தர்மம் ஏற்படுத்தும் தர்மசகடம்! -ஆர். மகாலட்சுமி

/idhalgal/balajothidam/charity-causes-harm-r-mahalakshmi

"தர்மம் தலைகாக்கும்; தக்கசமயத்தில் உயிர்காக்கும்' என்றொரு பிரபல பாடலுண்டு. தர்மம் என்றால் பலரும் பிச்சையிடுவதை மட்டுமே நினைப்பார்கள். ஆனால் தர்மம் எனும்போது பிறரிடம் காட்டும் இரக்கம், அவசரத்தில் உதவுவது, வழிதெரியாமல் விழிப்பவர்களுக்கு பாதை காட்டுவது போன்றவை. இவை பயணம், வாழ்க்கை இரண்டுக்குமே பொருந்தும். ஒரு வேலைக்கு சேர தகுந்த நபர்களைக் கைகாட்டுவது, தவித்துக்கொண்டிருப்போருக்கு உதவுவது போன்ற எல்லாமே தர்மக்கணக்கில் சேர்ந்தவைதான்.

கடந்த காலங்களில் உங்களிடம் தர்மம், உதவிபெற்றவர்கள், அதனை தெய்வக் கருணைக்கு ஒப்பாக நினைத்துப் போற்றுவர். இக்காலத்தில் நீங்கள் ஒருவருக்கு உதவிசெய்தால், அவர் உங்களிடம் உதவியும் பெற்றுக்கொண்டு உங்களை நன்றாக ஏமாற்றிவிட்டுப் போய்விடுவார். நீங்கள் பெரிதும் கவலைகொள்ள நேரிடும். இதற்கு ஜோதிடரீதியான தீர்வென்ன?

ஜோதிடம் தர்மம் என்னும் அரிய செயலைக் குறிக்க ஒன்பதாமிடத்தை சுட்டிக்காட்டுகிறது. லக்னம் என்பது ஜாதகரைக் குறிக்கும். ஒன்பதாமிடம் என்பது தர்மத்தைக் குறிக்கும். ஆக, ஒரு ஜாதகத்தில் லக்னத்துக்கும் ஒன்பதாமிடத்திற்கும் சம்பந்தமிருந்தால்தான் உங்களால் தர்மம்செய்ய இயலும். தர்ம நினைவே வரும். மேலும் ஒன்பதாமதிபதி சுபத்தன்மை பெற்றால் மட்டுமே உங்களுக்கு தர்மம் செய்யுமளவுக்கு அதிர்ஷ்டமும் செல்வ வளமும் இருக்கும். ஒன்பதாமதிபதி மறைந்தால் செல்வவளம் குறைவாகவே இருப்பதால், உங்களால் தர்மம் செய்ய இயலாமல் போய்விடும்.

சனி, ஒன்பதாமிடம், ஒன்பதாமதிபதி சம்பந்தம் பெற்றால் ஜாதகர், "தர்மமா... அப்படியென்றால் என்ன?' என்று கேட்பார். ஏன்- கனவில்கூட தர்மம்செய்ய இயலாது.

நீங்கள் உதவிசெய்யும்- உதவி பெறப்போகும் இடமென்பது ஏழாமிடம், ஏழாமதிபதியாகும். லக்னாதிபதி, ஒன்பதாமதிபதி நன்றாக இருந்து நீங்கள் உதவிசெய்தாலும், உங்களின் ஏழாமதிபதி லக்னத்துக்கு அசுபத் தன்மையுடன் இருப்பின் உங்களிடம் உதவிபெறுபவர் உங்களைத் தூற்றிவிட்டுச் செல்வார்.

இவ்வாறு ஏழாமிடத்தைப் பொருத்து யார் நேரிடையாக உதவி, தர்மம் செய்யலாம்- யார் மறைமுகமாக தர்மம் செய்யவேண்டும் என

"தர்மம் தலைகாக்கும்; தக்கசமயத்தில் உயிர்காக்கும்' என்றொரு பிரபல பாடலுண்டு. தர்மம் என்றால் பலரும் பிச்சையிடுவதை மட்டுமே நினைப்பார்கள். ஆனால் தர்மம் எனும்போது பிறரிடம் காட்டும் இரக்கம், அவசரத்தில் உதவுவது, வழிதெரியாமல் விழிப்பவர்களுக்கு பாதை காட்டுவது போன்றவை. இவை பயணம், வாழ்க்கை இரண்டுக்குமே பொருந்தும். ஒரு வேலைக்கு சேர தகுந்த நபர்களைக் கைகாட்டுவது, தவித்துக்கொண்டிருப்போருக்கு உதவுவது போன்ற எல்லாமே தர்மக்கணக்கில் சேர்ந்தவைதான்.

