திருமணப் பொருத்தத்தில் சஷ்டாஷ்டக தோஷ மென்று ஒன்றுண்டு. இது மணமகன்- மணமகள் இருவர் ஜாதகப்படி ஆறு, எட்டாவது ராசியாக வந்தால் சஷ்டாஷ்டக தோஷம் என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதில் சுப சஷ்டாஷ்டகம், அசுப சஷ்டாஷ்டகம் என்று இரு பிரிவுகள் உள்ளன.

மணமகன்- மணமகள் ஜாதகப்படி ஆறு, எட்டாவது ராசியாக வந்தாலும், இருவரின் ராசியாதிபதி நட்பாக இருந்தால் சுப சஷ்டாஷ்டகம் என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது. உதாரணமாக, கடக ராசிக்கும் தனுசு ராசிக்கும் 6- 8-ஆக வந்தாலும், இருவரின் ராசியாதி பதி சந்திரன், குரு இருவரும் நட்பாக இருப்பதால் சுப சஷ்டாஷ்டகம் என்று கூறுவர். ஆனால் இந்த சுப சஷ்டாஷ்டகத்தைத் திருமணப் பொருத்தத்தில் சேர்க்க லாம்- சேர்க்கக்கூடாது என ஜோதிடர்களுக்கிடையே கருத்து வேறுபாடுள்ளது. இந்த சுப சஷ்டாஷ்டகத்தைச் சேர்த்தால் கணவன்- மனைவிக்கிடையே பிரச்சினைகள் ஆயுள் ழுழுவதும் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் பிரிவினை, விவாகரத்து அதிகமிருக்காது.

sss

Advertisment

இருவரின் ராசி ஆறு, எட்டாக இருந்து, பகை ராசியாக வந்தால் அசுப சஷ்டாஷ்டகம் என்பர். உதாரண மாக, கடக ராசிக்கும் கும்ப ராசிக்குமிடையே ஆறு, எட்டாக வருவதாலும், சந்திரன், சனி பகையாக இருப்பதாலும் அசுப சஷ்டாஷ்டகம். இதைக் கண்டிப்பாக சேர்க்கக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது.

அசுப சஷ்டாஷ்டக ஜாதகத்தை திருமணப் பொருத்தத்தில் சேர்த்தால் கணவன்- மனைவிக்கிடையே அன்பு, பாசம், அன்யோன்யம், விட்டுக்கொடுக்கும் தன்மை இருக்காது. ஆயுள் ழுழுவதும் சண்டை சச்சரவு கள் இருக்கும். நிம்மதியாக வாழவிடாது. அகங்காரம் ஏற்பட்டு விவாகரத்து, பிரிவினை போன்ற நிகழ்வுகள் அதிகமாக நிகழும்.

என்னிடம் வந்த ஜாதகத்தில் மணமகன்- மணமகள் இருவர் ஜாதகப்படி மேஷ ராசியும் கன்னி ராசியும் சஷ்டாஷ்டக ராசியாக அமைந்திருக்க, ஜோதிடரின் கவனக்குறைவால் திருமணப் பொருத்தத்தில் சேர்க்கப் பட்டு, திருமணத்திற்குப்பிறகு இருவருக்குமிடையே விட்டுக் கொடுக்கும் தன்மையில்லாததால் பிரச்சிகைள் ஏற்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விவாகரத்து ஏற்பட்டது. மணமகன் வீட்டார் பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுக்கும்படி நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். இதற்குக் காரணம் இருவர் மேஷ ராசியும் கன்னி ராசியும் பகை ராசியாக அமைந்துவிட்டன.

மேஷ ராசியாதிபதி செவ்வாயும், கன்னி ராசியாதிபதி புதனும் பகைபெற்று அமைந்துவிட்டதால் இருவருக்குமிடையே விவாகரத்து ஏற்பட்டுவிட்டது.

என்னைப் பொருத்தவரை சுப சஷ்டாஷ்டகம், அசுப சஷ்டாஷ்டகம் இரண்டையுமே திருமணப் பொருத்தத்தில் சேர்க்கக்கூடாது. சுப சஷ்டாஷ்டகம் உள்ள ஜாதகத்தை சேர்த்தாலும், சிலநேரங்களில் பிரிவினை, விவாகரத்து, பிரச்சிகைள் ஏற்படுகின்றன.

சுப சஷ்டாஷ்டகம் உள்ள ஜாதகர் கள் வெளிப்பார்வைக்கு நன்றாக வாழ்பவர்களாகத் தோன்றும். ஆனால் உடல், மன அளவில் ஏதாவது குறைகள் இருக்கும்.

ஒருவேளை அசுப சஷ்டாஷ்டக தோஷமுள்ள ஜாதகர்கள் சேர்ந்து வாழ்ந்தாலும், ஜோதிடத்தில் விதிவிலக்கு என்ற விதிப்படி சேர்ந்து வாழ்வார்கள்.

செல்: 98403 69513