருந்த சங்கடங்கள் விலகும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். உங்கள் சுய ஆற்றல் வெளிப்பட ஆரம்பிக்கும். உங்கள் எண்ணங்கள் இனி பூர்த்தியாகும். சனி பகவானின் வக்ர காலத்தை உங்களுக்கு வசந்த காலம் என்றே சொல்ல வேண்டும்.
தனுசு
உங்கள் ராசிக்கு குடும்பம் மற்றும் தனம், வாக்கு ஸ்தானத்திற்கும், சகோதர, தைரிய, வீரிய ஸ்தானத்திற்கும் அதிபதி சனி பகவானா வார். உங்கள் ராசிக்கு தைரிய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனி பகவான் உங்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கி வருகிறார். இதுவரை நீங்கள் அடைந்து வந்த சங்கடங்களில் இருந்து உங்களை விடுவித்து வருகிறார். உங்கள் மனதிலும் உடலிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். எதையோ இழந்ததுபோல் அவதிப்பட்டு, மூலைக்குள் அடங்கிக் கிடந்த உங்களுக்கு உற்சாகத்தையும், எல்லாவற்றையும் எதிர் கொண்டு நடைபோடும் சக்தியை யும் உண்டாக்கியுள்ளார். வழக்குகளும் உங்களுக்கு சாதகமாகி வருகிறது. பொருளா தார நிலையில் முன்னேற்றம், எடுத்த காரியங்கள் யாவற்றிலும் வெற்றி என்ற நிலையையும் இப்போது நீங்கள் அடைந்துள் ளீர்கள். நீங்கள் செய்துவரும் தொழிலும் இக்காலத்தில் சிறப்படைந்து வருகிறது. ஆரோக்கியத்தில் இருந்த சங்கடங்கள் விலகி வருகிறது. வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு, வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, குடும்பத்தில் சந்தோஷமும் செழிப்பும் ஏற்பட்டு வருகிறது. உங்களுக்கு தொல்லைகள் கொடுத்தவர்களை அடக்கியாலும் ஆற்றலையும் நீங்கள் அடைந்து வருகிறீர்கள். சனி பகவானின் ஸ்தான பலம் உங்களுக்கு நன்மையாகியுள்ள நிலையில் அவருடைய மூன்றாம் பார்வை உங்கள் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் பதிந்திருப்பதால் புத்திர- புத்திரர்களால் சில நெருக்கடிகளையும் சங்கடங்களையும் அனுபவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கும். அவர்களை நினைத்து வருத்தப்படும் அளவிற்கு சூழல்கள் அமைந்திருக்கும். பூர்வீக சொத்தில் இழுபறியான நிலை ஏற்பட்டிருக்கும். குடும்பத்திலும் அவர்களால் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிட்டிருக்கும். இல்லையென்றால் அவர்களின் எதிர்காலத்தை நினைத்து குழப்ப மான நிலை உண்டாகி மனம் பெரிதும் அவதி பட்டிருக்கும். சனி பகவானின் ஏழாம் பார்வை உங்களின் பாக்கிய, பித்ரு, காரிய, சகாய ஸ்தானத்தில் பதிந்திருப்பதால் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி இருப்பீர்கள். தந்தைவழி உறவுகளால் சங்கடங்கள் அதிகரித்திருக்கும், தந்தையின் உடல்நிலையிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். கணவன்- மனைவி இடையே மோதல், கருத்து வேறுபாடு என்று உண்டாகி இருக்கும். ஒரு சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை நேரிட்டிருக்கும். ஒருசிலர் தீயவர் சேர்க்கைக்கு ஆளாகி இருப்பீர்கள். அதனால் தீய பழக்க வழக்கங்கள் உண்டானதுடன் வெளியூர் வாசமும் ஒருசிலருக்கு ஏற்பட்டிருக்கும். அவப்பெயருக்கும் ஆளாக வேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்கும். சனி பகவானின் பத்தாம் பார்வை உங்கள் விரைய ஸ்தானத்தில் பதிந்திருப்பதால் பல வழிகளிலும் செலவுகள் ஏற்பட்டிருக்கும். கையிருப்பு கரைந்திருக்கும். திடீர் செலவுகள் ஏற்பட்டிருக்கும். உங்கள் மகிழ்ச்சிக்காக சில செயல்களில் ஈடுபட்டிருப்பீர்கள். வீண் அலச்சல், காரியம் கைகூடாமல் மன