கடந்த காலங்களில் உங்களிடம் தர்மம், உதவிபெற்றவர்கள், அதனை தெய்வக் கருணைக்கு ஒப்பாக நினைத்துப் போற்றுவர். இக்காலத்தில் நீங்கள் ஒருவருக்கு உதவிசெய்தால், அவர் உங்களிடம் உதவியும் பெற்றுக்கொண்டு உங்களை நன்றாக ஏமாற்றிவிட்டுப் போய்விடுவார். நீங்கள் பெரிதும் கவலைகொள்ள நேரிடும். இதற்கு ஜோதிடரீதியான தீர்வென்ன?

ஜோதிடம் தர்மம் என்னும் அரிய செயலைக் குறிக்க ஒன்பதாமிடத்தை சுட்டிக்காட்டுகிறது. லக்னம் என்பது ஜாதகரைக் குறிக்கும். ஒன்பதாமிடம் என்பது தர்மத்தைக் குறிக்கும். ஆக, ஒரு ஜாதகத்தில் லக்னத்துக்கும் ஒன்பதாமிடத்திற்கும் சம்பந்தமிருந்தால்தான் உங்களால் தர்மம்செய்ய இயலும். தர்ம நினைவே வரும். மேலும் ஒன்பதாமதிபதி சுபத்தன்மை பெற்றால் மட்டுமே உங்களுக்கு தர்மம் செய்யுமளவுக்கு அதிர்ஷ்டமும் செல்வ வளமும் இருக்கும். ஒன்பதாமதிபதி மறைந்தால் செல்வவளம் குறைவாகவே இருப்பதால், உங்களால் தர்மம் செய்ய இயலாமல் போய்விடும்.

சனி, ஒன்பதாமிடம், ஒன்பதாமதிபதி சம்பந்தம் பெற்றால் ஜாதகர், "தர்மமா... அப்படியென்றால் என்ன?' என்று கேட்பார். ஏன்- கனவில்கூட தர்மம்செய்ய இயலாது.

நீங்கள் உதவிசெய்யும்- உதவி பெறப்போகும் இடமென்பது ஏழாமிடம், ஏழாமதிபதியாகும். லக்னாதிபதி, ஒன்பதாமதிபதி நன்றாக இருந்து நீங்கள் உதவிசெய்தாலும், உங்களின் ஏழாமதிபதி லக்னத்துக்கு அசுபத் தன்மையுடன் இருப்பின் உங்களிடம் உதவிபெறுபவர் உங்களைத் தூற்றிவிட்டுச் செல்வார்.

இவ்வாறு ஏழாமிடத்தைப் பொருத்து யார் நேரிடையாக உதவி, தர்மம் செய்யலாம்- யார் மறைமுகமாக தர்மம் செய்யவேண்டும் என 12 லக்னம் அல்லது ராசிக்குப் பார்க்கலாம்.

மேஷம்

உங்கள் லக்னாதிபதி செவ்வாய், ஏழாமதிபதி சுக்கிரன், ஒன்பதாமதிபதி குரு நல்ல நிலையில் இருந்தால்தான் தர்மம் செய்ய இயலும். இதில் சுக்கிரன் நீசம்பெற்றால் உங்களிடம் உதவிபெற்றவர்களே உங்களை எதிர்த்து சண்டையிட்டு வழக்கு தொடர்வர். மேலும் உங்களின் ஏழாமதிபதி சுக்கிரன் ராகுவுடன் இருப்பின், பெண்களுக்கு நீங்கள் செய்யும் தர்மமும் உதவியும் பிறரால் திரித்துக் கூறப்பட்டு அதனால் அவமானமும் அடைவீர்கள்.

