ம்முடைய சாஸ்திரங்கள் பல்லியைப் பற்றிய பல தகவல்களைச் சொல்கின்றன. நம்முடைய முன்னோர்களும் பல்லியைப் பற்றிய பல தகவல்களை சொல்லி வைத்துள்ளார்கள்.

அட்சய திரிதியை மிகவும் சிறப்புவாய்ந்த நாள். இந்தநாளில் பல்லியை அவ்வளவு எளிதில் யாராலும் காணமுடியாதாம்.

அட்சய திரிதியை நாளில் மட்டும் பல்லிகள் மனிதர்கள் யாருடைய கண்ணுக்கும் படாமல் ஒளிந்துகொள்ள வேண்டுமென வாஸ்து பகவான் கட்டளையிட்டுள்ளதாக சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

Advertisment

ss

வாஸ்து பகவானின் கட்டளையையேற்று எல்லா பல்லிகளும் அட்சய திரிதியையன்று யார் கண்ணுக்கும் தெரியாத இடங்களில் போய் ஒளிந்துகொண்டிருக்குமாம். இதனால் வீடுகளில் உள்ளவர்கள் பல்லியை அட்சய திரிதியையன்று மட்டும் காணமுடியாது என சொல்லப்படுகிறது. இதையும் தாண்டி நீங்கள் அட்சய திரிதியை அன்றைக்கு பல்லியைப் பார்த்தால் உங்களுடைய ஏழேழு ஜென்ம பாவங்களும் நீங்கிவிடுமாம். உங்க ளைப் பிடித்திருக்கக்கூடிய எல்லா தரித்திர மும் விலகுமாம். அன்று நீங்கள் பல்லியைக் கண்டால் சகல சம்பத்துகளும் உங்களைத் தேடிவருமாம். அதைத் தொடர்ந்து வரும் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கு மாம். உலகிலேயே நீங்கள் மிகப்பெரிய தனவானாக வாழ்வீர்கள் என சொல்லப்படுகிறது. பல்லி லட்சுமி தேவியின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

நீங்கள் ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் பொழுது பல்லி சத்தமிட்டால் அது நல்ல சகுனமாகச் சொல்லப்படுகிறது. உங்களுடைய வீட்டில் பல்லி இருந்தால் எப்பொழுதும் உங்களுடைய வீட்டில் தானியங்களுக்குக் குறைவிருக்காது, எப்பொழுதும் வீட்டில் உணவு தானியங்கள் நிரம்பியிருக்கும் என சொல்லப்படுகிறது. உங்களுடைய குடும்ப உறுப்பினர்களிடையே எப்பொழுதும் ஒரு நல்லிணக்கம் ஏற்படும் எனவும் சொல்லப்படுகிறது.

மேலும் இது வீட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் எனவும் சொல்லப்படுகிறது. சாஸ்திரத்தின்படி பல்லியை நீங்கள் தீபாவளிப் பண்டிகையன்று கண்டால் அது மங்களகரமானது என கருதப்படுகிறது. தீபாவளிப் பண்டிகையன்று இரவில் உங்களுடைய வீட்டில் பல்லியைப் பார்த்தால், அது மிகவும் நல்ல அறிகுறி என சொல்லப்படுகிறது. ஏனென்றால் பல்லி லட்சுமிதேவியைக் குறிக்கிறது.

ஆகையால் தீபாவளின்றைக்கு வீட்டில் பல்லியைக் கண்டால் அது வீட்டிற்கு லட்சுமிதேவி வருவதை சுட்டிக்காட்டுகிறது என நம்பப்படுகிறது.

நீங்கள் வீடுகட்டி புதிய வீட்டில் நுழையும்பொழுது பல்லியைக் கண்டால் அது உங்களுடைய முன்னோர்கள் அல்லது தாய்- தந்தையரின் வருகையை சுட்டிக்காட்டு கிறது என சொல்லப்படுகிறது.

அதுபோல நீங்கள் வெளியிலிருந்து உங்களுடைய வீட்டிற்குள் நுழையும்பொழுது ஒரு பல்லியைக் கண்டால், உங்களுடைய முன்னோர்கள் உங்களை ஆசீர்வதிப்பதற்காக உங்கள் முன்னர் தோன்றியிருப்பதாக சொல்லப்படுகிறது. எந்த நேரத்திலும் உங்களுடைய வீட்டில் ஒரு பல்லி இறந்து கிடப்பதைக் காணக்கூடாது என சொல்லப் படுகிறது. இது ஒரு கெட்ட சகுனமாகவே கருதப்படுகிறது. உங்களுடைய வீட்டில் பல்லிகள் ஒன்றுக்கொன்று சண்டையிடுவதைக் கண்டால் அது உங்களுடைய வீட்டில் அல்லது உங்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினையைக் குறிக்கிறது.

