ரு தம்பதியினர் சுமார் ஒரு வயதுடையக் குழந்தையுடன், நாடி பலன் காண வந்திருந்தனர். அவர்களிடம் "என்ன விஷயமாக பலன் தெரிந்துகொள்ள வந்தீர்கள்' என்றேன்.

"ஐயா, என் மனைவிக்கு, ஒரே பிரசவத்தில், இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. அதில் ஒரு குழந்தை மூன்று மாதத்தில் இறந்துவிட்டது. மற்றொரு குழந்தைதான் இது. குழந்தை இறப்பிற்கு காரணம் தெரிந்துகொள்ள, வேத ஜோதிட முறையில் பலன்கூறும் ஜோதிடர்களிடம் சென்று பலன் கேட்டபோது, சிலர் அவன் விதியென்றும், சிலர் அவன் ஆயுள் கணக்கு முடிந்ததென்றும், இன்னும் சிலர், அவன் பிறப்பு ஜாதகத்தில் கிரகங்கள் கெட்டுபோய், பாதிப்பு அடைந்துள்ளது. அப்பொழுதே பரிகாரம் செய்திருந் தால், குழந்தையின் மரணத்தை தடுத்திருக்கலாம் என்று கூறினார்கள். அவர்கள் கூறியதை, உண்மையானதாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குழப்பம்தான் அதிகமானது.

இரண்டு குழந்தைகளும், ஒரே நட்சத்திரம், ராசி, லக்னம், தசை, புக்தி என ஒரே ஜாதக கிரக அமைப்புடன்தான் பிறந்தன. அதனால் இரண்டு பேருக்கும் ஒரேமாதிரி பலன்தானே நடக்கவேண்டும். ஆனால் ஜோதிடப் பலன் மாறுபட்டு நடந்துள்ளதே, அதனால்தான், ஒரு மகன் இறந்து போனதற்கு, சரியான காரணம் அறிந்துகொள்ளவே, அகத்தியரை நாடி வந்துள்ளேன்'' என்றார்.

faff

Advertisment

ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்து வடிவாகத் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.

இந்த கலியுகத்தில் மனிதர்கள் வாழ்வில் அனுபவிக்கும் ஒவ்வொரு நிகழ்விற்கும், அவன் பூர்வ ஜென்ம வினைப்பதிவுதான் காரணமென்று சொல்லத் தெரியாதவன், விதியென்று கூறுவான். முற்பிறவி பாவ- சாபத் தாக்கம் கூறத் தெரியாதவர்கள், பரிகாரம் செய் என்று எதையாவது கூறுவார்கள். சரியான ஜோதிடப் பலன் கூறத் தெரியாதவர்கள், கிரகங்கள் கெட்டுவிட்டது, மறைந்துவிட்டது என்பார்கள். ஒரு கிரகம் கெட்டு, மறைந்து விட்டால் அந்த கிரகம்தான் பரிகாரம் செய்துகொள்ளவேண்டுமே தவிர, மனிதர்கள் பரிகாரம் செய்வதால், கிடைக்கப் போகும் பலன்தான் என்ன? கலி காலத்தில் அவரவர் மனதில் தோன்றுவதையெல்லாம். "சாஸ்திரம்' என்று கூறி மக்களை ஏமாற்றி வாழ்கின்றார்கள். இவன் மகன் இறப்பதற்கு காரணம் கூறுகின்றேன் தெரிந்துகொள்ளச் சொல்.

இரண்டு மகன்களில், இறந்துபோன மகன், இவனின் முற்பிறவிகள் ஒன்றில், இவனுக்குத் தந்தையாக இருந்தவன். இன்னொரு மகன் மற்றொரு பிறவியிலும் இவனுக்கு மகனாகப் பிறந்து வாழ்ந்தவன். முற்பிறவியில் இவன் நல்ல தந்தையாக இருந்து, தன் மகனுக்குச் செய்யவேண்டிய கடமை களைச் செய்யாமல் தன் சுகமே பெரிதென வாழ்ந்தான். அந்த மகன் தந்தையின் ஆதரவின்றி, இளம் வயதிலேயே, சிரமப்பட்டு, உழைத்து, பொருள்தேடி சேர்த்து, பின்வயதில் நல்ல வாழ்வை அடைந்தான்.

தந்தையான இவனின் முதுமைக்காலத்தில், அந்த மகன் இவனுக்கு உணவு, உடை, இருப்பிடம் தந்து, நோய்க்கு மருத்துவம் பார்த்து, இறப் பிற்குப்பிறகு இறுதிச் சடங்கும் செய்து, மகன் கடமையை நிறைவேற்றினான்.

இவன் முற்பிறவியில் பெற்ற மகனுக்கு எதையும் செய்யாமல், மகன் உழைப்பில் வாழ்ந்து, மறைந்ததால், இவனுக்கு புத்திர கடன்- பாவம் உண்டானது. அந்தக் கடனை திரும்ப வாங்கவே, இப்பிறவியிலும் அவனே மகனா கப் பிறந்து ஏன் அவன் பிறந்ததுமுதல், அவனுக்கு ஏதாவது ஒரு நோய் பாதிப்பு உருவாகி அதற்கு மருத்துவ செலவும், இன்னும் பலவிதமாக செலவுசெய்தான்.