ரிஷபம்

உங்கள் லக்னாதிபதி சுக்கிரன்; ஒன்பதாமதிபதி சனி. உங்களுக்கு இயல்பாகவே தர்மம் செய்யும் குணம் குறைவாகவே இருக்கும். உங்களின் ஏழாமதிபதி செவ்வாய் நீசமடைந்தாலோ ராகுவுடன் இருந்தாலோ, உங்களிடம் உதவிபெற்றவர்கள் உங்களைப் பற்றி தாறுமாறான- இயற்கைக்கு மாறான செயல்களை நீங்கள் செய்கிறீர்கள் என வதந்தியைப் பரப்பிவிடுவர். நீங்கள் இளைஞர்களுக்குச் செய்யும் தர்மமும் உதவியும் வேறுவகையில் திரித்துக் கூறப்படும்.

மிதுனம்

உங்களின் லக்னாதிபதி புதன்; தர்மாதிபதி சனி. எனவே தர்மம் செய்யலாமா- வேண்டாமா எனும் யோசனையே பாதிநேரம் ஓடும். உங்களின் ஏழாமதிபதி குரு நீசமடைந்தாலும் ராகுவுடன் இருந்தாலும், உங்களிடம் உதவிபெறுபவர் உங்களுக்குப் பெருத்த அவமானத்தைத் தந்துவிடுவார் அல்லது உங்களுக்கு ஏதேனும் தீங்கு விளைவிக்கவும் கூடும். சில நேரங்களில் "குடிக்க தண்ணீர் கொடுங்கள்' என்று பரிதாபமாகக் கேட்டு, தண்ணீர் எடுக்க உள்ளே செல்லும்போது பின்னாலேயே வந்து இருப்பதை திருடிச்செல்லவும் நேரும். இதுபோன்ற நிலையை இந்த கிரக அமைப்புகள் கொடுக்கும்.

dd

கடகம்

உங்களின் லக்னாதிபதி சந்திரன்; தர்மாதிபதி குரு; ஏழாமதிபதி சனி. ஏழாமதிபதி நீசமடைந்தாலோ ராகுவுடன் இருந்தாலோ, உங்கள்மூலம் தர்மம், மேன்மை பெற்றவர்கள் உங்கள் தொழிலை பெரிய வீழ்ச்சியடையச் செய்துவிடுவர். அல்லது நீங்கள் வேலை செய்யுமிடத்தில் வந்து பெரிய அவமானத்தை உங்களுக்கு ஏற்படுத்தி வேலையிலிருந்து விலக்கும்படியும் செய்துவிடுவர். எனவே நீங்கள் செய்யும் தர்மம் உங்களை தொழில், வேலையை இழக்கும்படி செய்துவிடும்.

சிம்மம்

உங்கள் லக்னாதிபதி சூரியன்; தர்மாதிபதி செவ்வாய்; ஏழாமதிபதி சனி. இந்த ஏழாமதிபதி நீசமானாலும் அல்லது ராகுவுடன் சேர்ந்தாலும், உங்கள் இரக்க குணத்தால் தர்மம் செய்தால், அவர்கள் உங்கள் தாய்- தந்தைக்கும் உங்களுக்குமிடையே சண்டையை மூட்டிவிட்டுப் போய்விடுவார்கள் அல்லது இவர்களுக்கு உதவிசெய்யப்போய் நீங்கள் கடனில் மூழ்கிவிடக்கூடும். சிம்ம ராசி, லக்னத்தார் ஒரு விஷயத்தில் தீர்க்கமாக இருத்தல் அவசியம். நீங்கள் யாருக்கு என்ன உதவிசெய்கிறீர்களோ அந்த செயல், அந்தப் பொருள் அதன்பிறகு உங்களுக்குக் கைகூடாமல், அனுபவிக்கமுடியாமல் போக வாய்ப்புண்டு.

கன்னி

உங்கள் லக்னாதிபதி புதன்; தர்மம் செய்யுமிடத்தின் அதிபதி சுக்கிரன்; ஏழாமதிபதி குரு. குரு நீசமானாலும் ராகுவுடன் சேர்ந்தாலும், உங்களிடம் உதவிபெற்றவர்கள் உங்களது கண்ணியத்தை- குலப்பெருமையை சிதைக்குமளவுக்கு அவமானப்படுத்துவார்கள். இதுபோன்று உள்ளவர்கள், "கையைப் பிடித்து இழுத்துவிட்டான்; கெடுத்துவிட்டான்' என்றோ, "காதல் செய்து திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டாள்' என்றோ கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளைக் கூறி உங்கள் வாழ்வை சீரழித்துவிடுவர்.