பல்லிகளுக்கிடையே ஏற்படக்கூடிய சண்டை உங்களுடைய வீட்டில் உள்ளவர் களிடம் மற்றும் உங்களுக்குப் பிடித்தவர் களிடம் ஒற்றுமையின்மை இருப்பதைக் காட்டுகிறது. காரணமின்றி வீட்டில் சண்டை தொடங்கப்போவதையும் கூறுவதாக சொல்லப்படுகிறது.

உங்களுடைய வீட்டுத் தரையில் தொடர்ந்து பல்லி நடமாடுவதைக் கண்டால் ஏதோ வித்தியாசமான ஒரு நிகழ்வு அல்லது ஒரு பிரச்சினை உங்களுக்கு ஏற்படப் போகிறது என்பதை இது குறிக்கிறது என கூறப் படுகிறது.

உங்களுடைய மனதில் ஒரு நல்ல காரியத்தை நினைத்துக்கொண்டிருக்கும் பொழுது உங்கள் முன்னர் ஒரு பல்லி தோன்றினால், அந்த நல்ல காரியம் சிறப் பாக நடந்துமுடியும் என்பதைக் குறிக்கிறது என சொல்லப்படுகிறது.

உங்கள் வீட்டின் பூஜையறையில் பல்லி இருப்பதை நீங்கள் பார்த்தால் உங்களிடம் செல்வம் அதிகரிக்கப் போவதைக் குறிக்கிறது.

அதுமட்டுமல்லாமல் உங்கள் மனதில் இருக்கக்கூடிய மனக்குறைகள், பிரச்சினைகள் மறைந்து மிகவும் சந்தோஷமாக- தொடர்ச்சியான வாழ்க்கை உங்களுக்கு இருக்கும் என்பதைக் குறிக்கிறது எனப்படுகிறது. நீங்கள் புதிதாக ஒரு முயற்சியை செய்துவரும்பொழுது, பல்லி சுவரில் மேலேறிச் செல்வதைப் பார்த்தால் அது உங்களுக்கு விரைவில் அதிக நல்ல பலன்களையும் மிகப்பெரிய முன்னேற் றத்தையும் கொடுக்கும் என சொல்லப்படுகிறது.

பல்லி சுவரில் கீழிறங்கி வருவதைப் பார்த்தால் உங்களுடைய முயற்சியில் ஒருசில தடுமாற்றங்கள் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது. இருந்தாலும் அந்த பிரச்சினைகளை எல்லாம் நீங்கள் சமாளித்துவிடுவீர்கள் என்பதையும் இது குறிக்கிறது என சொல்லப்படுகிறது.

நீங்கள் வீட்டில் புதிய ஒரு பல்லியைக் கண்டால் அது உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மாற்றங்களைக் குறிப்பிடுகிறது. அதாவது நீங்கள் பலவிதமான சிக்கல்களில் மாட்டிக்கொண்டிருப்பீர்கள். பலவிதமான சோதனைகள் உங்களை சூழ்ந்திருக்கும். ஆனால் நீங்கள் புதிதாக உங்களுடைய வீட்டில் ஒரு பல்லியைக் காணும்பொழுது இந்தப் பிரச்சினைகளை எல்லாம் தாண்டி, அதிலிருந்து வெளிவந்து நல்ல ஒரு சந்தோஷமான வாழ்க்கையை வாழப்போகிறீர்கள் என்பதைக் குறிக்கிறது. உங்களுடைய வாழ்க்கையில் புத்துணர்ச்சியோடு அடுத்த நிலைக்குச் செல்கிறீர்கள் என்பதை இது குறிக்கிறது.

உலகம் முழுவதுமுள்ள பல கலாச்சாரங்களில் வீட்டில் பல்லிகள் இருப்பது நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் கொடுப்பதாக நம்பப்படுகிறது. சீன கலாச்சாரத்தில் பல்லி ஒரு டிராகன் குழந்தை என நம்பப்படுகிறது. இந்த பல்லிகள் சீனர்களின் வீடுகளில் இருப்பது அவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் என நம்புகிறார்கள். பழங்கால எகிப்தியர்கள் சித்திர எழுத்துகளில் பெரும்பாலும் பல்லிகளின் அடையாளங்கள் இருந்தன. அங்கு பல்லிகள் அதிக செல்வத்தின் அடையாளமாக இருந்துள்ளது.