உளைச்சல், எதிரிகளால் இடையூறு, மதிப்பிற்கும் கௌரவத்திற்கும் பங்கம் என்ற நிலையும் ஒரு சிலருக்கு ஏற்பட்டிருக்கும். படுக்கையறை சுகம் என்பது ஒரு சிலருக்கு இல்லாமல் போயிருக்கும். இந்த நிலையில் சனி பகவான் வக்ரம் அடையும் இக்காலம் இதற்கு முன்பிருந்த நிலைகளில் உங்களுக்கு மாற்றங்களை உண்டாக்கிடக்கூடிய காலம் என்றே சொல்ல வேண்டும். சனி பகவானின் ஸ்தான பலன் உங்களுக்கு சிறப்பாக இருந்தாலும் அவருடைய மூன்று பார்வைகளின் பலன்களும் பல வழிகளிலும் உங்களுக்கு நெருக்கடிகளை உண்டாக்கி வரும் நிலையில் அவர் வக்ரமடையும் இக்காலம் உங்களுக்கு யோகமான காலம் என்றே சொல்ல வேண்டும். இந்த நேரத்தில் குரு பகவான் ஐந்தாம் இடத்தில் சஞ்சரிப்பதும் அவருடைய பார்வை உங்கள் ராசியின்மீது பதிவதும் உங்கள் நிலையில் பல்வேறு மாற்றங்களை உண்டாக்கும். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து, கௌரவம் என்பவற்றுக்கெல்லாம் இக்காலம் உங்களுக்கு ஆதாரமாக இருக்கும். நீங்கள் நினைத்ததை அடைந்து மகிழ்ச்சியோடு மரியாதையோடு, வாழக்கூடிய நிலை இக்காலத்தில் உங்களுக்கு ஏற்படும்.
மகரம்
சனி பகவான் உங்கள் ராசிநாதன் என்பதுடன் உங்களுக்கு தன, குடும்ப, வாக்கு ஸ்தானாதிபதியும் அவரே ஆவார். உங்களுக்கு தன குடும்ப ஸ்தானத் திற்கு அதிபதியானவர் அந்த ஸ்தானத் திலேயே ஏழரைச்சனியின் பாத சனியாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உண்டாகி இருக்கும். பணவரவில் தடைகள் ஏற்பட்டிருக்கும். பொருளாதார தேவைக்காக அதிகபட்சமான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பீர்கள். மற்றவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு உண்டாகி இருக்கும். எந்த ஒரு வேலையை செய்தாலும் அதை செய்து முடிப்பதில் அலைச்சல் அதிகரித்திருக்கும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். குடும்பத்துடன் ஒற்றுமையில்லாத சூழல் ஏற்பட்டிருக்கும். இந்த நேரத்தில் சனி பகவானின் மூன்றாம் பார்வை உங்கள் சுக ஸ்தானத்தின்மீது பதிந்திருப்பதால் வீடு, வாகனம் போன்றவற்றில் நீங்கள் எதிர்பார்த்த நன்மையை அடைந்திருக்க முடியாது. உடலிலும் மனதிலும் சங்கடங்கள் அதிகரித்திருக்கும். தாய்வழி உறவுகளால் சில பிரச்சினைகளை சந்தித்திருப்பீர்கள். சனி பகவானின் ஏழாம் பார்வை உங்கள் அஷ்டம ஸ்தானத்தின்மீது பதிந்திருப்பதால் உங்கள் செல்வாக்கிற்கு குந்தகம், புகழுக்கு சங்கடம், எதிரிகளால் அவமானம், உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு என்ற நிலை ஏற்பட்டிருக்கும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் ஆதாயமில்லாத நிலையை அடைந்திருப்பீர்கள். சனி பகவானின் பத்தாம் பார்வை உங்கள் லாப ஸ்தானத்தின்மீது பதிந்திருப்பதால் நெருக்கடிகளை எல்லாம் சமாளித்திடக்கூடிய சக்தி உங்களுக்கு உண்டாகி இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த வரவுகளை எப்படியாவது அடைந்திருப்பீர்கள். இக்காலத்தில் சனி பகவானின் பத்தாம் பார்வை மட்டுமே உங்களுக்கு சாதகமாக இருந்து உங்களைப் பாதுகாத்து வருகிறது. இந்த நிலையில் சனி பகவான் வக்ரம் அடையும் இக்காலத்தில் இதுவரையில் நீங்கள் அடைந்து வந்த சங்கடமான பலன்களில் இருந்து மாற்றம் உண்டாகும். நெருக்கடிகள் நீங்க ஆரம்பிக்கும். குடும்பத்தினர் தேவைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றத் தொடங்குவீர்கள். பணவரவில் இருந்த தடைகள் விலகும். கொடுத்த வாக்கை காப்பாற்றக்கூடிய நிலை உருவாகும். வீடு, வாகனம் போன்றவற்றில் உங்கள் ஆசைகள் நிறைவேறும்.