இவனின் முற்பிறவி புத்திர கடன், மூன்று மாதத்தில் தீர்ந்தது. முற்பிறவி கடன் நிவர்த்தியானதும் அந்த மகனும் இறந்து போனான். இவன் மகன் இறப்பிற்கு இவனின் முற்பிறவி வினைப்பதிவுதான் காரணம் என்பதை புரிந்துகொள்ளச் சொல்.

இவனுக்கு உயிருடன் உள்ள, மற்றொரு மகனின், வினை, விதி சூட்சுமத்தையும் கூறுகின்றேன். அறிந்துகொள்ளச் சொல். முற்பிறவியில் இந்தக் குழந்தையும் இவனுக்கு மகனாகப் பிறந்திருந்தான். அந்த பிறவியில், பெற்ற மகனுக்கு உணவு, உடை, கல்வி தந்து, வாலிப வயதில் ஒரு பெண்ணை திருமணம் செய்துவைத்து, அவனுக்கு சொத்து, பணம், பொருள், நிலம், வீடு என அனைத்தையும் சம்பாதித்து வைத்தான். ஆனால், இந்த மகன் திருமணத்திற்குப்பின்பு, தன் மனைவியின் பேச்சைக்கேட்டு, வயது முதிர்ந்த தந்தை- தாய் இருவருக்கும் உணவு, உடை தந்து காப்பாற்றாமல், அவர்களை வீட்டை விட்டு வெளியே துரத்திவிட்டான். அதனால் இப்போது உயிருடன் உள்ள மகனுக்கு பித்ரு சாபக்கடன் உண்டானது. இந்தக் கடனை தீர்த்து, நிவர்த்திசெய்து முடிக்கவே, இப்பிறவியில் இவனுக்கு மகனாகப் பிறந்து, உயிருடன் உள்ளான்.

இந்த பித்ரு கடன் இவன் நிவர்த்திசெய்து முடித்துவிட்டால் இந்த மகனும் இறந்துவிடுவான். இந்த மகன் நீண்ட ஆயுளுடன் இருக்கவேண்டுமென்றால், அவன் சம்பாதித்து தரும் பணத்தை, பொருளை என எதையும் அவனிடம் இருந்து இந்த தாய், தந்தை பெறக் கூடாது. இவன் ஆயுள் இறுதிவரை இவர்கள் இருவரும் மகன் சம்பாதனையில் வாழக்கூடாது. அவன் சம்பாதித்து கட்டிய வீட்டிலும் இவர்கள் சேர்ந்து வசிக்கக்கூடாது. இவர்கள் இறப்புவரை, இவர்கள் சம்பாதித்த பணம், சொத்து, வீடு இவற்றைத்தான் அனுபவித்து வாழ வேண்டும். இவர்கள் இறப்பிற்குப் பிறகே, இவர்கள் சம்பாதித்த சொத்துகளை மகனுக்குத் தரவேண்டும். மகன் சம்பாதித்த பணம், சொத்தில் இவர்கள் வாழ்ந்தால், அவன் பித்ரு கடன் நிவர்த்தியாகும். கடன் நிவர்த்தியாகி முடிந்தால், அந்த மகனும் இறந்துவிடுவான் என்று, இரு குழந்தைகளின் மரணத்திற்கு முன்வினைப் பதிவு பற்றி விளக்கம், காரணம் கூறிவிட்டு அகத்தியர் ஓலையில் இருந்து மறைந்தார்.

மகனின் இறப்பிற்கு காரணம் எனது முற்பிறவி ஊழ்வினைப் பதிவுதான் காரணம் என்பதை அறிந்துகொண்டேன். அகத்தியர் கூறியதுபோன்று என் வாழ்வில் அதனைக் கடைப்பிடித்து வாழ்ந்துவருவேன் என்று கூறி, அகத்தியருக்கு வணக்கம் செய்துவிட்டு, விடைபெற்று சென்றார்கள்.

ஒருவன் இதுபோன்று பித்ரு கடன் உண்டாகாமல் இருக்க அந்தந்த பிறவியிலேயே ஒரு மகன் தந்தைக்குச் செய்யவேண்டிய கடமையை செய்து, அவர்களை பேணி காப்பாற்றினால் பித்ரு கடன் உண்டாகி தொடராது என்றும், ஒரு தந்தை தான் பெற்ற பிள்ளைகளுக்கு ஒரு தந்தை செய்ய வேண்டிய கடமையை அந்த பிறவியிலேயே செய்துமுடித்துவிட்டால், புத்திர கடன் உண்டாகி வம்சத்தை தொடராது என்ற உண்மையை நானும் அறிந்துகொண்டேன்.

செல்: 99441 13267