செல்டிக் இன மரபுகளில் பல்லி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது. இவர்கள் பல்லியை செல்வத்தின் அடையாள மாகவும், செழிப்பின் அடையாளமாகவும் கருதியுள்ளனர். செல்டிக் இன புதுமணத் தம்பதிகள் தங்களுடைய முதல் திருமண இரவில் பல்லி சத்தமிடுவதைக் கேட்க ஆர்வத்துடன் இருப்பார்கள். அன்று பல்லியின் சத்தத்தைக் கேட்பது திருமண பந்தத்தில் நல்ல அதிர்ஷ்டத்தையும், சந்தோஷத்தையும், ஆசீர்வாதத்தையும் கொடுப்பதன் அறிகுறியாக அங்கு கருதப்படுகிறது.

உங்களுடைய மனதில் அவநம்பிக்கை இருக்கும்பொழுது, பிறரை ஏமாற்றும் எண்ணம் உங்களுடைய மனதில் இருக்கும்பொழுது, வஞ்சகம் உங்களுடைய மனதில் இருக்கும்பொழுது, மோசமான விஷயங்களை நீங்கள் மனதில் நினைத்துக்கொண்டு இருக்கும்பொழுது நீங்கள் வீட்டில் பல்லியைப் பார்த்தால் அது எதிர்மறையான விளைவுகளை உங்களிடம் ஏற்படுத்தப் போகிறது என்பதைக் குறிக்கிறது.

இது ஒரு எச்சரிக்கை அறிகுறியாகவும் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட மோசமான எண்ணங்கள் உங்கள் மனதில் இருக்கும்பொழுது நீங்கள் பல்லியைப் பார்த்தால் அந்த மோசமான எண்ணங்களும், விஷயங்களும் உங்களையே திருப்பித் தாக்கும் என்பதையும் அது சொல்வதாக நம்பப்படுகிறது. ஆகையால் மோசமான எண்ணங்கள் இருக்கும்பொழுது நீங்கள் பல்லியை பார்த்தால் உடனடியாக அவற்றை விட்டுவிட்டு, நல்ல நேர்மறை எண்ணங்களை நினைத்து நல்ல விஷயங்களில் கவனத்தை செலுத்துவது நல்லது எனவும் சொல்லப்படுகிறது.

பல்லிகள் பாதுகாப்பின் ஒரு வழிமுறையாக தங்களுடைய வாலை உடைத்துப்போடும். இப்படி பல்லிகள் தங்களுடைய வாலை உடைக்கும்பொழுது நீங்கள் அதை பார்த் தால் அது உங்களுக்கு ஏற்படக்கூடிய ஒருசில ஆபத்துகளைக் குறிப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது உங்களுடைய வீட்டில் இருப்பவர்கள் உங்களை ஏமாற்றும் குணத்தோடு இருப்பார்கள். இல்லையென்றால் உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்களை ஏமாற்றுவார்கள் என்பதைக் குறிக்கிறது என சொல்லப்படுகிறது. அதுபோல நீங்கள் மிகவும் நம்பிக்கொண்டிருப்பவர்கள் திடீரென உங்களிடம் உறவை முறித்துக்கொண்டு உங்களுக்கு எதிராகத் திரும்புவார்கள் என்பதைக் குறிப்பதாகவும் இது சொல்லப் படுகிறது. இப்படிப்பட்ட நேரத்தில் நீங்கள் கவனமாக இருக்கவேண்டும்.

அதுபோல புதிதாக ஒருவர் உங்களுடைய வீடுதேடி வரும்பொழுது, அவர் உங்களுடைய வீட்டிற்குள் நுழையும்பொழுது அல்லது உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும்பொழுது பல்லி சத்தமிட்டால் அது ஒரு எச்சரிக்கை அறிகுறியாக எடுத்துக்கொள்ள வேண்டுமென சொல்லப்படுகிறது. வந்திருக்கும் நபர் உங்களிடம் பேசும் விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்கவேண்டும் என்பதை இது குறிக்கிறது. அவருக்கு நீங்கள் உடனடியாக எந்த வாக்குறுதிகளையும் கொடுக்கக்கூடாது என்பதையும் இது குறிக்கிறது. ஒருவேளை உங்களை பிரச்சினைக்குள் மாட்டிவிடும் சூழ்நிலையாகக்கூட அது இருக்கலாம் எனவும் இந்த நேரத்தில் பல்லிகள் சப்தமிடும்பொழுது கவனமாகக் கேட்டு, பிரச்சினைகளில் இருந்து தப்பிப்பதில் கவனமாக இருக்கவேண்டும்.