கும்பம்
சனி பகவான் உங்கள் ராசிநாதனும் உங்கள் ராசிக்கு அயன சயன சுக விரைய ஸ்தானாதிபதியுமாவார். உங்கள் ராசிக்குள்ளாகவே ஜென்ம சனியாக சனி பகவான் சஞ்சரித்து வருவதால் எந்த ஒன்றிலும் நிதானமற்ற நிலையில் இருந்துவருவீர்கள். அவசரம், அதன் காரணமாக சங்கடம் என்ற நிலை உண்டாகி இருக்கும். அடுத்தவருடன் பேசும் போதும் உங்களுடைய ஆவேசத்தை வெளிப்படுத்தி அதன் வழியாக சங்கடங்களுக்கு ஆட்பட்டிருப்பீர்கள். வீண் பிரச்சினைகளில் நீங்களாகவே சென்று சிக்கி இருப்பீர்கள். மற்றவர்களுக்காக ஜாமீன் ஏற்று அதற்காக செயல்படுவதில் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்பட்டிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நெருக்கடிகள் உண்டாகி இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு எந்த ஒன்றும் நடைபெறாமல் தடை, தாமதம் இழுபறி என்பவற்றையெல்லாம் நீங்கள் சந்தித்திருப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களுடனும் சுமூகமான உறவு முறை இருந்திருக்காது. இந்த நேரத்தில் சனி பகவானின் மூன்றாம் பார்வை உங்கள் ராசிக்கு மூன்றாம் இடமான தைரிய வீரிய சகோதர ஸ்தானத்தின்மீது பதிந்திருப்பதால் எத்தனை சங்கடம் வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் அளவிற்கு உங்கள் செயல்பாடு இருக்கும். சகோதரர்களின் நலனில் அக்கறை செலுத்திவருவீர்கள். தைரியமாக செயல்படும் அளவிற்கு உங்கள் நிலை இருக்கும். நினைப் பதை நடத்தி முடித்துவிட வேண்டும் என்று வேகமாக செயல்பட்டுவருவீர்கள். சனி பகவானின் ஏழாம் பார்வை உங்கள் ராசிக்கு நட்பு மற்றும் களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தின்மீதே பதிவதால் தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சங்கடங்கள் ஏற்பட்டிருக்கும். ஒரு சிலர் உங்களை ஏமாற்றும் வகையில் செயல்பட்டிருப்பார்கள். வாழ்க்கைத் துணையுடனும் நெருக்கடியான நிலையே ஏற்பட்டிருக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடைகள், தாமதங்களை சந்தித்து வந்திருப்பீர்கள். சனி பகவானின் பத்தாம் பார்வை உங்களின் தொழில் மற்றும் ஜீவன ஸ்தானமான பத்தாம் இடத்தின்மீதே பதிந்திருப்பதால் நீங்கள் செய்துவரும் தொழிலில் எதிர்பாராத தடைகளை சந்தித்து வந்திருப்பீர்கள். கொடுக்கல்- வாங்கலில் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கும். வரவேண்டிய பணமும் தடைபட்டு நின்றிருக்கும். புதிய தொழில் தொடங்க மேற்கொண்ட முயற்சி இழுபறியாகி இருக்கும். ஜென்ம சனியின் காலத்தை போராட்ட காலம் என்றே உங்களுக்கு சொல்லவேண்டும். இந்த நிலையில் சனி பகவான் வக்ரம் அடையும் இக்காலத்தை நேற்று வரை உங்களுக்கிருந்த சங்கடங்கள் விலகக்கூடிய காலம் என்றே சொல்ல வேண்டும். மூன்றா மிட ராகுவால் இனி உங்கள் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் உடலில் இருந்த சங்கடங்கள் நீங்கும். சோர்வு, அசதி விலகும். மனதில் புதிய நம்பிக்கை உண்டாகும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். கூட்டுத் தொழிலில ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். லாபமும் முன்னேற்றமும் உண்டாகும். உங்கள் பூர்வபுண்ணிய பலன்களின்படியும், தசா புக்திகளின் நிலையின்படியும் உங்களுக்குரிய நன்மைகளை நீங்கள் அடையும் காலமாக இக்காலம் இருக்கும்.