துலாம்

உங்களின் லக்ன- ராசியாதிபதி சுக்கிரன் ஆவார். தர்மஸ்தானதிபதி புதன்; ஏழாமதிபதி செவ்வாய். இந்த ஏழாமதிபதி நீசமடைந்தாலோ ராகுவுடன் இணைந்தாலோ, உங்களிடம் உதவிபெற்றவர்கள் உங்களது வயல், மனை அல்லது வியாபாரக் கணக்கை சரியாகக் கணக்கீடுசெய்து அபகரித்துக்கொண்டு போய்விடுவார்கள். பிறகு நீங்கள் பொறுமையாகக் கணக்கு பார்க்கும்போது கணக்கில் இருக்கும் பணம் கையில் அகப்படாது. இதனால் சிலசமயம் உங்கள் தொழிலில் சறுக்கலை சந்திக்கவேண்டி இருக்கும். உங்களது வாழ்வுநிலையின் தாழ்வைப் பார்த்து பிறர் எள்ளிநகையாடவும் கூடும். சிலருக்கு தொழிலைக் கைகழுவி விடவும் நேரிடும்.

விருச்சிகம்

உங்களது லக்னாதிபதி செவ்வாய் ஆவார். தர்மாதிபதி சந்திரன்; ஏழாமதிபதி சுக்கிரன். இந்த ஏழாமதிபதி சுக்கிரன் நீசமடைந்தாலோ ராகுவுடன் சேர்ந்தாலோ, உங்கள்மூலம் பயனும் பலனும் அடைந்தவர்கள், உங்களுக்கு அங்கீகாரமற்ற ரகசியத் தொடர்புகள் உள்ளன என செய்தியைப் பரப்பிவிட்டுப் போய்விடுவார்கள். உங்களுக்கு அப்படி இல்லாதபட்சத்தில் உங்களது நிலையை எண்ணிப் பாருங்கள். இதில் பெண்களுக்கு இவ்வாறு ஒரு அவப்பெயர் ஏற்பட்டால் அவர்களின் நிலை எவ்வளவு கொடுமையானதாக ஆகிவிடும்! இதில் அரசியல்வாதிகளின் அரசியல் வாழ்வில் இந்தவொரு குற்றச் சாட்டினால் அஸ்தமித்துவிடும்.

தனுசு

உங்களின் லக்னாதிபதி குரு; உதவிசெய்யும் வீட்டதிபதி சூரியன்; ஏழாமதிபதி புதன். இந்த புதன் நீசம்பெற்றிருந்தாலும் ராகுவுடன் சேர்ந்திருந்தாலும், இவர்கள் உங்களிடம் உதவிபெற்ற கையோடு உங்களுக்கும் உங்கள் தாயாருக்குமிடையே சண்டையை இழுத்துவிட்டுப் போய்விடுவர். மேலும் இவர்கள் உங்கள் வீடு, வாகனம், வயல் போன்றவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடுவர். மாணவப் பருவத்தில் உள்ளவர்கள் உங்களிடம் உதவிபெற்று அவர்கள் நல்ல மதிப்பெண் எடுப்பர். உங்களது கல்விநிலை கேள்விக்குறியாகிவிடும். வியாபாரிகளும் கவனமாக இருத்தல்வேண்டும். உங்களிடம் உதவிபெற்ற நபர் உங்கள் தொழில் மேன்மையை நசித்துவிடுவார். அவர் தொழில் ஓஹோவென்றாகிவிடும்.

மகரம்

இதன் அதிபதி சனி; தர்மாதிபதி புதன் ஆவார். ஏழாமதிபதி சந்திரன். இந்த சந்திரன் நீசம்பெற்றாலோ ராகுவுடன் சேர்ந் தாலோ, உங்களிடம் உதவிபெற்றவர்கள் முதல் வேலையாக உங்கள் செல்வாக்கை, சொல்வாக்கை, மேன்மையை நாசம் செய்வார்கள். உங்கள் மரியாதையான பிம்பத்தை சீர்குலைப்பார்கள். உங்கள் நண்பர்கள், நலம் விரும்பிகளிடமிருந்து விலக்கும் வேலையைச் செய்வர். முன்னேற் றத்தை முடக்குவர். முயற்சியைத் தடுப்பர். முக்கியமாக உங்கள் எண்ணங்களை- சிந்தனைகளை சிதறடிப்பர். ஒருவேளை உங்களில் சிலருக்கு ரகசியத் தொடர்புகள் இருப்பின் அவர்கள்மூலம் உங்களுக்குத் துன்பம்தர முயற்சிப்பர்.