உங்களுடைய வீட்டில் ஒரு பல்லியைப் பார்க்கும்பொழுது, இறந்துபோன உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர் அல்லது உங்களுடைய நண்பரின் முகம் வந்துபோனால் அது அவர்களுடைய நினைவாகக்கூட இருக்கலாம் என சொல்லப்படுகிறது. உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்கள்கூட இருந்து உங்களை ஆசிர்வதித்து உங்களை காத்துக்கொண்டிருப்பதன் அறிகுறியாகக்கூட இது இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

பல மத்திய தரைக்கடல் நாடுகளில், மக்களுக்கு நெருக்கமான ஒருவர் இறந்தபிறகு அவருடைய காரியங்கள் முடிந்தபிறகு வீட்டிற்கு வரும்பொழுது பல்லியைக் காண நேர்ந்தால், அந்த நபர் அவர்களுடன் இருந்து, அவர்கள் மனதை அமைதிப்படுத்தவும் எல்லாவற்றையும் நன்றாக செயல்படுத்தவும் கூடவே இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துவதாக அமைகிறது என நம்புகிறார்கள்.

இரவில் தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் தங்களுடைய வீட்டில் பல்லிகளை அடிக்கடி பார்ப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. செல்டிக் புராணங்களில் பல்லியின் கண்களிலிருந்து தூக்கத்தை இரவு தெய்வமான எவாகி திருடி அனைத்து உயிரினங் களுக்கும் கொடுத்தார் என நம்பப்படுகிறது. உங்களுடைய வாழ்க்கையில் தூக்கமில்லாமல் இருந்தால் பல்லிகள் உங்களை நெருங்கி வருமாம். ஜப்பானிய கலாச்சாரங்களில் பல்லிகளை அவர்கள் வீடுகளில் பார்த்தால் விரைவில் அவர்களுடைய குடும்பத்தில் திருமணங்கள் நடைபெறுமென நம்பப்படுகிறது.

ஜப்பானியர்கள் பல்லிகளை கண்டால் வீட்டில் புதிதாக ஒரு குழந்தை பிறக்கப் போகிறது என நம்புகிறார்கள். பல ஆப்பிரிக்க கலாச்சாரங்களில் பல்லிகள் நோய்களை ஏற்படுத்தும் ஒரு சகுனமாகப் பார்க்கப்படுகிறது. பல்லியைக் கண்டால் நோய்கள் ஏற்படுமென அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்த கலாச்சாரங்களில் உள்ளவர்கள் தங்களுடைய கைகளால் பல்லியை எக்காரணத் தைக் கொண்டும் தொடமாட்டார்கள். நவீன மருத்துவம் இதுவரை செல்லாத பல, ஆப்பிரிக்க கலாச்சாரங்களில் பல்லிகள் கொடிய நோய்களைக் கொண்டுவருகிறது என நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒருசில கலாச்சாரங்களில் பல்லிகள் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. பல்லியை மிகவும் மதிக்கும் கலாச்சாரங்கள் பல உள்ளன. பல்லியை கொல்வது அல்லது பல்லிக்கு தீங்கு ஏற்படுத்துவது பல தலைமுறைக்கு ஆபத்தை ஏற்படுத்தும். பல்லிகள் உங்களுடைய தலைமுறைக்கு சாபத்தை விட்டுச் செல்லும் என நம்பப்படுகிறது.

சிறந்த கண் பார்வை கொண்ட பல்லிகள் நம் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய ஆபத்துகள், அச்சுறுத்தல்கள் போன்றவற்றை சுட்டிக் காட்டும் திறன் கொண்டவை எனவும் நம்பப்படுகிறது. இது வாழ்க்கையில் ஏற்படக்கூடிய இறப்பு மட்டுமல்லாமல் எல்லா வகையான ஆபத்துகளையும், நிதி ஆதாரங்களையும், செல்வ வளங்களையும், நல்ல உறவுகளையும் எடுத்துச்சொல்லும் ஒரு தீர்க்கதரிசியாகவே பல கலாச்சார மக்களால் பார்க்கப்படுகிறது.

செல்: 98425 50844