மீனம்
உங்கள் ராசிக்கு லாபாதிபதியும், விரையாதிபதியும் சனி பகவானே ஆவார். உங்கள் ராசிக்கு, அயன சயன சுக விரைய ஸ்தானத்தில் ஏழரைச் சனியாக சஞ்சரித்துவரும் சனி பகவான் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பையும், வியாபாரத்தில் சங்கடங்களையும், எதிர்பாராத செலவுகளையும், எந்த ஒரு வேலையை செய்து முடிக்க வேண்டும் என்றாலும் அதனை செய்துமுடிக்க அதிகபட்ச முயற்சியும், உறக்கம் பாதிக்கும் வகையில் பனிச்சுமையும், வாகனப் பயணத்திலும், இயந்திர இயக்கத்திலும் எதிர்பாராத சங்கடங்களும், அலைச்சலும், சொந்த ஊரை விட்டு வெளியூரில் இருக்க வேண்டிய, பணிபுரிய வேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்கும். சனி பகவானின் மூன்றாம் பார்வை உங்கள் ராசிக்கு தனம் மற்றும் வாக்கு குடும்ப ஸ்தானத்தின்மீது பதிந்திருப்பதால் பொருளாதாரத்தில் நெருக்கடி. குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை. கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத அளவிற்கு சூழல். பேச்சின் காரணமாக உறவுகளுக்குள் சங்கடம். முயற்சிகள் நிறைவேறாமல் இழுபறி என்று ஏற்பட்டிருக்கும். சனி பகவானின் ஏழாம் பார்வை உங்கள் ராசிக்கு ருண, ரோக, சத்துரு ஸ்தானத்தின்மீது பதிந்திருப்பதால் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்கின்ற அளவிற்கு உங்கள் மனநிலை மாற்றம் பெற்றிருக்கும். அதற்கேற்ற வகையில் உடல்நிலையிலும் ஆரோக்கியம் உண்டாகி இருக்கும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகி இருக்கும். எதிரிகள் உங்களை விட்டு விலகி இருப்பார்கள். சனி பகவானின் பத்தாம் பார்வை உங்கள் பாக்கிய ஸ்தானத்தின்மீது பதிந்திருப்பதால் தந்தைவழி உறவுகளிடம் சங்கடங்கள் உண்டாகி இருக்கும். புதிய பொருள் சேர்க்கை என்பது இல்லாமல் போயிருக்கும். எத்தனை முயற்சி எடுத்தாலும் காரியங்களில் தடை தடைபட்டிருக்கும். அலைச்சல் அதிகரித்திருக்கும். குடும்பத்திலும் ஒரு நேரத்தில் இருப்பதுபோல் அடுத்த நேரத்தில் சந்தோஷம் இல்லாமல் போயிருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டிருப்பீர்கள். குடும்ப உறவுகளுக்காக செலவுகள் அதிகரித்திருக்கும். இந்த நிலையில் சனிபகவான் வக்ரம் அடையும் இக்காலத்தை உங்களுக்கு நற்காலம் என்றே சொல்ல வேண்டும். இதுவரை அவரால் உங்களுக்கு உண்டான சங்கடமான பலன்களில் இனி மாற்றம் உண்டாகும். உங்கள் உடல் நிலையும் மனநிலையும் உற்சாகம் அடையும். எதையோ இழந்தது போல் சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். சோதனைகள் விலகும். குழப்பங்கள் தீரும். கொடுத்த வாக்கை காப்பாற்றும் நிலை ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். இரண்டாம் இட குருவின் பலன் முழுமையாக இனி உங்களுக்கு கிடைக்க ஆரம்பிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக செல்லும். உங்கள் கனவுகள் பூர்த்தியாகும்.
செல்: 94443 93717