கும்பம்

இதன் அதிபதி சனி; தர்மாதிபதி சுக்கிரன். நீங்கள் செய்யப்போகும் உதவியைப்பெறும் ஏழாம்வீட்டு கிரகம் சூரியன். இந்த சூரியன் நீசமனாலும் ராகுவுடன் சேர்க்கை பெற்றா லும், இவர்கள் உங்கள் அதிர்ஷ்ட வாழ்வுக்கு குழிதோண்டிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பர். உங்களது சுகபோக வாழ்வு, பணப் புழக்கம், உங்களது நகைகள், அந்தஸ்து, வீடு, வாகனம் போன்றவற்றைக் கண்டு வயிறெரிந்து விடுவார்கள். இவர்கள் உங்களுக்கு தீமை தரவென்று எதுவும் செய்யவேண்டாம். அவர்களது வயிற்றெரிச்சல், ஆதங்கம், அழுகை, சுய பச்சாதாபம், ஏக்கம் போன்ற எண்ண அலைகள் உங்களை சுட்டுப் பொசுக்கிவிடும். முக்கியமாக மணவாழ்வு சிதிலமடைந்துவிடும். மற்ற லக்ன- ராசிக் காரர்களைவிட கும்பத்தினர் பிறருக்கு உதவும் போது கூடுதல் கவனமாக இருக்கவேண்டும்.

மீனம்

லக்னாதிபதி குரு; தர்மாதிபதி செவ்வாய்; ஏழாமதிபதி புதன். இந்த புதன் நீச மடைந்தாலோ ராகுவுடன் சேர்ந்தாலோ, உங்களிடம் உதவிபெற்றவர்கள் உங்களைப் பற்றி வாய்க்கு வந்தபடி தாறுமாறாகப் பொய் சொல்லித் திரிவர். உங்களது வாழ்வை, உங்களின் கௌரவத்தை திட்டமிட்டுப் பொய்சொல்லிக் குலைப்பர். உங்களது சக வியாபாரிகள், தொழில் கூட்டாளிகள் போன்றவர்களே உங்களின் வளர்ச்சிகண்டு பொறாமையடைந்து வதந்தி பரப்புவர். உங்கள் நிலையிலிருந்து தாழ்ந்துவிட்டது தெரிந்தபின்னரே அவர்கள் நிம்மதியடைவர். ஏழாமதிபதி புதன் என்பதால் வெளிப்பார்வைக்கு புத்திசாலித் தனமாக நண்பர்போல நடித்து, உள்ளே வெகுண்டு வெடிவைத்துவிடுவர். இவற்றையெல்லாம் படித்துவிட்டு, "உதவியே செய்யக்கூடாதா' என்றெல் லாம் யோசிக்காதீர்கள். இன்றைய கலி காலத்தில், ஒருவரிடம் உதவி பெறுபவர் நன்றியுணர்வோடு இருப்பதில்லை. மாறாக இவரிடம் இவ்வளவு செல்வம் இருக்கிறதே- இன்னும் எவ்வளவு பணம் உள்ளதோ என்று எதிர்மறை எண்ணமே கொள்கின்றனர். உங்களது ஏழாமதிபதி சுபத் தன்மையோடு இருப்பின் நீங்கள் தாராளமாக உதவி, தர்மம் என செய்யலாம். நன்றியுணர்வு இல்லாவிடினும் உங்கள் காலை வாரிவிடாமல் இருப்பார்கள். அந்தக் காலத்திலேயே இப்படி உதவியும் வாங்கிவிட்டு, இன்னலும் ஏற்படுத்திவிட்டுப் போகும் கும்பல் இருந்திருக்கும் போலும். இல்லையெனில் "வலக்கை கொடுப்பது இடக்கைக்குத் தெரியாமல் கொடு' என்று கூறியிருக்கமாட்டார்கள் அல்லவா? பொதுவாகவே தர்மம் செய்வது பிறருக்குத் தெரியாமல் இருக்கட்டும். உங்கள் தர்மக் கணக்கை இறைவன் மட்டுமே அறிந்தால் போதுமானது.

செல்: 94449 61845

bala080722
இதையும் படியுங்கள்
Subscribe